என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காஸா"
- ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்
- இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர்
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தங்களது பார்வையில் தென்பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். இதனால் இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேவேளையில் பெண்கள், சிறுமிகள், முதியர்வகள் உள்ளிட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்கள் நிலை என்னவாகும் என்பதுதான் உலக நாடுகளின் கவலையாக உள்ளது. தற்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கத்தார் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தி வரும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹமாஸ்- இஸ்ரேல் பக்கத்தில் இருந்து இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இருந்தபோதிலும், தோகா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அதிகாரிகளுடன் கத்தார் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இந்த பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காசாவில் தாக்குதலை முடிக்கும் வரை இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வருமா? என்பது சந்தேகம்தான்.
- நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர்.
- இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த போரில் இரு தரப்பிலும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனிய குழுவினரை தோற்கடிப்போம் என இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக காசா முனை பகுதியருகே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் போர் முனையில் வீரர்களுடன் ஒன்றாக கைகுலுக்கி கொண்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. பகுதிநேர பணியாக அவர் போரில் பங்கேற்க சென்றுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் கூட்டணி நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா தன்னுடைய விமானந்தாங்கி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. போர் கப்பல்கள் அடங்கிய வரிசையானது கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், காசா முனை பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இசை விழா நடைபெற்ற இடத்தில் ஹமாஸ் துப்பாக்கிச்சூடு
- பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றுள்ளது
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென்று தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், தரை வழியாக இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.
இஸ்ரேலில் ஜெவிஷ் விடுமுறை கொண்டாடப்பட்டு வந்தது. சனிக்கிழமை காஸா- இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள்- பெண்கள் என இளையோர் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காஸா பயங்கரவாதிகள் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத இளைஞர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் இந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தன. ஒரே கூச்சல் குழப்பம் நிலவியது. தங்களுடன் வந்தவர்களை பார்க்க முடியாத வகையில் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க, அங்கும் இங்கும் ஓடி மறைய முயற்சித்தனர். பலர் காருக்கு அடியில் பதுங்கி கொண்டனர். சுமார் ஆறு மணி நேரம் எந்தவித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.
இந்த தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் இளைஞர்கள் உடல்கள் சிதிறக் கிடந்தன. கிட்டத்தட்ட 260 பேர் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக, இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விழா அமைப்பாளர்கள், விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள், இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரை பிணைக் கைதியாக பிடித்து சென்றுள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
- ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல்
- இருபக்கமும் சேர்ந்து பலி ஆயிரத்தை தாண்டியுள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. பூட்டிய அறைக்குள் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கூட்டம் முடிவடைந்த பின், அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறுகையில் ''பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. ஆனால், சில கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூற முடியும்'' என்றார்.
ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில் ''கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல'' என்றார், மேலும், ''மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது என்னுடைய கருத்து'' என்றார்.
சீனாவுக்கான தூதர் ''பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றார். ஆனால், ஹமாஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.
இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்