search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின.
    • சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவத்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    தாக்குதலுக்கு உள்ளானபோது பிரதீப் என்ற குழந்தை தனது தந்தையுடன் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோவில், குழந்தை தனியாக நடந்து செல்வது போல் உள்ளது. சிறிது நேரத்தில், மூன்று நாய்கள் குழந்தையை நோக்கி வந்து சூழ்ந்து கடிக்க தொடங்கின. பயந்துபோன சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நாய்கள் சிறுவனை நெருங்கி தரையில் தள்ளுகின்றன.

    குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின. ஒவ்வொரு முறையும் சிறுவன் எழுந்திருக்க முயலும்போதும் நாய்கள் தாக்கி கீழே தள்ளி விடுகின்றன.

    பின்னர், சிறுவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. பெரிய நாய்கள் குழந்தையை கடித்து ஒரு புறம் இழுத்துச் செல்லும்போது மூன்று சிறிய நாய்கள் பின்தொடர்கின்றன. குழந்தை, சம்பவ இடத்திலேயே இறந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது.

    சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பாப்பாரப்பட்டி அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸில் மோட்டார்சைக்கிள் உரசியது.
    • இதில் நிலை தடுமாறி பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய பூந்தமிழன் உடல் நசுங்கி உயிரிழந்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் திருப்பதி. கட்டிட மேஸ்திரி. இவரது மகன் பூந்தமிழன் (வயது 17). இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று காலை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். காலை 8 மணி அளவில் பாப்பாரப்பட்டி அருகே சென்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸில் மோட்டார்சைக்கிள் உரசியது.

    இதில் நிலை தடுமாறி பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய பூந்தமிழன் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு சென்றார்.
    • அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் - கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன் கார்த்திக் (வயது 24).

    இவர் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியா விற்கு வேலைக்கு சென்றார். அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நல க்குறைவு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த தகவலையறிந்த கார்த்திக்கின் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் மகன் வேலைக்கு சென்றான்.

    ஆனால் அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறினார்கள். இந்த அதிர்ச்சியை எங்களால் தாங்கவே முடியவில்லை.

    எங்கள் மகன் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் மலேசியா நாட்டில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் அவரது தாயார் தெய்வானை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக என் மகன் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து உள்ளான். இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளை களை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுதான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றான். ஆனால் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது. அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை. என் மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது. அவனது இழப்பை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்

    இவ்வாறு அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

    • பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
    • வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவுடன் இணைந்து ஜோதி அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசை மூலம் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகன ஓட்டுனர்களிடம், பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்த விதிகளை விளக்கி கூறி பறை இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.

    வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலை விதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.

    இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

    மேலும், அவ்வழியாக வந்த இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினார்.

    விழாவில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பறை இசைத்து பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாலை பாதுகாப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார்களையும், ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, அறக்கட்டளை மாணவ தன்னார்வலர்கள் ஆர்த்தி, காயத்ரி ராமச்சந்திரன், பூவிழி வீரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    • மருத்துவரின்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். (35.) விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ரம்யா (26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    2-வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    நேற்று காலை 11 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயி லாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்க்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு நள்ளிரவு வரை தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான போலீசார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி முன்னிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பிரசவம் நடந்த போது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை.
    • குழந்தை படுக்கையில் இறந்த நிலையில் இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சியாத்தமங்கை ஊராட்சி, மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மாரிமுத்து (வயது 35) கூலித்தொழிலாளி.

    இவருக்கும் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் தட்டாத்திமூலை பகுதியை சேர்ந்த தீபா (வயது 30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி ருத்ரா (வயது 4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மாரிமுத்து தீபாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தீபா தனது குழந்தை ருத்ராவுடன் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி தீபாவை சமா–தானம் பேசி அழைத்து வர மாரிமுத்து சென்றுள்ளார். தீபா வர மறுத்ததால் குழந்தை ருத்ராவை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை தனது தாயரிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மாரிமுத்து திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும் அங்கு வந்து குழந்தையை தருகிறேன் எனக்கூறி உள்ளார்.

    இதையடுத்து தீபா திருமருகலுக்கு வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் இல்லை.

    இதையடுத்து தீபா ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்த–போது மாரிமுத்து தூக்கில் தொங்கியபடியும், குழந்தை படுக்கையில் இறந்த நிலையிலும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா சத்தமிட்டு அலறினார்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் மாரிமுத்து, ருத்ரா ஆகியோரின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து மாரிமுத்துவின் தந்தை ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது குழந்தை தனது தாயிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாலும், மறுபக்கம் மாரிமுத்துவின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததாலும் ஆத்திரத்தில் குழந்தையை துணியால் முகத்தை மூடி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தனர்.

    குடும்ப தகராறில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர்.
    • நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் பிரபல பாடகர் பாலி இபுபாவின் இசைக்கச்சேரி நடந்தது. இதையொட்டி அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மைதானத்தில் திரண்டனர். 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் அதற்கும் அதிகமாக கூட்டம் திரண்டது.

    ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதை மீறியும் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நெரிசலில் சிக்கி 2 போலீசார் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் காங்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    மெய்ன்புரி:

    உத்தரபிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தில் வசித்தவர் சிவானந்தம் (வயது 35). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சிவானந்தம், அவரது மகன்கள் மற்றும் மாமனார், உறவினர் அருந்தி உள்ளனர்.

    மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிவானந்தம் உள்பட 5 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சிவானந்தத்தின் மனைவி, டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜலட்சுமி தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • விபத்தில் துகிலியை சேர்ந்த ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீடாமங்கலம்:

    மயிலாடுதுறை அடுத்த கோமல் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி.

    இவர், தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் திருவிசநல்லூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு தீபாவளியை முன்னிட்டு சென்றுள்ளார்.

    பண்டிகை கொண்டா ட்டம் முடிந்தவுடன் இரவு ஊருக்கு செல்லலாம் என ராஜலட்சுமி தனது மகளுடன் கிளம்பி தனது இருசக்கர வாகனத்தில் வேப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

    இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தில் துகிலியை சேர்ந்த ராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெகதீஸ்வரன்
    • இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெகதீஸ்வரன்,(22) இந்த நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, இவரது பெற்றோர்கள் அக்கம்-பக்கம் தேடியும், உறவினர்கள் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது வீடு அருகே உள்ள விநாயகர் கோவில் கிணற்றில் மனித உடல் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன ஜெகதீஸ்வரன் என்பது தெரிய வந்தது இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

     

    • சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது 32) சமையல் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    அதனை கண்ட ராஜேஷ் மகன் ருத்ரன் தனது தாத்தா சேகர் இடம் கூறியுள்ளான்.

    உடன் சேகர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த ராஜேஷை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் ராஜேஷ்ன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×