search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்"

    • தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார்.
    • அப்போது மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் மகேஷ்பாபு என்பவர் தனது வளர்ப்பு நாயை குளிப்பாட்ட வாட்டர் ஹீட்டர் கம்பியை பயன்படுத்தி வெந்நீர் போட்டுள்ளார்.

    அப்போது தண்ணீர் சூடாக்கி விட்டதா என்று பார்ப்பதற்கு வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுத்து பார்த்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அப்போது வாட்டர் ஹீட்டர் கம்பியை தவறுதலாக தனது கைக்கு அடியில் அவர் வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து மகேஷ் பாபு மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அவரது மனைவி துர்கா கணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.
    • நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணியை நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகிறது. இந்த நாய்கள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்திச்சென்று மிரட்டுவது வழக்கமாகி வருகிறது.

    கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.

    அருகில் இருந்த பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு காயம்பட்ட சுற்றுலா பயணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 2 வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள்.
    • நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களை நிஜ ஹீரோக்கள் என வலைத்தளவாசிகள் பாராட்டினார்கள்.

    வெள்ளத்தில் தவிக்கும் நாயை, 2 வாலிபர்கள் ஏணி உதவியுடன் மீட்கும் வீடியோ காட்சி இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வைரலானது.

    ஒரு பெரிய தடுப்பணையின் மதகை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் நடுவே உள்ள தீவுபோன்ற பாறையில் நாய் ஒன்று, வெள்ளத்தை கடந்து வர முடியாமல் பரிதவித்தபடி நிற்கிறது. தடுப்பணையின் கரையில் ஏராளமானவர்கள் கூடிநின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

    அப்போது 2 வாலிபர்கள் மட்டும் துணிச்சலாக ஒரு ஏணியுடன் வெள்ளத்தில் நடந்து வருகிறார்கள். அவர்கள் தடுப்பணையின் மேடான பகுதியில் இருந்து நாய் நிற்கும் தாழ்வான பாறை பகுதிக்கு ஏணியை பாலம்போல வைக்கிறார்கள். ஒருவர் ஏணியை பிடித்துக் கொள்ள மற்றொருவர் ஏணி வழியாக நாய் நிற்கும் பாறைக்கு சென்று நாயைப் பிடித்துக் கொண்டு ஏணியில் ஏறி வெள்ளத்தை கடக்கிறார்.

    இந்த வீடியோவை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர். சுமார் 15 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நாயை துணிச்சலாக வெள்ளத்தில் இருந்து மீட்ட வாலிபர்களை நிஜ ஹீரோக்கள் என வலைத்தளவாசிகள் பாராட்டினார்கள்.

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.

    தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நெடுஞ்சாலையில் டொயோட்டா இன்னோவா என அடையாளம் காணப்பட்ட எஸ்யூவியின் பின்புறத்தில் தெருநாய் ஒன்று கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சம்பவம் நடந்த இடம் இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனித சங்கிலி உதவியால் அந்த வாலிபர் நாயை கால்வாயில் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாயை காப்பாற்றிய குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயில் சிக்கிய நாயை மீட்பதற்காக பொதுமக்கள் மனித சங்கிலி அமைத்து போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பபிடி என்ற பயனரால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் ஒரு கால்வாயின் நடுவே நாய் ஒன்று சிக்கி கொண்ட காட்சி உள்ளது.

    அந்த நாயை மீட்பதற்காக ஒரு வாலிபர் கால்வாய்க்குள் இறங்கி வெள்ள நீரில் நடந்து சென்று நாயை மீட்கிறார். ஆனாலும் அந்த கால்வாயில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் ஒரு குழுவாக செயல்பட்டு கால்வாயின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தான வகையில் மனித சங்கிலி அமைத்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து தொங்கியவாறு கால்வாய்க்குள் நின்ற வாலிபரை பிடிக்கிறார்கள்.

    பின்னர் மனித சங்கிலி உதவியால் அந்த வாலிபர் நாயை கால்வாயில் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் நாயை காப்பாற்றிய குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர். இந்த உலகத்தில் இன்னும் சில நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என ஒரு பயனரும், நம்மை விட பெரிய விஷயத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படும் போது மனிதர்களால் எதையும் செய்ய முடியும் என மற்றொரு பயனரும் பதிவிட்டனர்.

    • இளம்பெண் ஒருவர் பழுப்பு நிறத்திலான குட்டி நாய் ஒன்றை தூக்கி கொண்டு சாலையில் வேகமாக நடந்து வருகிறார்.
    • வெள்ளை நிறத்திலான நாய்குட்டி ஒன்றும் பின்தொடருகிறது.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் செயின்ட் லான்ட்ரி பாரிஸ் என்ற நகரத்தில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி ஒன்று வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சியில் இளம்பெண் ஒருவர் பழுப்பு நிறத்திலான குட்டி நாய் ஒன்றை தூக்கி கொண்டு சாலையில் வேகமாக நடந்து வருகிறார். அவரோடு வெள்ளை நிறத்திலான நாய்குட்டி ஒன்றும் பின்தொடருகிறது.

    பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டியில் தான் வைத்திருந்த நாய்குட்டியை தூக்கி வீசுகிறார். மேலும் தன் காலடியில் இருந்த மற்றொரு நாயையும் குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்து செல்கிறார்.

    மனதை பதை பதைக்க வைக்கும் இந்த காட்சி இணையத்தில் வெளியான நிலையில் அந்த நாய் குட்டிகளின் நிலைமை என்ன ஆனதோ? என்று கேள்விகளை எழுப்பி வேகமாக பரப்பி வருகிறார்கள்.

    • நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
    • நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் சிறுவர்-சிறுமிகளை தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்து குதறின.

    கடந்த 1-ந்தேதி புழலில் 12 வயது சிறுவன் மற்றும் கே.கே.நகரில் 16 வயது சிறுவன் ஆகியோரை நாய்கள் கடித்தன. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

    இதையடுத்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதற்காக மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நாய் பிடிப்பவர்கள் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2 வண்டிகளில் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.

    இதில் 26 செல்லப் பிராணிகள் உள்பட 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது. இதற்காக செல்லப் பிராணிகளை வளர்ப்ப வர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அங்கு கொண்டு வந்திருந்தனர்.

    வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், அதை வளர்ப்பதற்கான அனுமதியை பெறுவதற்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால் நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

    கடந்த மே மாதம் முதல் இதுவரை நாய் வளர்ப்பதற்காக 4,345 உரிமங்களை சென்னை மாநகராட்சி ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. மேலும் 2,196 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 9,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    • உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.
    • நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது.

    நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை, நிச்சயம் கொஞ்சி மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல, உங்களது நாயும், உங்களோடு விளையாடி இருக்கும்.

    அதுசரி...! நாய்கள் ஏன் மனிதர்களை கொஞ்சி, முத்தம் கொடுக்கிறது, நாவால் வருடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...? அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

    * குட்டி நாய்கள் பசிக்கும்போது, அதை வெளிப்படுத்த தெரியாமல், உரிமையாளரை கொஞ்சி நாவால் வருட ஆரம்பிக்குமாம். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.

    * சில நேரங்களில் நாய்கள் தங்களது உணர்ச்சியை முத்தம் கொடுத்தும், நாவால் வருடுவதன் மூலமும் வெளிப்படுத்தும். உதாரணமாக, வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினாலும், கடைகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் நாய்கள் ஓடி வந்து, உங்களை கொஞ்ச ஆரம்பிக்கும். ஏனெனில் அது உங்களை அவ்வளவு நேசிக்கிறது. ஆகவே நீங்கள் வந்த சந்தோஷத்தை கொஞ்சுவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.

    * நாய்களுக்கு காயம் அல்லது வலி இருந்தால், அதனை சரிசெய்ய, அது தம்மை தாமே நாவால் வருடிக்கொள்ளும். ஏனெனில் நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது. இருப்பினும் அதிகமாக நக்கும்போது, அது காயத்தை இன்னும் பெரியதாக்கிவிடும். எனவே நாய்கள் அப்படி காயத்தின் மீது நாவால் வருட ஆரம்பித்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    * மனிதர்களின் உடலில் சுரக்கும் உப்பின் சுவையானது நாய்களுக்கு பிடிக்கும். அதன் காரணமாகவும், நாய்கள் அவ்வப்போது நாவால் வருடுகின்றன.

    * நாய்கள் கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும். இத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதற்கு, நாய்கள் தம்மை தாமே நாவால் வருட ஆரம்பிக்கும்.

    • நாய் இறந்ததால் நரசிம்மலு, அவரது மனைவி பத்மா கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
    • இறந்த நாயை குளிப்பாட்டி முறைப்படி இறுதி சடங்கு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்திபேட்டை அடுத்த கோபால்பூரை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மனைவி பத்மா. தம்பதிக்கு மானசா (வயது 14) என்ற மகள் இருந்தாள்.

    மகள் பிறந்த போது நரசிம்மலு நாய் குட்டி ஒன்றை வாங்கி வந்து ஜாக்கி என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தனர்.

    மானசா எப்போது ஜாக்கியிடம் விளையாடிய படி அதிக பாசத்துடன் இருந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மானசாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். மகள் இறந்தது முதல் ஜாக்கியை மகளாகவே பாவித்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ஜாக்கி நேற்று முன்தினம் இறந்தது.

    தாங்கள் மகளாக பாதித்து வளர்த்து வந்த நாய் இறந்ததால் நரசிம்மலு, அவரது மனைவி பத்மா கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    தங்களின் மகள் இறந்த போது எப்படி இறுதி சடங்கு செய்தார்களோ அதே போல் ஜாக்கிக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி இறந்த நாயை குளிப்பாட்டி முறைப்படி இறுதி சடங்கு செய்தனர். மேலும் வரும் 10-ந் தேதி வரை இறந்த ஜாக்கியின் படத்தை வைத்து பாரம்பரிய முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்ய தம்பதியினர் முடிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • நாய்களுக்கு பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.
    • நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    நாய்கள் விமானம் பயணம் செய்வதற்கான புதிய ஆடம்பர விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் என அழைக்கப்படும் புதிய விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியது. நியூ யார்க்-இன் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.

    "முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன," என்று பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×