search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சம்"

    • வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது.

    பல்லடம் :

    பல்லடத்தில் தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் வாலிபர்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர். பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமலும், முன்னே செல்லும் வாகனங்களை அதிரடியாக முந்திச் செல்வதும், வளைந்து, வளைந்து தாறுமாறாக ஓட்டுவதும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சூழ்நிலையில், இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் சாகசத்தால், விபத்துக்களின் எண்ணிக்கை மேலும் கூடுகிறது. எனவே போலீசார் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை உண்டியல் திருடப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் சாமிநாதன் , ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி ருக்மணி . இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள்சிதறிகிடந்தன. மேலும் பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை போட்டுவைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்சுமார் ரூ.8 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது.

    அதே தெருவில் எதிர்திசையில் சாமிநாதனின் மகள் கோகிலவாணி (36) அவரது கணவர் ரமேஷ் (41) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரமேஷ் நல்ல கட்டிபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், கோகிலவாணிகருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று பின்னர் மாலை திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து பணம் ரூ 50 ஆயிரம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ10 ஆயிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஒரே பகுதியில் பட்டப்பகலில் எதிர் எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 29-ந்தேதி அதே கமிட்டியார் காலனியில் அடுத்தடுத்து தர்மர், மணிகண்டன் ஆகியோரது வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.

    அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில் ,குடியிருப்புகள் நிறைந்த இதே பகுதியில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பகல் சமயத்தில் கூட வீட்டை பூட்டிவிட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோல் தொடர் திருட்டு நடைபெறுவது நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். கமிட்டியார் காலனி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் என்றனர்

    கொள்ளை குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.

    • சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் ஈரோட்டில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்ளூர்-வெளியூர் மாவட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தற்போது பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாகபஸ் நிலையத்தில் மினி பஸ் நிறுத்தம் ரேக் பகுதியில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. மது அருந்திவிட்டு அங்கேயே தூங்குகின்றனர். சில சமயம் வாந்தி எடுக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகள் முகம் சுளிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி கொண்டிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நாமக்கல் சேலம் ரேக்கில் ஒரு குடிமகன் மது போதையில் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவியை பார்த்து அந்த குடிமகன் ஆபாச வார்த்தையில் பேசினார். இதனால் அந்த மாணவி அழுதார். இதே போன்று பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் அட்டகாசத்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.
    • வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மார்க்கமாக பழநி-கோவை இடையே இயக்கப்படும் பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச்சென்று திரும்புவோர், அவசர கதியில் கிடைக்கும் பஸ்களில் ஏறிச்செல்கின்றனர்.

    பயணிகளை அள்ளிச்செல்லும் நோக்கில் அரசு பஸ்களுடன் போட்டி போடும் தனியார் பஸ்கள், ரோடுகளில் அசுர வேகத்தில் செல்கின்றன.தொடர்ந்து, வேகமெடுத்து இயக்கப்படும் பஸ்கள் எதிரே வரும் வாகனங்களுக்குக்கூட வழிவிடாமல் ஒன்றையொன்று முந்திச்செல்கின்றன.இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் பீதிக்கு உள்ளாகி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.அதேபோல் வழியில் உள்ள வேகத்தடைகளை கூட கண்டுகொள்ளாமல், வந்த வேகத்திலேயே அதன்மீதுபஸ்களை கடக்கச்செய்வதால், பஸ் பயணிகள் மட்டுமின்றி, ரோட்டோரம் செல்லும் மக்களும் பீதியில் உறைந்து விடுகின்றனர்.சில தனியார் பஸ்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் இயக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

    எனவே தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    • புறக்காவல் நிலையத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்

    கன்னியாகுமரி:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஆரோக்கியபுரம், புதியம்புத்தூர், கூட்டாம்புளி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உள்பட ஒரு குடும்பத்தினர் நேற்று காலையில் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வந்து விட்டு பிற்பகலில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

    இவர்கள் திற்பரப்பு அருவியில் கார்கள் நிறுத்தும் இடத்தின் கடைசி எல்லைப் பகுதியில் தங்கள் காரை நிறுத்தியுள்ளனர். அவர்கள் குளித்து விட்டு காரில் வந்து பார்த்த போது காரில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.2000 த்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த திருமணி மனைவி பிரேமா (வயது 40) குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திற்பரப்பு அருவி குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள நிலையில், இங்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இங்கு நிலவும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக திருட்டு சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    கடந்த வாரம் இங்கு வந்த ஒரு சுற்றுலா குழுவினரிடமிருந்து 1 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது. அதே போன்று சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினரின் காரிலிருந்து 4 செல்போன்கள் திருட்டுப் போயின. தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் திற்பரப்பு அருவிப் பகுதிகளில் சக்தி வாய்ந்த கண்காணிப்புப் கேமராக்கள் வைப்பதுடன், கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை தீவிரப் படுத்த வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலிசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சுற்றுலா பயணிகள் நிறுத்தி இருந்த வாகனத்தின் அருகில் இருந்த கார்களின் நம்பர்களையும் வைத்து அந்த டிரைவர்களிடமும் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் இந்த புறக்காவல் நிலையம் மூடி இருப்பதால் அந்த பகுதியில் உள்ள திருடர்களுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது. வெகு விரவில் திருடர்களை பிடிப்போம் என்று குலசேகரம் போலிசார் தெரிவித்தனர்.

    தனிமையில் வாழ்பவர்கள் மனஅழுத்தம், அச்ச உணர்வால் முன்கூட்டியே மரணம் அடைகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

    13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது. உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன். புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதில் அளித்த அவர்கள் தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.

    இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
    ×