search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223246"

    • மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
    • புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது
    • தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அதிரடி நட வடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் வாகன சோதனை, கடைகளில் அதிரடி சோதனை என தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குட்டக் குழி பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திரு வட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாலிபர் கொடுத்த தகவ லின் பேரில், குட்டக்குழி பகுதியில் மறைத்து வைத்து இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வட்டவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என தெரியவந்தது.

    • லீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    திருப்பூர் : 

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் மற்றும் போலீசார் சவுந்தராஜன், சையது முகமது ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1-வது பிளாட்பா ரத்தில் வந்து நின்ற ரெயிலின் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்த பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் புகையிலை பொருளை யார் கடத்தி வந்தனர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புலிக்காரத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 57). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது.

    இதையடுத்து தினமும் பாரிவள்ளல் பள்ளி அருகே பான் மசாலா விற்பனை செய்வரிடம் வாங்கி உபயோகித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் புகையிலை போட்டதும் திடீரென சண்முகத்திற்கு மயக்கம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று புகையிலை விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தினர்.

    அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த கணேஷ் புகையிலை 396 கிலோ, கூல் லிப் புகையிலை 35 கிலோ, விமல் புகையிலை 61 கிலோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,84,004. இது தொடர்பாக ராமநாதபுரம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஆதில் அமீன் (40), வைகை நகரைச் சேர்ந்த பாசித் ராஜா, தெற்கு தெரு நிஷார் அகமத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆதில் அமீனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.

    அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

    • போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள உப்பளிப்பாளையத்தில் மதியழகன் (வயது38) என்பவர் மளிகை கடத்தி வருகிறார். இவர் கடையில் வைத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகையிலை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்பிரிவு டி.எஸ்.பி நரசிம்மன் தலைமையிலான போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதியழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
    • இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.

    இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பசுவந்தனை போலீசார் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து, 36 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பசுவந்தனை -கோவில்பட்டி ரோட்டில் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29), மேல முடிமன் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (42), துரைசாமி புரம் தெற்கு தெருவை சேர்ந்த அழகுராஜ் (35) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகை யிலையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,200 மதிப்புள்ள 36 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    • எம்.செட்டிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • மங்கலம் போலீசார் 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    மங்கலம் :

    மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சமாதா னபிரபு மற்றும் போலீசார் மங்கலத்தை அடுத்த எம்.செட்டிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அதே பகுதியில் மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜேந்திரன் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதே போல மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இடுவாய் -பாரதிபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள மளிகைகடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முத்துச்செல்வன் (35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.இதே போல மங்கலம் போலீசார் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அதேபகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பிரின்ஸ் (50)என்பவரை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்து 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 14 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ராமன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது பொதுப்பெட்டியில் உள்ள பாத்ரூமில் ஒரு சொல்டர் பேக் கேட்பாரற்று கிடைந்தது. அந்த பேக்கை சோதனை செய்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களில் 14 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலையை பறிமுதல் செய்து கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
    • நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நாகை அவுரித்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

    இப்பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.

    மேலும் இந்த பேரணியில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி நடுநிலை பள்ளியை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் கை பதாகைகள் வைத்து மாணவர்கள், மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.டி.அன்பழகன், ஆண்டனி பிரபு, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கொண்ட குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் இரண்டு வெவ்வேறு கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்து கடையை மூடினர்.

    இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் சந்தை பகுதியில் கடை நடத்தி வருபவர் மகேஷ் (வயது 41). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்திய போது, 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.

    ×