search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலதிபர்"

    • கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது
    • கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்

    நாகர்கோவில் :

    இரணியல் அருகே பேயன்குழியை சேர்ந்தவர் சகாய ஜெனிபர் (வயது 30). இவர் நாகர்கோவில் பகுதியில் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழி லதிபர் ஒருவர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கண் குறைபாடு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததையடுத்து சகாய ஜெனிபரை அவர் கண்டித் தார். பின்னர் அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இத னால் சகாய ஜெனிபர் ஆத்திர மடைந்தார்.

    சம்பவத்தன்று தொழி லதிபர் பள்ளிவிளை பகுதி யில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த சகாய ஜெனிபர், அவரிடம் தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் தொழில் அதிபருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சகாய ஜெனிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து தொழி லதிபர், ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சகாய ஜெனிபர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகாய ஜெனிபர் மீது ஏற்கனவே இரணியல், திருச்சி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கைரேகை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைக்காததால் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் தொழிலதிபர்.இவர் வீட்டில் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகனும் மகளும் வெளி நாட்டிலும் படித்து வரு கிறார்கள்.சென்னையில் படித்து வரும் மகனை பார்ப்பதற்காக முருகன் மனைவியுடன் சென்றி ருந்தார். அப்போது முருகனின் தந்தை பூதலிங்கம் மகனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி கைவரிசை காட்டி இருந்தனர். 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    முருகன் வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    இது தொடர்பாக போலீசார் வட மாநில தொழி லாளர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கேமராவில் கொள்ளையர்கள் வந்த காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. எனவே கொள்ளை யர்கள் முருகனின் வீட்டின் பின்பகுதி வழியாக புகுந்து இருக்கலாம் என்று கருது கிறார்கள். எனவே பின்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் எதுவும் சிக்காத நிலையில் கைரேகையும் கிடைக்காததால் போலீ சாருக்கு குற்ற வாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய அடுத்த கட்ட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் முருகனின் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்ற நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை.

    லண்டன்:

    ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.

    அட்சய திருதியையொட்டி இந்த நிதியுதவியை அவர் வழங்கினார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை. இவர்தான் முதன்முதலில் ரூ.250 கோடி வழங்கி யுள்ளார். இந்த கோவில் கட்ட ரூ.70 கோடியில் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. லண்டனின் புறநகரில் இந்த கோவில் கட்டப்படுகிறது.

    • சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்றது.
    • புதிய ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும்.

    திருப்பூர் :

    நாளை முதல் சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரப் போகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் சேவை நாட்டிலேயே அதிவேகமாக செல்லக் கூடியது, உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ெரயில் பெட்டிகள், சென்னை ஐசிஎப் தொழிற்சா லையில் தயாரிப்பு பணிகள் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பயணிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

    கிட்டதட்ட விமான சேவையை போன்றது எனச் சொல்லலாம். முதலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்டது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க லாம். கட்டணம் சற்று அதிகம் தான். இந்த ெரயிலில் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ள ன. மேலும் வைபை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் சேவையும் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.

    பயோ கழிவறைகள் காணப்படுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு வேகத்தில் ரெயிலின் உட்புறத்தில் பெரிய அளவில் அதிர்வுகளோ அல்லது குலுங்கவோ இல்லை. அதிகபட்சமாக 1,128 பயணிகள் வரை செல்ல முடியும். இதுவரை 11 வந்தே பாரத் ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    12வது ெரயில் சேவையாக சென்னை- கோவை வழித்தடம் அமையவுள்ளது. மற்ற வந்தே பாரத் ெரயில்களில் 12 பெட்டிகள் இருக்கும் நிலையில், இந்த புதிய ெரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயிலின் நேர அட்டவணை வெளியாகி பயணிகள் மத்தியில் எதி ர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    முதலில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும். நண்பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் திருப்பூர் (6.30), ஈரோடு (7.17), சேலம் (8.08) என 3 ெரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.20 மணிக்கு ெரயில் புறப்படுகிறது. கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.

    இடையில் சேலம் (6.03), ஈரோடு (7.02), திருப்பூர் (7.43) ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இடைப்பட்ட ெரயில் நிலையங்களில் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மற்றும் கோவைக்கு இடையிலான 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் கடந்து விடும். வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் ரெயில் இயங்காது. மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தொழில் விஷயமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கோவை சென்று விமானத்திலும், சிலர் கார்களிலும், ரெயில்களிலும் பயணிப்பா ர்கள். ரெயில்களை பொருத்தவரை டிக்கெட் கிடைக்காதது ஒருபுறமிருக்க தொழிலதிபர்கள் பலர் நவீன வசதிகளை எதிர்பார்ப்பார்கள். அந்த வசதிகள் வந்தே பாரத் ரெயிலில் இருப்பதால் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொழிலதிபர் அடித்துக்கொலை? செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது48). இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். மேலும் கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை பார்த்தசாரதி கார் வாங்க பைபாஸ் ரோட்டில் மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் முருகேசன் என்பவருடன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவீட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் பார்த்த சாரதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அவர் முருகேசன் ஒர்க்ஷாப் பின்புறம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக மனைவி பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார்.

    உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவரை மீட்ட பிரியா அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார். பார்த்தசாரதி உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன.

    எனவே அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவரது மனைவி பிரியாவும், கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டீயில் போதை மருந்து கலந்து கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
    • தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(வயது56), தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரிடம் ஊழியராக வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர்(34). இவர் சம்பவத்தன்று டீயில் போதை மருந்து கலந்து முதலாளி சஞ்சய்குமாரிடம் கொடுத்துள்ளார். டீயை குடித்ததும் சஞ்சய்குமார் மயங்கி விட்டார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடி விட்டு தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி சஞ்சய்குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற தனியார் ஊழியர் ஜிஜேந்தரை கைது செய்து அவர் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • வாடிப்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மகாராணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் தென்னை நார் கம்பெனி நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம் ராமநாதன் காரில் தனது கம்பெனிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ராமநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் மோதிரம், ரூ.900 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையின்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமநாதனிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் பொன்பெரு மாள் கோவில்தெருவை சேர்ந்த பரட்டை ஆறுமுகம் (35), ராமநாயக்கன்பட்டி செல்லையா (28), பேட்டை புதூர் கோபிநாத்ராஜா (35) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி செய்த பெண் ஜிம் பயிற்சியாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம்,

    மதுரை

    மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

    இதனை நம்பிய நான் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இது தவிர 2.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொடுத்தேன்.

    ஆனால் ஸ்வேதா குழுவினர் ஜிம் நடத்துவ தற்கான பணிகளில் ஈடுபட வில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதா, பிரியதர்ஷினி, ஸ்வேதா அத்தை, மற்றும் அவரது மகள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவினாசி:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 30). கோவையில் உள்ள பிரபல கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.

    இவருடன் அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஹில், சேலத்தை சேர்ந்த ஜெய்சூர்யா (18), கோவையை சேர்ந்த மிதுன் (16) ஆகியோரும் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அய்யப்ப பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன்ராஜ் உள்பட 4பேரும் பவானிக்கு சென்றனர். அங்கு பஜனையை முடித்து விட்டு இன்று அதிகாலை கோவைக்கு காரில் புறப்பட்டனர். காரை சுஹில் ஓட்டினார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை பகுதியில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வணிக வரி அதிகாரி என கூறி தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.
    • போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனில் பேசிய மர்ம நபர் தான் சென்னை வடக்கு மண்டல வணி வரித்துறை இயக்குநரின் உதவியாளர் என கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. எனவே வருகிற 30-ந் தேதி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவோம். இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலமாக அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

    தவறினால் உங்கள் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இதுகுறித்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து விசாரித்த போது போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    இது தொடர்பாக வணிகவரி இணை ஆணையரிடம் புகார் தரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவராஜ் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
    • வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பண்டரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55). தொழிலதிபர். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தேவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்த அதிர்ச்சடைந்த அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    • காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி. கண்ணனின் தாயார் காலமானார்.
    • அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி

    காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் சுப்பையா அம்பலத்தின் மனைவியும், காரைக்குடி தொழிலதிபர் கே.ஆர்.எஸ்.பி.கண்ணனின் தாயாரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணி இணைச் செயலாளர்- காரைக்குடி நகர் மன்ற உறுப்பினருமான கே.ஆர்.எஸ்.பி.கே.தேவன் மற்றும் கே.ஆர்.எஸ்.பி.கே.ஞானேஸ்வரன் ஆகியோரின் அப்பத்தாவுமான சோலச்சி அம்மாள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் காலமானார். அவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று பகல் நியூடவுனில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெற்குதெருவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    ×