search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ஹவுசிங் போர்டு லட்சுமி நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (62). இவர் தொடர் மூட்டு வலி காரணமாக அவதி அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நந்தீஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் (43). தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். வங்கியில் பெற்ற கடனை செலுத்துமாறு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நலபாதிப்பும் ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் முத்து (45). குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் தற்கொலை செய்து கொண்டார்.

    சுப்பிரமணியன் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 57), இவருக்கு மனைவி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார்.
    • பிலஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வந்து சென்றனர்.

    அதன்படி இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 60 வயது முதியவர் ஒருவர் நேரில் வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக முதியவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பண்ருட்டி கீழ்மாம்பட்டு சேர்ந்தவர் சிகாமணி (வயது 65) என தெரிய வந்தது. இவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வந்துள்ளதாக கூறியதாகவும், தற்போது வீடு கட்ட தொடங்கிய பின் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக லஞ்சம் தராத காரணத்தினால் வீடு இல்லை என கூறியதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து முதியவர் சிகாமணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து போடிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசாரின் விசாரணை யில், மயங்கி கிடந்த முதியவர் தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 75) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி காந்தாரிவிளையை சேர்ந்தவர் மாகீன் (வயது 60). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கும் உடைய இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். கட்டிலில் படுத்த அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாகீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி பதர்நிஷா (55) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கட்டி பாலம் பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.
    • .இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே செங்கட்டி பாலம் பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.

    இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்தவர் வாயிலிருந்து நுரை வந்திருந்தது.

    மேலும் அவரது நெற்றி மற்றும் கண் பகுதியில் காயங்கள் இருந்தது. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்த முதியவர் மாயமானர்
    • இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.

    ேசலம்:

    சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் வேணுகோபால் கடந்த 21-ந்தேதி 4 ரோடு பூக்கடை காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தம் அருகே வசித்து வரும் தன்னுடைய தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் உறவினர்கள், பல்வேறு இடங்களில் வேணுகோபாலை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.

    ஓசூர்,

    கின்னஸ் சாதனைக்காக ஹைதராபாத்தில் இருந்து 72 வயது முதியவர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு(72), என்ற அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த 10.09.2022 அன்று ஹைதராபாத்தில் தொடங்கினார். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த அவர் கடந்த புதன்கிழமை இரவு ஓசூர் வந்தார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து 55 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    நேற்று ஓசூரிலிருந்து கர்நாடகம் புறப்பட்ட அவர், கர்நாடகா வழியாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தனது லட்சியத்தை அடையப்போவதாக உறுதியுடன் தெரிவித்தார். சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.

    • முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது.
    • அழுகிய நிலை பிணமாக கிடந்தவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அடுத்துள்ள முருகன் குன்றம் அருகே முட்புதருக்குள் இருந்து நேற்று மாலையில் துர்நாற்றம் வீசி யது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்த முட்புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். முதல் கட்ட விசாரணையில் அழுகிய நிலை பிண மாக கிடந்தவர் அப்ப குதியில் பிச்சை எடுத்து வந்தவர் எனவும், அவரை பற்றிய வேறு தகவல் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெய்யூர் ஹாக்கர் தெருவினை சேர்ந்தவர் பிறைட் சாலமன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஏதோ மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கிய நிலையில் வீட்டின் அருகே உயிருக்கு போராடியபடி கிடந்ததாக தெரிகிறது.

    உறவினர்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிறைட் சாலமன் உயிர் இழந்தார். இது குறித்து அவரது மருமகன் ஜெரின் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

    இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.

    சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.

    பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் மோதி முதியவர் பலியானார்.
    • பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×