search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள்.
    • விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சித்ரா, சூரப்பள்ளம் ஊராட்சி தலைவர் தங்கம், துணைத்தலைவர் மணிவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் லதா ஜீவானந்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பட்டுக்கோ ட்டை வேளா ண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்று பேசினார். மேலும், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக்கூன்வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள் மற்றும் அதனை சரி செய்வதற்கான மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பாபு விளக்கமளித்தார்.

    மேலும், தென்னையில் உர மேலாண்மை, நுண்சத்து இடுதல், காண்டாமிருக வண்டு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் குறித்த செயல்விளக்கங்கள் மற்றும் கருத்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    செயல்விளக்கங்க ளுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் அப்சரா மற்றும் சன்மதி, விதை ஆய்வாளர் நவீன் ஆகியோர் செய்திருந்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி, பட்டுக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் தோட்டக்கலை அலுவலர் பிருந்தா நன்றி கூறினார்.

    • மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க கலை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும்

    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கோவை மண்ட லத்தின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் பரத நாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில்

    5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரோடு பவானி சாலை பி.பெ.அக்ரஹாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகின்றது.

    மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்க ளின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில்

    வருகிற 1- தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பரதநாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு 9842780608 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாள் அன்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்க ப்படும் எனவும்,

    இவ்வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும். தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துபந்து, கபாடி, வாள்சண்டை மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இந்த பயிற்சி முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

    மாணவரல்லாத, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பதிவு செய்து கொள்லாம் அல்லது dsonmk@gmail.com என்ற இமெயில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு, வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன், மற்றும் கிளைச் செயலாளர்கள், அவைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முத்து, துணைச் செயலாளர் தங்கலட்சுமி, பாரதிதாசன், காசிலிங்கம், தொ.மு.ச. அவைத் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அபிராமத்தில் நடந்த தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு நகரச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தொகுதி பொறுப்பாளர் எரிக்ஜூடு முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட முஷ்டகுறிச்சியில் ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமையிலும், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருநாழியில் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    • வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார்.
    • மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார். இதை யொட்டி இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு எஸ்.பி.கலை யரசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பில் குடும்பப்பிரச்னை, சொத்துப்பிரச்னை உள்ளிட்டவை குறித்து மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வில், ஏ.டி.எஸ்.பி.க்கள் கனகேஸ்வரி, ராஜு, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை நடத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கினர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

    • மே 2-ந் தேதி மத்திய அரசு தேர்வு பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது
    • கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

    கரூர்:

    கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது 7,500 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்விற்கான பணிக்காலியிடம், தேர்விற்கு விண்ணப்பித்தல் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் மே, 3க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 2ந் தேதி தொடங்குகிறது. சேர விரும்புவோர் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

    மேலும் தங்கள் விபரத்தை 04324223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ, gmail.com என்ற இ.மெயில் studycirclekarur@ வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். https://tamilnaducareerservices.tn.gov.in 6760TM 6006007 இணையதளத்தில் போட்டி தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது
    • முகாமிற்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேல் மற்றும் காவல் அதிகாரிகள் பொதும க்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இதில் 25 மனுக்கள் பெற்றப்பட்டு உடனடியாக 5 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    பின்னர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி கூறுகையில், பொது மக்களின் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கு ம்பொருட்டு வாரந்தோறும் புதன் கிழமைகளில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி முகாமில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம். மேலும் பொது மக்கள் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.


    • வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

    சோழவந்தான்

    வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா,பொதுக்குழு நாகராஜ், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, இணை செயலாளர் வனிதா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், கணேசன், சோழவந்தான் நகர இளைஞரணி மணி, எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தவிட்டுப்பாளையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
    • அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காந்தி நகர், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது. இதில் கிராம, சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர், வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் உள்ள பொதுமக்கள், முதியவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


    • ராமநாதபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடக்கிறது.
    • 1-ந்தேதி காலை 7மணியளவில் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஆஜராகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட அளவிலான 15 நாட்கள் நடைபெறும் கோடைகாலப் பயிற்சி முகாம் 1.5.2023 முதல் 15.5.2023 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கையுந்துபந்து, டென்னிஸ், இறகுப்பந்து, ஜுடோ ஆகிய விளையாட்டுகளில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் காலை 6.30 முதல் 8.30 வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் ஆகும். முகாமில் கலந்து கொள்பவர்கள் 1-ந்தேதி காலை 7மணியளவில் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஆஜராகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்.

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை யோகா மருத்துவத்தின் சார்பாக கோடைகால உணவுகள், கோடைகால நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகள் மற்றும் நமது அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும், அதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.மேலும் பொது மக்களுக்கு இலவச மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது முகாமில் பங்கு கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அர்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் விஜயன் ,மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி மருத்துவர் கற்பகம் ,மருத்துவர் கலைச்செல்வி, ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் ராகுல்ஜி இயற்கை யோகா மருத்துவ உதவி அலுவலர் மருத்துவ கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×