என் மலர்
நீங்கள் தேடியது "வெடி விபத்து"
- வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இங்கிருந்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காடல் டிவிசன் பகுதியில் வேணுகோபால், ஜெபாஸ்டின், தேவா ஆகிய 3 ஊழியர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் வெளியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருவங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் வெடிமருந்து ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்ய வீட்டில் சட்டவிரோதமாக ஒரு டன் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை வைத்திருந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதை காவல்துறை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பட்டாசு விபத்தில் சில வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றின் சேத மதிப்பை கணக்கிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எம்போரியோ கிராண்ட் ஓட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
- சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சமையலறையில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த ஊழியர்களை மீட்டனர்.
இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி), ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, " நேற்று மாலை ஹோட்டலின் சமையலறை எரிவாயு லைனில் கசிவு ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸ் குழு, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவத்தின் போது, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக லோக் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.
- பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக இன்று காலை டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
- எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை அடுத்த அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.
இவரிடம் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்ட 5 பேர் கிணறு வெட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் ஆலங்குளம் அருகே ராம்நகர்-புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் புதுப்பட்டியை சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் (வயது 21) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே கிணற்றின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த சக தொழிலாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்து ஆலங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆசீர் சாம்சன் உள்பட 2 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
- 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் என்பவருக்கு சொந்தமான இடம் புதுப்பட்டி-ராம்நகர் சாலையில் உள்ளது.
அங்கு கிணறு அமைக்க காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி நடந்து வந்தது. நேற்று சக்திவேல் மற்றும் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 22), ராஜலிங்கம் (56), அவரது மகன் மாரிச்செல்வம் (26), ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த ஆசீர் சாலமோன் (27) ஆகிய 4 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.
பாறைகளை தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருட்களை சோதனை செய்தபோது, அவை திடீரென வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம், ஆசீர் சாலமோன் ஆகியோர் சிகிச்சைக்கு சென்ற வழியில் இறந்தனர். மாரிச்செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடியை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அஜாக்கிரதையாக கையாண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 286, 304(2), 9-பி, 1-பி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதேநேரத்தில் கிணறு தோண்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 84 டெட்டனேட்டர்களும், 86 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் வீரியத்தை அறிய நெல்லையில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்க செய்வதற்காக மதுரையில் இருந்து குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் இன்ஸ்பெக்டர் சிங்கம் மேற்பார்வையில் கிணற்றுக்குள் வைத்து வெடிக்காமல் உள்ள 3 டெட்டனேட்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர்.
- பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (வயது 50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வாணவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர், புதுவை மாநில கடற்கரையோரங்களில் மாசிமக திருவிழா இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த மாசிமகத்தில் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும். இரவு தெப்ப உற்சவமும் நடக்கும். அப்போது நாட்டு வெடி, வாணவெடிகள் வெடிப்பது வழக்கம்.
இந்த திருவிழாவுக்காக நாட்டு வெடிகளை ஆர்டரின் பேரில், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்தனர். அதன்படி நேற்றும் பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மாலை 4.15 மணி அளவில் திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்ததால் குடோன் தரைமட்டமானது. இருப்பினும் வெடிகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் இருந்தது. குடோனும் பற்றி எரிந்தது.
வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் குடோன் இருந்த பகுதிக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததோடு, அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். சிலர் பட்டாசு வெடித்ததில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கிடந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
அரியாங்குப்பம் மதன் மனைவி மேகலா (34), காசான் திட்டு ராஜ்குமார் மனைவி மலர்கொடி (35), சிவனார்புரம் சங்கர் மகன் சக்திதாசன் (25), பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, புதுவை அரியாங்குப்பம் ஓடெவளியை சேர்ந்த அய்யனார் மனைவி சுமதி (39), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி (35), பாக்கம் கூட்டு ரோடு ராஜேந்திரன் மனைவி அம்பிகா (18), காசான்திட்டு செல்வம் மகள் செவ்வந்தி (19), லட்சுமி (25) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மலர் கொடி, சக்திதாசன், மேகலா, கோசலை ஆகிய 4 பேரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கடலூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த பட்டாசு குடோன் அனுமதியின்றி செயல்பட்டதா? என்று அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது வருகிற 31-ந் தேதி வரை அனுமதி பெற்றிருப்பது தெரிய வந்தது.
பட்டாசு குடோன் வெடித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக குடோன் உரிமையாளர் கோசலை, அவரது கணவர் சேகர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- புதுவை அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் என்பவரின் மனைவி மல்லிகா சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
- பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
கடலூர்:
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோசலை (வயது 50). இவர் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சிவனார்புரத்தில் பட்டாசு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நாட்டு வெடி, வானவெடி உள்ளிட்ட வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மாசி மக திருவிழாவுக்காக பட்டாசு தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் குடோன் தரை மட்டமானது.
இதில் புதுவை அரியாங்குப்பம் மணவெளி பூபாலன் என்பவரின் மனைவி மல்லிகா (60) சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை (34), காசான் திட்டு மலர்கொடி (35), சிவனார்புரம் சக்திதாசன் (25), பட்டாசு குடோன் உரிமையாளர் கோசலை, ஓடெவளி சுமதி (39), சிவனார்புரம் இளங்கோவன் மனைவி பிருந்தாதேவி (35), பாக்கம் கூட்டு ரோடு அம்பிகா (18), காசான்திட்டு செவ்வந்தி (19), லட்சுமி (25) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த பிருந்தாதேவி, செவ்வந்தி, லட்சுமி, அம்பிகா, சுமதி ஆகிய 5 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், மலர்கொடி, சக்திதாசன், மணிமேகலை, கோசலை ஆகிய 4 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மணிமேகலை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
- ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- மணிகண்டன் பீடி குடிப்பதற்காக தீயை பற்றவைத்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் வடபருத்தியூர் கிராமத்தில் உடுமலைப்பேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவர் தனது தோட்டத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக தொழிலாளர்கள் வந்து அங்கே தங்கியிருந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த சின்னராஜ் மகன் மணிகண்டன் (வயது 33) என்பவரும் கிணறு தோண்டும் பணிக்காக வந்திருந்தார். இந்த பகுதி பாறைகள் அதிகஅளவு உள்ள இடம் என்பதால் அதனை வெடிக்க வைக்க வெடிபொருட்கள் வைத்திருந்தனர். அந்த வெடிபொருட்கள் அங்கே தற்காலிக பந்தலில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று அந்த வெடிபொருட்கள் இருந்த பந்தலில் மணிகண்டன் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மணிகண்டன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்காலிக பந்தலும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி தலைமையிலான வருவாய்த்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததும், அங்கே மணிகண்டன் பீடி குடிப்பதற்காக தீயை பற்றவைத்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைத்தது குறித்தும் இதனை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிகண்டன் உடல் துண்டுதுண்டாக சிதறியதால் பிரேத பரிசோதனைக்கு கூட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் அதே இடத்தில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
- விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை போலீசார் பார்வையிட்டனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள நாகதாசம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ராக்கெட், வானவெடி உள்பட பல பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசுகளை தயார் செய்து விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த பூபதி மனைவி பழனியம்மாள் (வயது50), காவேரி மனைவி முனியம்மாள் (65), சிவாலிங்கம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பட்டாசு குடோனில் இருந்து புகை வந்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதில் பணியாற்றி பெண்கள் முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிவாலிங்கம் என்ற பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் விபத்தில் இறந்த 2 பெண்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது.
- பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
சிவகாசி:
தமிழகத்தில் பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்றது சிவகாசி. இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இங்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது . இது பற்றிய விவரம் வருமாறு;
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரவு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 2 தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், பூத்தோட்டி எனப்படும் பட்டாசுகளை தயாரிக்கும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். விபத்தில் 2 ஆண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 2 தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆணையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மம்சாபுரம், இடையன்குளத்தைச் சேர்ந்த தங்கவேலு த/ப.வெள்ளைச்சாமி (65) மற்றும் கருப்பசாமி, த/பெ.பிச்சை (28) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமமைனயில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. கருப்பம்மாள், க/பெ.வடக்கத்தியான் என்பவருக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அவரது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.