search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்"

    • 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
    • பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் மகளிர் குழுவாக சேர்ந்து தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.இந்தநிலையில் குழுவில் இருந்த ஒரு பெண் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் மாதத்தவணை கட்ட காலதாமதம் ஆனதால் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்தனர்.

    கடன் தவணை செலுத்த வந்த பெண்களிடம், கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர்.இதையடுத்து வேறு இடத்தில் குடியிருக்கும் அந்த பெண்களிடம் போன் மூலம் பேசியதில் கடன் தவணை செலுத்துவதாக அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொகைக்காக தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்களை சிறை பிடித்து வைத்திருப்பது குறித்த தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் வந்தனர்.இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இரவு நேரத்தில் இப்படி கூட்டமாக வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்புச் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
    • அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவில் பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில், நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் எதிர்பாராத விதமாக மோதி கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானவர் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த ராமன் மகன் பிரபாகரன்(வயது 41) என்று தெரியவந்தது. அவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் தங்கி கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரன் மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    • சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (30). இவரது மனைவி வித்யா. பிரதாப் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்திருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவின ர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரதாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே ஆம்னி பஸ் மோதி சூப்பர் மார்க்கெட் ஊழியர் பலியானார்.
    • ரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8.30 மணி அளவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்காசி ரோட்டில் சென்றார்.

    அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பலியான ஆனந்தராஜிக்கு திருமணமாகி மேரி ஷகிலா என்ற மனைவி உள்ளார்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதிய ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த டிரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார்.
    • ரத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்( வயது 47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார். இதற்கான மாத தவணை கடந்த மாதமாக சில செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த வங்கி கிளை சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்ட மாணிக்கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

    • ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்த போது விபத்து
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சூசை மிக்கேல் (வயது 67). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரீத்தம்மாள் (60). கடந்த சில ஆண்டுகளாக சூசைமிக்கேல் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை இந்த ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்ப்பாராமல் அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது உரசியது. இதில் இரும்பு கம்பி வழியே மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூசைமிக்கேல் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ரீத்தம்மாள் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா்.இதில், பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கூறுகையில், நகரில் தேங்கியுள்ள குப்பைகள் துரிதமாக அகற்ற வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆழ்குழாய்களில் இருந்து குடிநீா் கொண்டு செல்லும் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    இதைத்தொடா்ந்து தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக 46 தீா்மானங்கள் நிறைப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பாப்புகண்ணன் பேசுகையில், நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ஊழியா்களின் வருகை கண்காணிக்கப்படும். சொத்து வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் சான்றிதழ்கள் வழங்காவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி ஆணையா் ராமா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை மொபட்டில் கடக்க முயன்றார்.
    • அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் வசிப்பவர் பரந்தாமன்(வயது 57). தொலைபேசி நிலைய ஊழியர். இவர் நேற்று எக்ஸல் கல்லூரி பிரிவு சாலை பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை மொபட்டில் கடக்க முயன்றார்.

    அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் சிகிச்சைக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி. அக்ரஹாரம் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (50). ஈரோடு ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரபீக் வேலை பார்க்கும் பாரில் மது குடிக்க வந்த ஒருவரின் செல்போன் திருட்டு போனது.

    இது குறித்து ரபீக் மதுபாரில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அடிக்கடி அந்த மதுபாருக்கு வந்து செல்லும் ஈரோடு ஈ.வி.என்.சாலை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போனை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து ரபீக் பிரகாசிடம் இருந்து அந்த மொபைல் போனை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதனால் ரபீக் மீது பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ரபீக் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மரக்கட்டையால் ரபீக்கை தாக்கி அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    இது குறித்து ரபீக் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    • அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
    • முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் பவுன்மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை தோப்பூர், கண்மணி தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது55). இவர் மேலஉரப்பனூரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில், சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் கோமதிநாயகம் சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் கோமதிநாயகம் நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோமதிநாயகம் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கூட்டுறவு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
    • சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.

    சிவகங்கை

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. சங்க கொடியை நிர்வாகி கவிதா ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வினோத்ராஜா தலைமையில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.

    அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் முத்தையா நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக ஜெயபிரகாஷ், துணைத்த லைவர்களாக மூகாம்பிகை, லாரன்ஸ், மாவட்ட செயலாளராக கிங்ஸ்டன் டேவிட், மாவட்ட இணைச்செ யலாளர்களாக பாண்டி, நிரஞ்சனா, மாவட்ட பொருளாளராக பொன்னையா, மாநில செயற்குழு உறுப்பினராக குறிஞ்சி செழியன், மாவட்ட தணிக்கையாளராக சேக் அப்துல்லா, மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளராக அனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ×