என் மலர்
நீங்கள் தேடியது "தீர்ப்பு"
- வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றனர்.
- வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார்.
லாரி டிரைவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வந்து இறக்கி விட்டு மார்க்கெட் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கும்பகோணம் மாணிக்கநாச்சியார் கோவில் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தேவன் (25) ஆகியோர் வீரக்குமார் ஓட்டி வந்த லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வீரக்குமார் வைத்திருந்த ரூ.1000-ஐ பறித்து சென்று விட்டனா்.
இந்த தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் வீரக்குமார் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட அருண் மற்றும் தேவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட அருணுக்கு 3 வருடம் 5 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் உடந்தையாக இருந்த தேவனுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
- வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
- கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.
ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- முசிறி அருகே சொத்து தகராறில் சம்பவம்
- திருச்சி கோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பு
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஆமூர் கல் யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் முருகையா. இவ–ரது மனைவி சுபாஷினி. இந்த தம்பதியினருக்கு சாதனாஸ்ரீ (வயது 1½), சஞ்சனாஸ்ரீ (வயது 1½) ஆகிய இரட்டைக்குழந்தைகள் இருந்தனர்.இதற்கிடையே சஞ்சனா–ஸ்ரீ தனது பெற்றோருடனும், சாதனாஸ்ரீ சுபாஷினியின் தந்தையான ஆமூர் சடை–யப்ப நகரில் உள்ள சாமி–தாஸ் வீட்டிலும் வளர்ந்து வந்தனர்.இந்தநிலையில் சுபாஷி–னியின் தந்தை சாமிதாசுக்கும், அவரது மகன் லோகநாதனுக்கு சொத்துக் களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது. மேலும் லோகநாதன் தனக்கு வந்து சேர வேண்டிய சொத்துக்களை தனது சகோதரி சுபாஷினியின் மகள் சாதனாஸ்ரீக்கு எழுதி வைத்துவிடுவாரோ என்ற பயம் இருந்தது. அத்துடன் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள்வதை விட, சாதனாஸ்ரீயை பராம–ரிப்பதிலேயே சாமிதாஸ் அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன் கடந்த 31.12.2018 தனது சகோதரி சுபாஷினியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அதே நாளில் தாத்தா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாதனாஸ்ரீயின் கழுத்தை பிடித்து தூக்கி கட்டிலில் அடித்தார்.பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 4.1.2019 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த முசிறி போலீசார் லோகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் அரசு வழக்கறிஞராக கே.பி.சக்திவேல் ஆஜரா–னார்.வழக்கு விசா–ரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பி.செல்வ–முத்துக் குமாரி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் 1½ வயது குழந்தையை சொத்து தகராறில் கொடூரமாக கொலை செய்த லோக–நாதனுக்கு ஆயுள் தண்ட–னையும், ரூ.3 ஆயிரம் அப–ராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து லோக–நாதனை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- அரியலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் சுப்பிரமணியன் (வயது 40). கடந்த 2021 ஆம் ஆண்டு இவர், 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பரப்புரை கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடந்தது.
அதில் மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தி பேசினார்.
இப்படி அவர் பேசியதற்கு அவர் மீது குஜராத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் சம்பவம் நடந்த கர்நாடக மாநிலத்தில் இருந்து யாரும் வழக்கு தொடுக்கவில்லை.
மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறியது.
மேலும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசமும் கொடுத்தது.
இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக விரோத செயல். இன்னும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.
அதற்குள் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பலர் பேசி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்.
ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு அதன் பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அதற்குள் மத்திய அரசு அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கூறி வருகிறார்.
அப்படி அமல்படுத்தினால் பொருளாதார சிக்கல் ஏற்படும் எனவும் கூறுகிறார்.
மத்திய அரசை இவ்வாறு கூறுவதன் மூலம் மாநில அரசு என்ன செய்ய முடியும்.
இருந்தாலும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , பொருளாதார நிலை சீரான பிறகு படிப்படியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.
அதனால் அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமரச வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு
- 17ஆண்டுகளாக நடந்து வழக்கில் தீர்ப்பு
திருச்சி ,
திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் செல்வராஜ். அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.அப்போது அந்த வழக்கில் சமரசம் செய்து வைக்க ஒருதரப்பினரிடம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். பின்னர் ரூ.6 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி 2.11.2006 அன்று பணத்தை கொடுத்தபோது, அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் நிலையம் சென்று, லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் செல்வராஜியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 17 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார். அதன்படி , லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
- ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார்.
சோழவந்தான்
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை வரவேற்று சோழவந்தானில் பேரூர் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார். பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜா, பேரூர் துணைச்செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன், இளைஞரணி காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூறினார்.
- ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.
மதுரை
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:-
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் நடைபெறாமல் இன்னும் கூடுதல் கவனத்தோடு போட்டியை நடத்துவோம். மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் வாதாடினர். அவர்கள் அளித்த தகவல் வலுவாக இருந்தது. இது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி. சத்தியம், உண்மை, உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.
2007-ல் இருந்து வழக்கை நடத்துவதில் கவனத்துடன், வலுவான அமைப்பாக இருந்து வெற்றி பெற்றோம். நாங்கள் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதன் பேரில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோரிடம் இந்த வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வாதாடினர். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய-மாநில அரசுகள் இரு வேறு கொள்கையோடு செயல்பட்டாலும் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.
பல காலக்கட்டங்களில் சர்ச்சைக்கு ஆளாகி இருந்த ஜல்லிகட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீாப்பால் அக்னி பிரவேசம் செய்து வெளிவந்திருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் வீரணசாமி, சிறாவயல் வேலுசாமி, பிரகாஷ், விராதனூர் நாகராஜ் ஆகிேயார் உடனிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
- மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.
இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.
யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.
டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.
மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
- நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.
திருப்பூர் :
திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் கடந்த 9-ந் தேதி இரவு 8¼ மணிக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்ற நபரிடம் இருந்து செல்போனை தட்டிப்பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியகவுண்டம்பட்டியை சேர்ந்த திருப்பூர் வெள்ளியங்காட்டில் வசித்து வரும் கோகுல் (வயது 20) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா கைது செய்தார்.
பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2 நாட்களில் புலன் விசாரணையை முடித்து, குற்ற இறுதி அறிக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3-ல் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் அந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் தீர்ப்பு கூறினார்.
திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று சம்பந்தப்பட்டவர்களை சிறையில் இருந்து வெளியே வராமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி சிறப்பாக பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த போலீசார் ராஜசேகர்,ஜெகதீஷ், சூரியகலா, ஏட்டு அகஸ்டின் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
- மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
- குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் இதற்காக அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம்.
இங்கு வரும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாட்களுக்குள் சாட்சியம் பெறப்பட்டு வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
நாடு முழுவதும் மாவட்டம் தோறும் போக்சோ கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்சோ கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த ஆண்டு நீதிபதியாக பூரணஜெய் ஆனந்த் பொறுப்பேற்றார். அப்போதிருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் போக்சோ வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகளின் உண்மை தன்மை மூலம் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது
- திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி,
திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சே. நல்லையன். இவர் தனது பணி முதுர்வின்போது அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க திருச்சி லால்குடி சார்ந்த கருவூ லத்தில் விண்ண ப்பித்தார். அப்போது கண க்காளர் கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சம் கேட்டார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத நல்லையன் திருச்சி ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2008 மார்ச் 15ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இரு தினங்கள் கழித்து கையூட்டு பணம் ரூ. 500 கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்ட போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்கிய லால்குடி சார் கருவூல முன்னாள் கணக்கர் கிருஷ்ணமூர்த்திக்கு லஞ்சப்பனம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்தி ற்காக மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.