search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே உள்ளனர்.

    கோவை,

    கோவையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவையில் உள்ள குளங்கள் எல்லாம் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

    விடுமுைற நாட்களில் பூங்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் தற்போது மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளுக்கும் சென்று வருகின்றனர். அந்தளவுக்கு மாநகரில் உள்ள உக்கடம் குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய குளங்கள் மின் விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு, அழகுபட காட்சியளிப்பதால் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழ்கிறது.

    விடுமுறை தினங்களில் இந்த குளங்களில் பொதுமக்க ளின் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் காணப்படும். குறிப்பாக முத்தண்ணன் குளத்தின் பொலிவை காண பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வார த்தின் இறுதி நாட்களில் குவிந்து வருகிறார்கள்.

    பகல் முழுவதும் வேலை வேலை என்று தனது தொழிலில் கவனம் செலுத்தி விட்டு , மாலையில் வீடு திரும்பும் குடும்பத் தலைவ ர்கள், மாலை நேரத்தில் தனது குடும்ப த்தோடு எங்காவது சென்று பொழுதை கழிக்க விரும்புவது வழக்கம் தான். அப்படி தினமும் முத்தண்ணன் குளக்கரையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்தண்ணன் குளக்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்கு என ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இங்கு குடும்பத்தோடு வரும் குழந்தைகள் அதில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தரைகள் பச்சை பசேர் என்று புல்வெளியுடன் காட்சி அளிக்கிறது. மாலைநேரத்தில் இங்கு குவியும் பொதுமக்கள் அங்கு தங்கள் குடும்பத்தினருடன் புல்தரையில் அமர்ந்து பேசி தங்கள் மாலைபொழுதை அழகாக கழித்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் பொதுமக்களுக்கு என்று முறையான பார்க்கிங் வசதி கிடையாது. இதனால் இங்கு வருபர்கள் தங்கள் வாகனங்கள் குளத்தின் முன்பாக நிறுத்தி விட்டு செல்லும் நிலைமையை காணப்படுகிறது.

    அப்படி நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே செல்பவர்கள் திரும்பி வெளியே வந்து பார்க்கும்போது, இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு என பார்கிங் பெருகி விடுகிறது.

    இதனால் வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் அவர்கள் அவதியடைந்து வருகி ன்றனர். ஒரு சிலர் தனது இருசக்கர வாகனத்தை எப்படியாவது எடுத்திட வேண்டும் என்று கருதி, பின்னால் இருக்கும் வாகனத்தை உருட்டி தாறுமாறாக நடுரோட்டில் விட்டு விடுகின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் தினமும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக உள்ளே செல்போர்களுக்கும் இது இடையூறாக உள்ளது.

    இதுகுறித்து குளக்கரைக்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி இந்த குளக்கரையை மிகவும் அழகுபடுத்தி பொலிவு பெற செய்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எங்களுக்கு இந்த குளக்கரை மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனாலும் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே இந்த பகுதியில் பார்க்கிங் வசதி செய்து கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுக்கும்போது, வாகனத்தை நிறுத்தும் போதும் அல்லது வாகனத்தை எடுக்கும் போதும் ஏற்படும் கூச்சல் குழப்பத்தை தவிர்க்க முடியும்.மேலும் இங்கு வரும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே ஓரமாக உட்கார்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இது இங்கு குழந்தைகளுடன் வரக்கூடிய பொதுமக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

    பரந்து விரிந்த முத்தண்ணன் குளத்தின் ஒரு பகுதியானது கோவை தடாகம் ரோட்டிலும், மற்றொரு பகுதியானது சொக்கம்புதூர் செல்லும் சாலையிலும் உள்ளது. தடாகம் சாலையில் உள்ள குளக்கரையின் பகுதியில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி வழியும். பெரியவர்கள் குடும்பம் குடும்பமாக சின்ன குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆங்காங்கே திரியும் காட்சியை காண முடியும். ஆனால் சொக்கம்புதூர் செல்லும் சாலையில் உள்ள குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே அதிகளவில் குவிகின்றனர்.

    அந்த பகுதி சற்று இருள் நிறைந்த பகுதி என்பதால் காதல் ஜோடிகளுக்கும் அது ஏற்ற இடமாக மாறி விட்டது. இதனால் தினமும் அங்கு காதல் ஜோடிகளை பார்க்க முடியும். அவர்கள் காவலாளி நேரம் ஆகி விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினாலும் செல்வதே கிடையாது.

    அவர்களை வெளியே அனுப்புவதற்குள் அவர்களுக்கு போதும், போதும் என்றாகி விடும். அப்படியும் சிலர் மறைந்து இருந்து விட்டு, கதவை மூடிய பின்னர் வெளியில் வந்து திறந்து விட்டு செல்வதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகராட்சியின் இந்த அரிய முயற்சி மிகவும் வெற்றிகரமானதாகும்.

    இக்குளக்கரையானது கோவை வாழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமன்றி, மனம் மகிழ்ந்து உறவுகளை மேம்படுத்தும் ஒரு பாலமாக இது அமைகிறது. இங்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால், இங்கு வருகை தரும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பழுது அடைந்த வாகனங்கள் துருபிடித்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.

    சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் முக்கிய சாலைபகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதற்கு சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமல்ல சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு காரணம் ஆகும்.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    சென்னையில் சுமார் 50 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் பெரும் பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக் களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன. கால் டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இட நெருக்கடியால் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் போய்விட்டன.

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசல், சாலையோர,தெருவோர ஆக்கிரமிப்புகள் தற்போது பெருகி வருகின்றன.எழும்பூர், ஓட்டேரி, புளியந் தோப்பு, பெரம்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றன. இந்தபகுதியில் உள்ள சாலையோரங்களில் பழுதடைந்த உபயோகமற்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன.

    சென்னை மாநகரம் முழு வதும் நூற்றுக்கணக்கான பழுதடைந்த கார், ஆட்டோக்கள்,மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் பழுதான, கேட்பாராற்று கிடந்த வாகனங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை மாநகரம் முழுவதும் கேட்பாரற்ற பழுதான வாகனங்கள் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன. சரி செய்ய முடியாத பழுதடைந்த வாகனங்களை பொதுமக்கள் ரோட்டோர பகுதிகளில் விட்டு சென்று உள்ளனர்.

    இந்த வாகனங்களால் பொதுமக்கள், மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடை யூறு ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த மாநகரம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, வேப்பேரி, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் என அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் குறித்து அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு சம்பந்தப்பட்ட வாகனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பொது மக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் பதிவு எண்களை வைத்து அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது.

    மேலும் உரிமை கோராத, முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத கார், வேன், ஆட்டோ வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, மூலக்கடை, பெரம்பூர், செம்பியம், வியாசர்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில் கார் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழுது அடைந்த வாகனங்கள் துருபிடித்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.

    மயிலாப்பூர் பகுதியில் கேட்பாரற்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலையில் வாகனங்களை விட்டுச் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும். "மோட்டார் வாகன ஒர்க் ஷாப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் 'ரெய்டு' செய்ய வேண்டும். இதில் பல ஒர்க் ஷாப் கடைகளில் இடவசதி இல்லை.இதனால் வாகனங்கள் ரோட்டோரத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை அகற்ற மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப்பட்ட போது, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ன் கீழ் பதியபட்ட வழக்குகளில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு கைப்பற்றப் பட்ட 93 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் வாகன உரிமை யாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.

    இதனால் இந்த 93 வாகனங்கள் வருகின்ற 25-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அலுவல கத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

    வாகனங்களை பார்வையிட சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர்
    • 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் சமையல் பொடி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2-வது மாடிகளில் கடைகள் எதுவும் இல்லாததால் காலியாக இருந்தது.

    இந்த நிலையில் கட்டிடத்தின் 2-வது மாடியில் இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து குபு...குபு...வென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கடையை உடனடியாக அடைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.

    அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்து காரணமாக அசம்பு ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.
    • பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடியாக இந்த ஆண்டு 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆரம்பம் முதலே மழை காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள பருத்தி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனையடுத்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை எடுத்துக்கொண்டு திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்திற்கு செல்கின்றனர். அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்கின்றனர்.

    இதற்காக பருத்தியை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேற்று இரவு முதல் மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி, கமலாபுரம், அத்திப்புலியூர், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனத்தின் மூலமாக பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.

    திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கதவை திறக்காததன் காரணமாக விவசாயிகள் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரிலிருந்து புலிவலம் வாளவாக்கால் ரவுண்டானா வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்களது வாகனங்களில் பருத்தியை வைத்து கொண்டு இரவிலிருந்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாகனத்திற்கு இரட்டை வாடகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீண்டும் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளை காக்க வைக்காமல் முன்கூட்டியே ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.
    • மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளான கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதிகளில் இருக்கும் கடைகளின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை நிறுத்தக்கூடாது.

    மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என திருச்செங்கோடு நகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், திருச்செங்கோடு நகரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூ றாக வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்து, போக்குவ ரத்திற்கு உதவு மாறு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

    • மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது
    • வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.57 லட்சத்து 83 ஆயிரத்து 120 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கடும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதற்காக தனி வட்டாட்சியர்கள் தலைமையில் போலீசார், புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் மீது குற்றவியல் மற்றும் அபராத நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்டத்தில் கடந்த மாதம் (ஜூன்) உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் சென்ற குற்றத்திற்காக 40 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது 17 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிம பாரம் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக 119 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.57 லட்சத்து 83 ஆயிரத்து 120 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் மீதும், உரிய அனுமதி சீட்டு இல்லாமலும் மற்றும் குறைபாடுள்ள அனுமதி சீட்டுகளுடன் கனிமங்களை எடுத்துச் செல்வோர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தியதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 7 வாகனங்களை சோதனை செய்த போது கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி வந்தத தெரிந்தது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிமவளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட கண்காணிப்பாளர் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 7 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். வீரபாண்டி பிரிவில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சாலை குறுகலாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் வீரபாண்டி பிரிவு நான்கு சாலை சந்திப்பு பகுதியில் 150 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் முதல் 4மீட்டர் அகலத்திற்கு 95லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு சாலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாலை விரிவாக்கம் செய்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் தினந்தோறும் சிக்கி தவிக்கின்றன. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்வேறு தரப்பினரும் கடும் மனஉளைச்சலுக்கு அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வீரபாண்டி பிரிவில் பேருந்துகள் நிறுத்தத்திற்கு ஒதுக்கிய இடத்திலும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    மேலும் இந்த வழியாக தினந்தோறும் கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் பயணம் செய்கிறார்கள்.மேலும் வீரபாண்டி பிரிவில் தான் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாகன சோதனை சாவடி மையமும் இருக்கிறது. ஆனால் ஆக்கிரமிப்பு அதிகாரித்து கொண்ட வருகின்றன. இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்று இணைந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோத மாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்
    • திடீர் தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் அதிக அளவில் கனிமங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்திற்கு பின் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் செல்வதை தடுப்பதற்கும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக அதிக பாரம் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுப்பதற்காகவும் தனி தாசில்தார் தலைமையிலான 7 சிறப்பு குழுவினர்கள், காவல் துறையினர் மற்றும் மதுரை மண்டல பறக்கும் படையினரால் திடீர் தணிக்கை மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உரிய அனுமதி சிட்டு இல்லாமல் சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துச் சென்றதாக 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பாரம் ஏற்றிச்சென்ற 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் ரூ.17 லட்சத்து 99 ஆயிரத்து 920 விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், துணை இயக்குநர் (கனிமம்) தங்க முனியசாமி, உசூர் மேலாளர் சுப்பிரமணியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் உள்ளன.
    • முன்பணமாக ரூ.1,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 33 வாகனங்களுக்கான பொது ஏலம் ஜூன் 19 -ந் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம், திருப்பூா் நல்லிக்கவுண்டன் நகரில் (திருநகா்) உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 19 ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் நுழைவுக்கட்டணம் ரூ.100 மற்றும் முன்பணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூன் 18 ந் தேதி மாலை 5 மணி வரை பதிவுசெய்து ரசீது பெற்றுகொள்ளலாம்.

    ஏலம் எடுத்தவுடன் அதற்குண்டான முழுத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும் ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை 95668 88041, 86374 94589 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீ சார் களியக்காவிளை பகுதி யில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 6 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது வாகனங்களில் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது.

    இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் களியக்காவிளை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×