search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர்"

    • தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
    • 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.

    மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    சட்டசபையில் தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    விஜயகாந்த் குறித்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கேப்டன் என்று புகழ் பெற்றவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த்.

    2006 முதல் 2016 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தவர் விஜயகாந்த். 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து 2வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது.

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
    • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

    பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

    இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

    • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
    • முதல் மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்றார்.

    போபால்:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக மோகன் யாதவ் தேர்வானார். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் சட்டசபையில் சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
    • சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    இதற்கிடையே பாராளுமன்ற பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டது. 2 வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.

    பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த 14-ந்தேதி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.

    பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    2 தினங்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. சபை கூடியதும் குவைத் மன்னர் ஷேக் நவாஸ் அல் ஜாபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாராளுமன்ற குறைபாடு தொடர்பான பிரசினையை எதிர்க்கட்சியினர் கிளப்பினர். சபையின் மைய பகுதிக்கு எதிர்கட்சி எம்.பி.க்கள் வந்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களில் சிலர் கைகளில் பதாகைகளும் வைத்து இருந்தனர். சபைக்குள் பதாகைகள் கொண்டு வந்ததற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

    சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    அமளியால் அவைத்தலைவர் சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.

    மேல்சபையிலும் பாதுகாப்பு குறைபாடு பிரசினையை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிளப்பினார்கள். மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    முதல் 11.30 மணி வரை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். சபை கூடியதும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • அப்போது, சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், தான் விதிப்படியே செயல்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், அ.தி.மு.க. துணைத் தலைவர் இருக்கை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் இதுவரை 10 முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (எந்தெந்த நாட்களில் கடிதம் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தார்).

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்ற ஆவணங்களை எல்லாம் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். 2 நாட்களுக்கு முன்பும் கூட அது தொடர்பான நகல்களை நாங்கள் உங்களிடம் வழங்கி இருக்கிறோம்.

    இருப்பினும் எதற்காக நீங்கள் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி தர மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுக்கு வேதனை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு, துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்குதான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும் என்கிற விதி உள்ளது. துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அது போன்ற எந்த விதியும் இல்லை. இதற்கு முன்பு இருக்கை விவகாரம் தொடர்பாக எனக்கு முன்பு இருந்த சபாநாயகர் எடுத்த முடிவைத்தான் நானும் எடுத்துள்ளேன்.

    துணைத் தலைவராக, கொறடாவாக நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அது எனது அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் மரபுப்படியும், விதிப்படியும் நான் செயல்பட்டு வருகிறேன். அது போன்றே தொடர்ந்து செயல்படுவேன். விதிப்படியும், சட்டப்படியும் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். ஒரு சின்னத்தில் போட்டியிட்டு அதற்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது அப்போதைய சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நீங்கள்தான் (எடப்பாடி பழனிசாமி) உங்கள் அருகில் இடம் ஒதுக்கி கொடுத்தீர்கள். நான் கொடுக்கவில்லை.

    என்னைப் பொறுத்தவரையில் யாருடைய மனமும் கோணாத வகையில் இந்த அவையை நேர்மையுடன் நான் நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் பேசினார். ஆனால் அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் பேசியது எதுவும் வெளியில் கேட்கவில்லை.

    இந்த நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிராக எழுந்து சத்தமாக பேசினார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எழுந்து ஏதோ பேசினார். அதுவும் வெளியில் கேட்கவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியனும் பேசிக் கொண்டே இருந்ததால் அவையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு அனைவரும் தங்களது இருக்கையில் அமருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் நட வடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி கோஷம் எழுப்பிய படியே தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று சபாநாயகரின் இருக்கை முன்பு திரண்டனர். அப்போது அ.தி.மு.க. துணை கொறடா ரவி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து நீங்களே வெளியில் செல்கிறீர்களா? அல்லது வெளியேற்றவா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்தபடியும், சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்ற படியும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சபைக் காவலர்கள் மூலமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சட்டசபை அரங்கினுள் வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் சபையில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்படும் போது, உங்கள் அரசியலை சபைக்குள் செய்ய வேண்டாம். வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    • பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.

    கோவை:

    கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கோவைக்கு வந்தார்.

    அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி.

    இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.

    உயர்கல்வி மருந்துவப்படிப்பில் ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சன்டைல் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.

    இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது.

    ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும்.

    இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும். தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது.

    சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன் மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்? இதற்கு முன்பு எப்போதாவது இப்படி நடந்ததா?.

    இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா? என நீங்கள் சொல்லுங்கள். அவர் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இவர்கள் இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமான சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேசியது தவறு தான். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது, அவர் அழைக்கப்படுவார்.

    இன்று ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை?

    பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். நீங்கள் ஒட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை. அவர் ஜனாதிபதியாக பிரதமர் தான் காரணம். அதற்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக-வில் இருந்து ஓ. பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் நீக்கம்
    • சட்டமன்றத்தில் இருக்கைகளை மாற்றியமைக்க அதிமுக-வினர் கோரிக்கை

    அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும். அதற்காக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகில் உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டசபையில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதுதொடர்பாக பலமுறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி சட்டசபை கூடுகிறது. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தபோது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், "தற்போது கோரிக்கை ஏதும் வரவில்லை" என்று கூறினார்.

    இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று குழுவாக சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஏற்று ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றுமாறு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ ஆகியோர் சபாநாயகரிடம் 3-வது முறையாக மனு அளித்தனர்.

    இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிறகு செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி அதை முதல் கடிதம், 2-வது கடிதமாக சபாநாயகரிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. இன்று 3-வது முறையாக மனு அளிக்கப்பட்டு உள்ளது. இருக்கை வழங்குவது பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் கூறி இருக்கிறார்.

    இடத்தை வழங்குகிறீர்களா? இல்லையா? என்பது தெளிவாக எங்களுக்கு கடிதம் மூலமாக கொடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக பதில் வந்தவுடன் அதற்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
    • எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    இதற்காக சட்டசபை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார்.

    இந்நிலையில் புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார். அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

    9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச்சென்றார். இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது,

    காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.

    ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பது இல்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    • பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம்.
    • எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சி மாற்றமே நீட் தேர்வுக்கு விடிவு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நாடு முழுவதுமே ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அது நிறைவேறும்.

    பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம். மாறாக ஆணவத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது தேவையில்லாதது. தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?, தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதைக்கூட கவர்னர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்.

    தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற அனைவருமே ஆதரித்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார். தற்போது ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மாட்டேன் என்று ஆணவமாக கூறுவது நியாயமா? என்று எனக்கு தெரியவில்லை. மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
    • விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    நெல்லை:

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் இருக்கும் வரையில் தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகள் பேசப்படும்.

    நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று மாதிரி நினைவகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது.
    • இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    தென்காசி:

    தமிழக சபாநாயகர் அப்பாவு குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 ரூபாய் வரி மத்திய அரசுக்கு நாம் செலுத்தினால் 17 பைசா நமக்கு வரும்.

    ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது. ஏன் இந்த பாரபட்சம்?. மத்திய அரசின் நிதி தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை.

    சமீபத்தில் கூட அரசுடன் ஒரு நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக ரூ.1,600 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 1971-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நன்றாக உள்ளது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    • மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
    • சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் கலவர சம்பவத்தால் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டது. மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    ×