search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்க ண் குழுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் தலைமை கொறடா கோவி செழியன் பேசியதாவது:-

    உண்மைக்கு புறம்பான வழக்குகள், முந்தைய கூட்டத்தில் இறுதி

    செய்யப்படாதவை, உண்மைக்கு புறம்பான வழக்குகள், புதிதாக ஆய்வுக்கு வைக்கப்படும் வழக்குகள், புலன் விசாரணை வழக்குகள் மொத்த வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ள , விசாரணை முடிவுற்ற வழக்குகள்,

    தீருதவித்தொகை நிலுவை, தாசில்தாரிடம் இருந்து சாதிச்சான்றிதழ் நிலுவை பட்டியல் போன்ற பல்வேறு கருத்துக்கள்கு றித்து பொருள் விவாதிக்கப்பட்டது.

    விவாதிக்கப்பட்ட அனைத்து பணிகளும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்குவதுடன் தேவையான கட்டமைப்புகள், விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலகம், போட்டி தேர்வுக்கான வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தலைமை கொறடா கோவி செழியன் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் இணைந்து போட்டியை நடத்தியது.
    • மேலும், அவர் மாணவர்களோடு ேடபிள் டென்னிஸ் விளையாடினார்.

     தஞ்சாவூர்:

    தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவை இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டியை நடத்தியது. நிகழ்ச்சியில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஹெர்பர்ட் ஜோன்ஸ் வரவேற்றார்.

    புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெரோம் அடிகளார், மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் செயலர் அண்ணாமலை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் மாணவர்களோடு மேபிள் டென்னிஸ் விளையாடினார்.

    இந்த நிகழ்ச்சியை எழுத்தாளர் தஞ்சை ராமதாசு தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் பால்பிண்டோ நன்றி கூறினார்.

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி–யில் 8 ஆம் ஆண்டு விளை–யாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டி–களை தொடங்கி வைத்தார். துணைத் தலை–வர் மோகன–சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தடகள விளை–யாட்டு போட்டிகள், அணி–வகுப்புகள் நடந்தது. விழாவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா கலந்து–கொண்டு போட்டிகளில வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்பாது அவர் பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என எல்லோருக்கும் பிரச்சினை உள்ளது. அதைக்கண்டு பின்வாங்காமல் கையாளும் அணுகு முறையில் தான் நம் வாழ்க்கையில் சாதனை–யாளராக ஆக முடியும். எந்த ஒரு செயலிலும் விதிமுறையை மீறாத பழக்கம் வளர்த்துக்கொண்டு வரும் மனநிலை இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமைவதோடு நாம் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை அடைந்து விடலாம் என்றார். இதில் சிறப்பு விருந்தி–னராக திருச்சி மின்வா–ரிய பொருளாதார கட்டுப்பட்டாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளா–கத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர்கள் சந்திரோதயம், ராஜேந்திரன், விளையாட்டு அலுவலர்கள் பிரபு, ராஜ் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து–கொண்டனர். முன்னதாக முதல்வர் ஹேமா வரவேற்றார். முடி–வில் துணை முதல்வர் சாரதா நன்றி கூறினார்.


    • பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம்.
    • பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பெரியண்ணன் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு புதிய பூங்காவினை திறந்து வைத்தார். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், ஊஞ்சல், சரக்கு ஏற்ற, இறக்க மரம் போன்ற பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.

    விழாவில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்திவாசன், சமீராபர்வீன், பிரேம்நாத் பைரன். பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலெட்சுமி, கோட்டையம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
    • செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு பூங்கா திகழ்ந்து வருகிறது.

    இந்த பூங்காவில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அலை மோதி வரு கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண் டார்.

    இதையடுத்து பூங்கா வில் இருந்த விளை யாட்டு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டது.பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வசதி யாக செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் சிறுவர்களுக்கான ராட்டினங்களும் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்த ராட்டினங்களில் ஏற கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக இந்த ராட்டி னங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கட்டணங்களும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இதே போல் மேலும் சில விளையாட்டு உபகர ணங்களை பூங்காவில் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் பாழடைந்து மோசமாக காணப்படுகிறது. அதனை செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.

    • மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு.
    • 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்கா செங்கபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மற்றும் ஸ்ரீ குமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளிகளின் 12வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி ரெயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். 

    விழாவிற்கு வந்திருந்தவர்களை ஸ்ரீகுமரன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி வரவேற்றுப் பேசினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளராக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ராஜசேகர் கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். 

    • தொண்டியில் செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்ப ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அதில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொண்டி செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

    வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமை தாங்கினார். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார். நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். திருவெற்றியூர், பாண்டுகுடி, எஸ்.பி.பட்டிணம், வெள்ளையபுரம், மங்களக்குடி ஆகிய துணை சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவர்கள் கௌதமன், டார்லிங்டன், அல்ஷிபா ஆகிய மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம்பரிதி, சந்தானம் உட்பட சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    சுவாமிமலை:

    இரண்டாவது ஜூனியர், மாநில அளவிலான சூட்டிங்பால் சாம்பியன்ஷிப் 2022- க்கான போட்டி சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியானது சேலம் ஷூட்டிங் பால் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    போட்டியில் நாமக்கல், சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனி பிரிவுகளாகவும், 18 வயதிற்குட்பட்ட, மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த நவீன், தமிழ்,அப்துல் ரகுமான், ஈஸ்வர், மாதேஷ் ஆகிய 12-ம் வகுப்பு மாணவர்களும், லுக்மன்,நரேன், வெங்கடேஷ்,கைலாஷ் ஆகிய 11-ம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாடி மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    மேலும், சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கிராஸ் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனி பிரிவுகளாகவும், 8, 10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் நடைபெற்றது.

    போட்டியில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் முகமது பிலால்,அப்துல் ரகுமான் ஆகியோர் சிறப்பாக விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    மாணவர்கள் அனைவரும் மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடுமாறு பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

    மேலும், மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பாராட்டினர்.

    கார்த்தி வித்யாலயா கல்வி குழுமம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
    • மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து (கேன் பால்) போட்டி தொடங்கப்பட்டது.

    இந்தப் போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றார். மாணவர்களுக்கான இப் போட்டியில் 27 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

    14 வயது, 17 வயது, 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

    மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா, உடற்கல்வி ஆய்வாளர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நம்முடைய மல்யுத்த போட்டியாளர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர் என பிரதமர் மோடி வாழ்த்து
    • மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூர், பஜ்ரங் பூனியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    புதுடெல்லி:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று உள்ளனர்.

    அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நம்முடைய மல்யுத்த போட்டியாளர்கள் நம்மை பெருமையடைய செய்துள்ளனர். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் பெல்கிரேடு நகரில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். வினேஷ், இந்த தளத்தில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும், பஜ்ரங் 4-வது பதக்கமும் வென்றுள்ளது சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.

    இதேபோன்று, மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் சிங் தாக்கூர், பஜ்ரங் பூனியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் வெண்கலம் வென்றுள்ளார். 2018-ம் ஆண்டில் வெள்ளி, 2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வெண்கல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இதேபோன்று, மகளிருக்கான 53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் வினேஷ் வெண்கலம் வென்றுள்ளார். இது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற 2-வது பதக்கம் ஆகும்.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×