search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217364"

    • குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
    • பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பற்ற கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

    அரியலூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள தைத்தொடர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு, தற்போது சுமார் 1,32,000 கன அடிக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

    எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    மேலும், பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகளவு வரும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள்; பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நீர்நிலைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும். பாலங்களைத் தவிர நீர்நிலைகளை கடந்து செல்லும் இதர பாதைகள் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செல்ல வேண்டும் எனவும் பொதுமக்களை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாண வர்களுடன் செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 293 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாமல்ல புரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாண வர்களுடன் செஸ் விளை யாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வாவுபலி பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது
    • குழந்தைகளுடன் பலரும், நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயி களின் விளை பொருட்களை கொண்டு பொருட்காட்சி நடத்தபடுவது வழக்கம்,

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வாவுபலி பொருட்காட்சி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டிற்கான 97-வது வாவுபலி பொருட் காட்சி கடந்த 14 -ம் தேதி குழித்துறையில் நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி. மைதானத்தில் துவங்கின, தொடர்ந்து 20 -நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் தினமும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பார்வையாளகர்களை கவரும் ராட்டினங்கள், மரண கிணறு, என மக்கள் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விவசாய விளை பொருட்கள் கண்காட்சி யும் அடங்கி உள்ளதால் தினமும் ஏராளமான தமிழக கேரள மக்கள் திரண்டு பார்வையிட்டு வருகின்றனர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த கூட்டம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக குழந்தைகளுடன் பலரும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் நாளை (13-ந் தேதி) நடைபெற இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    இதில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    எனவே கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தேவகோட்டை வட்டத்தில் வருகிற 13-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • பொது இடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
    • மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 989 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 22 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்களில் வரும்போது முககவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால் இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிப்பதில்லை. கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக முககவசம் அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முககவசம் அணியாமல் செல்கின்றனர்.

    மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை களையும் முறையாக பின்பற்றுவது இல்லை. முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இன்னும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கவில்லை. பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் சுகாதார த்துறையினர் முககவசம் அணிந்து வரவேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதை பெரும்பாலானோர் காதில் வாங்கி கொள்வதாக தெரிய வில்லை. இது போன்ற அலட்சிய போக்கால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் அரசு நிலை உருவாகியுள்ளது.

    எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கோபி, ஜூன். 27-

    ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

    இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.

    • குமாரபாளையத்தில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில் சிக்கி மின் கம்பி அறுந்து விழுந்தது.
    • மின் கம்பி அறுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, அரசிராமணி உள்ளிட்ட பல கிராமங்களில் விளையும் கரும்புகளை விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மூலமாக குமாரபாளையம் எடப்பாடி சாலை வழியாக பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    இதில் மின் கம்பிகள் அறுந்து விடுவது, மின் கம்பங்கள் சாய்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கரும்பு லோடு ஏற்றிய லாரி காவேரி நகர் பகுதியில் வரும் போது மின் கம்பிகள் கரும்பில் சிக்கி இழுத்து வந்ததில் பல மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அந்த நேரத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்த வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கும் பணியை செய்தனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடத்தில் வருகிற 29-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக 3-வது தளத்தில் வருகிற 29-ந்தேதி காலை 11 மணியளவில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை தெரிவிக்கலாம்.

    மணி ஆர்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும்.

    தபால் மூலம் குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் அஞ்சல் உறையின் மேலே DAK ADALAT CASE என்று எழுதவும்.

    மேலும் வருகிற 27-ந்தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அந்த தபாலை அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். 

    பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் க.சகாதேவன், செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி, பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் நலப் பணியாளர்கள் நல வாழ்வு கூட்டமைப்பு, தமிழ்நாடு மாநில மையம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திரண்டு வந்து கோர்ட்டு தீர்ப்பின் அடிப்ப டையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி, பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    மக்கள் நலப்பணி யாளர்கள் சம்பந்தமாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணையை ரத்து செய்யக்கோரியும், கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நலப் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி ஆகியோர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நல பணியாளர்கள் மொத்தம் 214 பேர் உள்ளனர். கல்வித்தகுதி அடிப்படையில் காலிப்பணி யிடங்களை மக்கள் நலப் பணியாளர்களை கொண்டு நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதை அவர்களுக்கு வழங்க கூறியுள்ளது.

    தற்போது அரசு பிறப்பி த்துள்ள உத்தரவில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மக்கள் நலப் பணியா ளர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொகுப்பு ஊதியமாக ரூ.7500 மட்டும் கிடைக்கும். இந்த பணம் எங்களுக்கு காணாது.

    தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கப்படுவதாக அரசாணை வந்துள்ளது. வயது முதிர்ந்தவர்கள் உள்ளனர். பலர் பட்டப்படிப்பு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். கல்வித்தகுதி அடிப்படையில் நீதிமன்றம் கூறியபடி நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் பணியிலிருந்து எந்த அரசாலும் நீக்க முடியாது. இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவர் அவர்கள் கூறினர்.

    ×