search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. உறுப்பினர் மதன் செய்திருந்தார்.

    • ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வல்லம் ரோடு அனுமன் நதிக்கரையில் உள்ள ஸ்ரீசெல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 4-ந்தேதி கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது. விழாவையொட்டி செல்வவிநாயகா், இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மேலும் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான கொடைவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம், அக்னிச்சட்டி, அக்னிகாவடி, பூந்தட்டு மற்றும் அலகுகுத்தி ஊர்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னா் அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவில் இருக்கன்குடி மாரியம்மன் சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12-ந் தேதி காலை முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு ஆராட்டு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளா்கள் செய்திருந்தனா்.

    • உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய நகர் நல மையத்தில் செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் சீதாராமன் முன்னிலை வகித்தார். அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மரம் வளா்ப்பு சேவை பிரிவு மாவட்ட தலைவா் ராஜகுலசேகர பாண்டியன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆப்பிள், ஆரஞ்ச், உலர்திராட்சை, பிஸ்தா, பாதாம்பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி வாழ்த்தி பேசினார். ஊட்டச்சத்து பெட்டகத்திற்கான நிதிஉதவியை சங்கத்தின் குடும்ப தலைவா் சதீஷ் என்ற லெட்சுமணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பட்டயத்தலைவா் எம்.எஸ்.சரவணன், முன்னாள் தலைவா் திருமலைக்குமார், முன்னாள் செயலா் அபுஅண்ணாவி, உறுப்பினா் தேன்ராஜ் காதர்மைதீன், செவிலியா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • கன்னாவின் பாட்டனார் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்
    • பல்வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்களை இந்த குழு சந்திக்கிறது

    இம்மாதம் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றுவார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த ஒரு குழு வருகிறது.

    இந்திய மற்றும் இந்திய அமெரிக்கர்களின் நலனுக்கான அமெரிக்கா பாராளுமன்ற அமைப்பின் தலைவர்களான அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் ஆகிய இருவர் இக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

    இவர்களுடன் டெபோரா ராஸ், கேட் கம்மாக், ஸ்ரீ தானேதார், ரிச் மெக்கார்மிக், எட் கேஸ் மற்றும் ஜாஸ்மின் க்ராக்கெட் ஆகியோர் இணைந்து வருகின்றனர்.

    இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் வர்த்தக, தொழில்நுட்ப, அரசாங்க, மற்றும் திரைத்துறை பிரமுகர்களை மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் சந்திக்க இருக்கிறார்கள். மேலும், புது டெல்லியில் உள்ள ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கும் செல்கிறார்கள்.

    "இப்பயணத்தில் இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் பல பிரமுகர்களை சந்திக்க இருக்கிறோம். இந்தியாவிற்கு இந்த குழுவினருடன் வருவதும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் ஒரு பெருமைக்குரிய செயல். என் பாட்டனார் அமர்நாத் வித்யாலங்கர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பயணம். இந்திய-அமெரிக்க உறவில் இது ஒரு மைல்கல்" என இந்த வருகை குறித்து ரோ கன்னா கருத்து தெரிவித்தார்.

    • நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.
    • உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

    செங்கோட்டை:

    குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் உள்ள நெய் அருவி மற்றும் தனியார் அருவிகளுக்கு செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது குண்டாறு அணைப்பகுதிக்கு மேலே உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை மர்ம நபர்கள் அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட அந்த கதவை மர்ம நபர்கள் அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • குண்டாறு அணைக்கட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்மேற்கு, வடகிழக்கு மழையின் போது மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்புவது இந்த அணைதான். குண்டாறு அணைக்கட்டிற்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூங்கா, பச்சை பசேல் என்ற ரம்மியமான காட்சி, இயற்கை நெய்யருவி, 6-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

    கடந்த சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களளாக பொதுமக்களின் கூட்டத்தால் இப்பகுதி களைகட்டி காணப்பட்டது.

    இந்நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில் சுவர்களில் சில வாலிபர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், அணைகளில் ஷட்டர்கள் திறக்க பயன்படுத்த நிறுவப்பட்டுள்ள தூண்கள் மேல் ஏறி டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    இந்த அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஆபத்தை உணராமல் வாலிபர் டைவ் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க துறையை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனனர்.இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தற்போது சீசனையொட்டி குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குண்டாறு நீர்த்தேக்கத்தைச் சுற்றி அதிகமான அருவிகள் உள்ளதாலும், கெடுபிடிகள் பெரிய அளவில் இல்லை. இங்கு அருவிகளில் நெரிசலின்றி குளிக்கவும், இங்கு ஓடும் ஆற்றில் நீராடவும் வசதியாக உள்ளது.

    பொதிகை மலையோரத்தில் ரம்மியமான சூழலில், வாகன இறைச்சலோ, போக்குவரத்து நெரிசலோ இல்லாமல் இப்பகுதி அமைந்திருப்பதால் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழைபெய்தது. இதனால் இங்குள்ள தனியார் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுடன் இப்பகுதி முழுவதும் தென்றலுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    தற்போது இப்பகுதி ஊட்டியை போனறு காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




     


    • இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு நிகழ்ச்சியாக 7-வது நாள் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அழகிய மணவாளப்பெருமாள் கோவில் 11 நாள் பிரம்மோ ற்சவ விழா ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி நாள்தோறும் மூல வருக்கு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு உற்சவருக்கு அலங்கார திருமஞ்னமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலையில் பல்ல க்கிலும், இரவில் பல்வேறு வகை யான வாகனத்திலும் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார். சிறப்பு நிகழ்ச்சியாக 5-வது நாள் வெள்ளி கருட வாகனத்தில் வந்தும், 7-வது நாள் வெள்ளைப்பூ சாத்தி திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை 11-வது நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • குற்றாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள்.
    • சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே குண்டாறு அணைக்கட்டு உள்ளது. மாவட்டத்தில் மிகச்சிறிய, 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது பருவமழை தொடங்கி நன்றாக பெய்தால், சில நாட்களிலேயே நிரம்பி வழியும்.

    சீசன் காலங்களில் குற்றாலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு தண்ணீர் குறைவாக விழுந்தாலோ அல்லது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாலோ குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள். அவ்வாறு வருபவர்கள் குண்டாறு அணையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு விழும் நெய் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க சென்றனர். அப்போது சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

    மேலும் குளிக்க சென்ற இடத்திலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அவர்கள் தாக்கிக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை அறிந்த செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த பகுதியில் தனியார் அருவிகள் ஏராளமானவை உள்ளன. அங்கு சென்று குளிக்க, குண்டாறு அணை பகுதியில் இருந்து இயக்கப்படும் தனியார் ஜீப்களில் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் கூறுகின்றனர். மேலும் மோதல்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டி பேசினார்.
    • விழாவில் புளியரை ஊராட்சி தலைவர் அழகிய சிற்றம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    காந்தியடிகளின் கனவின்படி அடிப் படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தை தத்தெடுத்து கிராம பணி களை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மகாத்மா காந்தி பொது நூலகம் திறப்பு விழா நடை பெற்றது. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசுகையில், அடிப்படை வசதி இல்லாத குக்கிராமமான செங்கோட்டை அருகே உள்ள புளியரை அடுத்து இருக்கும் மடத்தரை பாறையில் கிராம மக்கள் பொதுநூலகம் வேண்டு என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொது நூலகம் ஒன்று அகில இந்திய காந்திய இயக்கம் கட்டிக் கொடுத்துள்ளது. அதன் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடந்தது என்றார்.

    விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பொது நூலகத்தை திறந்து வைத்து மகாத்மா காந்தியின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார். தலைமையேற்ற அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தன் பேசும்போது, எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும் மற்றும் காந்தி அன்பர்கள் உதவியு டனும், மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணி களை மேற்கொள்ளப்போ வதாக கூறினார். விழாவில் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய சிற்றம்பலம், காந்தியவாதிகள் ராம் மோகன், முத்துசாமி, விஜய லட்சுமி, திருமாறன், அன்பு சிவன், நாகராஜன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.

    • புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • பணிகளை தொடங்கி வைத்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீ ட்டில் கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியா் சுந்தரக்கு மார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியா் ஜோதிலெட்சுமி, தேசிய மாணவர் படை அலுவலா் அருள்தாஸ், நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் செல்வி ஆகியோர் முன்னி லை வகித்தனா். தமிழா சிரியா் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடர்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை தொடங்கி வைத்து கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். பின்னா் பள்ளி மாணவர்களை கொண்டே புதிய வகுப்பறை கட்டிட த்திற்கான செங்கல்களை எடுத்து வைக்கும்படி கூறினார். இதனை எதிர் பார்க்காத மாணவர்கள் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளிக்கு நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் முத்துக் குமார், குமார், மாவட்ட துணைச் செய லாளா் பொய்கை மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், வார்டு பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி தலைவா் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் பொன்னுத்துரை, இணைச்செயலாளா் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஹரிஹரநாராயணன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் சித்தன் ரமேஷ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செங்கோட்டை மற்றும் புளியரை, அரசு பள்ளிகளில் பயின்ற 10, 11 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸியில் தன்னை கவுரவ உறுப்பினாக இணைத்துக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் ஷேக்சலீம், மாவட்ட கம்யூனிட்டி சேர்மன் நந்து என்ற அருணாசலம், கிளப் நிர்வாகிகள், உறுப்பினா்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். முடிவில் செயலாளா் கோபிநாத் நன்றி கூறினார்.

    • பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
    • கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சுகாதார மேற்பார் வையாளா்கள் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, பம்ப் ஹவுஸ் ரோடு, கேசி ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்க ளிலும் சோதனை நடத்தினர்.

    அதன்படி தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்திய, வைத்திருந்த, விற்பனை செய்த கடைகள், உணவகங்கள் உள்பட பல இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.

    ×