search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தண்ணீர் நிரப்புதல், சைக்கிள் ரேஸ், கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


    • மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினார்.
    • பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்றத்தால் மார்கழி 30 நாட்கள் நடந்த திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் வைரம் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.

    நாள்தோறும் தனுர்மாத வழிபாட்டில் பங்கேற்ற 100- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஓதுவாமூர்த்திகள் திருவாரூர் சந்திரசேகர், கொடுமுடி வசந்தகுமார் தேசிகர் ஆகியோர் பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினர்.

    விழா மற்றும் வழிபாட்டில் வேதாரண்யம் மன்ற பொருப்பாளர்கள் சச்சிதானந்த தேசிகர், ஓதுவார் பரஞ்சோதி, ஓய்வு பெற்ற தொலைபேசித் துறை ராஜேந்திரன், போலீஸ் எஸ்ஐ வேதமூர்த்தி, சேகர், சத்யசாய் சேவா சமிதி சந்திரமௌலி உட்பட பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

    • 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • திருமாவளவன் விழா மேடையில் கேக் வெட்டி தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மையமும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் இணைந்து 15வது முறையாக பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.

    இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, கோலம் போடுதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சிலம்பம், கைப்பந்து, ஸ்லோ சைக்கிள், மியூசிக் சேர், கபடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசுகள் வழங்கினார்.

    பின்னர் அதே மேடையில் கேக் வெட்டி, தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.

    ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், சாலமன், சிவா, பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விழாவில் பலூன் உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றமும், பெரியசாமி நகர் பொதுமக்களும் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு தைத்திருநாள்விழா நடைபெற்றது. வக்கீல் மாரீஸ்வரன், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்கொடி, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா, பா.ஜனதா வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் பழனிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பெண்க ளுக்கான கோலப்போட்டி, பெரியவர் சிறியவர் மியூசிக்கல் சேர், பெரியவர் சிறியவர் பலூன் உடைத்தல், சிறுவர்க ளுக்கான ஓட்டப்பந்தயம், சிறுவ ருக்கான ஸ்லோ சைக்கிள் ரேஸ், சிறுவருக்கான சாக்கு போட்டி, தண்ணீர் நிரப்புதல். சிறுவர், சிறுமிகளுக்கான நடனப்போட்டி, பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர், சிறுமிகளுக்கான பரிசுப் பொருட்களை கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், ரஜினி ரசிகர் மன்றமாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, நாதன், விஜய் ஆனந்த், வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், ஐக்கிய அரபு அமீரக பொருளாளர் பொன்முருகன்லட்சுமண ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

    தொழிலதிபர் அண்ணாதுரை, ஆசிரியர் வரப்பிரசாதம் கண்ணன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், ஜோதி காமாட்சி, சையத் அலி, காளி ராஜன், சந்தன மாரியப்பன், முருகன், சதீஷ், ராஜீவ் காந்தி, மலர் மாடசாமி, கணேசன், சேக் முகமது உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் பெரியசாமி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான கலைத்திருவிழாவில் காஞ்சிரங்கால் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 2-ம் பரிசு வழங்கப்பட்டது.
    • இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று 2-ம் பரிசை வென்று திரும்பினர்.

    அவர்களுக்கு கிராம பொதுமக்கள் சார்பிலும், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திரு விழா நடத்தப்பட்டு, இதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    சிவகங்கையை அடுத் துள்ள காஞ்சிரங்கால் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்று கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய நடனமான கரகம், காவடி, சிலம்பம், பறையிசை, கொம்புவாத்தியம் உள்ளிட்டவைகளை இசைத்து மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தனர். அதற்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேரு விளை யாட்டு அரங்கில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஆசிரியர்கள், கிராம பொது மக்கள், வரவேற்றனர்.

    சென்னையில் நடந்த கலைத்திருவிழாவில் 2-ம் பரிசு பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளை காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

    • கிராமிய கலைப்போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி மணி நகரில் உள்ள சிதம்பர ஆறுமுகசாமி திருமண மண்டபத்தில் பாரதி இலக்கிய சங்கம், பசுமை தாயகம், மக்கள் தொலைக்காட்சி, மதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து கிராமிய திருவிழாவை 4 நாட்கள் நடத்தியது. இதையொட்டி நடந்த போட்டிகளில் 20 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 15 பேர் பங்கேற்றனர்.அதில் 8 பேர் பரிசு பெற்றனர். இதில் குறும்படம் முதல் பரிதை வென்றது. இந்த குறும்படம் ''மனிதமும் மண்ணும்'' என்ற தலைப்பில் கோவில் அர்ச்சகருக்கு ரூ.500 கொடுத்து வழிபாடு செய்யும் நாம் குப்பை பொறுக்கும் ஏழைகளுக்கு ரூ.5 கொடுக்க தயங்குவது ஏன்? என்ற கருத்து இடம் பெற்றிருந்தது.

    பரிசு பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, குழுமத்தின் இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், கல்லூரி இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் மற்றும் பேராசி ரியர்கள் பாராட்டினர்.

    • மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4607 குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு சங்க இயக்குனருமான உதயம் முருகையன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பொருட்களான அரிசி, சீனி, கரும்பு ரொக்கம் ஆயிரம் ரொக்கத்தினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வங்கி செயலாளர் அசோகன் மற்றும் கூட்டுறவுசங்க துணை தலைவர் செந்தில் இயக்குனர் மதியழகன், சிங்காரவேலு மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராமநாதன், வீரமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

    இதே போல் வாய்மேடு, அங்காடியில் மாவட்ட தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

    இதே போல் தகட்டூர், தாணிக்கோட்டகம் கருப்பம்புலம் ஆகிய ஊராட்சிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தகட்டூர்கூட்டுறவு சங்க தலைவர் நெடுஞ்செ ழியன்கூட்டுறவு சங்க செயலாளர்கள் மதியழகன் தாணிகோட்டகம் தெட்ச ணமூர்த்தி கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.
    • கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் காமராஜர் தெருவில் விழிப்புணர்வு கோல போட்டி நடைபெற்றது.

    இதில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.

    இதையடுத்து கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 39-வது வார்டு கவுன்சிலர் எம்.உஷா பரிசுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜான்சன், எழில், பிரபு தி.மு.க வட்ட செயலாளர், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரும்பாண்டி புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் “மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா” நடந்தது.
    • திருப்பலி நிறைவேற்றி திருவிருந்து கொடுத்து வாழ்த்தினார்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரும்பாண்டி புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் "மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா" நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி வானத்தில் தோன்றிய விண்மீன்களை கணக்கிட்டு உலகின் இரட்சகர் மீட்பர் உலகின் அரசர் பிறந்திருக்கிறார் என்கிற செய்தியை அறிந்து மூன்று ராஜாக்கள் பரிசு பொருட்களுடன் வந்து குழந்தை இயேசுவை தொழுது கொண்டு உலகிற்கு வெளிப்படுத்திய அந்த மூன்று ராஜாக்களுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கிறிஸ்தவர்கள் மூன்று ராஜாக்கள் திருநாளை கொண்டாடுகின்றனர்.

    அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழர் திருநாள் பொங்கல் நன்னாளாக இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் இந்த மூன்று ராஜாக்கள் பெயரில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை பெரும்பாண்டி கிராம மக்கள் "சமூக நல்லிணக்க சமத்துவ பொங்கல்" என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க திருச்சபையின் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை டாக்டர் அமிர்தசாமி , ஜோதிமலை இறைபணி குடில் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் , அல் மைதீனா பள்ளிவாசல் இமாம் மௌலானா அபுதாகிர் பைசி பாகவி என மூன்று மதத்தைச் சேர்ந்த இறை அறிஞர்கள் தொடங்கி வைத்து ஆசி வழங்கினர்.

    மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்து, பெரும்பாண்டி ஊராட்சி தலைவர் பாஸ்கர், கும்பகோணம் மாமன்ற 5- வது வார்டு உறுப்பினர் சக்கரபாணி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தளபதி சுரேசு,கருத்தியல் பரப்புச் செயலாளர் செந்தோழன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

    இவ்விழாவை கிராம நாட்டாமை குடந்தை அரசன், காரியம் மஸ்டீபன் ராஜ், கணக்கர் தெரு துரியோததாஸ், செய்தி தொடர்பாளர் செல்வராசு ,கிராம முகேஷ் , பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிறைவாக பங்கு தந்தை பெர்னான்டஸ் திருப்பலி நிறைவேற்றி திருவிருந்து கொடுத்து வாழ்த்தினார்.

    • சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபு கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.
    • புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி தினேஷ் இவர் தனது ஓய்வு நேரத்தில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தமிழர் மரபுக் கலையான சிலம்பகலையை பயிற்றுவித்து வருகிறார்.

    கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட கொரோனா தொற்று விடுமுறையில் ஏழை, எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த கிராமங்களுக்கே சென்று சிலம்ப கலையை உண்மையான முறையில் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.

    இந்நிலையில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் மற்றும் பொதுநல அறக்கட்டளை இணைந்து புளிச்சக்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

    சீர்காழியை சுற்றியுள்ள கீழச்சாலை, கேவரோடை, புத்தூர், கொள்ளிடம், பாதரக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை 300 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

    இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் இணைந்து பொங்கல் வைக்கும் வைபவத்துடன் துவங்கிய விழாவில் சிலம்பாட்டம், ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, புளியாட்டம், வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநில அளவில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட மாணவ, மாணவிகளுக்கு சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக், தீயணைப்பத்துறை அலுவலர் ரமேஷ், அரசு கல்லூரி பேராசிரியர் முனைவர்.சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

    இவ்விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்சியுடன் கொண்டாடினர்.

    • கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில் புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் காந்தி கிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கி பேசியதாவது:- தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில் புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். மற்ற துறைகளை விட பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    எதிர்கால தமிழகத்தை வழிநடத்த கூடியவர்களாக, மாணவ, மாணவியர் இருப்பார்கள் என பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மூன்றாவது மண்டல குழு தலைவர் கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மேலும் கரூர் காமராஜ் தினசரி மார்கெட்டின், புதிய கட்டிட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் காமராஜ் தினசரி மார்கெட் வணிக வளாகத்தில் 174 கடைகள் வர உள்ளன. அதில், தரைத்தள பணிகள் ஆறு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, வரும் ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். பின்னர் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல் தள பணிகள் தொடங்கும். மீன் மார்கெட்டுக்கு என தனியாக ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் விரைவில் கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுகாதாரத்தை கடைபிடிக்கும் அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு மாதந்தோறும் பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
    • ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்க ளிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சானிடேசன் பர்ஸ்ட் இணைந்து அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார வங்கிகள் (Soap Bank) வழங்குதல் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கி னார். தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்க ளுக்கு சுகாதார வங்கிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் வடிகட்டிகளை வழங்கினர்.

    பின்னர் அமைச்சர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி, சுகா தாரம் ஆகிய 2-ம் 2 கண்களாக பாவித்து, கல்வியையும், சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

    கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழிமுறையாகும். சுகாதார வங்கிகளில், உங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார பெட்டகத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.

    எல்லா கை கழுவும் இடங்களிலும் எப்போதும் சோப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் பொருட்கள் உபயோகித்துக் குறையும் பொழுது அவற்றை மீண்டும் நிரப்பும் முயற்சியில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும்.

    குழந்தைகளின் பிறந்த நாட்கள் போன்றவற்றில் அவர்களை வங்கியில் ஒரு சோப்பு கட்டி சேர்க்க வைக்கலாம். குழந்தைகள் தினம், கை கழுவும் தினம், போன்ற சிறப்பு நாட்களில் அங்கன் வாடிகள், பள்ளிகளே சோப்பு வங்கிகளை மீண்டும் நிரப்பலாம்.

    ஊர் தலைவர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போன்றோர் சோப்புகள் வழங்கி இந்த திட்டத்தை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் கை கழுவுதலின் முக்கியத் துவத்தை குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் கற்றுக் கொள்வார்கள். சுகாதார வங்கியிலுள்ள பொருட்களுக்கான கணக்கீடு அங்கன்வாடி பணியாளர் அல்லது பள்ளியாக இருப்பின் இரு மூத்த மாணவர்களால் பதிவு செய்யப்படும்.

    கை கழுவ வழங்கப்படும் சோப்புகளும், பெறப்பட்ட சோப்புகளும் கணக்கு வைக்கப்படும். மேலும், கை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், படங்கள் ஆகியவற்றை சேர்க்கலாம்.

    சுகாதார வங்கி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளுக்கு சானிடேசன் பர்ஸ்ட் மூலமாக மாதந் தோறும் பரிசுகளும், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    ×