search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு"

    • ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.
    • மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள்.

    காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலே ஆடிப் பெருக்கு என்னும் இவ்விழா சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தஞ்சை, திருச்சி மாவட்ட மக்களின் பங்கேற்பு இவ்விழாவில் மிகுதி. இவ்விழாவினைப் பற்றிய செய்திகள் பழைய நூற்கள் சிலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சோழன் கரிகால் பெருவளத்தானின் மகளாகிய ஆதி மந்தியின் கணவனாகிய ஆட்டனத்தியைப் பிரிந்து பேதுற்றதும் இவ்வாடிப் பெருக்கு விழாவில் தான் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர்.

    உழவிற்கு ஆதாரமாக இருப்பது நீர். அந்நீரினைப் போற்றிக்கொண்டாடுவதே இவ்விழா. ஆதலால் இவ் விழாவினை நீர் விழா என அழைப்பதிலும் தவறில்லை.

    ஒவ்வோராண்டும் ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரியாற்றில் இருகரை தழும்ப நீர் பெருக்கெடுத்து வரும். அதே போல் காவிரியாற்றின் கிளை ஆறுகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, கல்லணைக் கால்வாய் போன்றவற்றிலும் நீர் மிகுதியான அளவிற்குத் திறந்து விடப்படும். இங்ஙனம், ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் நீர்ப்பெருக்கெடுத்து வருதையே ஆடிப் பெருக்கு என ஆவலுடன் அழைக்ககின்றனர்.

    விழா முறை

    இவ்விழாவில், ஆண்களின் பங்கேற்பை விடப் பெண்களின் பங்கேற்ப மிகுதி. இவ்விழா, ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் வருவதை அனைவரும் அறிந்திருப்பதால் பெண்கள் பத்து நாட்களுக்கு முன்னதாகவே முளைப் பாலிகைக்கு ஏற்பாடு செய்வர். ஒன்பதுவகைத் தானியங்களையும் ஒரு தட்டிலோ தாம்பாளத்திலோ எருவுடன் தூவி நீர் தெளித்து மூடி வைத்து வளர்ப்பர். அது வெள்ளை வெளேர் என்று நீண்டு செழிப்புடன் வளர்ந்திருக்கும். இதற்குத் தான் முளைப்பாலிகை என்பது பெயர்.

    கன்னிப்பொங்கலன்று பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாகச் சென்று கும்மி கொட்டுவதைப்போல இதற்கும் ஒன்று கூடி ஊர்வலமாக செல்வர். இதில் கன்னிப்பெண்களனறித்திருமணம் ஆனவர்களும் கலந்து கொள்வர். பெண்கள் தான் வளர்த்திருந்த முளைப்பாலிகையை ஒரு கையில் ஏந்தி வரிசையாக ஆற்றங்கரை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்காட்சி, கண் கொள்ளாக்காட்சியாகும்.

    செல்லும் போது நாற்சந்திகளிலும் மற்றும் குறிபிட்ட முக்கிய இடங்களிலும், வட்டமாக நின்ற கும்மியடித்துச் செல்வதும் உண்டு. இங்ஙமான இரண்டு மணிக்குப்புறப்பட்ட ஊர்வலம் ஆற்றகரையை அடைவதற்கு ஏறத்தாழ நான்கு அல்ல ஐந்து மணி ஆகும். அங்கே, சமதரையாக உள்ள ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச்சாணத்தால் மெழுகுவர் அவ்விடத்தில் சாணி உருண்டையாக உருவாக்கப்பட்ட பிள்ளையாரே வைப்பர்.

    பிள்ளையார் கிழக்கு நோக்கிய வண்ணம் இருக்கும். அதற்கு எதிரே தாம் கொண்டு சென்றிருக்கும் முளைப் பாலிகைத் தட்டுக்களை எல்லாம் வரிசையாக அடுக்கி வைப்பர். நாற்றங்கால் ஒன்று நடந்து வந்து அவ்விடத்தில் இளைப்பாறி இருப்பது போல் அக்காட்சி தோன்றும்.

    பின்னர்த்தாம் கொண்டு சென்றிருக்கும் பச்சரிசியை நீர் தெளித்துச் சர்க்கரையுடன் கலந்து வரிசையாக அடுக்குவர். அதன் பிறகு கற்பூரம் ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தி, சாம்பிராணி புகைப்பர் அனைத்துப்பெண்களும் பிள்ளையாரைப் பயபக்தியுடன் கீழே விழுந்து வணங்குவர். மங்கலப் பெண்ணொருத்தி மஞ்சள் தடவிய நூல் கயிற்றை அங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொடுப்பாள். வாங்கிக் கொள்ளும் சிலர் கழுத்தில் அணிந்து கொள்வார். சிலர் தம் கையன்றில் கட்டிக் கொள்வர்.

    இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களைப் நிகழ்த்துவர். ஒரு பெண் வெளியில் நின்று நல்ல இராகத்தோடு பாட, ஏனையோரும் அதனையே பாடி ஆடுவர். இது நீண்ட நேரம் நீடிக்கும். பின்னர்ப் பெண்கள் எல்லாம் தாம் கொண்டு வந்த முளைப்பாலிகைத் தட்டினை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்குவர். அப்படியே அதனைத் தண்ணீரில் பிய்த்து விடுவர். அத்துடன் காதோலை, கருகமணி போன்றவற்றையும் ஆற்றில் மிதக்க விடுவர். காதோலைசியைச் செய்விப்பர். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஆற்றின் கரையிலேயே நடைபெறும்.

    சுவாமிமலையின் கண் ஓடும் காவிரியாற்றின் கரையில் ஒவ்வோர் ஆடிப்பெருக்கன்றும் ஏராளமான புத்தம் புதிய மணமக்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வருவதை இன்றும் காணலாம்.

    காவிரியாற்றில் நீர் பெருகுவதைப் போல இவர்களது வாழ்விலும் வளம் பெருகும் என்னும் நம்பிக்கையால் இந் நிகழ்ச்சியை ஆடிப்பெருக்கன்று வைத்துக் கொள்கின்றனர். இந்த ஆடிப்பெருக்கைச் சிலர் பதினெட்டாம் பெருக்கு எனவும் கூறி வருகின்றனர். இவர்கள் ஆடித்திங்களுக்குக் கொடுக்கும் மதிப்பினைவிடப்பதினெட்டாம் நாளுக்குக் கொடுக்கும் மதிப்பே அதிகம் எனத் தெரிகின்றது. ஏன் அந்தப் பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் என்பது புதிராகவே உள்ளது.

    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழைபொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புது வெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு.

    சங்க நூல்களில்பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப்பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.

    அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள்,பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணுபற்றிய நூல்களைபடிக்கலாம்.

    இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம்பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

    • தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.
    • ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது.

    பயிர்கள் நன்றாக வளர்வதற்காக நீர்வளம் அருளும் காவிரித்தாயை முதன்மையாக கொண்ட ஆறுகள் அனைத்தையும் போற்றி வழிபடுவது 'ஆடிப்பெருக்கு'.

    ஆறுகள் ஓடுகின்ற எல்லா ஊர்களிலும், நகரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. ஆனால், காவிரி ஆடிப்பெருக்கு சற்றுக்கூடுதலான சிறப்புடையது.

    திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு பெண்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    ஆடிப்பெருக்கின்போது பராசக்தியை வழிபடுவதைப் போலவே காவிரித்தாயை வழிபடுகின்றனர்.

    தமிழர்கள் 18 என்ற எண்ணை மிகவும் புனிதமானதாகப் போற்றுகின்றனர்.

    ஆன்மீகத்திலும் 18 என்ற எண் புனிதமானது. காவிரி படித்துறைகளில் 18 படிகளை அமைத்திருக்கின்றனர். ஆடி பதினெட்டாம் நாள், வெள்ளப்பெருக்கு அந்தப் பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிறபோது 'ஆடி பதினெட்டு' என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றன.

    ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா பெண்களுக்கே சிறப்பாக உரியது. அன்று பெண்கள் காலைப் பொழுதில் கரைகளில் வந்து கூடிக் காவிரித்தாயை வழிபடுவார்கள். இதற்கென்றே படித்துறைகள் பல உள்ளன.

    அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி முதலியவற்றை வைத்து வழிபட்டு அவற்றை ஆற்றோடு செலுத்துவார்கள்.

    மாலை நேரம் தயிரன்னம், புளிசாதம், சர்க்கரை பொங்கல் வகைகளை சமைத்து காவிரித் தாய்க்குப் படைப்பார்கள். பின்னர் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக பொழுதை போக்குவார்கள்.

    சிறுவர்கள் சப்பரங்களையும், தேர்களையும் உருவாக்கி அவற்றில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவார்கள்.

    கன்னிப்பெண்கள், தமக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நேர்ந்துகொண்டு காவிரித்தாயை வழிபடுவார்கள்.

    இதற்காக அம்மன் முன் படைத்த மஞ்சள் கயிறுகளை ஒருவரது கழுத்தில் மற்றொருவர் சூட்டுவது வழக்கம். மஞ்சள் கயிற்றைச் சகோதரர் கையில் கட்டுவார்கள். இது காப்புக்கயிறு.

    பிரார்த்தனை பலித்து, திருமணம் முடிந்த பின் புதுமணத் தம்பதிகள் காவிரித்தாயை நன்றியுடன் போற்றுவதுண்டு. சிலர் தாலி மஞ்சள் கயிறுகளை மாற்றிப்புது மஞ்சள் கயிறுகளை அணிவார்கள். பழைய மஞ்சள் கயிறுகளை அருகிலுள்ள மரங்களில் கட்டுவார்கள்.

    • வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.
    • காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.

    மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன்மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

    வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரதது கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

    பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் மட்டுமாவது அணைகளை திறந்து விட்டு நீர்பெருக்கெடுத்து ஒடச் செய்கின்றனர்.

    • சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி.
    • ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும்.

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒருநாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது ஆடிப்பெருக்கில்...

    காவிரி நீர் அபிஷேகம்!

    நாமக்கல்லில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மோகனூர். இந்த தலத்தில் உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீ அசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் எப்போதும், அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம் தீபம்; ஆகவே இந்தத் திருநாமம் ஈசனுக்கு!

    இந்தத் தலத்தின் சிறப்பு... சுவாமியை தரிசித்தபடி அப்படியே திரும்பினால், காவிரித்தாயை தரிசிக்கலாம். காவிரி வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது என்பர்! எனவே காசிக்கு நிகரான திருத்தலம் எனப்போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு, காவிரி நீரால் அபிஷேகித்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

    சூரிய பூஜை காணும் முருகன்

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    காவிரித் தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீரங்கத்தில், ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாகப் பெருக்கெடுத்து ஓடும். இதனைக் காண அரங்கன், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரித் தாயாருக்கு மாலை, தாலிப்பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும்.

    காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாகக் கூடி, பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஆடிபெருக்கு களையிழந்து காணப்பட்டது.
    • தடையை மீறி மக்கள் வழிபாடு செய்து கொண்டாடினர்.

    கரூர்:

    காவிரி ஆற்றங்கரை யோரங்களில் வெள்ளப்பெருக்கு காரணத்தால் ஆடி 18 கொண்டாட்டம் களையிழந்தது.குளித்தலையில் தடையை மீறி மக்கள் வழிபாடு செய்து கொண்டாடினர்.

    ஆடி 18 விழாவையொட்டி கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளுக்கு நேற்று விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் ஆடி 18 விழா கொண்டாடப்படாத நிலையில், நடப்பாண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும், காவிரியில் தண்ணீர் வரத்து இருந்ததால் ஆடி 18 கொண்டாட்டம் இருக்கும் என்ற நிலையில் திடீரென நேற்று முன்தினம் காவிரியில் 1.40 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால், கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றினுள் மற்றும் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதனால் வாங்கல், நெரூர், மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் காவிரி ஆற்றுப் பகுதிகள் மக்கள் வருகையின்றி நேற்று வெறிச்சோடின.

    குளித்தலை நகராட்சி சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் காவிரி ஆற்றுக்கு செல்லவேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை செய்த நிலையிலும், பலரும் தடையை மீறி கடம்பர் கோயில் பகுதி காவிரி ஆற்றங்கரையோரத்தில் படையலிட்டு ஆடி 18ஐ கொண்டாடினர்.

    கரூர் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கரூர் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுமக்கள் படையலிட்டு வழிப்பாடு செய்தனர். பலர் வீடுகளில் வழிப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    • 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
    • பேரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.

    பேரூர்:

    ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் இன்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். பக்தர்கள் படித் துறையில் வாழை இலை விரித்து தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்த–னர். பின்னர் அவற்றை ஆற்றில் மிதக்க விட்டனர்.

    திருமணமாகாத இளம்பெண்கள் திருணம் நடைபெற வேண்டி ஆற்றின் கரையோரத்தில் 7 கூழாங்கற்களை எடுத்து அதனை 7 கன்னிமார்களாக உருவகித்து வழிபட்டனர். திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவ–ருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக கொண்டனர்.

    இேதபோல் இறந்து போன குழந்தைகளை நினைத்து காதோலை, கருகுமணி, தாழை மடல், நாணல் இழை மற்றும் பலகாரங்கள் வைத்து இலைப்படையல் வழிபாடும் நடத்தினர்.இதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பின்னர் பக்தர்கள் பேரூர் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் உள்ள பசுமாடுகளுக்கு அகத்திக்கீரைகளும் வழங்கினர்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு அன்று பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து காலை முதலே பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டமான திருப்பூர், நீலகிரி பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது. கோவை நகர் பகுதியில் இருந்து பேரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேரூர் தமிழ் கல்லூரியிலேயே திருப்பி அனுப்பப்பட்டன.

    அதேபோல் பேரூர் பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர் வழியாக உக்கடம் வந்து, நகர் பகுதிக்குள் வந்தது.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுைர கோவில்களில் புதுமண தம்பதிகள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
    • இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும்.

    மதுரை

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.

    ஆடி மாதத்தில் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.

    இந்நாளில் பெண்கள் மாங்கல்யம் பெருக்கி கட்டுவது முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை செய்வதால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி ஆடிப்பெருக்கான இன்று கோவில் மற்றும் நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் மற்றும் சுமங்கலிகள் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

    மதுரையில் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான புதுமணத்தம்பதிகள் வந்திருந்தனர். அவர்கள் பொற்றாமரைகுளத்தில் வழிபட்டு புதுத்தாலி அணிந்து கொண்டனர். இதே போல் முத்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் புதுமண தம்பதிகள் வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு வைகை ஆற்றில் வழக்கமாக ஏராளமானோர் திரள்வது உண்டு.

    ஆனால் தற்போது மழை காரணமாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கு பூஜை நடத்த போலீசார் தடை விதித்ததோடு தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.

    மதுரையில் திருமணமான பெண்கள் பலர் வீடுகளில் வழிபட்டு தாலி பிரித்து புதியதை அணிந்து கொண்டனர்.

    • காவிரி ஆற்றின் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடபபட்டது.
    • இதைமுன்னிட்டு பக்தர்களும் பொதுமக்கள் மக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வணங்கினர்.

    மேட்டூர்:

    காவிரி பாய்ந்து ஓடும் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடபபட்டது. இதைமுன்னிட்டு பக்தர்களும் பொதுமக்கள் மக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வணங்கினர்.

    புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அறிவித்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புனித நீராடினார்கள். மேட்டூரிலும் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அணை மற்றும் காவிரிக்கரை பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர்.

    இன்று காலையில் இருந்தே சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் மேட்டூர் வந்தனர். இவர்கள் காவேரி பாலம் பகுதியில் ஆற்றில் நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார்கள் இவ்விழாவை முன்னிட்டு காவேரி பாலம் பகுதியில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள், ராட்டி–னங்கள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஏ.டி.எஸ். பி. கென்னடி தலைமையில் மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமார் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    போலீசாருடன் நாட்டு நல பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறை இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமி சிலைகள் சாமியின் ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்கள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்து மேளதாளங்களுடன் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மேட்டூர் காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    காவிரி ஆற்றின் மற்ற எந்த பகுதிகளிலும் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் கண்காணிப்பு கோபுரமும், கண்காணிப்பு கேமராவும் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேட்டூர் நகராட்சி சார்பில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு காவேரி பாலம் பகுதியில் தற்காலிக உடைமாற்றும் வரை மின்விளக்கு வசதி உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.
    • இன்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல் ஆடி மாதத்தில் 18-ம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.

    அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நைவேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தினர்.

    நெல்லை குறுக்குத் துறை தாமிர பரணி ஆற்றங்கரையில் சுப்பிர மணிய சுவாமி கோவில் படித்துறையில் திரளான பெண்கள் இன்று காலை முதலே திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். இன்று மாலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் முன்பு தொடங்கி சந்திப்பு கைலாசநாதர் கோவில் வரை ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி கரைப்பகுதியில் பொதுமக்கள் புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானி, காவிரி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக உள்ளது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுப்பார்கள்.

    இதற்காக திதி கொடுக்க தனியாக இடங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பரிகார பூஜை செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு அன்று புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பவானி கூடுதுறையில் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பவானி படித்துறையில் பாதுகாப்புக்காக 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்தகனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கை ஒட்டி பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடவும் பரிகாரப் பூஜைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி புனித நீராட வருபவர்கள் பரிகார பூஜை செய்ய வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் நுழைவாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும் இன்று அதிகாலை முதல் ஆடி பெருக்கையொட்டி பொதுமக்கள் ஏராளமான பேர் வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்கவோ பரிகார பூஜை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரைப்பகுதியிலும் பொதுமக்களுக்கு புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அணை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கு வந்த பொதுமக்களை அவர்கள் திருப்பி அனுப்பினர்.

    ×