search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும்
    • இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது.

    அதனால் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    • தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சொர்க்க பூமியாக அம்பத்தூர் தொழில் நகரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
    • எதிர்பாராத விபத்துக்கள் நேரிட்டால் பரவாயில்லை. ஆனால் விபத்துக்களை உருவாக்குவது பராமரிப்பில்லாத சாலைகள்தான்.

    சிறு தொழில் வளர்ச்சி நாட்டுக்கு தேவை. அதுவே வீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் உருவாவதை அதிகாரிகள் அனுமதிக்கலாமா? என்று ஒருவருக்கொருவர் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

    அவர்களுக்கு நடுவில் ஒருவர் அணிந்திருந்த பேன்ட் கால் மூட்டு பகுதியில் கிழிந்தும் சட்டை தோற்பட்டையில் கிழிந்தும் இருந்ததை பார்த்தும் ஏதோ விபத்தில் சிக்கி இருக்கிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.

    அந்த கூட்டத்தின் அருகில் சென்ற நாரதர் காதை அவர்கள் பக்கம் திருப்பினார். என்னதான் நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள காதை கூர்மையாக்கி கொண்டார்.

    தொழிற்சாலைகள் பெருகுது! தொழில்கள் வளருகிறது! என்று பெருமைப்படு கிறார்கள். அதற்காக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கவனிக்க வேண்டும் அல்லவா?

    சென்னையை அடுத்துள்ள தொழில் நகரம். இரை தேடி வரும் பறவைகள் போல் வேலை தேடி தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள்.

    தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சொர்க்க பூமியாக அம்பத்தூர் தொழில் நகரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்கள், மறைமுக வேலை பெறுபவர்கள் என லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை அம்பத்தூரை நம்பியே இருக்கிறது.

    இதனால் குடியிருப்புகளும் பெருகிவிட்டன. அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி முதல் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை, வாவின் சாலை, தொழிற் பேட்டை பிரதான சாலை, முகப்பேர் மேற்கு நெடுஞ்சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) மற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கெமிக்கல் இரும்பு துணி ஏற்றுமதி தொழிற்சாலை என பல்வேறு தொழிற் சாலைகள் நிறைந்து உள்ளன. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி பொன்னேரி போன்ற பகுதியில் இருந்து பஸ்கள் மூலம் ஊழியர்கள்அழைத்து வரப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.

    அது மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, போன்ற மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் தினமும் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இரும்பு ராடுகள் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை நடைபெறுகின்றன.

    இதனால் இந்த கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை மேற்கண்ட சாலைகள் வழியாக சென்று வருவதால் தார் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது இதன் காரணமாக முகப்பேர், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனி, திருமங்கலம் போன்ற பகுதியில் இருந்து சென்னைக்கு பணிக்கு சென்று வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளார்கள். இந்த பகுதியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது இந்த குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதுடன் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் கடந்த மாதம் கூட பெண் ஒருவர் தனது தம்பியை அங்குள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது லாரி மோதி விழுந்து உயிரிழந்தார் அந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் இதே போன்று பள்ளிக்கு பெற்றோரடன் சென்ற மாணவன் பள்ளத்தில் கீழே விழுந்து இரண்டு கால்கள் முறிந்து போனது.

    எதிர்பாராத விபத்துக்கள் நேரிட்டால் பரவாயில்லை. ஆனால் விபத்துக்களை உருவாக்குவது பராமரிப்பில்லாத சாலைகள்தான். மனித தவறுகளால் அரங்கேறும் இந்த ஆபத்துக்களை தவிர்க்க முடியும். அதற்கு சிட்கோ அதிகாரிகள் மனம் வைக்க வேண்டுமே என்கிறார்கள்.

    எத்தனையோ பேர் இந்த சாலைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி முறையிட்டும் "குறை ஒன்றும் இல்லை கண்ணா..." என்பது போல் அதிகாரிகள் பாராமுகமாக சென்று வருகிறார்கள்.

    ஒரு பகுதி சாலைகள் அடுத்த வாரத்துக்குள் சீரமைக்கப்படும் என்றும் அம்பத்தூர் 2-வது மெயின் ரோடு, அம்பத்தூர் வடக்கு பகுதியில் உள்ள சாலைகளும் சீரமைக்கப் படும் என்றும் சர்வ சாதாரணமாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    ஆனால் உட்புற சாலைகள் நடந்து செல்லக்கூட தகுதியற்ற சாலைகளாகவே உள்ளன. இந்த சாலைகளை அவசர கோலத்தில் சீரமைத்தால் சரி வராது.

    கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டியது அவசியம்.

    தொழில் வளர்ச்சியால் மக்கள்.... மக்கள் வளர்ச்சியால் தொழில்கள் வளர்ச்சி.... என்பதை பொறுப்பானவர்கள் உணர்ந்து செயல்பட்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது.

    • மே 1 ஆம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்

    தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது.

    மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.

    இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    அதே சமயம், வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், வாகனங்களில் ஸ்டிக்கரை மருத்துவர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்த நீதிமன்றம், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம்.
    • சிஎன்ஜி/ எல்பிஜி மாற்றங்கள் செய்யப்படுவதால் வாகனங்களில் தீ பற்றுகிறது.

    சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி குற்றம் என போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகுதியில்லாத நிறுவனங்களால், அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி/ எல்பிஜி மாற்றங்கள் செய்யப்படுவதால் வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன என கூறப்படுகிறது.

    • ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு.

    தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது.

    இதையடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. 

    • கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது.
    • திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பர்ம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்கள், பிக்கப் வேன், 15-க்கும் அதிக பட்டாசு கடைகள் தீயில் கருகியதாக காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

    தீ விபத்தை ஒட்டி தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் 14 பட்டாசு கடைகள், 13 இருசக்கர வாகனங்கள், ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது. தீ விபத்து காரணமாக ரூ. 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    வார சந்தை நாள் மற்றும் திங்கள் கிழமை அன்று துசு பண்டிகை வர இருப்பதை அடுத்து பொது மக்கள் அதிகம் கூடிய நிலையில், திடீர் தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

    • குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது.
    • ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த காலங்களில் கோடை விழாவும் அரசு சார்பில் நடத்தப்படும். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காலமான கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலை பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சு ற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    மேலும் ஏற்காட்டில் தொடரும் பனியால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்த படியே செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டில் வசிக்கும் காபி மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் வெளியில் செல்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி செல்கிறார்கள். பகல் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கண்ட றிந்து அதனை கிழித்தனர். இவ்வாறாக 127 வாகனங்களில் இருந்து போலீசாரால் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டது.

    மீண்டும் இதேபோல் போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    • வாகனஓட்டிகள்-பொதுமக்கள் பரிதவிப்பு
    • வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு பகுதியில் வெங்கிட்டாபுரம் அமைந்து உள்ளது. இது மூன்று ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் இயங்கி வந்தது. அது தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு பறந்து செல்கின்றன. மேலும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதையும் பார்க்க முடிகிறது.

    மேலும் வெங்கிட்டாபுரம் சந்திப்பு என்பது தடாகம், காந்திபார்க், மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு சுமார் 4500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதனால் வெங்கிட்டாபுரம் பகுதியில் காலை-மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தேவையில்லாத இடத்தில் சிக்னல் அமைத்து பயணிகளை 1-2 நிமிடம் காக்க வைக்கின்றனர். ஆனால் இது மிகவும் முக்கியமான பகுதி. தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிட்டாக பறந்து செல்கின்றன.

    அப்படியிருக்கும்போது வெங்கிட்டாபுரம் சாலையில் சிக்னல் இல்லாதது எங்களுக்கு மிகவும் சிரமம் தருகிறது. ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று கொண்டு வாகன போக்குவரத்தை முறைப்படுத்துவர். அந்த நேரம் மட்டும் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

    ஆனால் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் வெங்கிட்டாபுரம் சிக்னலில் நிற்பது கிடையாது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தறிகட்டிய நிலையில் பறக்கின்றன. இதனால் அங்கு சாலையை கடக்க வரும் பொதுமக்கள் அங்கும்-இங்குமாக அலை க்கழிப்படும் காட்சியை பார்க்க முடிகிறது.

    வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆகவே போக்குவரத்து போலீசார் இதனை கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • லம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×