search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கள் வலைதளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பணம் பெற்றது அய்லோ
    • பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை

    வயது முதிர்ந்தவர்கள் காணும் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இணையதளங்கள் நடத்தும் நிறுவனங்கள் பல அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் "அய்லோ ஹோல்டிங்க்ஸ்" (Aylo Holdings) எனும் நிறுவனமும் ஒன்று.

    அய்லோ, தங்களின் "போர்ன் ஹப்" (Pornhub) எனும் இணையதளத்தில் இத்தகைய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைத்து அவர்களிடம் பணம் பெற்று, அந்த வீடியோக்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு விளம்பர வருவாய் ஈட்டி வருகிறது.

    அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான "கேர்ள்ஸ் டூ போர்ன்" எனும் வீடியோ பதிவேற்றம் செய்யும் நிறுவனத்துடன் அய்லோ ஹோல்டிங்க்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை பயனர்கள் காணும் விதமாக தங்களின் போர்ன் ஹப் வலைதளத்தில் பரப்பி வந்தது.

    ஆனால், "கேர்ள்ஸ் டூ போர்ன்" நிறுவனம், பெண்களை சட்டவிரோதமாக கடத்தி, மிரட்டி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தகாத வீடியோக்களை எடுத்து போர்ன் ஹப் உட்பட பல இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்நிறுவனத்தின் சட்டவிரோத செயல் குறித்து சில பெண்கள் புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையில் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் என தெரிந்தும், 2017லிருந்து 2020 வரை கேர்ள்ஸ் டூ போர்ன் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 83 லட்சம் ($1,00,000) வரை பணம் பெற்று போர்ன் ஹப் வீடியோக்களை பரப்பியதும், அதன் மூலம் விளம்பர வருவாயாக சுமார் ரூ. 6 கோடிகள் ($7,64,000) வரை ஈட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பல பெண்கள் போர்ன் ஹப் நிறுவனத்திற்கு புகார் அனுப்பியிருந்தும் அவற்றை அந்நிறுவனம் உதாசீனப்படுத்தியது.

    இவ்வழக்கு விசாரணையில் ப்ரூக்ளின் நீதிமன்றம், அமெரிக்க அரசாங்கத்திற்கு போர்ன் ஹப், சுமார் ரூ. 15 கோடி ($1.8 மில்லியன்) வரை அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு சம்மதித்துள்ள போர்ன் ஹப், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தனித்தனியே இழப்பீடு வழங்கவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்கவும், புகார்களை உடனுக்குடன் கவனித்து தீர்வளிக்க கண்காணிப்பாளர் ஒருவரை தங்கள் வலைதளம் சார்பாக நியமிக்கவும் ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.

    ஆனால், பெண்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு காரணமான ஒரு நிறுவனத்திற்கு இது போதுமான தண்டனையே அல்ல என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.
    • இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடைய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையானது, இதுவரை செயல்பாட்டில் இருந்த கருணைத்திட்ட ம் 1989 - ஐ மாற்றி, அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2022' என்ற புதிய திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தால் இழப்பீடு பெறும் வழிமுறை வருமாறு:-

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர் அல்லது இறந்தவரின் உறவினர் முதலில் இழப்பீடு விசாரணை அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். (புதுச்சேரி- மாவட்ட துணை கலெக்டர், காரைக்கால்- காரைக்கால் டவுன் தாசில்தார்.)

    இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடை ய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து தீர்வை அதிகாரி 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடுக்கான ஆணையை ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண் டும். அதனை பெற்ற ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கவுன்சில் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நாளை கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவது.

    மன்னார்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை. அருள்ரா ஜன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மகேந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கு ரூ.5 ஆயிரம் பண்டிகை கால உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் நாளை (சனிக்கி ழமை) மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • மழைநீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.
    • பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இரணியல் :

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறியில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. சுமார் 2 அடி உயரம் வரை தேங்கி நின்ற வெள்ளத்தில் வாகனங்கள் மிதந்தபடி சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலை அடிப்பகுதி வழியாக கட்டப்பாட்டு உள்ள அடிமடை வழியாக வெள்ளம் மறுபக்கம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் இழுத்து சென்றதில் இந்த அடிமடையில் சிக்கிதான் தாயுடன் வந்த 7 வயது மாணவன் ஆஷிக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது:-

    மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழைநீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மழைநீர் ஓடையில் மூடப்பட்டுள்ள இரும்பு கிரில்களிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் சிக்கி வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்பதும், கடைகளுக்குள் தண்ணீர் புகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவனின் சிகிச்சை செலவு மற்றும் இழப்பீடுகளை பேரூர் நிர்வாகம் வழங்க வேண்டும். அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் கண்டன போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றனர்.

    • கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை.
    • 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பொறுப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பாபநாசம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை, 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு தொகையாக 5 தவீதம் கூடுதலாக சேர்த்துழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர் அன்புமணி, செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், மனோகரன் , வினோத், ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார்.

    கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில போராட்ட குழு செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவருமான சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட துரித நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புகளை கைகளில் ஏந்தியப்படி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, அனந்தமுருகன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் பழ.இராசேந்திரன், சாமி.கரிகாலன், இராசு.முனியாண்டி, வைகறை, இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டீபன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முத்துராஜன், தெற்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துகிரு ஷ்ணன் நன்றி கூறினார்

    • விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை.
    • சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.

    அவினாசி:

    அவினாசிஒன்றியம் இராமியம்பாளையம், குமாரபாளையம் , புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உடுமலைபேட்டை கிளையில் சூப்பர் நேந்திரன் என்ற ரக வாழைக்கன்றுகளை வாங்கி நடவு செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை. இதனால் வாழை விவசாயிகளுக்கு ரூ.3 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவினாசி தாசில்தார் மோகன், தோட்டக்கலை துறை அலுவலர் அனுசியா ,உதவி அலுவலர்கள் சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகன் தலைமையில் இரு தரப்பினருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமாசங்கரி, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அவினாசிசுற்றுவட்டார விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 13 மாதங்களில் அறுவடை செய்யும் ரகமாக சூப்பர் நேந்திரன் வாழைக்கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டியும் வாழைத்தாரில் சரிவர காய்பிடிக்காமல் முற்றிலும் பிஞ்சாகவே உள்ளது. இதனால் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
    • வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்து தவிக்கின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. நெற்பயிர் அறுவடை நடந்து கொண்டிருந்தபோது இந்த மழை பெய்துள்ளதால் முழுமை யான அறுவடை செய்ய முடியாமல் பயிர்களை விவசாயிகள் இழந்துள்ளனர்.

    அதனை போன்று வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் இந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
    • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளான ஆச்சனூர், மருவூர், வடுககுடி ஆகிய இடங்க ளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சூறாவ ளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரம் வேரோடு சாய்ந்தும் முறிந்ததில் 5000 வாழைகள் சேதமடைந்துள்ளன.

    இயற்கை இடர்பாடின் காரணமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் மூன்றாவது முறையாக அடித்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளை அனுப்பி சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதுபோல் வாழை மரத்திற்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
    • நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இந்நிலையில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றியும், புதிதாக போர்வெல்கள் அமைத்தாலும் நீர் இன்றி, நிலைப்பயிரான தென்னையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது. ஒரு சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகும்.

    நீண்ட கால பயிரான தென்னையை காக்க தண்ணீர் லாரிகள் வாயிலாக ஒரு லாரி ரூ.4,500 விலை கொடுத்து வாங்கி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, மரங்களின் உயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடும், மறு நடவிற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் தலா 25 சதவீதம், மாநில அரசும், விவசாயிகளும் செலுத்தும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.

    எனவே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இணையும் வகையில், அரசு துறைகளை ஒருங்கிணைத்து துரித நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டுத்தொகையாக ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை
    • இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    இனிப்பு மற்றும் காரவகை உணவு பண்டங்களின் பொட்டலங்களில் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்ததாக நாமக்கல், திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ள கடைகளின் மீது ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகள் உட்பட 53 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நேற்று நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ரூ.1 லட்சம் இழப்பீடு

    நாமக்கல்லில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் 6 பேக்கரி உரிமையாளர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கடை உரிமையாளர்கள், கோவையில் உள்ள 2 கடை உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.1 லட்சம் இழப்பீடு செலுத்தினர். இதன் மூலம் ஒரே நாளில் உணவு சம்மந்தப்பட்ட 10 வழக்குகளில் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது.

    மற்றொரு வழக்கு

    நாமக்கல்லில் உள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான ரசீதில் விற்பனை செய்த பொருட்கள் திரும்ப வாங்கப்படமாட்டாது என அச்சிடப்பட்டது தவறு என நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கடை உரிமையாளர் நுகர்வேருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார்.

    மற்றொரு வழக்கில் நாமக்கல்லில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் வாடிக்கையாளரிடம் கேரி பேக் கொடுத்ததற்கு ரூ.10 வசூலித்தது தவறு என தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் நுகர்வோருக்கு இழப்பீடாக ரூ.2,000 செலுத்தியது. முதல் சுற்று பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லாத சில வழக்குகள் 2-வது சுற்று பேச்சு வார்த்தைக்காக வரும் அக்டோபர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • கருகிய பயிர்கள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள அருந்தவம்புலம் கடைத்தெ ருவில் கருகி வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற உரிய தண்ணீர் திறந்து விடக்கோரியும் கருகி போன நெற்பயிருக்கு நிவாரண தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியல் போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சம்பந்தம் ,மகேந்திரன், மங்கையர்கரசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் .

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேதார ண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர போஸ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாசி ல்தார் சுரேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது.

    இதனால் திருத்து றைப்பூண்டி_ நாகப்ப ட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×