search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி"

    • 285 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ) திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை கரூர் மாவட்டத்தில், 285 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவியும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,39 லட்சத்து,98 ஆயிரத்து,067 மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,17 லட்சத்து,69 ஆயிரத்து,654 மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 34 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.81 லட்சத்து,60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 285 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.

    • எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
    • தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சா வடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி காட்டு வளவில் வசித்து வந்த மாது மகன் மணி கண்டன்(வயது20). கல்லூரி மாணவரான இவர் எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் அந்த மாண வன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தி னரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவ லர்களும், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வட்டம், பெருங்களுர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில், 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் அவர் கூறும்போது,தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பெருங்களுர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் 

    • கடந்த பதிமூன்று வருடங்களாக யாசக பணத்தை பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார்
    • நானூறு பள்ளிகளுக்கு உதவி செய்துள்ளார்

    பெரம்பலூர்,

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆழங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் (வயது 73) என்பவர் வந்தார். அவர், தான் யாசகம் பெற்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் சென்றார். இது குறித்து பூல்பாண்டியன் கூறுகையில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். இதுவரை 35 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி, மாவட்ட கலெக்டரிடம் ரசீதை கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

    பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்

    குளித்தலை:

    குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மக்கள் குறைகள் குறித்து பல்வேறு மனுக்களை பெற்றனர். இதில் பெறப்பட்ட மனுக்களை தீர்வு கண்டு மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர். இதனை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு விழாவில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 357 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பல்வேறு துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், சிவாயம் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

    மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய, சிறந்த வங்கிகளுக்கான விருது இந்தியன் வங்கி மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.

    சிறந்த வங்கி கிளை–களுக்கான விருதுகளில் முதலிடம் பெற்ற இந்தியன் வங்கி, மைக்ரோசெட் ராசிபுரம் கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.15,000-க்கான உத்தரவு, 2-ம் இடம் பெற்ற கனரா வங்கி திருச்செங்கோடு கிளைக்கு, நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.10,000-க்கான உத்தரவு, 3-ம் இடம் பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி நாமகிரிப்பேட்டை கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.5,000-க்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அரசால் கோரப்படும் சான்றுகளை நாளை மறுநாளுக்குள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் நடுக்குவாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்றுடன், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இந்த அலுவலகத்தில் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுநாள் வரை மேற்கண்ட சான்றுகள் வழங்காத மாற்றுத்திறனாளி நபர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) வழங்கிட வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட சான்றுகளை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க இயலாது என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
    • 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்திடமிருந்து நிதியுதவிகள் பெறப்பட்டது. அதன்படி, கொரோனாவால் கணவரை இழந்த தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவிகள் பெறும் 10 தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன் இணைந்த தையல் இயந்திரம், பெரிய கிரைண்டர், கறவைமாடு, தள்ளுவண்டிக் கடை, ஆடு அல்லது மாடு வாங்குவதற்காக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான உதவித் தொகைகளும், மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரி கல்வி நிதி உதவிகள் பெறும் 7 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 420 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைகளும் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, யுனைடெட் வே ஆப் சென்னை திட்ட அலுவலர் ஜெரசலோ வினோத், யுனைடெட் வே ஆப் சென்னை உதவி மேலாளர் அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    சேலம்:

    தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அரவிந்த் தகவல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கை கள் நலன் சார்ந்த திட்டங் கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. 55 திருநங்கைகள் இணைய தளத்தில் பதிவு மேற் கொண்டு தமிழ்நாடு அரசால் இணையவழி அடையாள அட்டை வழங் கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கும் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 திருநங் கைகள் அந்தந்த தாலுகா அலுவ லகத்தின் மூலமாக சிறப்பு ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை 49 நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள திருநங்கை களுக்கு 2021-2022 நிதி யாண்டிற்கு சொந்த தொழில் செய்வதற்கு மானியம் வழங்கிட தேர்வு குழு அமைத்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட தைத்தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத்தொ கையினை வழங்கப்பட்டது. இவற்றில், துணி வியாபரம் செய்திட 17 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8.50 லட்சம் மானியமாகவும், ஆடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவும், மாடு வளர்த்தல் தொழில் செய்திட ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலுள்ள கால்நடைகள் கொள்முதல் செய்யவும், ரூ.15 ஆயிரத் திற்கு தீவனம் மற்றும் மேற்கூரை அமைத்தல் என 6 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மானியமாகவும். மீன் வியாபாரம் செய்துவரும் 4 நபர்களுக்கு தொழில் விரிவு படுப்படுத்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியமாகவும், புதிதாக காய்கறி வியாபாரம் மற்றும் கிராமிய கலை மற்றும் பூ கட்டுதல் செய்திட தலா ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 2 நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் என மொத்தம் 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் காயமடைந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவினார்.
    • குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமிகோவில் தெருவில் நீதி மன்றம் அருகே உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பவித்ரா லட்சுமி, ரன்விதா, ராஜேஷ், கார்த்திகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    அவர்கள் கூறுகையில், 5 மாதங்களுக்கு முன்பு சிவகாசி செல்லும்போது குடும்பத்துடன் விபத்துக்கு ள்ளாகி சிகிச்சை பெற்றோம். தற்போது குழந்தையின் மேல்சிகிச்சைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைகேட்ட தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உடனடியாக தனது சொந்த செலவில் ரூ.15 ஆயிரத்தை வழங்கியதுடன் டாக்டரிடம் பேசி உயர்ரக மருத்துவ சிகிச்சையை குழந்தைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, வார்டு செயலாளர்கள் குழந்தைவேலு, இக்சாஸ், மாயாவி, மதன் ராம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார்.

    தலைமை கழக பேச்சாளர்கள் இடி முழக்கம் இளமுருகன், தீப்பொறி ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் வரலாறு தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்எல்ஏ பேசியபோது கூறியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிக் காத்து வருகிறார்.

    கட்சியின் பொன்விழா என்று நினைவாக இந்த கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    விரைவில் தமிழகத்தின் ஆட்சியைப் கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா.இராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், திருவாரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யூ.மணிகண்டன், செந்தில் வேல், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதி, திருவாரூர் மாவட்ட ஒன்றிய துணைத் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்விழா என்று நினைவாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ×