search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 180944"

    • 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி 4, 5, 8, 9 வாா்டுகளுக்கு உள்பட்ட துரைசாமி நகா், துரைசாமி நகா் விரிவாக்கம், விநாயகா காா்டன், விநாயகா காா்டன் விரிவாக்கம், தன்வா்ஷினி நகா், முல்லை நகா், மகாலட்சுமி காா்டன், எம்ஜிஆா் நகா், என்எஸ் பி நகா், ஏவிபி லட்சுமி அம்மாள் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து 6 மாதங்களாக 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

    இந்தநிலையில் 25 நாட்களுக்கு மேலாகியும் குடிநீா் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது,3 நாட்களுக்குள் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ், நகர மன்றத் தலைவா் குமாா் ஆகியோா் உறுதியளித்தனா். 3 நாட்களுக்குள் குடிநீா் பிரச்சனைக்குத் தீா்வு ஏற்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    • மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி தீர்வு பெறலாம்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி தீர்வு பெறலாம்.

    இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் மாறன் தெரிவித்துள்ளார்.

    • ஆதார், ரேஷன் கார்டு விண்ணப்பம், இட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஜமாபந்தி மூலம் வழங்கப்படுகிறது.
    • ஜமாபந்தியில் உடனடி தீர்வு ஏற்படுத்தியதாக போலி கணக்கு காட்டப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சிஇன்று தொடங்குகிறது. முதியோர் உதவித் தொகை, கல்வி, திருமண உதவி, பட்டா மாறுதல், ஆதார், ரேஷன் கார்டு விண்ணப்பம், நில அளவை, இட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஜமாபந்தி மூலம் வழங்கப்படுகிறது.

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் கூறுகையில், தீர்வு காணப்படாத காலதாமதப்படுத்தப்படும் நில அளவை, இட ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, விவசாய பிரச்னை, பட்டா மாறுதல், வாரிசு, ஜாதி சான்றிதழ் கோருதல் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவே ஜமாபந்தி நடத்தப்படுகிறது. ஆனால் ஏற்கனவே தேங்கி கிடக்கும் மனுக்களை கணக்கில் காட்டி, ஜமாபந்தியில் உடனடி தீர்வு ஏற்படுத்தியதாக போலி கணக்கு காட்டப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஜமாபந்தியில் மனு அளிக்கும் பலருக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. மேலும், தீர்க்கப்படாத கோரிக்கையை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே கிராம நிர்வாக அலுவலக வரவு செலவு கணக்குகள் நேர் செய்யப்பட்டு ஜமாபந்தி அதிகாரியால் ஒப்புதல் வழங்கப்படும்.இதன் காரணமாக பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. எனவே கண்துடைப்புக்காக நடத்தாமல் ஜமாபந்தி நிகழ்ச்சியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்றார்.

    • பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளது.

    1432 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயின் தலைமையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி வரும் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதில் நாளை ஆவூர் உள்வட்டத்தைச் சேர்ந்த அன்னுக்குடி, சாலபோகம், உத்தமதானபுரம், மூலாழ்வா ஞ்சேரி, அவிச்சாகுடி, நல்லூர், ரங்கநாதபுரம், கிளியூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வாணிய க்கரம்பை, சிங்காரம்பாளையம், வீராணம், நல்லம்பூர் ஆவூர் ஊத்துக்காடு, வேலூர் ஏரி, மணலூர், மதகரம்,மாளிகை திடல், வேலங்குடி, வீரமங்கலம், களத்தூர், மணக்கால், சடையங்கால், முனியூர், கிளியூர், அவளிவநல்லூர், 47 ரங்கநாதபுரம், உள்ளிட்ட 31 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

    25 ஆம் தேதி வலங்கைமான் உள் வட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரபுரம் வலங்கை மான் மேல விடையல், கீழ விடையல், கண்டியூர், சித்த ன்வவாழூர், செம்மங்குடி, தொழுவூர், விருப்பாச்சிபுரம், ஆதிச்சமங்கலம், 18 ரெகுநாதபுரம், வடக்கு பட்டம், தெற்கு பட்டம், புளியகுடி, பாடகச்சேரி, மாத்தூர், மருவத்தூர், கிராமம் உட்பட 17 வருவாய் கிராம ங்களுக்கு நடைபெறுகிறது.26 ஆம் தேதி ஆலங்குடி உள் வட்டத்தைச் சேர்ந்த திருவோணமங்கலம், அமராவதி சாரநத்தம், ராஜேந்திரன் நல்லூர், ஆலங்குடி, பூந்தோட்டம், பெருங்குடி, அரித்துவார மங்கலம், கேத்தனூர், நெம்மேலிகுடி, படுகை நெம்மேலிகுடி, எருமை படுகை, நார்த்தங்குடி, புலவர் நத்தம், பூனாயிருப்பு, ரகுநாதபுரம், மாணிக்க மங்கலம், பாப்பாக்குடி, அரவத்தூர், அரவூர், பயத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    மேற்கண்ட ஜமாபந்தியில் பொதுமக்கள் பட்டா மற்றும் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் கோருதல் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
    • 106.693 கி.மீ., புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.

     உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு 40 சதவீதம், தனியார் 60 சதவீதம் என்ற அடிப்படையில் 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி - மடத்துக்குளம் 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் 36.51 கி.மீ., என 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில் 106.693 கி.மீ., 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு தயாராக உள்ளது.

    அதே போல் பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கேயும் இரண்டு ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும் உடுமலை - தாராபுரம் ரோட்டை கடக்கும் வகையில் உள்ள பாலம் வழக்கு காரணமாக நிலுவையில் உள்ளது.

    ஏற்கனவே திட்ட பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது. அதிவிரைவு சாலை பணிகள் தாமதத்தால் பிரதான ரோடுகளில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்கள், கிராமங்களுக்கு செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.எனவே பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

    இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, திருட்டு, மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் சக போலீசாருடன் இணைந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, கொலை, கொள்ளை, மணல் திருட்டு போன்ற குற்ற சம்பவங்க ளுக்கு எதிராக நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அதன் காரணமாக அந்த பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்திருந்தன. மேலும் அ.முக்குளம் பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்த நிலையில் பணிக்கு வந்த சில வாரங்களிலேயே வாகன தணிக்கையின் போது நரிக்குடி சரகத்தில் ஒரே நேரத்தில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அதில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளி களை அதிரடியாக கைது செய்தனர்.

    அது மட்டுமின்றி நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், ஆடு திருட்டு என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்க ளையும் கைது செய்வதற்கு உதவியாக இருந்தனர்.

    இவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதோடு அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கிராமங்க ளுக்கு நேரில் சென்று மாணவர்களின் எதிர்கா லத்தை சீரழிக்கும் கஞ்சாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்து வந்ததுடன் காவல் நிலையம் செல்லும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்ட றிந்து அது தொடர்பாக புகார் கொடுக்கப்படும் நபர்கள் மீது பாரபட்சமின்றி முறையான விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இவர்களை போன்ற நேர்மை யாகவும், பொது மக்களுக்கு பாதுகாவ லனாகவும் இருக்கும் போலீசாரை திடீரென்று இடமாற்றம் செய்யப் பட்டதால் அ.முக்குளம் பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை, கொள்ளை, திருட்டு போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக மீண்டும் சீர்கேடான பகுதியாக அ.முக்குளம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அ.முக்குளம் காவல் நிலையத்தில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஏட்டுவின் பணியிட மாற்றத்தை பரிசீலனை செய்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திலேயே பணி அமர்த்த வேண்டும்.

    இதன் மூலம் அ.முக்குளம் காவல் நிலைய எல்லைப்ப குதிகளில் உள்ள கிராமங்களை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.
    • போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன். இந்தப் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர். காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் அவர்களை பார்த்தார். இதையடுத்து குடியிருப்புவாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த நிலையில் நேற்று சின்னையா கார்டன் மற்றும் டி .எம்.எஸ்.நகர் பொதுமக்கள், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து, கொள்ளையடிக்க முயன்ற அந்த முகமூடி திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிட ரோந்து பணி மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர்.
    • இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    பல்லடம்:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு சாலையிலிருந்து நொச்சிப்பாளையம், அல்லாளபுரம் வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருப்பூர் - தாராபுரம் சாலையை இணைக்கிறது. இந்த பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள், குடியிருப்பு உள்ளன. இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர். ஆனால் அளவு கற்களை மீறி சிலர் ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள். இதனால் இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இப்படியே ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அந்த சாலை குறுகிய சாலையாக மாறி விடும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கள்ளச்சாராயம், போதை பொருள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
    • பொதுமக்களிடம் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொள்ளிடம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பொதுமக்களிடையே மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதை பொருள் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

    குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அதைவிட பெரிய போதை ஏதும் இல்லை என அறிவுரை வழங்கினார்.

    மேலும் கள்ளச்சார விற்பனை நடைபெற்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் திரளான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • மான் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும்.
    • அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சிக் கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருக்கின்றன. அவைகளில் ஒரு மான் நீண்ட நாட்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுற்றித் வந்தது. சில நாட்களில் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று அதிகாலையில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்துவிடும். அவ்வாறு நேற்று இரவு வனப்பகுதிக்கு சென்ற மான் இன்று அதிகா லையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது.

    அலுவலக கேட் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் மான் நுழைந்தது. இதனை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் குவிந்தனர். தகவல் அறிந்த செஞ்சி வனத்துறை வனச்சரகர் வெங்கடேசன் தலைமை யிலான வனவர்கள் மானை பக்குவமாக பிடித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் வந்த மானை காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டை வீடுகளில் அடித்து உஷாராகினர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன் இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.

    காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதி வாசி ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். இதையடுத்து குடியிருப்பு வாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருடர்கள் வீட்டினுள் புகுவது, துணிகளை முகத்தில் கட்டி கொள்வது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×