search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220791"

    • குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    பாபநாசம்:

    வீரமாங்குடி, சருக்கை, வாழ்க்கை, சத்தியமங்கலம் அருகே நீர் சேகரிப்பு கிணறு அமைத்தல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தாசில்தார் பூங்கொடி தலைமை தாங்கினார்.

    இதில் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் நடராஜன், ராணி மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஜெகதீசன், செல்வராஜ், தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், தூத்தூர் விவசாய சங்க தலைவர் தங்க. தர்மராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வாழ்க்கை- தூத்துக்குடி கிராமங்களுக்கு இடையே தடுப்பணைகள் அமைத்து தரும் பட்சத்தில் மேற்படி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.
    • கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    இதனிடையே கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறந்திருக்கும் தண்ணீரை தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

    இதற்கிடையே ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகமாகியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 27.71 அடியாக பதிவானது. 1.271 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

    மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

    இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், மேலத் தெரு மற்றும் கிழக்குத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் ஒரு வாரமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி மேகலை மற்றும் மண்டல அதிகாரி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட போவதாக கூறி அதிகாரி களுடன் வாக்குவாத்தில் னஈடுபட்டனர்.

    ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டும், அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகராட்சி கூட்டத்தில் தலைவர் எச்சரித்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் ரவிகண்ணன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செல்வமணி, ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், ராஜா மான்சிங், சுரேஷ்:-

    நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படா ததால் 20 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும் குடிநீரில் புழுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் நிலவுகிறது. எனவே குடிநீர் வழக்குவதை முறைப்படுத்தி வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன்:-

    வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைகளை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகுமார்(தி.மு.க):-

    தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் தனியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

    சுகாதார அலுவலர் ராமச்சந்திரன்:-

    சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    செல்வமணி, துணை தலைவர்:-

    நகராட்சி பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப் படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    சுகாதார அலுவலர்:-

    பள்ளிகள் திறக்கும் முன் நகராட்சி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தற்போது குறைந்த அளவு குடிநீர் வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது, ஒப்பந்தப்படி சரிவிகித அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கேட்டுக்கொண் டார்.

    • குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
    • நிர்வாகத்தில் தவறு நடப்பதாகவும் புகார் வந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் நாரசபை கூட் டம் தலைவர் மாதவன் தலை மையில் நடைபெற்றது துணைத்த லைவர் தனலட் சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நக ராட்சி நிர்வாக அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் மதியழ கன், பால்பாண்டி, கலையர சன் உள்ளிட்டோர் வார்டு மக்களின் தேவைகளை கடந்த கூட்டங்களில் தெரிவித்தும் அதுபற்றி எந்த தீர்மானமும் கொண்டு வராத நிலை ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

    கவுன்சிலர் முத்துராமன் சொத்து வரி கட்டிய வர்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது வரி கட்டா விட்டால் வீட்டை பூட்டி விடுவோம் என்று மிரட்டும் நிலை உள்ளதாக புகார் கூறினார். இதற்கு பதிலளித்த தலைவர் மாதவன் இதுபற்றி தனக்கு தகவல் இல்லை என்றும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் மக்கள் கோரிக்கைகளை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நகராட்சிநிர்வாகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என்றார். நக ரில் பல்வேறு பகுதி களில் குடி நீருடன் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் ஜெயக்குமார், முத்து லட்சுமி, ராமச்ச ந்திரன் உள்ளி ட்டோர் புகார் தெரிவித்தனர். கவுன்சிலர் பிருந்தா தனது வார்டு பகுதியில் மக்கள் கூறிய பிரச்சினைகள் பற்றி நகரசபை நிர்வா கத்திடம் தெரிவித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறியதுடன் எனது வார்டு மக்கள் உனக்கு ஓட்டு போட்டு எங்களுக்கு என்ன சேவை செய்தாய் என்று கேள்வி எழுப்பும் நிலை உள்ள தாக வேதனை தெரிவித்தார்.

    கவுன்சிலர் மதியழகன் இதேநிலை அனைத்து கவுன் சிலர்களுக்கும் ஏற்பட்டுள்ள தாக கூறினார். நகராட்சி பூங்காவில் மாவட்ட நிர்வா கத்தின் அறிவுறுத்தலில் வைக்கப் பட்ட விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்ட நிலை யில் அது பற்றி விசாரணை நடத்தாமல் மீண்டும் விளம் பர பலகை வைப்பதற்கு டெண்டர் கோரியதற்கு கவுன்சில ர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    கவுன்சிலர் ஆறுமுகம் நகர சபை நிர்வாகத்தில் தவறு நடக்கிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாத த்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.

    • மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது.

    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சிக குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த திட்டத்தின் முதல் சிறப்பு முகாம் ராயபுரம் மண்டலத்தில் நடைபெற்றது.

    இந்த நிலையில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது. புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து மனுவாக அளித்தனர். குறிப்பாக தெருவிளக்கு, குப்பை அகற்றுதல், குடிநீர்-கழிவுநீர் தொடர்பாக ஏராளமானோர் மனு அளித்து இருந்தனர்.

    இந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மேலும் அவர் கோரிக்கை மனு வழங்கிய பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    சிறப்பு முகாமில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அவர் பேசும் பாோது, மக்களைத்தேடி மேயர் திட்டம் 15 மண்டலங்களிலும் நடந்து முடிந்தவுடன் மக்களைத்தேடி மேயர் செல்ல வேண்டும். தற்போது மண்டல அளவில் மேயர் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கிறார். வரும் காலங்களில் பகுதி வாரியாக அவர் மக்களை சந்திக்க வேண்டும். முதல் கட்டமாக குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்வாயையொட்டி வசிப்பவர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தாயகம் கவி எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி நெற்குன்றம் 145-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் குடிநீர் வாரியம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதே நேரம் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவரும், 145-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.சத்தியநாதன் முயற்சியால் ரூ.12 கோடியில் 150 தார் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க சென்னை குடிநீர் வாரியம் பைப் லைன் பணிகளை முடித்து, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கினால் தான் தார்சாலை அமைக்க முடியும்.

    ஆனால் 110 சாலைகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை பலமுறை மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் சந்தித்து விரைவாக குடிநீர் பணிகளை முடித்து பணி முடிப்பு சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தார்.

    ஆனாலும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நெற்குன்றம் ரெட்டித் தெரு வாட்டர் டேங்க்ங் எதிரில் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதனை அறிந்த சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், போலீஸ் உதவி ஆணையர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, விஜயகுமார் ஆகியோர் மாமன்ற உறுப்பினர் டி.சத்தியநாதனுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் 45 நாட்களுக்குள் குடிநீர் பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு, பணி முடிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் பாதியில் முடிக்கப்பட்டது.

    • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
    • செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. 6908 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1135 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 135 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 708 மி.கனஅடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 2251 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2354 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 460 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதி செய்யவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர்விநியோகப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, 6நகராட்சிகள் 15 பேரூராட்சிகள் 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டுத்திட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடித்துபொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    மேலும் கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகார்களின் அடிப்படையில்உடனடியாக நேரில் களஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதிசெய்யவேண்டும். பழுது ஏற்படும் போது உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கவேண்டும்.

    பொதுமக்களுக்கு கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவகையில் பழுது நீக்க பணிகள் மற்றும் பழைய மோட்டார்களை அகற்றி புதியமோட்டார்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. நடப்பு ஆண்டிற்குள் அனைத்துவீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவினை உறுதி செய்துஒத்திசைவு செய்யும் பொருட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சம்ப் மூலமாக வழங்கப்படும்அளவினையும், மேலும் ஊராட்சிகள், குக்கிராமங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் பெறப்படும் குடிநீர் அளவினையும் கண்காணித்து ஆய்வு செய்து,குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் இணைந்து தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவைகண்காணித்து இனிவரும் காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கமுறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தினந்தோறும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் கிராம ஊராட்சிகளில்விநியோகிக்கப்படும் குடிநீர்அளவினை மின்னணு நீர்உந்து கருவி பொருத்தி கண்காணித்து சீரான குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொறுப்பு ) ஜெகதீஸன், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி) வாணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறி யாளர்கள் செல்வராணி, சசிக்குமார், விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பழுது அடைந்தது. இதையடுத்து அந்த மேல் நிலை தொட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்) வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எனினும் 6 மாதம் ஆகியும் மேல் நிலை தொட்டி அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோடு பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இருந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி தரவில்லை. எங்கள் பகுதியில் நள்ளிரவில் தான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.

    வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் உடனடியாக இந்த பகுதிக்கு மேல்நிலை தொட்டி அமைத்து தர வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசி உறுதியாக மேல் நிலை தொட்டி அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை.
    • குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட த்திற்கு முதன்மை மருத்துவமனையாக இயங்கி வரும் தென்காசி அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகம் பேர் பிரசவத்திற்காக தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். இங்கு குழந்தை பெற்ற பெண்களுக்கு துணையாக இருந்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை எனவும், அவர்க ளுக்கான அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போதுமான அளவில் இல்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளது.

    தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டிகளில் போதிய அளவு குடிநீர் இல்லாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் பயன்படுத்தி வரும் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    எனவே தினமும் ஆயிர க்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் தென்காசி அரசு மருத்துவ மனையில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட அறைகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வா கம் முன்வர வேண்டும் என சமூக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×