search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217364"

    • 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது.
    • அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநா–ளையொட்டி 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதனை–யொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து வ .உ. சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மாலையில் கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 2ஆயிரம் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிளிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார்.

    கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பு துண்டிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு சுட்டிகாட்டிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

    வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். கோைட காலமான ஏப்ரல், மே, மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட்டு இது செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது.

    6,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரபட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 99.7 சதவீதம் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 0.3 சதவீதம் தான் இணைக்க வேண்டியது உள்ளது. இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழ–னிசாமி விமர்சித்துள்ளார்.

    அ.தி.மு.க.வுக்கு அவர்கள் நினைத்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 மக்களவை தேர்தலுக்கான தொடக்கம்.

    40 பாராளுமன்ற தொகுதியிலும், முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

    சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இரட்ைட இலை சின்னத்தில் தான் அ.தி.மு.க போட்டியிட்டது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்ய கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற சூழல் அ.தி.மு.கவிடம் இல்லை.

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை பற்றிய கவலை இல்லை. அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நீதிமன்றத்தில், குடும்ப நலநீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல், கூடுதல் சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகள் கலந்துகொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்தனர். சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    இதில் ராசிபுரம், கோனே ரிப்பட்டியைச் சேர்ந்த, கவிதா என்பவர், அவரது 3 சக்கர வாகனத்தில் கடந்த 18.2.2012 ல் அன்று நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் செல்லும் போது, கருங்கல்பாளையம் அருகே ரோட்டில் சென்றபோது, போது அவ்வழியாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கு, மக்கள் நீதிமன்றத்தல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருக்கு, ரூ17.66 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்.

    • செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடுகளோ கிடையாது.
    • ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சேர்ந்த பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் காமராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர்கள் தமிழ் செல்வி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடும் கிடையாது.

    ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது. அதில் நீண்டகாலமாக குடியேறாமல் காலிமனை உள்ளது.

    குடியேறாமல் இருக்கும் காலி குடிமனை பட்டாவை ரத்து செய்து புதிதாக குடியேறி இருக்கும் எங்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய்.
    • நகர்மன்ற தலைவர் தார்பாய் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பெரியநாயகிபுரம், விசுவகொத்தமங்கலம், வீரன் நகர் பகுதியை சேர்ந்த 376 கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் மக்களுக்கு தார்பாய் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர் கோமதி செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    • நாமக்கல்லில் கடைவீதிகளில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடை களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    நாமக்கல்:

    பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    குறிப்பாக நாமக்கல்லில் கடைவீதிகளில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடை களில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலானோர் தங்க ளது குடும்பத்தினருடன் வந்து புத்தம் புதிய டிசைன்க ளில் தங்களுக்கு தேவையான பிடித்தமான துணிகளை தேர்வு செய்தனர். இதே போல நகைக்கடைகளிலும் குடும்பத்துடன் வந்த பெண்கள் புதிய டிசைன்களில் நகைகளை தேர்வு செய்து அணிவித்து மகிழ்ந்தனர்.

    பொங்கல் பண்டிகையை யொட்டி பூஜைக்கு படைக்க தேவையான காய்கறிகளை வாங்க, இன்றே நாமக்கல்லில் காய்கறி சந்தைகளிலும் மற்றும் உழவர் சந்தைகளிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் காய்கறி விற்பனையும் சூடு பிடித்தது.

    மேலும் மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பல வண்ணங்களில் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கிலி, ஜங்குபட்டை, வண்ணபூச்சிகள், வாய் பூட்டு, சாட்டை ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதனையும் ஏராளமான விவசாயிகள் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அழகு படுத்துவதற்காக வாங்கி சென்றனர்.

    நாமக்கல் மாவட்ட புறநகர் பகுதிகளான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோக னூர் உள்பட பல பகுதி களிலும் பொங்கல் பண்டி

    கையொட்டி ஜவுளிக்கடை கள், நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • கொரோனா மூன்று அலைகளிலும் பல லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.
    • எங்களுக்கு நிரந்தர தன்மை உடைய ஒப்பந்த பணி வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இன்று கொரோனா காலத்தில் ஆஸ்பத்திரியில் பணிபுரிய எம்.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழக முதல் -அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

    இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் எம்.ஆர்.பி. தேர்வு மூலம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டாய பணி ஆணை மூலம் கொரோனா மூன்று அலைகளிலும் பல லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.

    எங்களுக்கு நிரந்தர தன்மை உடைய ஒப்பந்த பணி வழங்க வேண்டும்.

    ஆனால் தற்போது தற்காலிக முறையில் ஒப்பந்த பணிக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்ற தவறான தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே தற்காலிக ஒப்பந்த பணியை ரத்து செய்து நிரந்தர ஒப்பந்த பணி வழங்க வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது.
    • இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான குழி ஒன்று உள்ளது. இந்த குழி பல மாதங்களாக மூடப்படாமலேயே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இது போன்ற குழி அந்த பகுதியில் இருப்பதே தெரியாமல் உள்ளது.

    இதனால் யாரேனும் இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விடுமுறை முடிந்து குடும்பத்துடன் ஊருக்குப் புறப்பட்டனர்
    • முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    பள்ளிகளுக்கு விடப்பட்ட அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை போன்றவை காரணமாக வெளியூர்களில் வசிக்கும் பலரும், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தனர்.

    அவர்களது வசதிக்காக சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தம் காரணமாக சென்னை, ேகாவை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.

    அவர்களும் தொடர் விடுமுறையை பயன்படுத்தி குடும்பத்துடன் சொந்த ஊர் வந்து, உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாடினர். சுற்றுலா தலங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விடுமுறை முடிந்து விட்டதால், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்குச் செல்ல அனைவரும் நேற்று புறப்பட்டனர். இதனால், குமரி மாவட்ட ரெயில் நிலையங்கள், பஸ் நிலை யங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவிலில் இருந்து வெளியூர் செல்பவர்கள், வடசேரி பஸ் நிலையம் வந்ததால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.அதில் பயணம் செய்ய பலரும் முண்டியடித்து ஏறினர்.

    இதேபோல் ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்தவர்களை விட, முன்பதிவு செய்யாத வர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்ததால் அவர்கள் அங்கும், இங்கும் இடம் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. இதனால் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

    • எனக்கு விருது கிடைத்தது கூட்டு முயற்சியால் தான்.
    • விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தது மன நிறைவை கொடுக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தை எதிரில் சிட்கோ வளாகத்தில் கவின்மிகு தஞ்சை - சமுதாய நாற்றங்கால் தோட்டம் என்ற திட்டத்தை இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஆங்கில புத்தாண்டு தினத்தில் சமுதாய நாற்றங்கள் தோட்டம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் லயன் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் , தன்னார்வலர்கள் என அனைவரும் ஒரு இடத்தில் கூடியுள்ளோம்.

    சமுதாய நாற்றங்கால் தோட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் மரக்கன்றுகள் நடுதல், தற்போது சமுதாய மாற்றங்கள் தோட்டம் என அவர்களது பல்வேறு சமுதாய , பசுமையான பணிகள் பாராட்டுக்குரியது. விரைவில் கவின்மிகு தஞ்சை இயக்கத்திற்கு கிரீன் சாம்பியன் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனக்கு விருது கிடைத்தது கூட்டு முயற்சியால் தான்.

    தனி மரம் என்றைக்கும் தோப்பு ஆகாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உங்களது சேவையை பாராட்டி விருது வழங்குகிறோம் என கூறினர். அதன்படி அவர்களும் எனக்கு விருது வழங்கினர். ஆனால் தனிப்பட்ட என்னால் மட்டும் இந்த விருது உள்பட பல்வேறு விருதுகளும் எனக்கு கிடைக்கவில்லை.

    அனைவரும் ஒன்று சேர்ந்து பணி செய்த கூட்டு முயற்சியால் மட்டுமே அது சாத்தியமானது. முதலமைச்சர் கையால் விருது வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. முதலமைச்சர் கையால் விருது வாங்கிய பிறகு இன்னும் எனது பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று எனக்கு ஒரு உந்துதல் கிடைத்துள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று செந்தமிழ் நகர் திட்டம் உருவாக்கப்பட்டது. முற்றிலும் விளிம்பு நிலையில் உள்ள ஏழை மக்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஏழு வீடுகள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் 14 வீடுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் 11 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வீடுகள் மட்டுமே பாக்கி உள்ளது. வீடுகள் கட்டிக் கொடுக்க லயன் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், அறக்கட்டளைகள் இன்னும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உறுதுணையாக இருந்து தேவையான நிதி வழங்கினர். அதனால்தான் விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிந்தது.

    அவர்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டி கொடுப்பது என்பது கடினமான பணி. இருந்தாலும் அனைவரது கூட்டு முயற்சியால் அந்த பணியையும் திறம்பட செய்து முடித்துள்ளோம். விளிம்பு நிலை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது எனக்கு மன நிறைவை கொடுத்துள்ளது. அரசு பணியில் சேர்ந்து இந்த பணியை செய்தது மன நிறைவு. தொடர்ந்து அரசின் திட்டங்கள் அனைத்தும் கடை கோடி மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி வழிபாடு திருத்தொண்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

    மேலும் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பேராலய பங்கு தந்தை பிரபாகர் தலைமையில் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்குத்தந்தை பிரவீன் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதேப்போல் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது

    பரமத்தி வேலூர்:

    சென்னை பேரூராட்சி களின் இயக்குநரின் அறி வுரைகளின்படி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் வாரந்தோறும் நடைபெற்று வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், நம்ம ஊரு சூப்பரு திட்டங்களின்படி பொத்தனூர் பேரூ ராட்சிக்குட்பட்ட 13,14 வார்டு பகுதிகளில் பேரூ ராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில், செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், அனைத்து தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 80-க்கும்

    மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப்பணிகளான, செடி,கொடி,முட்புதர்கள் அகற்றுதல், மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மரக்கன்றுகள் நடுதல், சுவரொட்டிகள் அகற்றுதல், விளம்பர பதாகைகள் அகற்றுதல், பொது மக்களுக்கு குப்பைகள் தரம் பிரித்து வழங்குதல் போன்ற பணிகளும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தல், டெங்கு ஒழப்பு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது

    • மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்
    • புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சர்புதீன் மரைக்காயர் இல்லத் திருமணம் நாகூரில் நடைபெற்றது.

    அதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது:-

    புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை எதிர்த்து அன்று நாராயணசாமி குரல் எழுப்பினார்.

    அதையே இன்றைய முதலமைச்சர் ரங்கசாமியும் செய்து வருகிறார். ஆளுநரால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை தான். 20- க்கும் மேற்பட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

    இதையெல்லாம் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு மாற்றம் நிகழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் காங்கிரஸ் பிரமுகர்கள் நவ்ஷாத், ரபீக், விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×