search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217364"

    • பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
    • இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இங்கே ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இந்த பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது.பணி விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றால் ஏற்படும் சாலை நெரிசல்கள் காரணமாக பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும் நெரிசல் ஏற்படுகின்றது.

    இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம்.

    இந்த பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.

    இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை நிறுத்த அங்கு இங்குமாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது என்றனர்.

    • மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வின் பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசை அகற்றிவிட்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமர வைப்பதற்காக போராடக்கூடிய ஒரே ஒப்பற்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சியை எதிர்த்து பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தவும், பல திட்டங்களை வகுக்கவும் ஒரு வலுவான தலைவராக அவர் திகழ்கிறார். அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

    மக்களுக்காக போராடக்கூடிய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரின் வழியிலே அவரின் மேலான ஆலோசனையை கேட்டு நாம் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமர செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர் செயலாளர் ராஜா, மெய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டிபன், சிவாஜி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, சேவியர், ஸ்ரீதர், செல்வ மணி, பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பண்டிகை காலங்கள் நெருங்குவதையடுத்து நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள முதியோர் கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண் 14567 தொடர்பான விழிப்பு ணர்வு ஸ்டிக்கரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளி யிட்டார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகிறது.குறிப்பாக ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை யர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் புத்தாண்டு பொங்கல் பண்டிகைகளும் வர உள்ளது. அந்த காலங் களில் மாவட்டம் முழுவ தும் பாதுகாப்பை அதிக ரிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பஸ் நிலை யங்கள் கடை வீதிகள் மார்க்கெட் பகுதிகளில் மாறு வேடங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதுடன் வாகன சோதனையை தீவிர படுத்த வேண்டும்.

    வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்ப வர்கள் நகைகளை வாங்கி செல்பவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். போஸ்கோ வழக்குகள் மற்றும் பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பழைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்பட வேண்டும்.குமரி மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் பட்டியலை தயாரித்து அவர்கள் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கஞ்சா குட்கா புகையிலை விற்பனை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ஈடுபடுபவர்கள் மற்றும் குற்ற செயல் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்புவனம் அருகே, நாளை மக்கள் தொடா்பு முகாம் நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்..

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை உள்வட்டம், பொட்டபாளையம் கிராம பஞ்சாயத்து அலுவலக அருகில் நாளை (12-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் அரசுத்துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே நோக்கம் ஆகும்.

    பொட்டபாளையம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்.

    • போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
    • 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் வீரபாகுபதியில் அனுமதி இன்றி வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. இதனை பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டித்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்து முன்னணி ராஜாக்க மங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து புத்தளம் ஜங்ஷனில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் ஜெகநாதன், பொரு ளாளர் முத்துராமன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான அய்யப்பன், ராஜக்கா மங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தர்மலிங்கம் என்ற உடையார், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா தெற்கு மாநகர பொதுச் செயலாளருமான வீரசூரபெருமாள், ஓ.பி.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், வீரபாகுபதி ஊர் பொதுமக்கள் திரண்டனர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் விரைந்து வந்தார். அவர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சினைக்குரிய வீட்டில் எக்காரணம் கொண்டும் ஜெபக்கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம். இதனை மீறி ஜெபக்கூட்டம் நடத்த முயற்சித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் உறுதி கூறினார்கள்.

    இதனை ஏற்று போரா ட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வீரபாகுபதியில் உள்ள அந்த வீட்டில் வைத்து ஜெபக்கூட்டம் நடத்திவிட கூடாது என்பதற்காக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, ஏ .டி .எஸ்.பி. ராஜேந்திரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்

    அப்போது ஜெபக்கூட்டம் நடத்து வதற்காக 40-க்கும் மேற் பட்டோர் வந்திருந்தனர். அப்போது தகுந்த அனுமதி இருந்தால் மட்டுமே ஜெபக்கூட்டம் நடத்த முடியும் என்று அவர்களிடம் கூறினர்.

    உடனே அவர்கள் டி.எஸ்.பி.யிடம் நாங்கள் 10 நிமிடம் ஜெப கூட்டம் மட்டும் நடத்திவிட்டு செல்கி றோம் என்றனர். பின்னர் டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி 10 பேர் மட்டுமே ஜெப கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் காலை 9.10 முதல் 9.20 வரை 10 பேர் ஜெபம் செய்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட் டது.

    • காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
    • கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    கோத்தகிரி

    கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் தேவைக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையில் குப்பைகள் அடைந்து அந்த நீர் சிமெண்ட் சாலையின் மேல் செல்கிறது.


    இதனால் அந்த சிமெண்ட் சாலை பழுதடைவதுடன் பொதுமக்களும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையை தூர் வாரி அந்த சாலையை காத்திட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் 76 பேருக்கு 4.33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 71 பயனாளிகளுக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்து, அனைத்து துறைகள் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பிற நபர்கள் சுய தொழில் செய்து முன்னேறும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சுயதொழில் செய்ய விரும்புவோர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி கடன் பெறலாம். இதனை படித்த இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் பெண்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கியுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக அவர், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா, ஊராட்சித் தலைவர் காட்டுராஜா, மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தனர்.

    • நில அளவைத்துறையில் பட்டா மாறுதலுக்காக வரும் கோப்புகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை.
    • ஏழை, எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினசரி சென்று தவித்து வருகின்றனர்.

    அவினாசி :

    அனுமன் சேனா மாநில தலைவர் தியாகராஜன் மாவட்ட நில அளவைத் துறையினருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    அவினாசி தாலுகா நில அளவைத்துறையில் பட்டா மாறுதலுக்காக வரும் கோப்புகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. மனுக்கள் அனுப்பி 6 மாதம் ஆனால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. ஏழை எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினசரி சென்று தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நில அளவை துறையின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் உரிய காலத்தில் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    • தி.மு.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் பகுதியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதி.மு.க. சார்பில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

    ஆனால் தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறார்கள். வரிக்கு மேல் வரியை போட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்கள். தி.மு.க.வுக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பொதுமக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது. இந்த ஆட்சியில் மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுவதில் இந்த அரசு குறியாக உள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பிச்சையா எடுக்கிறார்கள்? அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.அவர்களுக்கு சொத்து எப்படி வந்தது? நாங்கள் நினைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து ஆட்சி செய்தோம்.

    தி.மு.க. அரசு அதை எல்லாம் விட்டு அ.தி.மு.க.வை பழிவாங்குவதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறது. அதி.மு.க. எந்த சலசலப்புக்கும் அஞ்சாத இயக்கமாகும். யாரும் எங்களை மிரட்டி பார்க்க முடியாது.

    தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக தயாராகி விட்டார்கள். அதற்கு முன்னோட்டமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் கார்மேகம், தலைமையில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 255 மனுக்கள் வரப்பெற்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் கார்மேகம், தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 255 மனுக்கள் வரப்பெற்றன.

    மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்க ளை வழங்கும் வகையில் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது, உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 9 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
    • முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் நன்கொடையாக அமைச்சர் வழங்கினர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ .7.40 கோடி மதிப்பீட்டில் 2,401 பணிகள் முடிவுற்றும் ரூ.9.26 கோடி மதிப்பீட்டில் 816 பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், முத்தூர் பேரூராட்சியில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் 20 பணிகள் முடிவுற்றும், ரூ .6.32 கோடி மதிப்பீட்டில் 12 நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் "நெல் ஜெயராமன் மரபு சார் நெல் விதை ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்" கீழ் துர்யமல்லி ரக பாரம்பரிய நெல் விதைகளை 3 விவசாயிகளுக்கு வழங்கியும், வருவாய்த் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதனின் மகன் ஆதவன் ரூ.4லட்சம் மதிப்புடைய 2.72 சென்ட் பரப்பளவு கொண்ட தனக்கு சொந்தமான நிலத்தினை முத்தூர் பேரூராட்சி மாதவராஜபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்காக, முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் நன்கொடையாக வழங்கினர். இதையடுத்து பத்திர பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத்திடம் வழங்கினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ,உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) மதுமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி ) வாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முத்தூர் பேரூராட்சி மக்களுக்காக தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

    • ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.
    • பத்து நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்திருந்து தண்ணீர் வடிந்த பிறகு மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகம் முன்பு நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று வந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கிராமத்துக்கு மின்சாரம் வராததால் கிராமமே இருளில் மூழ்கி கிடந்தது.

    இதனால் அனைவரும் சிரம் அடைந்து வருகின்றோம்.எனவே உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 1 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வரத்து வந்தபோது ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை திட்டு கிராமத்தில் பத்து நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்து இருந்து தண்ணீர் வடிந்த பிறகு பின்னர் மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.

    தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பத்து நாட்களாக கிராமத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் கிராமத்தை சூழ்ந்து இருந்ததால் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் முதலியவைகளை ஆய்வு செய்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    ×