search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 199816"

    • இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
    • தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வருகிற 31-ந் தேதி வரை இணையவழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணையவழித் தேர்வு மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ளது.

    2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என 3 முறைகளை கொண்டது.

    இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

    அக்னிவீரர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த தேர்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிஅளவில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களை 50 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. #UPGovt
    லக்னோ:

    அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றுவது இல்லை என்பது அனைத்து தரப்பினரும் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு ஆகும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து இந்த வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #UPGovt
    கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு அமைப்பதற்காக தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1053 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக இன்று அணையில் இருந்து 2064 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்நிலையில் புதிய மதகு அமைப்பதற்காக, தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது. தற்காலிக மதகை அகற்றிய பின், புதிய நிரந்தர மதகு அமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது அணையின் தரைபாலம் மூழ்கி நீர் செல்வதால் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீர்மட்டம் தற்போது 31.10 அடியாக உள்ளது. இதே போல் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.66 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 640 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    ×