என் மலர்
நீங்கள் தேடியது "பதவி உயர்வு"
- தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
- இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது.
சேலம்:
தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது. நாமக்கல் எஸ்.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராஜா நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாநகர சி.பி.சி.ஐ.டி. ஓ.சி.யு. பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம் சென்னை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.யாக பதவி உயர்வுபெற்றுள்ளார். ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், என்.ஐ.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோரும் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.
- வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.
- களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
திருப்பூர் :
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வயர்மேன் பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. சார்பில் இணைப்பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பதவி கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளதை காரணம் காட்டி வயர்மேன் பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளதை ஏற்க முடியாது. காலதாமதம் இன்றி வயர்மேன் பதவியிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு ஆகிய பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.
திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் வயர்மேன் பற்றாக்குறையால் மின் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மின் வாரியத்தில் பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் களப்பணி தொழிலாளர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் அவினாசி, திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட கோட்டங்களில் 75-க்கும் அதிகமான இடங்களில் பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள 15 ஆயிரத்திற்கும் அதிகமான மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்களை) மின்பாதை ஆய்வாளர் பராமரித்து வந்தனர். மின்பாதை ஆய்வாளருக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு உதவியாளர் (ஹெல்பர்) இருந்தனர். இதனால் மின்தடை ஏற்பட்டாலும், உடனடியாக சரி செய்து தடையில்லா மின்சாரம் கிடைத்தது.
இந்தநிலையில் பதவி உயர்வு பெற்–றும் விருப்ப மாறுதலிலும், பணி ஓய்வு பெற்றும் ஏராளமான மின்பாதை ஆய்வாளர்கள் சென்றுவிட்டதால் சில ஆண்டுகளாக இப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மின்பாதை ஆய்வாளர் பணியாற்றக்கூடிய வட்டத்தில் தற்போது போதுமான மின்பாதை ஆய்வாளர் இ்ல்லை. உதவியாளருக்கு அடுத்த நிலையில உள்ளவர்கள் பணியாளர்கள் தற்போது அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிலும் போதுமானவர்கள் இல்லாததால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருப்–பூர் மாவட்டத்தில் புதிய மின்சார இணைப்புகள், மின்மாற்றிகள், மின் கம்பங்கள் பராமரிப்பின்றி உள்ளன. புதிய மின்கம்பங்களுக்காக, மின்சார வாரியத்தில் பணம் செலுத்தி பல ஆண்டுகளாகியும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடை உடனுக்குடன் சரி செய்யப்படுவதில்லை. மின்விபத்துகள் ஏற்படும் போது குறித்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஒரு லட்சத்து 62 ஆயிரம் மின் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. வயர்மேனாக நியமிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டை கடந்ததும் வயர்மேனாகவே இருந்து வருகின்றனர்.
எனவே உடனடியாக திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள மின்பாதை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திலுள்ள வயர்மேன்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்கவும், காலதாமதம் இன்றி திருப்பூர் மின்பகிர்மான வட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளரை நியமிக்கவும் உரிய தீர்வு காண ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் தஞ்சை ரவிச்சந்திரன், திருவாரூர் வன்னியநாதன், நாகை அருண்சடேசன், கடலூர் அமானுல்லா ஆகியோர் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
சங்க மாவட்ட அமைப்பு செயலாளராக விஜயபாலன் செயற்குழு உறுப்பினர்களாக சந்துரு, ரம்யா, ரவி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்.எம்.ஆர். முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகார வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்வது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சங்கரன்கோவில் தாசில்தாராக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், 2 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தாசில்தார்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி என்பவர் தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராணி பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் தாசில்தா ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக இருந்த கங்கா தற்போது தேர்தல் தாசில்தாராகவும், அதேபோல் மேலும் 3 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி மேலாளர் மல்லிகா முதல்நிலை மேலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் ராஜபாளையம் நகராட்சியில் 2-ம் நிலை கணக்கராக இருந்த காளியம்மாள் முதல் நிலை கணக்கராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் நகராட்சி 1 ஏ மேலாளராக இருந்த மகேஸ்வரன் முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.
- பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
- இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.
மதுரை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இந்த நிலையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பொது மாறுதல்-பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.
தமிழக அரசு இனிவரும் காலங்களில் பணிமூப்புடைய தொடக்க-நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு உரிமையை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
எங்களது பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும் வகையில் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் கூறினர்.
- கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும்.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் செந்தில், இளமாறன், குமரதேவன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தனர். அவர்கள் கூறிய தாவது:-
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி அரசு மருத்துவர்க ளுக்கான பதவி உயர்வு தொடர்பான அர சாணை 293-ஐ அமல் படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் இன்று வரை இந்த கோரிக் கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்ப்பு தெரி விப்பவர்கள் நீதிமன்றம் வரை சென்று இந்த அரசா ணைக்கு தடை விதிக்க உத்தரவு பெற இருப்பதா கவும் கூறினர்.
இந்த அரசாணையை பலமுறை நிறைவேற்ற எங்களது சங்க நிர்வாகி களிடம் அமைச்சர் பேசியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே முதல்- அமைச்சர் இதில் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய இந்த ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக ளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்க ளையும், 550 இணை பேரா சிரியர்கள் பணியிடங்க ளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென் றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மேலும் வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலையில் கால தாமதப்படுத்தாமல் உடனடி யாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை யென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
- தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் ராஷ்மோனுக்கு இன்னொரு உத்தரவு வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த ஆலுவா தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ராஷ்மோன்.
இவர் கடந்த ஆண்டு தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரது பதவி உயர்வு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அரசிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அதில் அவரை அங்கமாலி அலுவலக நிலமெடுப்பு தாசில்தாராக நியமித்து இருப்பதாகவும், உடனே அந்த பதவியை ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு கிடைத்ததும் ராஷ்மோனுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் வருத்தமும் ஏற்பட்டது. இதற்கு காரணம், அவரது பணிக்காலம் நேற்றுடன் முடிய இருந்தது. என்றாலும் தனக்கு கிடைத்த பதவி உயர்வை உடனே ஏற்றுக்கொள்ள முடிவு செய்த ராஷ்மோன், நேற்று முன்தினம் இரவே அங்கமாலி சென்றார்.
நேற்று காலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர், தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் அவருக்கு இன்னொரு உத்தரவு வந்தது. அதில் அன்று மாலையே அவர் பணி ஓய்வு பெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதனை அறிந்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் புதிய தாசில்தாருக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் அன்று மாலை வழியனுப்பு விழா நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
காலையில் தாசில்தார் பொறுப்பேற்று, மாலையில் ஓய்வு பெற்ற ராஷ்மோன் கூறும்போது, ஒரே நேரத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்த நபர் நான்தான், என்றார்.
- வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த பானுமதி காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த மயில்சாமி மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
- ஈரோடு மாவட்டத்தில் 27 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கபட்டது
- சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர்
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு உதவியாளர்களாக பணியாற்றி வந்த 27 பேர் கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் கடந்த 17-ந் தேதி வரை கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த 27 பேருக்கும் சப்- இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்து மாவட்ட த்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி பிரபாகரன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், வடிவேல் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், ஆனந்தகுமார், எட்வின் டேவிட், ரவிக்குமார் ஆகியோர் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், செல்வம் புளியம்ப ட்டிக்கும், வில்சன் சத்யராஜ், சரவணகுமார், ஜெக தீஸ்வரன் கோபிசெட்டி பாளை யத்துக்கும், செல்வ ராஜ் சத்தியம ங்கலத்துக்கும், பழனிசாமி, சிவக்குமார் ஈரோடு தாலுகா விற்கும், தாமோதரன் சென்னி மலைக்கும், கந்தசாமி தாளவாடிக்கும், வெங்க டேஷ் ஆப்பக்கூடலுக்கும், மூர்த்தி பவானிக்கும், எஸ்.சிவக்குமார் நம்பியூருக்கும், மேகநாதன் அறச்சலூருக்கும், முருகன் ஈரோடு வடக்கிற்கும், மாதேஸ்வரன் சென்னி மலைக்கும், வாசு கடத்தூரு க்கும், தாயளன் சிவகிரிக்கும், எம்.பழனிசாமி ஈரோடு தெற்கிற்கும், முருகேசன் மற்றும் வெங்கட்ராமன் திங்களூருக்கும், சுதாகரன் ஈரோடு டவுனிற்கும், ரவிச்சந்திரன் கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன
- அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 26 பேரூராட்சிகள் உள்ளன.
இந்த பேரூராட்சிகளின் வேலூர் மண்டல உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜிஜாபாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இதனை அடுத்து வேலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அம்சா, கூடுதல் பொறுப்பாக உதவி இயக்குனர் பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஆலங்காயம் பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வந்த செ.கணேசன் பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டல உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி.
- வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, தலைமையாசிரியர் பதவிகளுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளமைக்கு நன்றி. கலந்தாய்வு முடிந்த பின் உருவாகும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் உடனடி துணை பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்தும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காது. பதவி உயர்வுக்கு பின் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் கடந்த முதல் தேதி அடிப்படையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்துவதன் வாயிலாக வெகு காலமாக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.