search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரம்பியது"

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அடியானது குண்டாறு அணையும் நிரம்பியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று மாலை முதல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை ஓரளவு தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல பழையகுற்றால அருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் இன்று நன்றாக தண்ணீர் விழுந்தது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு பகுதியில் 82 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணைப்பகுதியிலும் 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாபநாசம் அணைப் பகுதியில் இன்று காலை வரை 1 மில்லிமீட்டர் மழையே பதிவாகியுள்ளது. ஆனாலும் அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வருகிறது. கீழ்அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 67.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 113.35 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சற்று கூடி இன்று 83.90 அடியாக உள்ளது. கடனாநதி அணைநீர்மட்டம் 61.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 71.20 அடியாகவும் இன்று உயர்ந்துள்ளது.

    அடவிநயினார் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 109 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அங்கு முழுகொள்ளளவான 52.50 அடி தண்ணீர் உள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குண்டாறு அணைப்பகுதியில் இடைவிடாமல் கனமழை கொட்டியது. 82 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று குண்டாறு அணையில் 33.13 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மளமளவென்று 3 அடி உயர்ந்து முழுகொள்ளளவான 36.10 அடியை இன்று காலை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் வழிந்தோடி ஆற்றில் செல்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 82
    அடவிநயினார் - 16
    தென்காசி    - 15
    செங்கோட்டை - 5
    சேர்வலாறு - 4
    சிவகிரி - 2
    பாபநாசம் - 1

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 750 பாசன குளங்கள் நிரம்பி விட்டன.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    திற்பரப்பு, அடையாமடை, பூதப்பாண்டி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குளச்சல், குருந்தன்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்குகேற்ப தண்ணீரை திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    புத்தேரி, பொற்றையடி, பூதப்பாண்டி பகுதிகளில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட் டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 750 குளங்கள் நிரம்பி விட்டன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இறச்சகுளம் பகுதியில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கமாக மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டும் அதே அளவு பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6.10 அடியாக உள்ளது. அணைக்கு 1,018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 654 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது. அணைக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.25 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.90 அடியாக உள்ளது.
    ×