search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
    • விரைவில் சொந்த காலில் நிற்க ஆசை என முகமது சமி தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

    அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

    இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சரியாக சில நாட்கள் ஆகும். விரைவில் சொந்த காலில் நிற்க ஆசைபடுவடுவதாகவும் சமி தெரிவித்தார்.

    இதனால் அவர் ஐபிஎல் தொடரை இலக்க நேரிடும். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முகமது சமி சாதனை படைத்தார். 

    • விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
    • விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

    இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

    இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
    • படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    பாகூர்:

    புதுவை அடுத்த பாகூர் தாமரைகுளம் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பாகூர் முருகன் கோவிலில் இருந்து குருவிநத்தம் வழியாக மோட்டார் சைக்கிளில் பாகூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாகூரில் தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. மண்டபத்திற்கு வந்திருந்த சிலர் போக்குவரத்து இடையூறாக வாகனங்களில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுரேந்தர் இது குறித்து அவர்களிடம் ஏன் இடையூறு செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு நீ யாருடா எங்களைக் கேட்கிறாய் என்று கேட்டு சுரேந்தரை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் அவரது நண்பரான கோகுல் மற்றும் சேகருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சுரேந்தர் நண்பர்கள் அவரை தாக்கியவர்கள் யார் பிரச்சனை எப்படி ஏற்பட்டது என்று கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் இது போல் கேள்வி கேட்டால் உங்களை வெட்டி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    படுகாயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள பாகூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    சேகர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பாகூர் இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவியது. உடனே 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனியார் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமண மண்டபத்தின் கேட்டை இழுத்து பூட்டினர். பின்னர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் அதை மறுத்தனர். பின்னர் தகவல் அறிந்த தெற்கு பகுதி எஸ்.பி பக்தவச்செல்வம் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தகுமார் ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னரே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    படுகாயம் அடைந்த சுரேந்தர் இது குறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பாகூர் பகுதியில் நள்ளிரவு 3 மணி நேரம் பதட்டமாக காணப்பட்டது மேலும் பாகூர் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் மணமக்களை மண்டபத்திலிருந்து போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். மேலும் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை போலீசார் தனியார் வாடகை வண்டியை வரவழைத்து போலீசாரே அதனை ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கைதான 2பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அரிவாளால் வெட்டிய திருப்பூரை சேர்ந்த சரவணன் (வயது 23), ஈரோட்டை சேர்ந்த பிரவீன் ( 27) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கைதான 2பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது திடீரென அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய சரவணன், பிரவீன் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
    • விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

    திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே கூறும்போது, இந்த விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த கைவினைஞர் சுரங்கத்துறையை அரசு ஒழுங்குப்படுத்தும் என்றார்.

    ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது.

    • மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகவனம்(வயது56). இவரது மனைவி முல்லை கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரதாப் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

    தற்போது அவர் சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முருகவனம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவருடன் சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

    மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகவனம், பிச்சை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூமாபட்டி இமானுவேல் கீழத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகியோர் கீழே விழுந்தனர்.

    இதில் முருகவனம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகவனம் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் காயம் ஏற்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் துவங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராகும் வரை கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம்.
    • அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது.

    நகத்தை எப்படி வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து நகத்தை வெட்டுகிறோம். அதேபோல தான் காதுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வோம். அதனை சுத்தம் செய்வதற்கு சில நபர்கள் ஊக்கு, சில நபர்கள் கோழி இறகு, இன்னும் சில நபர்கள் இயர் பட்ஸ் பயன்படுத்துவார்கள். இயர் பட்ஸ் பயன்படுத்துவதினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

    காது அடைப்பு

    காதுகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம். ஆனால் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது நடுப்பகுதியில் இருக்கும் அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது. இதனால் அழுக்குகள் சேர்ந்து காது அடைப்பை ஏற்படுத்தும்.

    காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கிறது. அதேநேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும்.

    காயம்:

    காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சினையை உண்டாக்கும். மேலும் காதின் செவி தன்மையை பாதித்து காது கேட்காமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

    நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அறிவதற்கு காதுகளின் நடுப்பகுதியில் ஒரு நரம்பு செல்கிறது. இதில் நீங்கள் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது இந்த நரம்பினை பாதித்தால் உணவின் சுவையை அறிய முடியாது.

    அதனால் அடிக்கடி இனி இயர் பட்ஸ் பயன்படுத்தாதீர்கள். மேலும் ஊக்கு, குச்சி, கேர்பின் போன்றவை பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்குகளை எடுக்க பயன்படுத்தாதீர்கள் அது உங்களுக்கே பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    • முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை தெப்பக்குளம் மேடு கல்லாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27). சம்பவத்தன்று இவர் உடும்பன் பாறையில் இருந்து ஆனைமுடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக தேயிலை தோட்டத்தின் வழியாக குடி போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக காட்டெருமை வந்தது. காட்டெருமை கார்த்திக் ராஜாவை துரத்தியது. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் பயந்து ஓடினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆனை முடி எஸ்டேட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து முடிஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது புகார்
    • கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் நடந்துள்ளது. நாகர்கோவில் சப்-டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    விபத்தில் காயமடைந்த வர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் சேர்க்கப்பட்டுள்ள னர். தீபாவளியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடந்த விபத்துகளில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வடசேரி, நேசமணி நகர், கோட்டார், ஆசாரிப்பள்ளம் பகுதியில் தீபாவளி பண்டிகையை யொட்டி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். தகராறில் ஈடுபட்டு காயமடைந்தவர்களில் ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் உள்ளனர். இதேபோல் கன்னியா குமரி சப்-டிவிசனலுக் குட்பட்ட பகுதியிலும் குடி போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குளச்சல், தக்கலை பகுதியிலும் குடி போதையில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்-26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயங்களால் மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் தனியார் மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். நேற்று நடந்த 50-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது, பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.

    ×