search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 199996"

    டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்தியை டி.வி.யில் பார்த்த ஓட்டல் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மும்பை:

    மும்பை கோரேகாவ் கிழக்கு, பிலிம் சிட்டி ரோட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணா (வயது 63). இவர் அந்தேரி, சக்காலா பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரது ஓட்டல் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும், அவர் சமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து டி.வி.யில் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தனது மகளிடம் அதிகம் விவாதித்து உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா வெகு நேரமாகியும் படுக்கை அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதனால் பதறிப்போன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சேலத்தில் விடுதியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கன்னங்குறிச்சி:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கோரிமேட்டில் அரசினர் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த கனகராஜ் மகள் மஞ்சு(வயது 20) என்பவர் 2-ம் ஆண்டு நுண்ணுயிரியல் படித்து வந்தார்.

    இவர் கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்து படித்து வந்தார். நேற்று இரவு மஞ்சு தனது அறையில் இருந்தார். அப்போது அதே அறையில் தங்கியிருக்கும் சக மாணவிகள் அவரை சாப்பிட வருமாறு அழைத்தனர். இதற்கு அவர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும் வரும் போது மோர் மட்டும் கொண்டு வருமாறும் கூறி உள்ளார்.

    பின்னர் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு மாணவிகள் திரும்பி வந்தனர். அப்போது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மாணவிகள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டி பார்த்தனர். அப்போது கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மஞ்சு பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து உடனடியாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக மஞ்சுவின் உடலை பார்த்து சக மாணவிகள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தூத்துக்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடார்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஓம்சாந்தி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமசந்திரன் (வயது 34) தச்சு தொழிலாளி. இவருக்கு சரியாக வேலை அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமசந்திரன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×