search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 197182"

    • மலட்டுத்தன்மையை நீக்கும்.
    • பெண்களுக்கு பிரசவம் எளிதாக நடைபெறுவதற்கு உதவும்.

    வடமொழியில் 'சுப்த' என்றால் 'படுத்திருத்தல்', 'பத்த கோனாசனம்' என்றால் 'கட்டப்பட்ட ஆசன நிலை' என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை 'சுப்த பத்தகோனாசனம்' என அழைக்கிறார்கள்.

    செய்முறை:

    தரையில் விரிப்பை விரித்து, அதில் நேராக மல்லாந்து படுக்கவும். பின்பு முழங்கால்களை மடக்கி, கால்களை பிட்டப் பகுதி வரை மெதுவாக கொண்டு வரவும். பின்னர் மூச்சை மெதுவாக உள்ளிழுத்தபடி, முழங்கால்களை தளரச் செய்யவும். இந்த நிலையில் கைகளை மெதுவாக தலைக்கு மேலே கொண்டு செல்லவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது பக்கமாகத் திரும்பி எழுந்திருக்கவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பயிற்சி செய்வது நன்மை அளிக்கும்.

    பயன்கள்:

    மலட்டுத்தன்மையை நீக்கும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சினைப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகள் சீராக செயல்படும்.

    பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி மற்றும் அதிகமான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

    பெண்களுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் அடிக்கடி ஏற்படக்கூடிய தலைவலியை நீக்குவதோடு, நரம்புத் தளர்ச்சியை போக்கக் கூடிய ஆற்றல் இந்த ஆசனத்திற்கு உள்ளது.

    சுப்த பத்தகோனாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பு தசைகள் விரிவடைந்து பெண்களுக்கு பிரசவம் எளிதாக நடைபெறுவதற்கு உதவும்.

    இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்; மனஅழுத்தம் குறையும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

    செரிமானத்தை சீராக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

    • கைகள், கால்களுக்கு வலிமை தரும்.
    • மலச்சிக்கலை போக்கும்.

    செய்முறை

    விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும். இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை விரல் தெரிய கால்களில் மேல் சின் முத்திரையிட்டு வைக்கவும்.

    ஆசனம் செய்யும் போது நமது சிந்தனையை முதுகுத்தண்டின் மீது செலுத்தவும் காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் 30 விநாடிகள் செய்வது நலம்.

    முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள், வயிறு கோளாறு உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பலன் : ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதவிடாய் நாட்களில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது. முதுகு வலியை குணமாக்கும். தொப்பையை குறைக்கும். கைகள், கால்களுக்கு வலிமை தரும். அடிவயிற்று தொந்தரவுகள் நீங்கும்.

    ஆசன வாய் பகுதியில் வரும் பாதிப்புகள், வலி, கட்டி, மூல நோயை குணமாக்கும் ஆசனம் இது. மலச்சிக்கலையும் போக்கும்.

    • இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது.
    • கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.

    திரிகோணாசனம் (trikonasana ) உடலிலுள்ள நாடி நரம்புகளை எல்லாம் இயக்கி, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும் சிறந்த பலன்களை தரும் யோகாசனம்.

    செய்முறை

    முதலில் எழுந்து நிற்கவும், அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும். இரண்டு கைகளையும் தோளுக்கு இணையாக உயர்த்தி உள்ளங்கை தரையைப் பார்ப்பது போல நிற்கவும். 

    அதே நிலையில் வலது புறமாக வளைந்து வலது கையால் வலது பாதத்தை தொடவும். இந்த நிலையில் முழங்காலை மடக்குவது, இடுப்பை அசைப்பது கூடாது. இடது கையை நேராக உயர்த்த வேண்டும். ஒரு சில வினாடிகள் இருந்த பிறகு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

    இப்போது இடது புறமாக வளைந்து இதே முறையில் இடது பக்கம் செய்ய வேண்டும். திரிகோணாசனம் (trikonasana) இரு பக்கமும் 1 நிமிடம் செய்ய வேண்டும்.

    குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சும் இருக்குமாறு கவனித்துக் கொள்ளவும்.

    உடல் ரீதியான பலன்கள்

    முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும்.தோள்பட்டை சீரமைப்பு சரிசெய்யவும், கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும். இரைப்பை அழற்சி, முதுகுவலி, அஜீரணம், வாய்வு மற்றும் அமிலத்தன்மை, முதுகு வலி போன்றவைக்கு நிவாரணம் தரும்.

    அட்ரினல் சுரப்பிகள் நன்கு தூண்டப்படுகின்றன. கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்கு அழுத்தப்படுகின்றன. இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.

    குணமாகும் நோய்கள்

    பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது.

    மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி பசியினை உண்டு பண்ணுகின்றது.

    முதுகு, கழுத்து, முழங்கை, இடுப்புப் பகுதி, முழங்கால் முதலியவற்றில் உள்ள வலியினைப் போக்குகிறது. வாயுப்பிடிப்பு, கூன்முதுகு முதலியவற்றிற்கும் பலனளிக்கிறது.

    தொடைகள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றை நீட்டி பலப்படுத்துகிறது.

    தோள்கள், மார்பு மற்றும் முதுகெலும்பு. வயிற்று உறுப்புகளைத் தூண்டுகிறது.

    மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.

    • காலில் அறுவைச்சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
    • இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.

    பிரபதாசனம் என்பது கால்விரல் சமநிலைப்படுத்தும் தோரணையாகும், இது கணுக்கால் மீது அழுத்தம் மற்றும் தூண்டுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்து, ப்ரா என்பது "முன்னோக்கி" அல்லது "முன்", பேட் என்பது "கால்" மற்றும் ஆசனம் என்றால் "போஸ்" என்று பொருள்.

    இந்த ஆசனத்தில் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. குதிகால்களை உயர்த்தி கால்விரல்களில் சமநிலைப்படுத்துகிறது, பின்னர் ஒரு காலை உயர்த்தி இதயத்தின் முன் உள்ளங்கைகளை ஒன்றாகக் கொண்டு தாமரை போஸில் எடுக்கப்படுகிறது.

    செய்முறை

    விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் குதிக்கால்களில் அமரவும். இப்போது குதிக்கால்கள் தரையில் இருக்க கால்களை விரித்து அதன் மேல் அமர்ந்து (படத்தில் உள்ளது போல்) இருக்கவும். கைகளை மார்புக்கு நேராக நமஸ்கார போஸில் வைக்கவும். இ

    உங்களுக்கு முன்னால் தரையில் ஒரு புள்ளியை உற்றுப் பாருங்கள். உங்கள் பார்வையை நிலையாக வைத்துக்கொண்டு, உங்கள் இதயத்தின் முன் பிரார்த்தனை நிலையில் கைகளை மெதுவாக உள்ளிழுக்கவும். தோள்களை கீழேயும் பின்புறமும் வைத்து மார்பெலும்பை முன்னோக்கி அழுத்தவும்.

    இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.

    தீவிர கால் வலி, மூட்டி வலி இடுப்பு வலி, பாத வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. காலில் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டவர்களும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    நன்மைகள்

    மனதில் மேம்பட்ட செறிவு மற்றும் சமநிலை உணர்வை ஏற்படுத்துகிறது. அத்துடன் பாதங்கள், கணுக்கால், முழங்கால்கள் மற்றும் தொடைகளை வலுப்படுத்த உதவுகிறது. இடுப்பு நெகிழ்வு, தொடை மற்றும் இடுப்புகளை நீட்டுகிறது.

    • மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
    • தொடை எலும்பை நீட்சியடைய உதவுகிறது.

    யோகாவிலுள்ள ஊர்த்வ பிராசாரித ஏக பாதாசனம் என்ற ஆசனம் கல்லீரலையும் சிறு நீரகத்தையும் நன்றாக செயல்பட வைக்கிறது. அவற்றிற்கு பலம் தந்து, ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஆசனதை எப்படி செய்வது என பார்க்கலாம்

    செய்முறை

    முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். கால்கள் நேராக வைக்க வேண்டும். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நில்லுங்கள். இப்போது மெதுவாகஇடது காலை மேலே தூக்குங்கள். மெதுவாக வலது பாதத்தை நோக்கி உடலை வளையுங்கள். கைகளால் தரையை தொட முயலுங்கள்.

    தரையை தொட முடியாவிட்டாலும், கால்களை பிடித்துக் கொள்ளலாம். இடது காலை மேலே நீட்டியபடி, வலது பக்கம் உடலை சாய்ந்தபடி சில நிமிடங்கள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரலாம். பின்னர் இப்போது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி இதே போல் செய்யுங்கள்.

    பலன்கள் :

    மன அமைதி தரும். தொடை, இடுப்பு வலு பெறும். கல்லீரல், சிறு நீரகம் செயல்கள் தூண்டப்படும். ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும்.தலைவலி குணமாகும்.

    மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தொடை எலும்பை நீட்சியடைய உதவுகிறது. தொடைகள், முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. கால்கள் மற்றும் இடுப்புகளை நீட்சியடைய உதவுகிறது. தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

    • அடி முதுகு வலியை போக்குகிறது.
    • அடி முதுகில் தீவிர வலி இருந்தால் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நலம்.

    'பரிவ்ருத்த' என்ற சொல்லுக்கு 'சுற்றி' என்று பொருள். நாம் முன்னரே பார்த்தது போல் 'ஜானு' என்றால் 'முட்டி', 'சிரசா' என்றால் 'தலை' என்று பொருள். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ஆக, இது வளைந்து திரும்பி காலை பிடிக்கும் ஆசனமாகும்.

    பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் சீரண மண்டலம் செம்மையாக இயங்குகிறது. முதுகுத்தண்டை மட்டுமல்லாமல் மொத்த உடம்பையும் நீட்சியடைய (stretch) வைக்கிறது. இந்த ஆசனம் மணிப்பூரகத்தையும் சுவாதிட்டானத்தையும் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்ப்படுத்துகிறது.

    பலன்கள்

    நுரையீரல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. கல்லீரலை பலப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது.

    இடுப்பை பலப்படுத்துகிறது. அடி முதுகு வலியை போக்குகிறது. தூக்கமின்மையை போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் அமரவும். இரண்டு கால்களையும் நன்றாக விரிக்கவும். வலது காலை மடித்து வலது குதிகாலை இடது தொடையின் உள்பகுதியை ஒட்டி தரையில் வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தவும். மூச்சை வெளியேற்றியவாறே இடது புறமாக உடலை சாய்க்கவும்.

    இடது கையால் இடது பாதத்தை பற்றவும். வலது கையை தலைக்கு மேலாக கொண்டு வந்து இடது பாதத்தை பற்றவும். நேராக பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களை மாற்றி செய்யவும்.

    இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முறை செய்ய வேண்டும்.

    தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர தோள் அல்லது கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயிலக் கூடாது. அடி முதுகில் தீவிர வலி இருந்தாலும் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நலம்.

    • ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்க முடியும்.
    • நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

    யோகாசனம் செய்வது நமது உடல் மற்றும் மனத்துக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும். யோகாசனத்தில் முக்கிய ஆசனமான கூர்மாசனம் அல்லது ஆமை போஸ் யோகா என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் ஆமை வடிவத்தைப் பிரதிபலிக்கும்.

    இந்த ஆசனம் கால்கள், வயிறு, தொடைகள் மற்றும் தொடை எலும்புகளை நீட்சியடைய செய்ய உதவும்.

    அதுமட்டுமின்றி பல நோய்களுக்கு உதவுகின்றது. அந்தவகையில் இதனை எவ்வாறு செய்வது? இதில் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

    செய்முறை

    இந்த ஆசனம் செய்வதற்கு முதலில், விரிப்பில் அமர்ந்து இரு கால்களையும் விரித்துக் கொள்ளுங்கள், பின் இரு கைகளையும் உங்களுக்கு இருபக்கமும் நீட்டிக் கொள்ளவும்.

    கைகளை இரு கால்களுக்கு அடியில் அல்லது இடுப்பு மற்றும் தொடைக்கு பின் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். பின்னர் தொடைகளை தரையில் அழுத்தி மார்பை உயர்த்த முயற்சிக்கவும்.

    கால்களை முடிந்த வரை நீட்டி, ஆழமான சுவாசியுங்கள். இந்த போஸில் உங்களின் இரண்டு கால்கள் மற்றும் கைகள், கன்னம் மற்றும் மார்பு ஆகியவை தரையில் இருக்கும்.

    பின்னர் 2 அல்லது 3 நிமிடங்கள் அதே நிலையில் மூச்சினை உள்ளிழுத்து சுவாசியுங்கள். பின்னர் நிதானமாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புங்கள். இவ்வாறு 3 முறை செய்ய வேண்டும்.

    நன்மைகள்

    நீரிழிவு நோயை நிர்வகிக்கவும், ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும் முடியும்.

    உங்கள் உடலில் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துதவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

    நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

    உடலின் அனைத்து தசைகளையும் நீள்சியடையவும், செயல்படுத்தவும் உதவுகிறது

    வயிறு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பிற இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    • இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
    • இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.

    செய்முறை

    முதலில் விரிப்பில் அமர்ந்து பத்மாசனம் போடவும். ஒவ்வொரு கையையும் தொடை இடுக்கில் மிக மெதுவாக நுழைக்கவும். பிறகு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றியபடி மெதுவாக எழவும். இதே நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.

    பிறகு கீழே அமர்ந்து, மெதுவாக கால்களை அகற்றி, கைகளை சாதாரணமாக வைக்கவும். பின்னர் ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மறுபடியும் இதே போல ஒருமுறை செய்யவும். மூன்று முறை இந்த பயிற்சியை செய்யவும்.

    சற்றே கடினமான ஆசனம் இது. எனவே அவசரப்படாமல் நிதானமாக இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்.

    இந்த ஆசனத்தை, சிறுவர்கள், பள்ளிப் பருவத்தில் மிக எளிமையாகப் பயின்று விடலாம். மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதயவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஆனால், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் அவர்களை செய்யச் சொல்லவும்.

    பலன்கள்

    கல்லீரல் மிகச் சிறப்பாக இயங்குவதோடு, அதிலுள்ள குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நமது உடலில் உள்ள மண்ணீரல், சக்தி பெற்று நன்றாக இயங்கும்.

    ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் இந்த ஆசனத்தைப் பயின்றால், வளர்ந்தபிறகு அவர்களின் இதயமும் நுரையீரலும் பாதுகாக்கப்படும். இதய அடைப்பு, இதயவலி உள்ளிட்ட பிரச்சனையும் வராது.

    முழங்கால்வலி, மூட்டுவலி வராது. இருந்தாலும் நீங்கும். தசவாயுக்களும் சிறப்பாக இயங்கும். தோள்பட்டை வலி நீங்கும், தோள்பட்டை இறங்கியிருந்தால் சரியாகும். எனவே உடல் அழகுடன் இளமையாக நீங்கள் வாழலாம்.

    கை, கால்கள் நன்கு பலம் பெறும். கைவலி இருந்தால் சரியாகும். சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாகும். மனம் ஒரு நிலைப்படும். ஞாபகசக்தி வளரும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆசனத்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்!

    குக்குடம் என்றால் கோழி என்று பொருள். கோழி எப்படி காலையில் சுறுசுறுப்பாக எழுந்து கூவி, அனைவரையும் எழுப்பி சுறுசுறுப்பாக்குகிறதோ, அதே சுறுசுறுப்பு இந்த ஆசனம் செய்பவருக்கும் கிடைக்கும்!

    நரம்பு மண்டல இயக்கம் மிகச் சிறப்பாகும். கை கால் நடுக்கம், உடல் நடுக்கம் வராது.

    • கால் வலியை போக்குகிறது.
    • தோள்பட்டையை வலிமையாக்குகிறது.

    செய்முறை

    இந்த ஆசனம் செய்ய முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் கைகளை மேலே தூக்கவும். முட்டிபோட்டு நின்று முன்னால் தரையில் படுக்கவும். (படத்தில் உள்ளபடி) கைகள், தலை, மார்பு தலையில் இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முறை செய்ய வேண்டும்.

    முதுகு தண்டு, கால் மூட்டியில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    பயன்கள்

    இந்த ஆசனம் முதுகின் தசைகளை நீட்டி முதுகுத்தண்டை சீரமைக்கும் நோக்கத்தில் இது அக்குள் மற்றும் தோள்களில் ஒரு பெரிய நீட்சியை வழங்குகிறது.

    இந்த போஸ் குழந்தையின் தோரணை மற்றும் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாயின் நன்மைகளை ஒருங்கிணைக்கிறது, மேலும் நாய்க்குட்டி போஸ் என்பது கை சமநிலைக்கு உங்களை தயார்படுத்தும் சிறந்த தோள்பட்டை திறப்பாளர்களில் ஒன்றாகும்.

    உத்தான ஷிஷோசனம் என்றால் ஒரு இளம் விலங்கு போல நீட்டுவது. இங்கே நீங்கள் மனதை அமைதிப்படுத்த உங்கள் தலையை கீழே கொண்டு உங்கள் முதுகெலும்பை எளிதாக நீட்டிக்கலாம்.

    உங்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக முழங்காலில் காயம் இருந்தால், உங்கள் முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களுக்குக் கீழே மடிந்த யோகா போர்வையை விரித்து கவனமாக இந்த ஆசனத்தை முயற்சிக்கவும்.

    முதுகுத்தண்டை வலிமையாக்குகிறது. கடினமான தோள்களைத் திறந்து மார்பை விரிவுபடுத்துகிறது

    • மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.
    • முகத்தில் வரும் சுருக்கங்களை கட்டுப்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும், உங்கள் இரு கால்களையும் மேல்நோக்கி உயர்த்தவும்.

    இரண்டு கால்களும் தரையுடன் 90 டிகிரி கோணத்தில் நிறுத்தவும். மூச்சை வெளியேற்றும் போது உங்கள் இடுப்பை உயர்த்தவும்; உங்கள் கால்களை தலைக்கு மேல் தள்ளுங்கள்.

    இடுப்பை உங்கள் இரு கைகளாலும் பிடித்து கொள்ளுங்கள். உங்கள் கால்கள், முதுகு மற்றும் இடுப்பை ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு செய்யவேண்டும்.

    உங்கள் கால்விரல்களை வானத்தை நோக்கி நீட்டவும், உங்கள் கண்களை உங்கள் கால்விரல்களில் வைத்திருங்கள். சிறிது நேரம் இந்த நிலையை வைத்திருங்கள், சாதாரண சுவாசத்தை வைத்திருங்கள்.

    பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதை மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.

    உயர் இரத்த அழுத்தம், முதுகு தண்டு பிரச்சனை, காது பிரச்சனை உள்ளவர்க இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். வயதானவர்கள் அல்லது பலவீனமானவர்கள் இந்த ஆசனத்திற்கு மாற்றாக விபரீதகரணியை முயற்சி செய்து தோள்கள் நிற்கும் போஸின் அனைத்து நன்மைகளையும் பெறுங்கள். உடலை உயர்த்த முடியாத போது தலையணைகளை பயன்படுத்தவும்.

    பயன்கள்

    பிறப்புறுப்பு உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது மற்றும் குணப்படுத்துகிறது.

    மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

    நரம்புகள் மற்றும் மூல நோய் குணமாகும்.

    தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும்.

    பாலியல் கோளாறுகளை குணப்படுத்துகிறது.

    விந்தணு திரவ இழப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    ஆஸ்துமா, நீரிழிவு, கல்லீரல் கோளாறுகள் மற்றும் குடல் கோளாறுகளில் நன்மை பயக்கும்.

    தோல்கள் சுருங்குவதையும் முகத்தில் வரும் சுருக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது.

    • தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஆசனம் இது.

    சர்க்கரை நோய் இப்போது அனைவரும் வரக்கூடிய நோயாக மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் மாத்திரை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சர்க்கரை நோயாளிகளின் கால் விரல்களில் ஏற்படும் பாதிப்பைப் போக்க இவ்வகை யோகாசனம் பெரிதும் உதவுகிறது..

    செய்முறை:

    இவ்வகை யோகாசனம் செய்ய முதலில் விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சம்மண நிலையிலிருந்து கால்களை பிரிந்து, வலது காலை அமர்ந்த நிலையில் உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இருகைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும். இந்த ஆசனம் செய்யும் போது நமது எண்ணத்தை முதுகு தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையை வலது காலுக்கும், வலது கால் நிலையை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்..

    இவ்வாறு இந்த ஆசனத்தை 3 செய்ய வேண்டும். முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்..

    பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது.

    • ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது.
    • குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.

    உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

    செய்முறை :

    விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும். உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

    இந்த ஆசனத்தை நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

    வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பயன்கள் :

    தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.

    உடல் எடை குறைகிறது. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது. கணையம் நன்கு வேலை செய்வதால் , நீரழிவு நோய் நீங்கவும் வராமல் இருக்கவும் இவ்வாசனம் செய்வது ஆசனம் சிறந்தது.

    ×