search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • ஆத்துப்பாலத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது.
    • போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக ஆத்து பாலம் சிக்னலில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குனியமுத்தூர் மற்றும் சுந்தராபுரம் பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    இதனை கண்ட கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 3 சாலைகளில் இருந்தும் வரும் வாகனங்கள் சிக்னலில் காத்து நிற்கும் முறையை மாற்றி அமைத்து, ஆத்து பாலத்தில் ரவுண்டானா முறையை ஏற்படுத்தினர். பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வரும் கனரக வாகனங்களும், பஸ்களும் ஏற்கனவே செல்வது போன்று புட்டு விக்கி சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் ஆத்துப்பாலத்தில் திரும்பாமல் சிறிது தூரம் முன்னே சென்று யூடர்ன் அடித்து ஆத்துப்பாலத்துக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது.

    அதேபோன்று பாலக்காடு ரோட்டில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள் பஸ்கள் ஆகியவை புட்டு விக்கி சாலை வழியாக விடப்பட்டது. இருசக்கர வாகனங்கள் சிக்னலில் நிற்கும் முறையை மாற்றி அமைத்து ரவுண்டானா முறையில் வரிசையாக சென்று கொண்டே இருக்கலாம். அதேபோன்று உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் காத்திருந்து நிற்காமல், இதேபோன்று ரவுண்டானா முறையில் செல்லக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினர். இதனால் தற்போது ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் தாமதம் இன்றி நிற்காமல் செல்ல முடிகிறது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:- சென்ற வாரம் வரை ஆத்துப்பாலம் வழியாக செல்ல வேண்டும் என்றாலே போக்குவரத்து நெரிசலும் கால தாமதமும் ஏற்பட்டு வந்தது. நான்கு சாலைகளிலும் சிக்னலில் காத்து நிற்கும் வாகனங்கள், சிக்னல் போட்ட பிறகு நகரத் தொடங்கும் போது மொத்தமாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து வருவதை காண முடிந்தது.

    தற்போது சிக்னல் முறை இல்லாமல் ரவுண்டானா முறை ஏற்படுத்தியதால், வாகனங்கள் காத்து நிற்காமல் தங்கு தடையின்றி நகரக்கூடிய சூழ்நிலை தற்போது உள்ளது. வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் பிரச்சினை தற்போது கட்டுக்குள் வந்தது போன்ற சூழ்நிலை நெரிசலின்றி உள்ளது. போக்குவரத்து நெரிசலை மிக சாதுரியமாக கையாண்ட போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடினான்.
    • மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி காருக்குடியைச் சேர்ந்தவர் இளைய ராஜா பாசமலர் தம்பதியினர். இவர்களின் மகன் கவிப்ரியன்.

    இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவிபெறும் வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

    இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது மாணவர் கவிப்ரியன் மயங்கி விழுந்துள்ளார்.

    அவரை மீட்டு வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுப்பி உள்ளனர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லடம் நால்ரோடு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை -திருச்சி ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக செல்ல 45 வினாடிகளும், அதேபோல கிழக்கிலிருந்து மேற்காக செல்ல 45 வினாடிகளும் அனைத்து வாகனங்களும் செல்ல அமைக்கப்பட்டு இருந்தது.

    அதுபோல மங்கலம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி ரோடு செல்வதற்கு 30 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பெரிய நகரங்களில் உள்ளது போல் முதல் 25 வினாடிகளுக்கு நேராக செல்லும் வாகனங்களுக்கும், கடைசி 20 வினாடிகளுக்கு பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களும் செல்ல சிக்னல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிவுறுத்துவதற்காக நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் சிக்னல் குறித்து அறிவித்து வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில்:- பெரிய நகரங்களில் உள்ளது போல் தற்பொழுது பல்லடத்திலும் சிக்னல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேராகச் செல்லும் வாகனங்களுக்கு 25 வினாடிகளும், பக்கவாட்டு ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு 20 வினாடிகளும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை - திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்கள் 2 வழிகளிலும் ஒரே நேரத்தில் செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த புதிய நடைமுறையை பின்பற்றி பல்லடம் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துக்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கை விடுத்தனர்.
    • வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய போலீசார் ரோந்து பணியாற்றினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கடலோர பகுதியில் சீனா நாட்டை இளைஞர்கள் 4 பேர் வருவதாக மத்திய, மாநில உளவு துறை எச்சரிக்கையை அடுத்து வேதாரண்யம் ஆறுகாட்டு துறை,கோடியக்கரை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர் மத்திய மாநில அரசுஉளவுத்துறை சீனா நாட்டை சேர்ந்த நான்கு போர் தமிழ் இளைஞர் படகை ஒட்டி வர அதில் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள.

    அதனை கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்திருந்தது.

    இதையொட்டி வேதாரண்யம் கடற்கரை முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியை வேதாரண்யம் போலிசார், கடலோர காவல் குழுமபோலீசார் சுங்கத்துறையினர் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் என்ன விடிய விடிய கடற்கரை பகுதிகளிலும், மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    இச்சோதனையால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது

    • சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
    • களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39)என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது கழுவன்திட்டை. காயங்களுடன் வாலிபர் பிணம் இந்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சென்ற போது சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த னர். அவர்கள் வாலிபரை பார்த்த போது அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப் பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீ சாருக்கு ஏற்பட்டு உள்ளது.தொடர்ந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசா ரணை மேற்கொண்ட தில் இறந்த வாலிபர் களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39)என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவரது உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் இவரை யாரா வது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்க லாமா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அவர் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு கழுவன் திட்டை பகுதியில் சிலர் குடி போதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நிலையம், கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று பார்வையிடும் கலெக்டர் அரவிந்த் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    விழாவில் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குடியரசு தினத்தையொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இன்று நடந்தது. ஊர்க்கா வல் படையினர், ஆயுதப் படையினர், தேசிய மாணவர் படையினர், இந்த அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குடியரசு தினத்தை யொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    குடியரசு தின விழா நடைபெறும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மைதானம் முழுவதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அங்கு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தை யொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி காலணி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல் படை போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாங்கு நேரி, வள்ளியூர், இரணி யல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • ரெயிலில் மறந்து வைத்துச் சென்ற ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    • போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அலங்கானூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமச்சந்திரன் (வயது 70).இவர் பெரம்பலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் மனைவி முத்துலட்சுமியுடன் (60) நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இன்று காலை 6 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்ததும் மனைவியுடன் இறங்கி விட்டார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமக்குடி ரெயில் நிலைய அதிகாரி யிடம் தகவல் தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தபோது கைப்பை அங்கு இருந்தது. அதை திறந்து பார்த்த போது ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவையும் பத்திரமாக இருந்தன.

    இது குறித்து ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமு மனைவியுடன் ராமநாத புரம் வந்தார். ெரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன் ராஜ், போலீஸ்காரர் ஜலாலு தீன் ஆகியோரிடம் நன்றி தெரிவித்து கைப்பையை பெற்று சென்றனர்.

    போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • புகாரின்பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
    • ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள சகாயநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் நெருக்கமாக உள்ளன. அப்பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், இந்து கோவில் போன்றவையும் உள்ளது. இருவேறு மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சகாயநகர் குன்னுவிளை பகுதியில் ஒருவர் புதிய வீடு ஒன்றை கட்டி ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளார். பலநாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனை கண்டு கொள்ளா மல் நேற்று இரவு அந்த வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வீட்டின் முன் அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகு தியை சேர்ந்த வக்கீல் படுவூர் எட்வின் என்ற அருள் எட்வின் ஜெகம் என்பவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவ்வீட்டில் அனுமதியின்றி ஜெபகூட்டம் நடத்தியதும், அனுமதி யின்றி ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே ஜெபக்கூட்டம் நடத்தியதை நிறுத்தினர். மேலும் ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்ற னர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .
    • கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அருகேயுள்ள மத்திகிரி குதிரைபாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பு வடிவு என்பவர் தனது 3 வயது குழந்தையான ரியாஸ்டி (எ)அக்சயா ஸ்ரீ உடன் மத்திகிரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏ.டி.எம்.முக்கு சென்று தன் மகளை வெளியே நிறுத்திவிட்டு பணம் எடுத்துகொண்டு வெளியே வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை .

    இதுகுறித்து அன்பு வடிவு மத்திகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து அப்பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன்மூலம் குகாணாமல் போன குழந்தையை 2 மணிநேரத்தில் குதிரைபாளையம் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • முத்தலக்குறிச்சியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணி நிறைவு பெறவில்லை.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரை ஊரக சாலை மேம்பாடு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 6 மாதங்கள் கழித்தும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை யடுத்து மனோகர் குமார் தலைமையில் பொதுமக்கள் சுமார் 100 பேர் முத்தலக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் செய்ய திரண்டனர். அவர்களிடம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

    இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.

    நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

    இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சமூக வலை தளம் மூலம் பழகி மாயமானார்
    • வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9- ம் வகுப்பு மாணவி ஓருவர், கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார்.

    அதன்பிறகு அவர் மாலை யில் வீடு திரும்பவில்லை.மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி யும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் திருப்பூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த லட்ச பிரபு (வயது 22) என்ப வருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மாணவி தங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் மாணவியையும், அவருடன் இருந்த வாலிபரையும் மீட்டு குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசா ரணையில் மாணவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் லட்சபிரபுவுடன் பழகி இருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியை போலீசார் மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்ச பிரபுவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×