search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஷ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார்.
    • லக்ஷ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    பஞ்சாபில் வழிப்பறி  கொள்ளையர்களால் 12 வகுப்பு மாணவி இரு சக்கர வாகனத்தில் சுமார் 350 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப்  மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இளைய சகோதரியுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 12 வகுப்பு படிக்கும் லக்ஷ்மி என்ற பெண் [18 வயது] சாலையில் நடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் லக்ஷ்மியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லக்ஷ்மி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார். லக்ஷ்மியின் கையை பிடித்தபடி அந்த தரதரவென சாலையில் 350 மீட்டர்களுக்கு இழுத்துசென்ற அவர்கள் கடைசியாக அந்த செல்போனை பிடுங்கிக்கொண்டனர்.

    சிறிதுதூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லக்ஷ்மியை பார்த்து மன்னிப்பு விடு [sorry] என்று சொல்லிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன் சென்றுள்ளான். லக்ஷ்மி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த லக்ஷ்மி மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டுளார். லக்ஷ்மியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அந்த காட்சிகளில் அடிப்படையில் கொள்ளையர்களை தேடிய போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். 

    • 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
    • ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.

    உத்தரகாண்ட மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள சால்ட் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சால்ட் பகுதியில் தனது சகோதரனுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.

    அவரிடம் இருந்து தப்பிய சிறுமி தனது தாயிடம் நடந்ததைக் கூறவே அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு போரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    • சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

    உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அரசுப் பள்ளி பியூன் கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூகாபாத் Farrukhabad பகுதியைச் சேர்ந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தாய்க்கு தெரியவந்த நிலையில் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சிறுமி வசித்து வந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியபோது, உள்ளூர் கவுன்சில் அரசுப் பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வந்த பங்கஜ், அமித் என்ற மற்றொரு நபருடன் இணைந்து சிறுமியைக் கடத்தி ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

    சிறுமியின் வாயில் துணியை அடைத்து வன்கொடுமை செய்த பங்கஜ், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இந்த விவகாரம் தற்போது தெரியவந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பங்கஜ் மற்றும் அமித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
    • நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தின் இன்னும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் அம்மாநிலத்தில் வெவேறு மருத்துவமனைகளில் பாலியல் துன்புறுத்தல் அரங்கேறியுள்ளது.

    மேற்கு வங்கம் - பீர்பும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரவு டியூட்டியில் இருந்த நர்ஸுக்கு குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் இருந்த நோயாளி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அந்த நோயாளிக்கு நேற்று இரவு டியூட்டியில் இருந்த நர்ஸ் குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் அளித்த நிலையில், அந்த நோயாளி கைது செய்யப்பட்டார்

    இதேபோன்று நேற்று இரவு மேற்கு வங்கம் ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் வைத்து 13 வயது சிறுமிக்கு மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர், நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், ஸ்கேன் அறையில் இருந்து தங்களது மகள் அழுதுகொண்டே ஓடிவந்து நடந்ததைச் சொன்னதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விஷயம் மருத்துவமனை கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை அவர்கள் தாக்க முயன்ற நிலையில் சமய இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த நகரை மீட்டு கைது செய்தனர். இருப்பினும் மருத்துவமனையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    • 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் ஆசிரியை அறைந்துள்ளார்
    • சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.

    வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2 ஆம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில்  சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.

    இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

     சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார்.
    • வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார்

    தெலுங்கானாவில் தனது தாயின் சடலத்துக்கு அருகில் அமர்ந்து இறுதிச் சடங்கு செலவுக்காக 11 வயது சிறுமி யாசகம் வேண்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் தன்னூர் [Thanoor] மண்டலத்தில் உள்ள பெல்தரோடா [Bheltharoda] கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காமணி [35 வயது]. இவரது கணவர் 12 வருடங்களுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் விவசாய தினக்கூலியாக வேலை செய்து தனது ஒரே மகள் துர்காவை [11 வயது] வளர்த்து வந்தார். துர்கா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

    நேற்று முன்தினம் துர்காவை கங்காமணி கண்டித்து பேசியுள்ளார். இதனால் துர்கா கோபித்துக்கொண்டு தனது பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் சீலிங் காத்தாடியில் தாய் கங்காமணி தூக்கிட்டு உயிரிழந்த  நிலையில் இருந்ததைக் கண்டு துர்கா செய்வதறியாது திகைத்துள்ளார். பக்கத்துக்கு வீட்டுக் காரர்களிடம் சென்று துர்கா கூறவே, அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில்தான் தாயின் இறுதிச்சடங்கிற்குப் பணம் இல்லாததால் வீட்டின் முன் இருந்த வீதியில் தாயின் சடலத்தைக் கிடத்தி இறுதிச்சடங்கு செலவுக்கு காசு வழங்கும்படி வருவோர் போவோரிடம் யாசகம் வேண்டியுள்ளார். இதை அறிந்த உள்ளூர் போலீஸ் சிலரும், துர்காவின் ஆசிரியர்களும், பிஆர்எஸ் முன்னாள் அமைச்சர் கேடிஆர் அருவுறுத்தலின்பேரில்  அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சிலரும் காசு வழங்கி கங்காமணியின் இறுதிச் சடங்கை செய்ய உதவியுள்ளனர்.

    • சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார்.

    நாடு முழுவதும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேலையிலும் பாலியல் பலாத்கார கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பள்ளியில் பி.டி. ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம், சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கபட்டதைத் தொடர்ந்து சிறுமியை அத்தை ஊருக்கு அனுப்பி பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தனக்கு நடந்ததைச் சிறுமி அத்தையிடம் கூறவே, பெற்றோர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் ஊரார் முன் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர்.

    இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார். கடந்த மாதங்களில் சிறுமியின் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அந்த பி.டி. ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். 

    • ஆபாசப் படங்களைப் பார்த்து வந்த அந்த சிறுவன் அன்றைய இரவு வீட்டில் தனது அருகில் படுத்திருந்த தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
    • சம்பவத்தின் பின் விழித்த சிறுவனின் இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்துள்ளது.

    ஆபாசப் படங்களால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் மனதைப் பதற வைப்பதாக அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வீடு ஒன்றில் முன்னாள் இருந்த தோட்டத்தில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று பிரேதப் பரிசோதனையில் உறுதியான நிலையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தடயங்களை சேகரித்து பெண்ணின் குடும்பத்தினர் உட்பட சுமார் 50 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியலில் உயிரிழந்த சிறுமி அவளது 13 வயது அண்ணனால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

    தொடர்ச்சியாக ஆபாசப் படங்களைப் பார்த்து வந்த அந்த சிறுவன் அன்றைய இரவு, வீட்டில் தனது அருகில் படுத்திருந்த தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தங்கை, அப்பாவிடம் சொல்லப்போகிறேன் என்று கூறியதால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் சிறுவன் தனது அவளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.

    கொலை செய்தவுடன் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை எழுப்பி சிறுவன் நடந்ததைக் கூறியுள்ளான். இதனால் கலக்கமடைந்த தாய் சிறுவனைக் காப்பாற்றும் எண்ணத்துடன் நடந்ததை மூடி மறைத்துள்ளார். சம்பவத்தின் பின் விழித்த சிறுவனின் இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்துள்ளது.

    ஆனால் முதலில் போலீஸ் விசாரணையில் கொலை குறித்து எதுவும் தெரியாததுபோல் அனைவரும் சிறுமி விஷப்பூச்சி கடித்து இறந்ததாக நாடகமாடியுள்ளனர். கடந்த 2 மாதகாலமாக போலீசார் அழுத்தம் குடுத்துவிசாரித்ததில் தற்போது அவர்கள் உன்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவரது 10 வயது கஷ்மிதா என்ற பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.

    குழந்தையின் சத்தம் கேட்டு செந்தில் குமாரின் தாய் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசு, முத்துவேலு ஆகியோர் செந்தில் குமாரை பிடிக்க ஓடி வந்தனர். அவர்கள் இருவரையும் செந்தில் குமார் கத்தியால் தாக்கினார்

    இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    படுகாயம் அடைந்த தங்கராசு, முத்துவேல் இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செந்தில் குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேரிவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 பெண் குழந்தைகளில் ஷோபாவில் அமர்ந்திருந்த கஷ்மிதாவை லேப்டாப் வைத்திருந்த மேஜைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தி வெட்டியுள்ளார் என்று விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார்.
    • உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    உத்தரப்பிரதேசத்தில் டியூஷனுக்கு வந்த 5 வயது சிறுமியை மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மவு [Mau] மாவட்டத்தில் கடந்த செய்வாய்க்கிழமை அன்று 5 வயது சிறுமி வழக்கம்போல் டியூசன் படிக்க மாஸ்டர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    ஆனால் அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து தனக்கு நடந்ததை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். உண்மையை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    அப்போது அங்கு படிக்கும் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் அவர் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவுதான் என்று முதலமைச்சர் பதில் அளிக்கிறார்.

    முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
    • இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அம்ரோஹா:

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கெடா அப்ரோலா கிராமத்தில் இளைஞர் ஒருவரை பாதி மொட்டையடித்தும் கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கெடா அப்ரோலா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் மகளிடம் பேசியதற்காக இளைஞர் மீது கோபமடைந்து, இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் இளைஞருக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், சில குழந்தைகள் அவரை கேலி செய்வதும் பதிவாகியது.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமூகத்தைச் சேர்ந்த இரு வீட்டாருக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×