search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியேட்டர்"

    புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றில் 5 ரூபாய் பாப்கார்னை 250 ரூபாய்க்கு விற்பதாக கூறி தியேட்டர் மேனஜரை நவநிர்மான் சேனா தொண்டர்கள் அடித்து, உதைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#MNS #Pune
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தின்பண்டங்களின் விலை தாறுமாறாக உள்ளதாக கூறி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இந்நிலையில், புனே நகரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் இன்று நேற்று புகுந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள், உணவுப்பொருட்களின் விலையை குறைக்க ஐகோர்ட் உத்தரவிட்டும் ஏன் குறைக்கவில்லை என தியேட்டர் மானேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொண்டர்கள் மானேஜரை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அடித்து உதைத்தனர். இந்த தாக்குதல் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் நிர்வாகி கிஷோர் ஷிண்டே, “5 ரூபாய் பாப்கார்ன் 250 ரூபாய்க்கு விற்கின்றனர். ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டினால், அதற்கு, மராத்தி தெரியாததால் பேப்பர் படிக்கவில்லை என மானேஜர் கூறினார். இதனால், எங்களது ஸ்டைலில் இந்த விஷயத்தை டீல் செய்தோம்” என கூறினார். 


    திருட்டுத்தனமாக டி.வி.டி தயாரித்து விற்கப்படுவது தொடர்பாக மயிலாடுதுறை தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    தமிழ் சினிமாவில் திருட்டுத்தனமாக படங்கள் இணையத்தில் வெளியாவதும் டிவிடிக்கள் தயாரித்து விற்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் இணையதளத்திலும், திருட்டு டி.வி.டி.யாகவும் வெளியானது.

    இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லம் நேற்று கடலூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    ‘வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அதன் மூலம் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது என்பதால் என்னுடைய படத்துக்கு வெளிநாட்டு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை.

    ஆனாலும் இணையத்திலும் திருட்டு டிவிடியிலும் படம் வெளியாகி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டிவிடியை வாங்கி ஆராய்ந்ததில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மயிலாடுதுறை கோமதி திரையரங்கில் தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.

    எனவே சம்பந்தப்பட்ட இணையதளம், திரையரங்கு உரிமையாளர், திரையரங்க மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தனர். அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர். #tamilnews
    தூத்துக்குடியில் ‘காலா’ படம் வெளியான தியேட்டரில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு ரஜினி ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது ரஜினி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்வது சரியல்ல என்று கூறும் ரஜினியின் ‘காலா’ படத்தில் போராட்ட காட்சிகள் இடம் பெற்றிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது

    இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் இன்று வெளியானது. தூத்துக்குடியில் ‘காலா’ படம் காசிக்கடை பஜாரில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் காலையிலேயே அந்த தியேட்டரின் முன் திரண்டனர்.

    பின்பு 8.30 மணியளவில் ரசிகர்கள் அனைவரும் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம் திரையிடுவதற்கு முன்பாகவே தியேட்டருக்குள் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் திடீரென எழுந்து நின்றனர். ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரையின் அருகில் நிற்க, மற்றவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன் எழுந்து நின்றனர். பின்பு அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து ‘காலா’ படம் திரையிடப்பட்டது. அதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

    திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்யும் வகையில் வெளியாகும் ‘காலா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று நாடார் சங்கங்கள் அறிவித்துள்ளன.
    சென்னை:

    நாடார் மக்கள் சக்தி தலைவர் அ.ஹரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1956-ம் ஆண்டு காலகட்டங்களில் மும்பைக்கு பிழைப்பு தேடிச்சென்ற தமிழர்கள் இனரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர், நெல்லை மாவட்டம் உமரிக்காட்டை சேர்ந்த திரவிய நாடார்.

    ‘கூடுவாலா சேட்’ என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற திரவிய நாடார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காலா’. ஆனால் இப்படத்தில் திரவிய நாடார் புகழை இருட்டடிப்பு செய்து, கதை நாயகனை ஒரு தலித் சமூக தலைவராக மாற்றியிருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

    ‘காலா’ படம் ஒரு கற்பனை கதை, திரவிய நாடார் கதை அல்ல என்பதை படக்குழு இதுவரை மறுக்கவே இல்லை. இப்படம் திரைக்கு வந்தால் நிச்சயமாக தென் தமிழகத்தில் சாதிய பிரச்சினைகள் நிகழும். எனவே தான் ‘காலா’ படத்தை தடை செய்யக்கோரி வலியுறுத்துகிறோம். ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    எல்லாவற்றையும் மீறி தமிழர்களை சமூக விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் திரைக்கு வந்தால், திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ‘காலா’ படத்தை நாடார் சமுதாய தலைவர்களுக்கு திரையிட்டு காட்டி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள படக்குழு தயாராக வேண்டும். அதன்மூலம் இச்சமூகத்தில் சாதிய மோதல்கள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார் உடனிருந்தார். #tamilnews
    ×