என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நன்கொடை"
- 2-வது இடத்தை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி பெற்றிருக்கிறார்.
- முகேஷ் அம்பானி ரூ.411 கோடி வழங்கி 3-வது இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி :
'இடெல்கிவ் ஹுருன் இந்தியா' அமைப்பு உலக பணக்காரர்கள் பட்டியல், இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டின் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் சிறந்த நன்கொடையாளராக எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் தேர்வு பெற்றிருக்கிறார். இவர் ஓராண்டில் ரூ.1161 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டு உள்ளது.
2-வது இடத்தை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி பெற்றிருக்கிறார். இவர் ரூ.484 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். முகேஷ் அம்பானி ரூ.411 கோடி வழங்கி 3-வது இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா குடும்பத்தினர் ரூ.242 கோடி வழங்கி 4-வது இடத்திலும் உள்ளனர். ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த சுஷ்மிகா சுப்ரோடோ பாக்சி மற்றும் மின்ட் டிரீ நிறுவனத்தின் ராதா என்.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் தலா ரூ.213 கோடி வழங்கி 5-வது இடத்தில் உள்ளனர்.
அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.190 கோடி வழங்கி 7-வது இடத்தில் உள்ளார். இவர் அதிகமாக பேரிடர் நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளார். வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் ரூ.165 கோடி வழங்கி 8-வது இடத்திலும், இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலேகனி ரூ.159 கோடி வழங்கி 9-வது இடத்திலும், 'எல் அன்ட் டி' குழும தலைவர் ஏ.எம்.நாயக் ரூ.142 கோடி வழங்கி 10-வது இடத்திலும் உள்ளனர்.
- பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிக்காக சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளை சார்பில் ரூ.27 லட்சத்தை நன்கொடையாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கப்பட்டது.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி வைத்த கோரிக்கையை ஏற்று சிங்கப்பூரை சேர்ந்த அன்னை வராகி அறக்கட்டளை சார்பில் உறுப்பினர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.27 லட்சத்துக்கான காசோலையை அறக்கட்டளை நிர்வாகி குருஜி வராகி மைந்தன், இந்திரயோகன் ஆகியோர் வழங்கி உள்ளனர்.
இந்த நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை என கூறியுள்ளார்.
- நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 42) . இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று குருமூர்த்தி கடையில் இல்லாதபோது, சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடையில் இருந்த ஊழியர் முதலாளி இல்லை .பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது. இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது இதற்கு ஊழியர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள், கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பயணிகள்-பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
- 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.
மதுரை
மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிலர் பணமோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரும் பயணிகளிடம் "காப்பகம் நடத்துகிறோம். நன்கொடை வழங்குங்கள்" என்று 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.
மேலும் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்று தெரிவித்தும் பஸ்களில் ஏறி மக்கள் மத்தியில் பேசி வசூல் செய்கின்றனர். இதில் பலர் மோசடி நபர்கள் என்றும், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல் ரெயில் நிலையம் மற்றும் மீனாட்சி கோவில் வரும் மக்களிடம் "நாங்கள் காப்பகத்தில் இருந்து வருகிறோம்" என்று தெரிவித்து சில பெண்கள் நன்கொடை வசூலித்து செல்கின்றனர்.
இவர்கள் அடிக்கடி மதுரையில் முகாமிட்டு வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் பின்னணியில் மோசடி நபர்கள் இருப்பதுபோல் தெரிகிறது. இவர்கள் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. இருந்த போதிலும் பலர் அவர்களிடம் பணம் கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் உண்மையை தெரிவித்து வசூல் செய்தார் களா ? அல்லது போலி நபர்களா? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருவார்களா?
- கல்வி புரவலர்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்புரை ஆற்றினார்.
- பள்ளியில் புரவலர் நன்கொடை செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுக்கூர்:
மதுக்கூர் ஒன்றியம் காடந்தகுடி ஊராட்சியில் உள்ள கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள், கல்வி புலவர்களுக்கான கல்வெட்டு திறப்பு மற்றும் இலக்கிய மன்ற விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் காடந்தகுடி ஊராட்சி மன்ற தலைவருமான இந்திரா நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்றார். சொக்கனாவூர் பெற்றோர் ஆசிரியர் தலைவரும், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளருமான இளங்கோ, வட்டார மேற்பார்வையாளர் தங்கம், வீரப்பராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அண்ணா துரை எம்.எல்.ஏ. கல்வி புரவலர்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து பள்ளியில் புரவலர் நன்கொடை செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் ஹெலன் அற்புதமேரி நன்றி கூறினார். இதில் சிரமேல்குடி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து வீரையன், விக்ரமம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பழனியப்பன், காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் பெற்றோர்கள் மாணவ- மாணவிகள், ஆசிரிய- ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்