search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரடைப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மான்ட்ஃபோர்ட் பள்ளியில், 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங் என்ற 9 வயது சிறுமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், தனது சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு சென்றும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்

    சிறுமி இறந்த தகவல் கிடைத்ததும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    • அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது.
    • எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் தெரிவிக்கினர்.

    சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் [Zhejiang] பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா [Jinhua] நகரில் உள்ள யோங்காங் டேவே Yongkang Deway பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் [Huang] என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் [Immediate restoration] முறை இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகள் கடந்த சமூக வலைதளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிழந்தவரின் வயது வெளிப்படுத்தப்படவில்லை.

    இதுதொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அறுவை சிகிச்சை என்பதை விட எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் கூறியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறனர். 

    • மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம் செல் அருமையான வழிமுறையாகும்.
    • மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

    நீரிழிவு நோய்க்கு தீர்வு காண்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், அந்த செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நீரிழிவு நோயானது இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.


    நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தருகிறது. சில புற்றுநோய்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகச்சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

    ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு அருமையான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சையானது புற்றுநோய் பாதித்த செல்களை பழுதடையச் செய்து புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

    மேலும் புதிய நல்ல செல்களையும் உருவாக்குகிறது. இதன் மூலம் சில புற்று நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

    மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம். சில நேரங்களில் மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு மார்பக வளர்ச்சி தேவைப்படலாம். எனவே மார்பக சிகிச்சைக்கும் ஸ்டெம் செல் என்பது மிக அருமையான வழிமுறையாகும்.

    இதன் மூலம் புற்றுநோய் பாதித்த பெண்கள் தங்களுடைய மார்பகத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் மார்பகத்தை அழகாக மாற்றுவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல வழிமுறையாகும்.

    புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு எந்த திசுவில் புற்றுநோய் இருந்தாலும் அதையும் ஸ்டெம் செல் சிகிச்சை சரி செய்கிறது. இது தொடர்பாக பல ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் குறைந்து விடும் அல்லது இறந்து விடும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

    ஒருவருக்கு இதய செல்கள் குறையும் போது ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இதய செல்களை உருவாக்க முடியும். இதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் சீராக்கி மாரடைப்பை தடுக்க முடியும்.

    மேலும் மூட்டு பகுதிகளில் உள்ள தேய்மானங்களுக்கும் ஸ்டெம் செல் என்பது நன்மை பயக்கும் சிகிச்சையாகும். மூட்டு தேய்மானம், முதுகெலும்புகளில் ஏற்படக்கூடிய தேய்மானங்கள் இவை அனைத்தையுமே சீராக்கு வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியமான வழிமுறையாக உள்ளது.


    ஆட்டோ இம்யூன், பக்கவாதம், உடல் பருமனுக்கு தீர்வு:

    நமது உடலில், நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பானது சிலநேரங்களில் தவறுதலாக ஆரோக்கியமான செல்களை தாக்கி அழிக்கிறது. இந்த பாதிப்புக்கு ஆட்டோ இம்யூன் என்று பெயர். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மிகச் சிறந்த பலனை தருகிறது.

    இந்த பாதிப்பானது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. வைரஸ்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு மரபணு பிரச்சினைகள் உருவாகி அதன் மூலமாக ஆட்டோ இம்யூன் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சையானது ஆட்டோ இம்யூன் பாதிப்பு கொண்டவர்களின் செல்களில் ஏற்படும் மாற்றங்களை சீரமைப்பதன் மூலம் அவர்களின் நோயையும் குணப்படுத்துகிறது.

    ஒருவருக்கு வயதாகும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் வரலாம். அதுபோன்ற பக்கவாதத்துக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தரும்.

    ஒவ்வொரு உறுப்புகளில் ஏற்படுகிற சேதம் மற்றும் மீளுருவாக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் மிகவும் அற்புதமான வழிமுறை என ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.

    பெண்களை பொருத்தவரைக்கும் வயதாகும் போது அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு உடல் எடை குறைகிறது.

    பெண்களின் உடல் உறுப்புகளில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சீராக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டெம் செல் சிகிச்சை என்பது ஒரு எளிய வழிமுறை ஆகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு திசுவின் உருவாக்கம், பழுதுபார்த்தல், மீளுருவாக்கம் ஆகியவைகளுக்கான அடிப்படையே அந்த திசுக்களில் உள்ள ஸ்டெம் செல் தான். இதனால் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி நிறைய ஆய்வுகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் சக்சஸ் ரேட் இன்னும் கொஞ்ச காலத்தில் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

    • விகாஸ் சேத்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.

    செப்டம்பர் 7 ஆம் தேதி நடிகர் விகாஸ் சேத்தி மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதான அவர் பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

    நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்கு செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.

    விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்று மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்தார்.

    • 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்
    • பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானார்

    பிரேசிலை சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் [Matheus Pavlak] 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

     

    பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

    • அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
    • அனிகா மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விடுதி அறையில் அனிகா ரஸ்தோகி (19) மாணவி கடந்த சனிக்கிழமை இரவு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    அனிகா ரஸ்தோகி, ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அனிகா தனது அறையின் தரையில் கிடந்தார். மேலும் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக அனிகா உயிரிழந்ததாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஏ., எல்.எல்.பி. 3-ம் ஆண்டு மாணவியான அனிகா ரஸ்தோகி, மகாராஷ்டிர கேடரின் 1998 பேட்ச் இந்திய போலீஸ் சர்வீஸ் (IPS) அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார்.

    சஞ்சய் ரஸ்தோகி தற்போது தேசிய புலனாய்வு அமைப்பில் (என்ஐஏ) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்.

    அனிகாவின் உடலில் உடைகள் அப்படியே இருந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். விடுதி அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும், சந்தேகப்படும்படியான எதுவும் உள்ளே காணப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர்.
    • மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவா என்ற 25 வயது பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக தேவாவும் அவரது உறவினர் கங்காராமும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அன்றைய இரவே, 'உங்களது மகன் தேவா கஸ்டடியில் மாரடைப்பால் இறந்துவிட்டான்' என்று அவரது குடுபத்துக்கு போலீசிடம் இருந்து போன் வந்துள்ளது.

    இதனால் பழங்குடியின இளைஞரான தேவாவின் குடும்பபும் உறவினர்களும் அதிர்ச்சியைடந்த நிலையில் போலீஸ்தான் தேவாவை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேவாவுடன் கல்யாணமாக இருந்த மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

    இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொதிப்படைந்த தேவாவின் உறவின பெண்மணிகள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து தங்களின் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளே தரையில் படுத்து அழுது புலம்பியுள்ளனர். தங்களின் வளையல்களை உடைத்து கூச்சலிட்டனர் அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்ற நிலையில் அங்கு நடந்த கைகலப்பில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.

    தேவாவுக்கு மாரடைப்பு வந்தது உண்மைதான் என்றும் மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு சிபிஆர் வழங்கியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 'இளம் வயதில் எப்படி மாரடைப்பு வரும், தேவாவையும், கங்காரமையும் போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் இருக்கும் கங்காராமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று தேவாவின் உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. 

     

    • நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.
    • நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.

    இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைப்பிடித்தல் பழக்கம், மது அருந்துவது போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.


    யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.

    உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.


    இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
    • இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. பல இளம் வயது நபர்கள் இதில் பலியாகின்றனர். இக்கால வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், மன அழுத்தம், சமூதாய சூழல் மற்றும் பல காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

    பெரும்பாலும் ஒருவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள், அவர்களுக்கு முதலில் செய்யும் ஒரு சிகிச்சை ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி. இதில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதில் ஸ்டெண்ட் வைத்து அந்த அடைப்பை அகற்றுவர். இதில் இரத்த குழாயில் எந்தளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் சதவீத அளவை கணக்கிடுவர்.

    இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பொதுவாக 100 சதவீத அடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிலையை புரட்டிப் போடும் வகையில், மருத்துவர்கள் ஒரு மனம் நெகிழும் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

    இதயத்தின் பெரிய இரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட 58 வயதான வழக்கறிஞர் எம்.ஸ்டாலின் மணி என்பவரை மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் "ஸ்டென்ட்" பொருத்தி அடைப்பை சரி செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.

    பூரண குணமடைந்ததிற்கு பின் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிந்து நன்றி தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூட செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து நடத்தி வெற்றி பெற்று இருப்பது பாராட்டை குவித்து வருகிறது.

    மேலும், இதுபோன்ற செயல்கள் நடக்கும் போது அரசு மருத்துவனை மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    • சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், மஹோபா நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க மேலாளர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் குமார் ஷிண்டே கடந்த 19ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நாற்காலியில் சரிந்து கண்கள் மேலே சென்றவாரு மூச்சு பேச்சின்றி ஆனார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜேஷ் குமாரை காப்பாற்ற முயன்றனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும், சிபிஆர் கொடுத்து காப்பாற்றவும் முயன்றனர்.

    பிறகு, அவரது உடல்நலம் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேஷ் குமார் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அவர் திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 30 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், இளம் இந்தியர்களிடையே இதய நோய்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

    • காஃபி குடிக்காதவர்கள் ஆறு மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்.
    • காஃபி குடிப்பவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் குறைவு.

    காஃபி உடல் நலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காபி குடிக்காதவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும், காபி குடிக்கக் கூடியவர்கள் குறைந்த நேரம் உட்கார்ந்தால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது. பயோமெட் சென்ட்ரல் (BioMed Central) இதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மூலம் இது தெரியவந்துள்ளது.

    காஃபி குடிக்காத தனி நபர்கள் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்கள் உயிரிழக்க 60 சதவீதம் வாய்ப்புள்ளது. அதேவேளையில் காஃபி குடிக்கக்கூடியவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருப்பவர்களாக இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த 13 வருடம் 10 ஆயிரத்திற்கு அதிகமானோரிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

    தினந்தோறும் ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக உட்கார்ந்து இருக்கக்கூடிய நபர்கள் காஃபி குடிப்பவர்களை விட காஃபி குடிக்காதவர்களுக்கு ஆபத்து அதிகம் என சீனாவில் சூசோப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி என்று ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தது. காஃபி குடிப்பவர்கள் 24 சதவீதம் குறைவான உயிரிழப்பு ஆபத்தை எதிர்கொள்ளவதாக அந்த ஆய்வு தெரிவித்தது.

    உட்கார்ந்து இருக்கும் பழக்கம் உடையவர்களின் உடல்நலத்தை காஃபி மேம்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

    காஃபியே குடிக்காதவர்களைவிட அதிகமாக காஃபி குடிப்பவர்களுக்கு அனைத்து வகையிலான ஆபத்தில் இருந்து 33 சதவீதம் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    காஃபியில் உள்ள வேதிப்பொருட்கள் இயற்கையில் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக கருதப்படுகிறது. இருப்பினும், இறப்பதற்கான ஆபத்தை குறைக்க காபி உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்றும், இதய நோயால் இறக்கும் அபாயம் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அதிகம் என்றும் ஆராய்சிக்குழு கண்டறிந்துள்ளது.

    • 2 வயதான அவரது வளர்ப்பு நாயின் இரண்டு முன்னங்கால்கள் இல்லாமல் பிறந்துள்ளது.
    • ஒரு நாள் ஆண்ட்ரூவின் மடியில் சாம்ப் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலியால் அவர் துடித்துள்ளார்.

    ஜார்ஜியாவில் தனது உரிமையாளர் ஆண்ட்ரூ குசைக் மாரடைப்பால் துடிப்பதை உணர்ந்து, இரண்டு கைகளையும் இழந்த அவரது வளர்ப்பு நாய் சாம்ப் துரிதமாக செயல்பட்டு உயிரைக்காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்ஜியாவை சேர்ந்த ஆண்ட்ரூ குசிக் (61) சமீபத்தில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    2 வயதான அவரது வளர்ப்பு நாயின் இரண்டு முன்னங்கால்கள் இல்லாமல் பிறந்துள்ளது. சாம்ப் தனது பின்னங்கால்களை கொண்டே செயல்பட்டு வந்துள்ளது.

    ஒரு நாள் ஆண்ட்ரூவின் மடியில் சாம்ப் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலியால் அவர் துடித்துள்ளார். அவரது வளர்ப்பு நாய் சாம்ப், அவர் வலியால் அவதிப்படுவதை உணர்ந்துள்ளது.

    இதனை அவரது மனைவிக்கு உணர்த்த சிணுங்கலை வெளிப்படுத்தி உள்ளது. சாம்ப்பின் நடத்தை மற்றும் சிணுங்கலை கேட்ட அவரது மனைவி, நிலையை உணர்ந்து ஆம்புலன்சை வரவழைத்து ஆண்ட்ரூவை தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து சாம்ப் என் உயிரைக் காப்பாற்றி உள்ளது. நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்படி, அமெரிக்காவில் ஒருவருக்கு ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் மாரடைப்பு வருகிறது. மாரடைப்பு உட்பட, அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் இதய நோயால் சுமார் 1,905 இறப்புகள் ஏற்படுகிறது.

    நாய்கள் அவற்றின் உணர்வுகளால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை கண்டறியும். அவற்றின் உணர்ச்சிகளால் நோய்கள் மற்றும் உடலியல் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.

    ×