search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ"

    • 10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
    • அமலாக்கத்துறையினர் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஆத்மகுரு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மேகபதி விக்ரம் ரெட்டி.

    இவர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் சுங்கவரி வசூலில் ஈடுபட்டார்.

    இந்த பணியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மேகபதி விக்ரம் ரெட்டியின் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

    விக்ரம் ரெட்டி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையஅதிகாரிகள் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த சில என்ஜினியர்களுடன் சேர்ந்து சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.

    தேசிய நெடுஞ்சாலையின் மன்னுட்டி-அங்கமாலி இடையே 544 பணிகள் பாதியில் முடிக்கப்பட்டு, ரூ.102.44 கோடிக்கு சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

    சாலை அமைப்பதற்காக ரூ.721 கோடி செலவழித்துள்ள நிலையில், ஏற்கனவே சுங்கச்சாவடியில் ரூ.1,250 கோடி வசூலிக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    அமலாக்கத்துறையினர், மேகபதி விக்ரம் ரெட்டி எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர். உதவி இயக்குநர் சத்யவீர்சிங் தலைமையிலான 8 அமலாக்க துறை அதிகாரிகள் குழு எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கே.எம்.சி. நிறுவனத்தின் வங்கி இருப்பு ரூ.125.21 கோடியை பறிமுதல் செய்தனர்.

    • மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
    • கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம்.

    புதுச்சேரி:

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான் குமார், ராமலிங்கம், மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், கொல்ல பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.

    அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. இதனால் தொகுதி வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்தார்.

    தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும் போது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.

    எனவே அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். அதிகாரிகள் தொடர்ந்து தவறுகள் செய்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
    • காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

    பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
    • மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இரங்கல்.

    நாகலாந்தில் பத்து முறை எம்எல்ஏவாக இருந்த நோக் வாங்னாவ், உடல்நலக் குறைவு காரணமாக திமாபூரில் உள்ள கிறிஸ்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரான நோக் வாங்னாவோ, அவரது 87 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஒரு தீவிர பிராந்தியவாதியான நோக் வாங்னாவ் 1974 ல் அரசியலில் சேர்ந்தார். பின்னர், மோன் மாவட்டத்தில் உள்ள தபி தொகுதியில் இருந்து 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் மாநிலத்திற்கு சேவை செய்தார்.

    கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இறக்கும் வரை சமூக நலத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றினார்.

    இந்நிலையில், திமாபூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

    முதல்வர் நெய்பியு ரியோ, துணை முதல்வர் ஒய் பாட்டன், சட்டசபை சபாநாயகர் ஷரிங்கெய்ன் லாங்குமர் மற்றும் என்டிபிபி தலைவர் சிங்வாங் கொன்யாக் உட்பட ஏராளமான தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நோக் வாங்னாவோ மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கூடிய ஆற்றல் மிக்க தலைவர் என ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.

    • கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிட நலப் பள்ளியில் சரியில்லாத உணவை மாணவ மாணவிகளுக்கு கொடுத்ததால் வாந்தி, மயக்கம்
    • பாதிக்கப்பட்ட மாணவர்களை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.


    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் மதிய உணவு புளி சாதம் முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவிகள் 30 மாணவர்களும் பயின்று வருகின்றனர் இவர்களில் 55பேர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.வழக்கம்போல் இன்று மதிய உணவு சமைப்பதற்கு தயார் செய்தபோது அரிசி சரியில்லை என்று சமையல் செய்பவர் தலைமை ஆசிரியர் புஷ்பவல்லியிடம் தெரிவித்தனர். பரவாயில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் அதை சமையல் செய்து மாணவர்களுக்கு கொடுங்கள் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. மதியம் மாணவர்களுக்கு புளி சாதமும் முட்டையும் வழங்கப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் இளமதி சமையலர் சரஸ்வதியும் சமையல் உதவியாளர் சபிதாவும் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கினர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சாப்பிட்ட சில மணி நேரத்தில் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார் உடனடியாக ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து அதில் 25 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    அங்கு மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் தாசில்தார் துறை மற்றும் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்று தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுவது பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.




    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது.
    • குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில் காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி பெற கடுமையாக போராடினர். பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அதில் மந்திரிகளை சந்திக்க முடியவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து பேச முடியவில்லை என்றும் பரபரப்பான குற்றச் சாட்டுகளை தெரிவித்து இருந்தனர். அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அது பா.ஜ.க.வின் சதிவேலை என்று தெரிவித்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது கருத்து வேறுபாடுகளை களைந்து பணியாற்றுமாறும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் சிலரை மீண்டும் காங்கிரசில் இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில் காங்கிரசை சேர்ந்த பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), எஸ்.டி.சோமசேகர் (யஸ்வந்த்பூர்) மற்றும் சிவராம் ஹெப்பர் (எல்லாபூர்) ஆகியோர் அடங்குவர்.

    இதேபோல் ஜனதாதளத்தை சேர்ந்த கே.கோபாலையா (மகாலட்சுமி லேஅவுட்), தொட்ட நாகவுட் பாட்டீல் (குஷ்டகி) ஆகிய 6 பேர் ஆபரேசன் தாமரை மூலம் பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் சிலர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் அடுத்து ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அவர்கள் மீண்டும் காங்கிரசில் இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள நிலையில் பா.ஜனதாவிலிருந்து வந்தால் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைப்பது மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் பா.ஜனதாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரசில் இணைந்தால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரியன் கார்கே கூறும்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேர விரும்பினால் நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்களின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

    2019-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்திலிருந்து விலகி சென்றவர்களை அதேபாணியில் காங்கிரஸ் மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணையலாமா, வேண்டாமா என்ற இரட்டை நிலைப்பாட்டில இருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    இந்த நிலையில் இவரது மருமகள் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த மனோலியா (24) என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் தன்னை தனது கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    அமைச்சர் பதவிபெற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவியது. சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமுள்ள பல தலைவர்கள் அமைச்சர் பதவி பெற கடுமையாக போராடினர். ஆனாலும் அகில இந்திய தலைமையுடன் நெருக்கத்தில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்கள் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பியதாக பரபரப்பு கடிதம் வெளியானது.

    அதில் அமைச்சர்கள் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தது.

    இந்த கடிதத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். ஆனால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே கடந்த 27-ந் தேதி பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் கோடி தேவை உள்ள நிலையில் ரூ.12,500 கோடி பற்றாக்குறை உள்ளதால் இந்த ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி அளிக்க முடியாத சூழ்நிலை குறித்தும், முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் கர்நாடக காங்கிரசில் நிலவும் அசாதரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முக்கிய அமைச்சர்கள் , மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் வருகிற 2-ந் தேதி டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜூனா கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனையில் அரசுக்கும், கட்சிக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைப்புகுழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த குழு மூலம் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களையவும் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கட்சியின் கொள்ளை, சித்தாந்தம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது எப்படி செயல்பட வேண்டும், அரசு வகுக்கும் திட்டங்களை கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மூலம் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பது எப்படி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நீதி, நேர்மையாக நடப்பது, ஊழலற்ற நிர்வாகம் கொடுப்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

    • ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
    • பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம். நேற்று காலை இவர் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எல்.ஏவுக்கு போன் செய்த மர்மநபர், முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தானே, எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அதற்கு கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. அந்த நபரிடம் யார் வேண்டும் எனக் கேட்ட போது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்ட போது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இப்போது உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

    ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.

    இதற்கிடையே திருபுவனை தொகுதி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா இருந்தா என்ன? என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி அங்காளன் எம்.எல்.ஏ.வை திட்டினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும் அந்த செல்போன் நாகை மாவட்டத்தில் இருந்து பேசியது பதிவாகி இருந்தது.

    இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வர் நாகப்பட்டினத்தை அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது40) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்து நரேந்திரனை பிடித்து காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நரேந்திரன் எதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுத்தார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
    • இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக அனுராதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் மனு கொடுக்க சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் நேரம் கேட்டிருந்தார்.

    அதன்படி இன்று காலை அருள் எம்.எல்.ஏ. சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அனுராதா ஆய்வுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தன்னை புறக்கணித்ததாக கூறி அருள் எம்.எல்.ஏ. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிர்வாகிகளுடன் திடீரென தர்ணா போராட்டம் செய்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரிடம் சமரச பேச்சுவாரத்தை நடத்தினர்.

    சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். திட்டப்பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டால் எந்த பதிலும் முறையாக தருவதில்லை. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நான். எனக்கு கவுன்சில் கூட்டத்துக்கு தகவல் அனுப்புவது இல்லை. ஆனால் முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் எங்கள் குறைகளை நேரம் ஒதுக்கி கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது.
    • காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்க வக்கீல்கள் கொண்ட ஒரு குழு ஆய்வு செய்தது. மொத்தம் 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன.

    இதில் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதல் 20 இடங்களில் 12 பேர் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள். கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்கள்.

    இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ.வும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1413 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது டி.கே.சிவகுமார் தேர்தல் ஆணையத்தில் அளித்த தகவல்படி அவரிடம் ரூ.273 கோடி அசையா சொத்துக்களும், ரூ.1140 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக கூறியிருந்தார்.

    2-வது இடத்தில் கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ.வும், தொழில் அதிபருமான கே.எச்.புட்டாசுவாமி கவுடா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1267 கோடி. இவருக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடக சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.வுமான காங்கிரசை சேர்ந்த பிரியகிருஷ்ணா உள்ளார். 39 வயதே ஆன இவரது சொத்து மதிப்பு ரூ.1156 கோடி. இவர் நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ரூ.881 கோடிக்கு கடன் உள்ளவர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவரது தந்தை எம்.கிருஷ்ணப்பா கர்நாடகாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார்.

    கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு 4-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.668 கோடி. கர்நாடகாவின் மற்றொரு எம்.எல்.ஏ. கலிஜனார்த்த ரெட்டி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார்.

    கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களில் 32 பேர் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். இவர்களில் காங்கிரசை சேர்ந்த 19 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

    அதே நேரத்தில் மிகவும் குறைந்த சொத்துக்களை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் சிந்து தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தாரா இடம்பெற்றுள்ளார். முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்கள் வெறும் ரூ.1700 தான். இவருக்கு அடுத்த்அ இடத்தை ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்தா முதுலிஒ பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் மட்டுமே. மேலும் ரூ.18 ஆயிரத்து 370 சொத்துக்களை கொண்ட பஞ்ச்சாபின் நரீந்தர்பால்சிங் சாவ்னா 3-வது இடத்திலும், ரூ.24 ஆயிரத்து 409 மதிப்பு சொத்துகளுடன் பஞ்சாப் நரிந்தர் கவுர்பராஜ் 4-வது இடத்திலும், ரூ.30 ஆயிரம் மதிப்பு சொத்துடன் சார்க்கண் எம்.எல்.ஏ. மங்கள் கலிந்தியும் உள்ளனர்.

    • கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
    • குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, நாடு முழுவதும் உள்ள மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 44 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    28 மாநில சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 எம்.எல்.ஏ.க்களில் 4,001 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் (28 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

    அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதேபோல், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் (67 சதவீதம்), டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் (63 சதவீதம்), மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் (61 சதவீதம்), தமிழகத்தில் 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. குற்றப் பதிவுகள் மட்டுமின்றி எம்.எல்.ஏ.க்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

    ×