search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223268"

    • முட்டை ஆப்பம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இந்த ஆப்பம் செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 3 கப்

    தேங்காய் துருவல் - 2 கப்

    உளுந்து - 3 தேக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    சமையல் சோடா - 3 சிட்டிகை

    உப்பு - சிறிதளவு

    முட்டை மசலாவிற்கு :

    முட்டை - மூன்று

    சர்க்கரை - அரை தேக்கரண்டி

    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி

    நெய் - இரண்டு மேசைக்கரண்டி

    செய்முறை :

    * ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.

    * அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் சாஃப்ட்டாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.

    * ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.

    * பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * சுவையான முட்டை ஆப்பம் ரெடி.

    * இத்துடன் காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    • குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
    • ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்..

    தேவையான பொருள்கள்:

    பரோட்டா - 2

    முட்டை - 1

    வெங்காயம் - 2

    எண்ணெய் - 4 ஸ்பூன்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 8 பல்

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    கொத்தமல்லி - தேவையான அளவு

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

    * அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

    * 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    * சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.

    * இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

    • சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    • பட்ட்ர் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ

    வெங்காயம் - 200 கிராம்

    தக்காளி - 200 கிராம்

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    முந்திரி விழுது - 2 தேக்கரண்டி

    கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா - அரை தேக்கரண்டி

    சீரகப்பொடி - அரை தேக்கரண்டி

    தயிர் - 1 கப்

    மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

    வெண்ணெய் - 4 தேக்கரண்டி

    பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி

    கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி

    சிவப்பு கலர் - அரை தேக்கரண்டி

    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2

    செய்முறை :

    சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிர், கறிமசாலா, கருப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடாயில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிக்கனை ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.

    ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.

    பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி.

    • வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
    • இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கப்

    முட்டை -2-3

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பில்லை - 1 கொத்து

    பச்சைமிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.

    முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.

    • காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
    • சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கைமா – கால் கிலோ,

    சின்ன வெங்காயம் – 50 கிராம்,

    போண்டா மாவு – 250 கிராம்,

    சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,

    மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் – 2,

    பூண்டு – 5 பல்,

    கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

    சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

    பொட்டுக்கடலை – 50 கிராம்,

    இஞ்சி – 2 சிறிய துண்டு,

    கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

    * அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

    * முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

    * அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    * சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

    • சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
    • மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )

    கொத்தமல்லி தழை - சிரிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    மைதா - 3 கப்

    உப்பு - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4

    கரம் மசாலா - 1 ஸ்பூன்

    வேகவைத்த பட்டாணி - ½ கப்

    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.

    * பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    * மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.

    • சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    நாட்டுக்கோழி - 1/4 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 1/4 கப்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு சுவைக்கேற்ப

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை - 1/2 இன்ச்

    ஏலக்காய் - 1

    கிராம்பு - 1

    கறிவேப்பிலை - சிறிது

    அரைப்பதற்கு...

    மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 3

    தண்ணீர் - சிறிது

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

    அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.

    குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!

    • காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
    • கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    காடை - 4

    சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 5

    புதினா இலை - 50 கிராம்

    கொத்தமல்லித்தழை - 50 கிராம்

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தயிர் - 50 மில்லி

    தேங்காய்ப்பால் - 100 மில்லி

    பட்டை - 2

    ஏலக்காய் - 2

    கிராம்பு - 4

    பிரிஞ்சி இலை - ஒன்று

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 50 மில்லி

    பிரியாணி மசாலா செய்ய :

    பட்டை - 2

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 6

    பூண்டு - 50 கிராம்

    இஞ்சி-1 துண்டு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

    சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.

    அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார்.

    • தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் - 1

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

    * முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.

    ×