search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220362"

    • கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது.
    • பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி அதிக மானதால் அதை விவ சாயிகள் கீழே கொட்டும் அளவிற்கு நிலைமை இருந்தது, இதனையடுத்து தர்மபுரி விவசாயிகள் தர்மபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வணி கத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) பாலசுப்பிர மணியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்தக் கோரிக்கையை ஏற்று தர்மபுரியில் கூடுத லாக உற்பத்தியாகும் தக்கா ளியை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தக திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு மூலமாக சேலத்தில் உள்ள சூரமங்க லம், அஸ்தம்பட்டி தாத காப்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர் ஆகிய உழவர் சந்தைகளில் வெள்ளோட்ட மாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உழவர் சந்தை களில் தக்காளி விற்பனை நடந்து வருகிறது. உழவர் சந்தைகளில் தர்மபுரி தக்காளி இதுவரை 150 டன் தக்காளி விற்பனை ஆகி உள்ளது. இதனை விவசா யிகளும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்,

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் உற்பத்தி அதிகமாக உள்ளது. விவசாயிகள் பயனபெறும் வகையில் கடலூரில் உற்பத்தியாகும் பலாப்ப ழங்கள் சேலம் உழவர் சந்தை களில் தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிர மணியம் நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனையடுத்து நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் பலாப்பழம் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரம ணியம் கலந்து கொண்டு பலாப்பழ விற்பனை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சூரமங்கலம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் பசுபதி, ஸ்ரீதேவி ,சரோஜினி உள்பட விவசாயிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஒரு சில வாரங்க ளில் மலைப்பிரதேசத்தில் விலை கூடிய பீட்ரூட், கேரட் பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய நடவ டிக்கை எடுத்து வருகிறோம். இதே போல் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழம் பழங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    பண்ருட்டியில் நாளை மின்தடை என்று மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    • பண்ருட்டி அருகே பழமையான கெண்டிமூக்கு பானை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
    • சங்க காலத்தை சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் பகுதி தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புர களஆய்வு மேற்கொண்டானர்.

    அப்போது சங்க காலத்தை சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர்.

    இதைகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-

    பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றில் கடந்த சில மாதமாக மேற்புர களஆய்வு மேற்கொண்ட போது சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து எனதிரிமங்கலம் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது சங்ககால மக்கள் குடிநீர்க்காக பயன்படுத்திய கெண்டிமூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு பகுதிகள் கண்டறியப்பட்டது.

    இந்த பகுதியில் இதுபோல கெண்டிமூக்கு பானைகள் நிறைய இருந்து இருக்கலாம் அதற்கான தடயம் தான் உடைந்த கெண்டிமூக்குகள். இதுபோல கெண்டிமூக்கு பானைகள் தமிழகத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில் கீழடி, கொற்கை , உறையூர் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளது.

    தற்போது எனதிரிமங் கலம் பகுதியில் கண்டறியப் பட்ட கெண்டிமூக்கு பானை யானது சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் குடிநீர் அருந்துவதற்காக பயன்ப டுத்திய பானை ஆகும்.

    இதன் மூலம் பண்ருட்டி பகுதி தென்பெண்யாற்றில் சங்ககால மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்று அறியமுடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கடும் நஷ்டத்தில் வியாபாரிகள் மூழ்கியுள்ளனர்.
    • பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.

    கடலூர்:

    பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.

    பண்ருட்டியை சுற்றியுள்ள காடாம்புலியூர், பலாப்பட்டு, நடுவீரப்பட்டு, கீழ்மாம்பட்டு, பணிக்கன் குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது சீசன் தொடங்கி உள்ளது. எனவே தினமும் 10, 20 லாரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டன்கள் பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும்சா லையில்பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவியல்குவியலாய்லாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள்,பொதுமக்கள் பலாபழங்களைவாங்கி செல்கின்றனர்.

    இந்த ஆண்டு பலாபழவிளைச்சல் அதிகம்என்பதால்இதன் விலை குறைந்துள்ளது . ஒரு பலா பழம் 100 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பலா காயை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.

    இதுகுறித்து பண்ருட்டி மண்டி உரிமையாளர் நடுபி ள்ளையார்குப்ப ம்பாலமுருகன் கூறுகையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை போகவில்லை. தினசரி ஏராளமான பழங்கள் வெடித்து வீணாகிறது.

    விலைகுறைந்ததால்வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலா பழம் வரத்து அதிகம் உள்ளதால் விற்க முடியவில்லை. வெளியூர்களுக்கு லோடு அனுப்பினாலும் அதை விட பலாப்பழ வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பலாப்பழத்தை யாரும் வாங்குவார் இல்லை. இதனால்தான் விலை வீழ்ச்சியை பலாப்பழம் கண்டு உள்ளது.

    எனவே தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.

    • பண்ருட்டி அருகே போலீசாருக்கு தெரியாமல் மாணவி உடல் எரிக்கப்பட்டது.
    • இவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல்இவரது உடலை எரித்துவிட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் ரக்ஷிதா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு முடிந்து தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    இதற்கிடையில் நேற்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல்இவரது உடலை எரித்துவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலிருந்து மருத்துவர் குழுவினர் பண்ருட்டி தாசில்தார்சிவா கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் முன்னிலையில்பிணம் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்த எலும்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    பண்ருட்டி அருகே திருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால் மணப்பெண்ணை கற்பழித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் புதுமாப்பிள்ளை வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    பண்ருட்டியை அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (23). இவருக்கும், விஜயகுமாருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த ரம்யா திடீரென்று காணாமல் போனார். இதனால் கவலையடைந்த கோதண்டபாணி தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் உள்ள விவசாயி கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றில் பிணமாக கிடந்த பெண் மாயமான ரம்யா என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் ரம்யாவை, விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் விஜயகுமாரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் ரம்யாவை கற்பழித்து கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் விஜயகுமார் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு:-

    நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    எங்களது திருமணம் 20-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் ரம்யாவுடன் நான் செல்போனில் அடிக்கடி பேசி வந்தேன். அப்போது அவரது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருந்து வந்தது.

    இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவரது செல்போன் பழுதாகி இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் ரம்யாவின் செல்போன் அடிக்கடி பிசியாக இருந்தது. யாரிடம் பேசி கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார். இதனால் அவர் மேல் சந்தேகம் அடைந்தேன்.

    கடந்த 13-ந் தேதி இரவு ரம்யாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரம்யா வெளியே வந்தார். மோட்டார் சைக்கிளில் ரம்யாவை அழைத்துச் சென்றேன்.

    இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம். அப்போது அங்கு நாங்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு ரம்யா மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த நான், ரம்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். மயக்க நிலையில் இருந்த ரம்யாவை கற்பழித்தேன்.

    இதையடுத்து அருகில் உள்ள கிணற்றுக்கு ரம்யாவை தூக்கி சென்றேன். பின்னர் அவளை கிணற்றில் தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் ரம்யா இறந்து விட்டார். இதையறிந்ததும் நான் ஒன்றும் தெரியாதது போல் எனது வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான விஜயகுமாரை போலீசார் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜயகுமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×