என் மலர்
நீங்கள் தேடியது "அதிகாரிகள்"
- ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஜானகி ரவீந்திரன் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சூரம்பட்டி:
ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகுமார் கோவை மாநகராட்சி துணை கமிஷன ராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவருக்கு பதில் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றிய ஜானகி ரவீந்திரன் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதேபோல் ஈரோடு மாநகராட்சி மாநகர என்ஜினீயராக பணியாற்றிய மதுரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இவருக்கு பதில் ஈரோடு மாநகராட்சி செயற்பொறி யாளராக பணியாற்றிய விஜய குமார் ஈரோடு மாநகராட்சி மாநகர என்ஜினீய ராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி செயற்பொறி யாளராக பணியாற்றிய சண்முக வடிவு ஈரோடு மாநகராட்சி செயற்பொறி யாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.
+2
- கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
- கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசனேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் வழிபாட்டு முறை தொடர்பாக இருசமுதாயத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அந்த கோவில் கடந்த 2012-ம் ஆண்டு பூட்டப்பட்டது. பூட்டப்பட்ட அந்த கோவிலை திறக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. பலமுறை சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோவில் நிரந்தரமாக பூட்டப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளாக அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் பூட்டியே கிடந்தது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வெளியில் நின்றே சாமியை கும்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், கோவிலை திறக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிலை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 11 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோவிலை திறக்க கடந்த ஒரு வார காலமாக இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த நிலையில் அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையிலான வருவாய் துறையினர் இன்று காலை கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர். பின்பு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு யாகம் நடந்தது.
இதில் கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரையம்மாள், அங்கயற்கண்ணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் (ஆலய நிலங்கள்) முருகையன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவிலை திறக்க ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டனர்.
கோவிலை திறக்க மற்றொரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு திருமங்கலம் துணை சூப்பிரண்டு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவள்ளூர்:
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 43 ஊராட்சிகள் உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பயனாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தென்னை கன்றுகளை முறையாக பாதுகாக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் வைத்து உள்ளனர்.
இதனை பார்க்கும் விவசாயிகளும், பயனாளிகளும் மிகவும் மனவேதனை அடைந்து வருகிறார்கள். அதிகாரிகள் அலட்சியமாக தென்னங்கன்றுகளை வைத்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.
மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது.
விழாவைத்தொடா்ந்து, முக்கிய விழாவான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யா ணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதி யும், கள்ளழகருக்கு எதிர் சேவை மே 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை கள்ள ழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது.
வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் இடமான ஆழ்வாா்புரம் பகுதியில் செய்யப்ப உள்ள தூய்மைப்பணிகள், முன்னேற்பாட்டு பணிகள், பந்தல் அமைத்தல், மணல் திட்டு ஏற்படுத்துதல், தண்ணீா் நிரப்புதல், கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை கள்ளழகர் கோவில் நிர்வாகத்தினர் இன்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கள்ளழகர் கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் அற நிலையத்துறை, கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.
- விருதுநகரில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் பரிசு வழங்கினார்.
- விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டா ட்சியர் ரங்கநாதனுக்கு 3-ம் பரிசும்ட வழங்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் ராம்தாசுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் சீதாலட்சுமிக்கு 2-ம் பரிசும், ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சரசுவஸ்வதிக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சி யர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜா மணிக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப் பிள்ளைக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது. உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தனுக்கு 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கப்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத் துணை ஆய்வாளர் ராமசுப்பு ஆகியோருக்கு 3-ம் பரிசும், வழங்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார்ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிச்செல்விக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட சார் ஆய்வாளர் முத்து மாரிக்கு 3-ம் பரிசையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி கோட்டாட்சியர் விசுவ நாதன், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அணையை சுற்றி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசனம் பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
- கோடை காலம் என்பதால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவில்,27 அடி உயரத்தில், அணையை சுற்றி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசனம் பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பி குளம் ஆழியாறு பாசன திட்ட கிளை வாய்க்காலில் இருந்து வடமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வடமலைக்கரை ஓடை அணைக்கு நீர் வந்த பிறகு கடந்த ஆண்டு 3 முறை பாசனத்திற்காகவும், கால்நடைகளின் குடிநீருக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டன.தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. வட்ட மலைக்கரை ஓடை அணை க்கு தொடர்ந்து நீர் அமராவதி ஆற்றில் இருந்து கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வர நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறி யாளர் நித்தியா, லக்கமநா யக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வட்டமலை கரை ஓடை அணை சங்கத் தலைவர் பால பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கழிப்பறை ஓய்வெடுக்கும் பகுதி என்று மலைப்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அபிவிருத்தி பணிகள் செய்துவந்தனர்.
- அனுமதி பெறாமல் தொடர்ந்து எவ்வித பணியும் செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
கன்னியாகுமரி :
பத்துகாணி காளி மலையில்சித்திர பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பத்து காணியிலிருந்து காளி மலைக்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஊற்றுக்குழி என்ற பகுதியில் கழிப்பறை ஓய்வெடுக்கும் பகுதி என்று மலைப்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அபிவிருத்தி பணிகள் செய்துவந்தனர்.
இத்தகவலை அறிந்து விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் மற்றும் அருமனை ஆய்வாளர் முருகன் ஆறுகாணி காவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதி இன்றி தொடங்கிய பணியை தடுத்து நிறுத்தியதோடு அனுமதிபெறாமல் தொடர்ந்து எவ்வித பணியும் செய்யக்கூடாது என்றுஎச்சரித்துள்ளனர். அனுமதி இல்லாமல் பணி தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
நாமக்கல்:
தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் தாலுகா, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அப்பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்ட வி.ஏ.ஓ.க்கள் சங்கம் சார்பில், நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி லட்சுமிநரசிம்மன் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடியில் வி.ஏ.ஓ.வை தாக்கியவர்களை உடனடியாக கொலை குற்ற வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னார்கள்.
- அலங்காநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு செல்ல பாதை வசதி வேண்டி பொதுமக்கள் அலங்காநல்லூர்-தனிச்சியம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், திருவள்ளுவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
- தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
ராசிபுரம்:
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அலகில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ராசிபுரம் உட்கோட்டத்தைச் சேர்ந்த மல்லியக்கரை- ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை அகலப்படுத்தும் பணிகளை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்ட பொறியாளர் குணா, சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை அலகின் உதவி கோட்ட பொறியாளர் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக் கட்டுப்பாடு உட்கோட்ட அலகின் உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
- விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
- ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல்கள் மற்றும் விற்பனைப் பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதைகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், முளைப்பு திறன் அறிக்கைகள், விதைகளின் இருப்பு விபரம் மற்றும் விற்பனை விலை பலகை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விவசாயிகள் விதைகள் வாங்கும் போது, லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விதை வாங்க வேண்டும். அதற்கான பில்களை கேட்டுப்பெற வேண்டும். விற்பனை பட்டியலில் விதைக் குவியல் எண் மற்றும் காலாவதி தேதியை உறுதி செய்தல் வேண்டும். மேலும் விதை விற்பனையாளர்களிடம் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்கும்போது விவசாயிகள் விதைகளின் தரத்தினை உறுதி செய்துகொள்ளலாம் என அவர் கூறினார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட விதைக் குவியல்களுக்கு விதைகள் சட்டம் மற்றும் விதைக்கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விதைகளின் தரத்தினை உறுதிப்படுத்த விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.
- உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து அச்சிரம்பள்ளம் கிராமத்திற்கு உயர்அழுத்த மின்கம்பம் செல்கிறது.
இந்தநிலையில் அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.தாவிப்பிடித்தால் எட்டும் உயரத்தில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லவே அச்சம் அடைந்து வருகிறோம்.
சிறுவர்கள் குளத்தில் குளிக்க செல்லும் போது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த தாழ்வான மின் கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.