search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிக்கிருத்திகை"

    திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மூலம் ரூ.1.73 கோடி காணிக்கை வசூலானது.
    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    ஆடிக்கிருத்திகை திருவிழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துக் கொண்டதால் கடந்த 1 வார காலத்தில் உண்டியல் வசூல் எண்ணும் பணி திருக்கோவில் மண்டபத்தில் கோயில் தக்கார் வே. ஜெய சங்கர், இணை ஆணையர் செ.சிவாஜி ஆகியோர் முன்னிலையில் 2 நாட்களாக நடைபெற்றது.

    பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய ரூபாய் நோட்டுகள், சில்லரை என தனித்தனியாக தரம் பிரித்து எண்ணப்பட்டது. இதில் ரூ. 1.73 கோடி ரொக்க பணம், 371 கிராம் தங்கம், 15,664 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

    ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபாடு செய்தால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் செவ்வாய் தோஷ தடைகள் நீங்கும்.
    ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம்,

    மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள்,

    பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.

    ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும்.

    பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மலையை சுற்றியுள்ள நெல்லி மற்றும் மாந்தோப்புகளில் உணவு சமைத்து அன்னதானம் வழங்குவார்கள். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் விடப்படவுள்ளன. சென்னை பஸ்கள் செண்டூர் வழியாக மயிலம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் வந்திருந்து தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவஞான பாலயசுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்துள்ளனர்.
    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.
    கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக் கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும். இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.

    பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது. சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.
    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப்பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று மயிலத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

    இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

    விரதம் இருப்பது எப்படி?

    கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத் தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதி நீராடிய திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.  

    தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம், கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை கூறி மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவு உண்ண வேண்டும்.

    ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

    கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். வேறு சிலரும் இவ்விரதம் மேற்கொண்டு நற்கதி அடைந்தார்கள்.
    ஆடிக்கிருத்திகையொட்டி வேலூர் மார்க்கெட்டில் காய்கறி, பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    ஆடிவெள்ளி, ஆடிக்கிருத்திகையொட்டி கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றது. வேலூர் மாவட்டம் முழுவதும் அம்மன் கோவில்கள், முருகர்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி பொதுமக்கள் சைவ பொருட்கள் சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை களைகட்டியுள்ளது. ஆந்திரா, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து அதிகளவில் காய்கறிவரத்து உள்ளது. ஆனாலும் தேவை அதிகரிப்பால் வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    வரத்து மிகவும் அதிகரிப்பால் தக்காளி மட்டும் கிலோ ரூ.8 முதல் 10 வரை விற்பனை செய்யபடுகிறது. வேலூர் மார்க்கெட்டில் காய்கறி விலை 1 கிலோ விவரம் வருமாறு:

    தக்காளி-ரூ.10, கத்தரிக்காய்-ரூ.50, கேரட்- ரூ.40, பீன்ஸ்-ரூ50, அவரைக்காய்-ரூ.50, முள்ளங்கி-ரூ.15, வெள்ளரிக்காய்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.20, முருங்கை-ரூ.30, சின்னவெங்காயம்-ரூ.40, பெரியவெங்காயம்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.20 க்கு விற்பனை செய்யபட்டது.

    ஆடிக்கிருத்திகையொட்டி பூக்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை, முல்லைப்பூ கிலோ ரூ.200க்கும், சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.30, கேந்தி ரூ.40, ரோஜா ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இன்னும் 3 நாட்கள் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வேலூரில் இருந்து திருத்தணிக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
    வேலூர்:

    முருகன், கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா வரும் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவார்கள். திருத்தணி கோவிலுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் இன்றிலிருந்தே அதிகளவில் காவடி எடுத்து செல்கின்றனர்.

    இதற்காக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 பஸ்கள் இயக்கபடுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு) வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 516 டிரிப் (நடை), பழைய பஸ் நிலையத்தில் இருந்து 279 டிரிப், ஆற்காட்டில் இருந்து 119 டிரிப், பேர்ணாம்பட்டில் இருந்து 42 டிரிப், திருப்பத் தூரில் இருந்து 158 டிரிப் என மொத்தம் 1,310 டிரிப்களாக சிறப்பு பஸ்கள் திருத்தணிக்கு இயக்கப்படுகிறது. அதே நேரம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானால் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. அஸ்வினியுடன் இன்று ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது. நாளை (4-ந்தேதி) ஆடி பரணியும், 5-ந்தேதி ஆடி கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது.

    முக்கிய விழாவான தெப்பத் திருவிழா 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி இன்று காலை முதலே திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காவடி, அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அதிகாலை 4 மணியள வில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப் பட்டது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வாணையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவதற்கு சிறப்பு வசதிகளும், முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    தலைமுடி காணிக்கை, நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவண பொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்லேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றங்களை தடுக்க கோவிலின் முக்கிய இடங் களில் சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நகராட்சி சார்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர், தடையில்லா குடிநீர் வழங்க குளோரின் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளும், 30 நடமாடும் நவீன கழிவறைகளும், அமைக்கப்பட்டு இருக்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் உட்பட 368 பேருந்துகள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யாறு, திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர், ஆற்காடு, சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலிருந்து திருத்தணிக்கு இயக்கப்படுகின்றது.

    இந்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் 6-ந்தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.

    திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மேற்பார்வையில் தக்கார் ஜெய்ஷ்ங்கர், இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சிவாஜி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #TiruttaniTemple
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. 3-ந் தேதி அஸ்வினியும், 4-ந்தேதி பரணியும், 5-ந்தேதி ஆடிக் கிருத்திகை விழாவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதைதொடர்ந்து 5-ந்தேதிமுதல் 7-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ஆடிக்கிருத்திகை விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் சரவண பொய்கை குளத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் பகுதியில் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பால் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவில் பகுதியில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். #TiruttaniTemple
    ×