search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • சோனு யாதவை ரூ.15.20 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
    • 12.80 லட்சத்துக்கு ஹரிஷ் குமாரை சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் விலைக்கு வாங்கியது.


    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    அதில் விஜய் சங்கர் 10.25 லட்சம், வாஷிங்டன் சுந்தர் ரூ.6.75 லட்சம், நடராஜன் 6.25 லட்சம், சந்தீப் வாரியர் ரூ.8.5 லட்சம், சிவி வருண் ரூ.6.75 லட்சம் என ஏலம் போனார்கள்.

    இதனையடுத்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.

    அப்போது வரை அதுவே அதிக தொகைக்கு ஏலம் போனதாக இருந்தது. இந்நிலையில் சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது. முன்னதாக ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.

    • அதிக தொகையாக பாபா அப்ரஜித் ரூ.10 லட்சத்துக்கும் விஜய் சங்கர் ரூ.10.25 லட்சத்துக்கும் ஏலம் போயிருந்தனர்.
    • இதுவரை நடந்த ஏலத்தில் சோனு யாதவ் அதிக தொகைக்கு ஏலம் போனார்.

    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. அவர் ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் போனார்.

    இதுவரை எடுக்கப்பட்ட ஏலத்தில் சோனு யாதவ் அதிக தொகைக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
    • சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஏ பிரிவு வீரர்களில் ஆர்வம் காட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம் பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 

    தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

    • கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.
    • வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.

    இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வீரராக அறிவிக்கப்பட்ட விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.

    கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. ஏ பிரிவில் கடைசி வீரரான சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது.

    • முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது.
    • ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐபிஎல் போன்றே, டிஎன்பிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து ஆடும் இப்போட்டி, தமிழகத்தில் பிரபலமானது. வரும் ஆண்டிற்கான டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்த ஏலம் பற்றி, டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் இன்று மற்றும் நாளை விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா சூப்பர் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை என 8 அணிகள் களத்தில் உள்ளன.

    மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.

    மேலும் ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவு வீரருக்கு ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரருக்கு ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரருக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. விஜய் சங்கரை திருப்பூர் தமிழன்ஸ் ரூ.10.25 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

    ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் - துஷார் ரஹீஜா (பிரிவு டி) தக்க வைக்கப்பட்ட வீரர் ஆவர்.

    • ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
    • ரூ.70 லட்சத்தில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சின் கையிருப்பு தொகை ரூ.61 லட்சமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    8 அணிகள் இடையிலான 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 2 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். தக்கவைக்கப்படும் வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி தக்கவைக்கப்படும் 'ஏ' பிரிவு வீரர்களின் (சர்வதேச போட்டியில் ஆடியவர்கள்) விலை ரூ.10 லட்சமாகவும், 'பி' பிரிவு வீரர்களின் (இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் சீனியர் போட்டியில் பங்கேற்றவர்கள்) விலை ரூ.6 லட்சமாகவும், 'சி' பிரிவு வீரர்களின் (ஏ, பி, பிரிவில் இடம் பெறாதவர்கள், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 30 ஆட்டங்களுக்கு மேல் ஆடியவர்கள்) விலை ரூ. 3 லட்சமாகவும், 'டி' பிரிவு வீரர்களின் (மற்ற வீரர்கள்) விலை ரூ.1½ லட்சமாகவும் நிர்வாக கவுன்சில் நிர்ணயித்தது.

    ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்து இருக்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் (பி பிரிவு, ரூ.6 லட்சம்), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சசிதேவ் (சி பிரிவு, ரூ.3 லட்சம்) ஆகியோரை தக்க வைத்து இருக்கிறது. இதனால் ஒதுக்கப்பட்ட ஏலத்தொகையான ரூ.70 லட்சத்தில் இருந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ்சின் கையிருப்பு தொகை ரூ.61 லட்சமாக குறைந்துள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வினையும் (ஏ பிரிவு), திருப்பூர் தமிழன்ஸ் அணி துஷர் ரஹிஜாவையும் (டி பிரிவு), கோவை கிங்ஸ் அணி ஷாருக்கான் (பி பிரிவு), சுரேஷ் குமாரையும் (டி பிரிவு), நெல்லை ராயல் கிங்ஸ் அஜிதேஷ் (பி பிரிவு), கார்த்திக் மணிகண்டனையும் (டி பிரிவு), திருச்சி வாரியர்ஸ் அந்தோணி தாசையும் (பி பிரிவு), சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி கணேஷ் மூர்த்தியையும் (சி பிரிவு), மதுரை பாந்தர்ஸ் கவுதமையும் (டி பிரிவு) தக்க வைத்துள்ளது.

    டி.என் பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    ஏலத்தில் வீரர்களின் அடிப்படை விலை முறையே ரூ.3 லட்சம் (ஏ பிரிவு), ரூ.2 லட்சம் (பி), ரூ.1 லட்சம் (சி), ரூ.50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு.
    • வீரர்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் பெயரை பதிவு செய்து வேண்டும்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டில் இருந்து டி.என்.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    7-வது டி.என்.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த சீசனில் சில அதிரடி மாற்றங்களை செய்ய டி.என்.பி.எல். ஆட்சி மன்ற குழு முடிவு செய்துள்ளது. டி.என்.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இதுவரை குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இனி ஒதுக்கீடு முறை இருக்காது.

    அதற்கு பதிலாக ஐ.பி.எல். போன்று டி.என்.பி.எல். தொடரிலும் வீரர்கள் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் செலவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு, தக்க வைப்பது, அவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் உள்ளிட்டவை அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்படும்.

    போட்டியில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் நாளை முதல் ஜனவரி 20-ந்தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலோ அல்லது டி.என்.சி.ஏ, டி.என்.பி.எல். இணையதளத்திலோ பெற்றுக் கொள்ளலாம். இதே போல் நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை சரி செய்ய டி.ஆர்.எஸ். தொழில்நுட்பமும் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
    • ஒரு ஓவர் வீசியிருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்து இருக்கும்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கோவையில் நேற்று நடந்தது.

    இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    பலத்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. சாய் சுதர்ஷன் 42 பந்தில் 65 ரன்னும் ( 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் 17 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    17 ஓவர்களில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் ஆடியது. 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து இருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மழை நீடித்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. 5 ஓவர் நடந்து இருந்தால் டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கும்.

    அதற்கு வசதி இல்லாததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் கூட்டாக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக்காந்தி கூறியதாவது:-

    உண்மையில் யாரும் எதிர் பார்க்காத முடிவு. ஆனாலும் கண்டிப்பாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்தீப் வாரியர், சாய் கிஷோர் ஆகியோர் எங்கள் அணியின் சாம்பியன் பந்து வீச்சாளர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக்கான் கூறும் போது, 'முதன் முறையாக பட்டத்தை இணைந்து பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த முடிவு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு ஓவர் வீசியிருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்து இருக்கும்.

    இருந்தாலும் இந்த வருடம் எங்கள் அணியின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது' என்றார்.

    • மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது.
    • கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

    டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அதே நேரத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளதால் அந்த அணி பட்டத்தை வெல்ல தீவிர முனைப்பு காட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    இந்த நிலையில் வழக்கமாக 7.15 மணிக்கு தொடங்கும் டி.என்.பி.எல் போட்டி இன்று மழை காரணமாக டாஸ் போடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஆகியது. இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதே போல் மைதானத்தில் மழை நின்றபின் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9 மணியளவில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    லைகா கோவை கிங்ஸ் (விளையாடும் லெவன்): கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே சுரேஷ் குமார் சாய் சுதர்சன், ஷிஜித் சந்திரன், ஷாருக் கான், யு முகிலேஷ், அபிஷேக் தன்வார், வள்ளியப்பன் யுதீஸ்வரன், மணீஷ் ரவி, எஸ் அஜித் ராம், பாலு சூர்யா, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (விளையாடும் லெவன்): கௌசிக் காந்தி , என் ஜெகதீசன், எஸ் ராதாகிருஷ்ணன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், எஸ் ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஆர் அலெக்சாண்டர், சந்தீப் வாரியர்.

    • கோவையில் நேற்று நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை தோற்கடித்தது.
    • நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது.

    கோவை:

    ஜூலை 30- 8 அணிகள் பங்கேற்ற 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம். 23-ந்தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் லீக் போட்டிகள் நடைபெற்றது.

    கடந்த 24-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    திருப்பூர் தமிழன்ஸ் , திண்டுக்கல் டிராகன்ஸ் , திருச்சி வாரியர்ஸ் , சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளே ஆப் சுற்று கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சேலத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 20 ரன்னில் மதுரை பாந்தர்சை தோற்கடித்து 'குவாலிபயர் 2' ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. தோல்வியை தழுவிய முன்னாள் சாம்பியன் மதுரை அணி வெளியேறியது.

    சேலத்தில் 27-ந் தேதி நடைபெற்ற "குவாலிபயர் 1" ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோவையில் நேற்று நடந்த குவாலிபயர் 2 ஆட்டத்தில் கோவை கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை தோற்கடித்தது.

    டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    கோவையில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி இருந்தது. இதனால் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் விளையாடும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணி 2017, 2019, 2021-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எல். கோப்பையை வென்று இருந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கில் கேப்டன் கவுசிக் காந்தி (225 ரன்), சசிதேவ் (204 ரன்), என்.ஜெகதீசன் (186 ரன்) ஆகி யோரும் பந்து வீச்சில் அலெக்சாண்டர் (10 விக்கெட்), சித்தார்த் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். சாய் கிஷோர் (111 ரன், 8 விக்கெட்), சோனு யாதவ் (107 ரன், 8 விக்கெட்) ஆகியோர் ஆல்ரவுண்டு பணியில் நன்றாக செயல்படுகிறார்கள்.

    கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    கோவை கிங்ஸ் அணியில் கேப்டன் ஷாருக்கான், சுரேஷ்குமார், சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, அபிஷேக் தன்வர், சூர்யா, அஜித் ராம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    • முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் இன்று நடந்த 2-வது தகுதிச்சுற்றில் நெல்லை ராயல் கிங்சும், லைகா கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் 26 பந்தில் 7 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்தார். பாபா அபராஜித் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 33 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 24 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கோவை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • வெளியேறுதல் சுற்றில் மதுரையை கோவை அணி தோற்கடித்து இருந்தது.
    • இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும்.

    கோவை:

    6-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தியது.

    வெளியேறுதல் சுற்றில் மதுரையை கோவை அணி தோற்கடித்து இருந்தது. இன்று கோவையில் நடக்கும் இறுதி போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நெல்லை-கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும்.

    பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணியில் சூரியபிரகாஷ், சஞ்சய்யாதவ், ஹரீஸ், ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் உள்ளனர். ஷாருக்கான் தலைமையிலான கோவையில் அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய்சுதர்சன், அபிஷேக் தன்வார், முகிலேஷ், அஜித்ராம், திவாகர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    ×