search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • தங்கம் இன்று சவரன் ரூ 45 ஆயிரத்துக்கு கீழ் வந்து உள்ளது.
    • வட்டி விகித்தத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளதால் விலை குறைந்து இருப்பதாக தெரிகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இம்மாதம் 5- ந்தேதி இதுவரை இல்லாத வகையில் சவரன் ரூ.45,520-ஆக அதிகரித்தது.

    பின்னர் சற்று குறைந்து சவரன் ரூ.45,120-க்கு விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. இந்த நிலையில் இன்று தங்கம் கிராம் ரூ.40-ம், சவரன் ரூ 320-ம் குறைந்து உள்ளது.

    இன்று கிராம் ரூ.5,640-ல் இருந்து ரூ.5,600 ஆகவும், சவரன் ரூ. 45,120-ல் இருந்து ரூ.44,800 ஆக குறைந்து உள்ளது.

    தங்கம் இன்று சவரன் ரூ 45 ஆயிரத்துக்கு கீழ் வந்து உள்ளது. வட்டி விகித்தத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளதால் விலை குறைந்து இருப்பதாக தெரிகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.80.20-ல் இருந்து ரூ.80 ஆகவும், கிலோ ரூ.80 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ. 80 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    • மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபா ளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்கு றிச்சி, ஆனங்கூர்,பெரிய சோளிபா ளையம், சின்ன சோளி பாளையம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வபரமத்திவேலூர் பகுதியில்

    வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

    ட்டார பகுதிகளில் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் விளை யும் மரவள்ளி கிழங்குகளை வியா பாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச் சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலை களுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலை களில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்ய வும் வியாபாரிகள் அதிக அள வில் பெரிய அளவி லான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், வீழ்ச்சி அடையும் போதும் அதன் விலைக்கு ஏற்ப சேகோ சர்வ் மூலம் மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்கின்ற னர். அதேபோல் சில்லறை வியா பாரிகள் மரவள்ளி கிழங்குகளை வாங்கி ஊர் பகுதிகளுக்கு கொண்டு சென்று கிராமங்களில் கிலோ கணக்கில் மர வள்ளிக்கி ழங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கிய பொதுமக்கள் மர வள்ளிக் கிழங்கில் உள்ள தோலை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்து தாழித்து சாப்பிடுகின்ற னர்.சிலர் முழுக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடு கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது மில் அதிபர்கள் மர வள்ளிக்கிழங்கை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்திற்கு வாங்கி செல்கின்றனர் அதே போல் சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ள தாலும், ஜவ்வரிசி விலை உயர்வு அடைந்துள்ள தாலும் மரவள்ளி கிழங்கின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 28-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.44,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயரத் தொடங்கியது.

    மறுநாள் 29-ந்தேதி ரூ.44,360 ஆக உயர்ந்தது. 30-ந்தேதி மேலும் அதிகரித்து ரூ.44,520 ஆனது. 31-ந்தேதி பவுன் ரூ.44,720 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 3 நாட்கள் மட்டும் குறைந்து காணப்பட்ட தங்கம் நேற்று முன்தினம் ரூ.44,800 ஆக அதிகரித்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,520-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் பவுன் ரூ.45 ஆயிரத்துக்கு மேலேயே நீடிக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,690-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,600-க்கும், ஒரு சவரன் ரூ.44,800-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 பைசா உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது.

    கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,600-க்கும், ஒரு சவரன் ரூ.44,800-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
    • இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் உழவர் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் வாங்கி செல்கி றார்கள்.

    இந்த நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.

    உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    கத்தரி ரூ.20 முதல் 36, தக்காளி ரூ.10 முதல் 14, வெண்டைக்காய் ரூ.40 முதல் 48, அவரை ரூ.40 முதல் 50, கொத்தவரை ரூ.36, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.32 முதல் 40, பாகற்காய் ரூ.32 முதல் 36, பீர்க்கன்காய் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, கோவக்காய் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் சி.வெங்கா யம் ஒரு கிலோ ரூ.25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ.16 முதல் 20, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 100, கேரட் ரூ.45 முதல் 50, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் 24, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    கொய்யா ரூ.40 முதல் 50, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ. 30, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

    கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,590-க்கும், ஒரு சவரன் ரூ.44,720-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது.
    • நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது. உற்பத்தி செலவு அதிகமாவதால் முட்டை வியாபாரிகள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள். இதற்கு இடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ஸ்ரீராம நவமி முடிவடைவதால், ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்டபேட், பர்வாலா உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் அனைத்து மண்டலங்களும் இனி விலை குறைப்பதில்லை என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததன் தொடர்ச்சியாக நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பண்ணையாளர்கள் அறிவிக்கப்படும் மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை.

    பண்ணைகளில் முட்டை இருப்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலும், கடும் வெயில் காரணமாக உற்பத்தி சற்று குறைந்துள்ளதாலும் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மேல் முட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே பண்ணையாளர்கள் சந்தை நிலவரத்தை அனுசரித்து அதிக மைனசிற்கு விற்காமல் நல்ல விலைக்கு முட்டையை விற்று பயனுடைய கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

    கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,545-க்கும், ஒரு சவரன் ரூ.44,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதத்தில் உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தினமும் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.44,400-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44, 320-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,550-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    பின்னர் முட்டை விலை உயரந்து ரூ.4.60 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.60 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-480, பர்வாலா-407, பெங்களூரு-475, டெல்லி-419, ஹைதராபாத்-425, மும்பை-485, மைசூர்-480, விஜயவாடா-438, ஹொஸ்பேட்-435, கொல்கத்தா-507.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.95 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தங்கத்தின் விலை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களின் இதயத்தில் இடியாக இறங்கி இருக்கிறது.

    நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அவசர தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும் ஒரு பொருள் வீட்டில் இருக்கிறது என்றால் அது தங்கமாக மட்டுமே இருக்க முடியும்.

    அந்த அளவுக்கு மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் மருத்துவ செலவாக இருந்தாலும் சரி கல்வி கட்டணமாக இருந்தாலும் சரி தங்கம் மட்டுமே அவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    இதனால் நகைக்கடைகளில் மாதச் சீட்டு செலுத்தி சிறுக சிறுக சேமித்து 12 மாதங்கள் முடிந்த பிறகு தங்களது பெண் குழந்தைகளுக்கு தேவையான நகைகளை சேர்க்க வேண்டும் என்பதே மாதச் சம்பளம் வாங்கும் ஒவ்வொரு தந்தையின் கனவாகவே இருந்து வருகிறது.

    தங்களது வருமானத்துக்கு ஏற்ப ரூ. 500 முதல் ஐந்தாயிரம் வரை சேமிப்பவர்களும் உண்டு. இப்படி பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சீட்டு போட்டு நகை வாங்கி சேமித்து தங்களது ஆசை மகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் பலரே நடுத்தர வர்க்கத்தில் நிறைந்திருப்பார்கள்.

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் தங்க நகைகள் தான் அவசர தேவைக்கும் அருமருந்தாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களின் இதயத்தில் இடியாக இறங்கி இருக்கிறது. கொரோனா காலத்துக்கு பிறகு மிகவும் குறைந்த இடைவெளியில் இதுபோன்று தங்கத்தின் விலை இவ்வளவு அதிகமாக அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்கிறார்கள் நகை வியாபாரிகள்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்கள் அமெரிக்காவில் வங்கிகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் மற்றும் திவால் நடவடிக்கைகளால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 18-ந்தேதி அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரு ரூ.5,520 ஆக இருந்தது.

    நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து ரூ.5,570 ஆக அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரத்து 560 ஆக உள்ளது.

    கடந்த 3, 4 மாதங்களாக பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, அமெரிக்க வங்கிகளின் திவால் போன்றவற்றால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் கூறுகிறார் சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளரான சாந்தகுமார்.

    தங்கத்தின் விலை குறித்து அவர் மேலும் கூறும்போது, "அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்கிற வங்கி உள்பட 4 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. மேலும் 8 வங்கிகள் இந்த வரிசையில் உள்ளன. அந்த வங்கிகளும் திவாலாகும் நிலை ஏற்பட்டால் தங்கத்தின் விலை இதைவிட மேலும் உயரும் ஆபத்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மட்டுமின்றி மும்பையில் உள்ள நகை வியாபாரிகளும் இதனை எச்சரிக்கையாகவே தெரிவித்திருக்கிறார்கள். தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கோரிக்கையாக இருந்தாலும் வரும் காலங்களில் அது சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

    வருகிற காலகட்டங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,100 முதல் ரூ.6,200 வரையிலும் உயரலாம் என்றும் கூறப்படுகிறது.

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் 10 கிராம் தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் ரூ.62 ஆயிரம் வரையில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுபோன்ற நிலை ஏற்பட்டு விட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் தங்கம் இனி தங்குமா என்பதும் பெரிய கேள்வியாகவே மாறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டில் 10 கிராம் தங்கம் 30 ஆயிரத்து 900 ஆக இருந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 10 கிராமுக்கு 25 ஆயிரம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது.

    2020-21-ம் ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 980 என்ற அளவில் இருந்தது. இதன் பின்னர் 2022-ம் ஆண்டு உக்ரைன்- ரஷியா போரின் போதும் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு வங்கிகள் திவாலான காரணத்தால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது திருமண ஏற்பாடுகளை செய்துள்ளவர்கள் தாங்கள் திட்டமிட்டபடி நகைகளை வாங்க முடியாமல் அதிகப்படியான செலவினத்துக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    மாப்பிள்ளை வீட்டில் பேசியபடி நகைகளை போட வேண்டுமே என்கிற தயக்கத்துடன் கூடுதல் சுமையாகி போன தங்கத்தின் விலை உயர்வை எண்ணி பெண்ணைப் பெற்ற பெற்றோர் தவிக்கும் நிலையே காணப்படுகிறது.

    அதே நேரத்தில் வசதி படைத்த பெரும் பணக்காரர்கள் தங்கத்தில் லட்சங்களையும், கோடிகளையும் முதலீடு செய்வதும் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி தங்கத்தின் விலையேற்றம் ஏழை எளியவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் பெரிய அளவில் கூடுதலாக குடும்பச்சுமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    இப்படி தாறுமாறாக உயர்ந்துள்ள தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் பால் வார்க்குமா? இல்லை இதைவிட மேலும் விலை அதிகமாகி குடும்ப பாரத்தை மேலும் அதிகமாக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,320-க்கும் ஒரு கிராம் ரூ. 5,540-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,400-க்கும் விற்கப்படுகிறது.

    ×