search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி குவிந்தனர்
    • திரிவேணி சங்கமம் கடற்கரை களைகட்டியது

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம்தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் அங்கு பல மணி நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.பின்னர் காலை10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து10மணிக்கு பிறகுதான் படகு போக்குவரத்து தொடங்கியது.அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்த ர்மண்டபத்தை மட்டும் பார்வையிட்டுவந்தனர். இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள்வி வேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர்.

    ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கூடுதல் டி.ஜி.பி. நாளை ஆய்வு
    • போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை

    நாகர்கோவில்:

    12 மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருகிற 7-ந் தேதி கன்னியா குமரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கே ற்கிறார்.

    இதனை தொடர்ந்து அவர் குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் செல்கிறார். இதையொட்டி அவரது பயண பாதைகளை போலீசார் ஆய்வு செய்து வரு கின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் குமரி மாவட்டம் வந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகளோடு ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோச னையும் வழங்கினார்.

    இந்த நிலையில் பாது காப்பு தொடர்பாக ஆய்வு நடத்த கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன் நாளை (6-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

    அவர் பாதயாத்திரை தொடங்கும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் மற்றும் பொதுக்கூட்டம் நடை பெறும் திடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
    • காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு தேசிய ஒற்றுமை பயணம் என்ற பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கு கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் சீரமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது. காந்தி நினைவு மண்டபத்தில் ஆங்காங்கே உடைந்து உள்ள பகுதியை சிமெண்ட் பூசி சீரமைக்கும்பணியும் நடந்துவருகிறது.

    • அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நடந்தது.
    • முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக் குட்பட்ட அனைத்து ஊர்களிலும் கடந்த 31-ந்தேதி 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் நேற்றுபிற்பகல் 2 மணிக்கு சுசீந்திரத்துக்கு கார், வேன், லாரி, மினி லாரி, டெம்போ, ஜீப், டிரக்கர் போன்ற வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

    அதன் பிறகு மாலை 3 மணிக்கு சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த 108 விநாயகர் சிலைகளும் கன்னியாகுமரிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி, மந்தாரம்புதூர், அச்சங்குளம், கொட்டாரம், பெருமாள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு வழியாக மாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையை சென்றடைந்தது.

    108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

    • மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்க வேண்டும்
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    கன்னியாகுமரி:

    ராகுல் காந்தி குமரி மாவட்டம் வருகையை ஒட்டி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஜிகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜிஜி முன்னிலை வகித்தார்.

    தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, துணைத் தலைவர்கள் அனீஸ் ராஜன், ஜெயசிங் ராபர்ட், வட்டாரத் தலைவர்கள் பிரேம் சிங், ஈஞ்சக்கோடு தாஸ், சுரேஷ், சிபிமோன், வழக்கறிஞர் ஜெஸ்டின் ரேம், முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன், பாகோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மோகன் தாஸ், மற்றும் நிர்வாகிகள் சுஜூ மோகன், சந்தோஷ், ரெஜி, மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராகுல் காந்தி வருகையை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கேட்டும், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் மாவட்டத் தலைவர் அஜிகுமார் தலைமையில் நிர்வாகிகள் 1000 பேர் சுங்காங்கடை தேசிய நெடுஞ்சாலையில் ராகுல் காந்திக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது, வரவேற்பு பாதையில் பஞ்சாயத்து ராஜ் சங்கதன் நிர்வாகிகள் தூய்மைப் பணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்ட செய்வது, ராகுல்காந்தியின் பாதயாத்திரை குறித்து கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,

    பாதயாத்திரையை ஒட்டி குமரி மாவட்டம் வரும் வெளி மாநில, வெளி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி கேரளாவை சேர்ந்த 23 இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து மத்திய பிரதேசம் வரை மோட்டார் சைக்கிள் சாதனைப் பயணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த மோட்டார் சைக்கிள் சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்து கொண்டு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சாதனை மோட்டார் சைக்கிள் பயணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட6 மாநிலங்கள் வழியாக வருகிற 11-ந்தேதி மத்தியபிரதேசத்தை சென்றடைகிறது. மொத்தமுள்ள 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    • தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு
    • ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    வருகிற 7-ந் தேதி இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது.நிகழ்ச்சி யில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலி ருந்து விமானம் மூலமாக வருகிற 7-ந்தேதி காலை தூத்துக்குடி வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்து சேருகிறார். பின்னர் ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாதயாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் மாலை இங்கிருந்து கார் மூலமாக நெல்லை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் மேயருமான மகேஷ் தலை மையில், மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மு. க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஸ்டாலினை வரவேற்கும் வகையில் கன்னியாகுமரி முதல் மாவட்ட எல்லையான காவல்கிணறு வரை கொடி தோரணங்களும் வரவேற்பு பதாகைகளும் கட்டுவதற்கும் ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.

    • மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகை எதிரொலி
    • பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேசிய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    இந்த நடை பயணத்தின் தொடக்க விழா வருகிற 7-ந் தேதி மாலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் தமிழக முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதற்காக ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

    அங்குஉள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு தனது நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மண்டபம் பஜாரில் நடைபாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அகற்றப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி நிர்வாகம் இதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

    • சின்னமுட்டம்துறைமுகத்தில் இருந்து கடல்வழியாகபடகு துறைக்கு கொண்டு வரப்பட்டது
    • திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைபூசி பராமரிப்பதற்காக இரும்பு பைப் கம்பிகளால் சாரம் கட்டும் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் தற்போது படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விவேகானந்தா படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவே கானந்தா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு ரூ. 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த சீரமைப்பு பணியில் சென்னையை ேசர்ந்த என்ஜினீயர் குமார் தலைமையில் 15 பேர் கொண்ட பொறியியல் வல்லுநர் குழுவினர் ஈடுபட்டனர். இந்த படகு பராமரிக்கும் பணி 2 மாத காலம் நடந்தது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்ததை ெதாடர்ந்து விவேகானந்தா படகு நேற்று புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு சின்னமுட்டத்தில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவேகானந்தா படகு விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணி களை ஏற்றி செல்ல பயன் படுத்தப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • மக்கள் ஒன்றிணைந்து சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங்கினர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த 2017-ம்ஆண்டில் தொடங்கப்பட்டது. இதை யடுத்து கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றி ணைந்து சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங் கினர். இந்த இயக்கம் மூலம் துறைமுகத்திற்கு என நியமிக்கப்பட்ட அதிகாரி களோடு பலகட்டப் பேச்சு வார்த்தை, போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடைபெற்றது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் சரக்குப்பெட்டக மாற்று முனைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த பகுதியில் மீண்டும் இந்த திட்டத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவளம், கீழமணக்குடி, வடக்குத்தாமரைகுளம் சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு இயக்கம் மற்றும் இனையம் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரி பெரியார் நகரில் அமைந்து உள்ள வட்டார முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒருங்கிணைப் பாளர் பிரபா, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, ஜனாப்மஸ்கலாம், ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் தாமஸ் பிராங்கோ, பெர்லின், காஸ்மிக், சுந்தர், சிலுவை இருதயம், வட்டார முதல்வர் ஜான்சன், அருட் பணியாளர்கள் கில்டஸ், கிஷோர், அன்பரசன், ஆன்டனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சாகர்மாலா திட்டத்தின் மூலம் கன்னியா குமரி மாவட்டத்தில் கொண்டு வர முயன்ற சர்வ தேச சரக்குப்பெட்டக மாற்று முனையம் திட்டம் இல்லை என்னும் தீர்மானத்தை வருகிற சட்டமன்ற கூட்டம் தொடரில் நிறைவேற்ற வேண்டும், மக்களின் தொழில் வளங்களுக்கும், குடியிருப்புகளுக்கும், மக்களின் உரிமைக் கும், கன்னியா குமரி மாவட்டத்தின் வரலாற்று பாரம்பரியங்களுக்கும் பெரும் பாதிப்பு நேரிடும் என 2015 முதல் 2020 வரை மேற்கொண்ட துறைமுக எதிர்ப்பு போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும். மேலும் ஒக்கிப்புயல் பேரிடர் காலத்தில் மக்களின் வாழ் வுரிமைக்காக போராடிய போராட்டங்களில் போடப் பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக சரக்குப்பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு இயக்க செயலாளர் ஜே.பி.வெனிஸ் வரவேற்று பேசி னார்.

    • கன்னியாகுமரி, குழித்துறை ஆற்றில் கரைக்கப்படுகிறது
    • விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் 1250-க்கு மேற்பட்ட இடங் களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கோவில்கள், வீடுகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலை களை பிரதிஷ்டை செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. போலீசாரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்று முதல் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வாகம் 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரி, பள்ளிகொண்டான் அணை, வெட்டுமடை, மிடலாம், தேங்காய்பட்டணம், திற்பரப்பு அருவி, தாமிர பரணி ஆறு உள்பட 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.

    இன்று சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல் லப்பட்டு கரைக்கப்படு கிறது. இதை யடுத்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பிரதிஷ்டை செய் யப்பட்டிருந்த சிலைகள் இன்று காலையில் பூஜை கள் செய்யப்பட்டு பிறகு டிராக்டர் மற்றும் மினி டெம்போக்களில் ஏற்றி னார்கள். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவி லுக்கு நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். இங்கி ருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இன்று மாலை புறப்பட்டு செல்கிறது.

    கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, கொட்டா ரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. அங்கு கடற்கரையில் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் மேல்புறம் பகுதியில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் குழித்துறை தாமிரபரணி ஆற்றிற்கு கொண்டு செல் லப்படுகிறது. அங்கு ஆற்றங்க ரையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலை கள் கரைக்கப்படும். கன்னி யாகுமரி, குழித்துறை தாமிர பரணி ஆறு பகுதிகளில் பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப் படை வசதிகள், மின்வி ளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது அரசின் கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவு றுத்தி உள்ளனர். ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைப்பதற்கும் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • தேங்காய்பட்டணம் துறைமுகத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், விஜய்வசந்த் எம்.பி., ராேஜஷ்குமார் எம்.எல்.ஏ., கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளான கல்குவாரிகளை முறைப்ப டுத்துவது, தேங்காய்பட்ட ணம் துறைமுக பணிகளை துரிதப்படுத்துவது, சாலை களை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மாவட்டத்திற்குட் பட்ட தேசிய நெடுஞ்சாலை களை சீரமைக்க ரூ.15 கோடி யில்நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படுவதோடு, தேங்காய்பட்டணம் துறைமு கத்தை ஆழப்படுத்த ரூ.253 கோடி மதிப்பில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் முன்பு 39 கல்குவாரிகள் இயங்கி வந்தன.

    தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்படுகின்ற சூழலில் தற்போது கன்னியா குமரி மாவட்டம் வழியா கேரளாவிற்கு அதிக பாரத் துடன் கனரக வாகனங்கள் மூலமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவ தாக ஏராளமான குற்றச் சாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக் கைகள் எடுத்ததன் விளை வாக ரூ.2 கோடிக்கும் மேலாக அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட எல்லை பகுதியில் அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் மூலம் கனிமவள பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது, எடைமேடை கள் அமைப்பது, களியக்கா விளை மற்றும் ஆரல்வாய் மொழி சோதனை சாவடி களில் எடை மேைடகள் அமைப்பதோடு கண்காணிப்புகளை தீவிரப் படுத்தப்படவுள்ளது. வெகு விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி முறைப் படுத்தவும் திட்டமிட்டுள் ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள எந்த கல்குவாரியில் இருந்தும் கேரளாவுக்கு கற் களை எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடை சீட்டு அனுமதி வழங் ப்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து நமது குமரி மாவட்டம் வழி யாக கேரளாவுக்கு கனிமங் கள் கடத்தப்படுவதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள் ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய் துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாது குமரி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கற்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏது வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

    குமரி மாவட்ட கல்குவாரி களில் முைறகேடாக கற்கள் வெட்டப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளது. இக் குழுவின் மூலம் கல்குவாரி களில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் கல் குவாரி உரிமையாளர் கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×