search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212363"

    • நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சாலியமங்களம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு ஆய்வு செய்தார்.

    முன்னதாகநம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பயன்படுத்து வதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் சாலியமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி, புதுப்பிக்கும் பணிகளையும் கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

    ஆய்வின்போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்.

    அமானுல்லா, உதவி பொறியாளர் கதிரேசன்,ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணை தலைவர் செந்தில்கு மார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன். பணி மேற்பார்வையாளர் மீரா. ஒப்பந்ததாரர் சண்.சரவணன்,ஊராட்சி செயலாளர் ஜெகத்குருமற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
    • 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டரை வாழ்த்தி வழியனுப்பும் விழா நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தி ற்கு செயல்வடிவம் கொடுக்க அனுபவம், ஆற்றல் வாய்ந்தவர் கலெக்டராக இருக்க வேண்டும். அப்படிப்ப ட்டவர் தான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழு பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டு நிறைவேற்றியவர்.

    விளம்பு நிலை மக்களுக்கு செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களை கலெக்டர் செயல்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, வருவாய் கோட்டா ட்சியர்கள் பிரபாகர், பூர்ணிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கலெக்டரை பாராட்டி பேசியதுடன் அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை நினைவு பரிசாக ஏராளமானோர் வழங்கினார்.

    • பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுப்பு.
    • போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது.

    ஐ.பி.எல்- பிளே ஆப் போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    அதாவது, ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் ரன் எடுக்கப்படாத ஒவ்வொரு பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • நரிக்குடி யூனியனில் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்தில் நடப்பாண்டு க்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் அ.முக்குளம், வீரசோழன், அழகாபுரி, மினாக்குளம், நல்லுகுறிச்சி, வேளாநேரி, மேலப்பருத்தியூர், கீழக்கொன்றைக்குளம், நாலூர் ஆகிய 9 ஊராட்சிகள் தேர்ந்தெ டுக்கப் பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரையிலான புன்செய் நிலங்களில் போர்வெல் அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் அமைத்து அதில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியும், 100 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையும் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் விவசாயி களுக்கு கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக ஆழ்துளைக்கி ணறு மற்றும் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஊராட்சிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வீரேசுவரன் தெரிவித்துள்ளார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னாள் மற்றும் இன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களைக் கொண்டு அமையப் பெற்ற சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்ட ளையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை ெதாடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் ஈ.சி.எச்.எஸ் பொறுப்பு அதிகாரி ஜிபி கேப்ட் சிபிகே. கென்னடி ( ஓய்வு ), குந்தவை நாச்சியார் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் தமிழடியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தா டைகள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பாராட்டினார்.

    மேலும் அவர் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலும் இந்த விழாவோடு இணைந்து சோழநாட்டு பட்டாள படை வீரர் அந்தோ ணியின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அவரை கலெக்டர் கவுர வித்தார்.

    • பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியினரால் மறக்க முடியாத நாள்களில் பசுமைத் தாயகம் நாள் முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25-ஆம் நாள் தான் பசுமைத்தாயகம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காக்கவும், ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தவும் பசுமைத்தாயகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஏராளம்.

    பசுமைத்தாயகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நான் மிகவும் விரும்புவது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக மரக்கன்றுகளை நடுவதைத் தான். பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

    உலகம் முழுவதும் புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பசுமைத் தாயகம் நாளை நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடப்பட்டதை விட இந்த ஆண்டில் இன்னும் அதிக மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும்.

    தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 2 லட்சம் மரக்கன்றுகளாவது நடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    மொத்தம் 443 நாட்களில் 3283 பேர் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக 28 ஆயிரத்து 6 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். அவர்கள் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை மகிழ்வித்து வருகின்றனர்.

    பசுமைத் தாயகம் நாளுக்கு இன்னும் 78 நாட்கள் உள்ளன. பா.ம.க.வினர் 10 பேர் இணைந்து ஒரு மரக்கன்று நட்டு வளர்த்தாலும் கூட ஒரு வாரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட முடியும். ஆனால், அவை எங்கு நடப்படும், எவ்வாறு நடப்படும், எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? என்பதற்கு எந்தவகையான உறுதியும் கிடையாது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் அடுத்த பத்தாண்டுகளில் அவற்றுக்குரிய பயனை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் தான் நடப்பாண்டில் மரக்கன்று நடுவதற்கான இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மரக்கன்றுகளை நடும் பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பு ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூர், சிற்றூர்களில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு ஊரிலும் அவை எங்கெங்கு நடப்பட வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடப்பட்ட பிறகு அவற்றை யார், யார் பராமரிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும்.

    நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வகைகள், நடப்பட்ட ஊர்கள், அவற்றை பராமரிப்பவர்களின் பெயர், விவரம், முகவரி ஆகியவை பதிவு செய்து மாவட்ட வாரியாக ஆவணம் ஆக்கப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    பசுமைத்தாயகம் நாளில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

    எனவே, பசுமைத்தாயகம் நாளில் மண்ணுக்கு மரக்கன்றுகளை பரிசளிப்ப தற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கும்படி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
    • நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு வனத்துறையின் பெரம்பலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தேக்கு, கொய்யா, புங்கன், மகாகனி, வேம்பு, சவுக்கு மற்றும் பல இன மரக்கன்றுகள் வழங்கப்படும். நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் பெரம்பலூர், பேரளி, குன்னம், மாத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8838543275, சிறுவாச்சூர், ஆலத்தூர், செட்டிகுளம், காரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9003771622, ரஞ்சன்குடி, லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், வி.களத்தூர், குரும்பலூர், புதுவேலூர், நக்கசேலம், டி.களத்தூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9965659632, லாடபுரம், எசனை, மேலப்புலியூர், ஆலம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9655476094 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • கண்காட்சியில் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் இடம் பெற்றன.
    • நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி துவங்கி வைத்தார். கண்காட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் மாற்று பொருள்கள் இடம் பெற்றன.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் புவி தினம் பற்றியும் மனிதர்களின் செயலால் பூமிக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தலைமை ஆசிரியை செல்லம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் சண்முகநாதன் ஆசிரியை தமிழ்ச்செல்வி பெற்றோர் கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதைபோல் வடக்காலத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தின விழா அனுசரிக்கப்பட்டது. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை ஆசிரியை பத்மாவதி தேசிய பசுமைப்படை ஆசிரியை ருபான்சியா ஆசிரியர் செந்தில் வேலன் ஆசிரியை சுமதி ராணி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மஞ்ச–ப்பையும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    • கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்லடம் அருகே கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியில் கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். முதலில் கோடங்கிப்பாளையம் கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இச்சிப்பட்டி குவாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கோடங்கிப்பாளையம், இச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒரு தரப்பினர், 'கல் குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இல்லை. கல்குவாரி தொழில் நடந்தால் தான் எங்கள் பகுதியில் ஓட்டல் தொழில் முதல் பெட்டிக்கடை தொழில் வரை நடக்கும். குடும்ப வாழ்வாதாரத்துக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்' என்று பேசினார்கள். தொழிலாளர்கள் தரப்பினரும் தங்களுக்கு வேலை கிடைக்க குவாரி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

    மற்றொரு தரப்பினர் பேசும்போது, 'கனிமவள சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். ஆனால் உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் குவாரிகள் உள்ளன. பசுமை வளையங்கள், கம்பி வேலிகள் குவாரியை சுற்றி அமைக்கவில்லை. அதனால் அனுமதிக்கக்கூடாது' என்றனர்.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன் பேசும்போது, குவாரியில் இருந்து 300 மீட்டருக்குள் வீடுகள் உள்ளன. 50 மீட்டர் தூரத்துக்குள் வாய்க்கால் அமைந்துள்ளது. அதிகாரிகள் தெரிவித்த ஆவணங்களில் இவை தெளிவாக உள்ளது. ஆனால் விவரங்களை மறைத்து அனுமதி கோரியுள்ளனர். குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றார். இருதரப்பு கருத்துக்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

    கலெக்டர் வினீத் பேசும்போது, அனைத்து குவாரிகளிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை வளையங்கள் அமைக்க வேண்டும். கம்பி வேலி அமைப்பது அவசியம் என்றார்.

    • உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
    • பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார்.

    பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில்:-

    பிளாஸ்டிக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், காடுகள் அழிப்பினாலும் பூமியில் மண், நீர், காற்று பாதிக்கப்படுகிறது.

    இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

    எனவே, பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும் என்றார்.

    இதில் நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    1970 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந்தேதி அன்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி பகுதியில் நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணைச்சேர்மன் ஆதவன் அதியமான் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், சரவண பிரபு, கவுன்சிலர்கள் சின்னசாமி, திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
    • நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஊராட்சி யில் வேளாண்மைத்துறை யின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பள வில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்பொழுது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயி களுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தேவையான தென்னங் கன்றுகளை வாங்கி பயன் பெற வேண்டும்.

    தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவுசெய்து ''பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படை யில் தற்போது வேளாண்மை துறையின் மூலம் நாற்றங் கால் பண்ணைகளில் மரக் கன்றுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 10 லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன.

    நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி யாளர்கள் மூலம் பராமரித்தல், அதேபோல் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பசுமை ராமநாதபுரம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரசுவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாக ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×