search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223268"

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • தள்ளுவண்டி கடையில் சாப்பிட்ட அதே சுவையில் இன்று சிக்கன் பக்கோடா செய்யலாம்

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

    முட்டை - 1

    சோள மாவு - 1/4 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    கடலை மாவு - 1/4 கப்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு :

    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி!!!

    • குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும்.
    • சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.

    தேவையான பொருட்கள்

    சுறா மீன் - 1/2 கிலோ

    வெங்காயம் - 4

    பூண்டு - 20 பல் பெரியது

    இஞ்சி - 1 பெரிய துண்டு

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    மல்லி தூள் - ½ ஸ்பூன்

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    கடுகு - ½ ஸ்பூன்

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.

    இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.

    மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

    மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.

    மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.

    10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

    10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.

    இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.

    • இறைச்சி, மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
    • இறைச்சி, மீன் வகைகளில் கொரோனா வைரஸ் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும்.

    கொரோனா வைரஸ் குளிர்சாதனப்பெட்டியில் பதப்படுத்தப்படும் இறைச்சி, மீன் வகைகளில் 30 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

    கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் சால்மன் வகை மீன்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இறைச்சி மற்றும் மீன் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், பிரீசரில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் ஆராய்ச்சியாளர்கள் சேமித்துவைத்தனர்.

    அப்படி குளிர்ந்த நிலையில் வைக்கப்படும் இறைச்சி வகைகளில் வைரஸ்கள் வளரக்கூடும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்கிறார், ஆராய்ச்சியாளர் பெய்லி. தென்கிழக்கு ஆசியாவில் பேக்கிங் செய்யப்பட்ட இறைச்சி பொருட்கள் வைரஸ் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல் பரவியதை அடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறுகிறார், பெய்லி.

    இதேபோன்ற சூழலில் வைரஸ் உயிர்வாழ முடியுமா, இல்லையா என்பதை ஆராய்வதே எங்கள் குறிக்கோள் என்றும் சொல்கிறார். ஆய்வின் முடிவில் குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி வகைகளில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கோவிட்-2 வைரஸ் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் விங்ஸ் - 7

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு - பாதி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - தேவையான அளவு

    மைதா மாவு - 1/4 கப்

    சோள மாவு - 1/4 கப்

    முட்டை - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * சிக்கன் விங்ஸ்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அந்த சிக்கன் துண்டுகளில் மூன்று பாகம் இருக்கும் அதில் கீழே இருக்கும் சிறிய பகுதியை வெட்டி விடவும், அதன் பின்னர் அதில் இருக்கும் எலும்புகளின் சதையை கத்தியால் மேலே தள்ளி லாலிபாப் போன்ற வடிவத்திற்கு கொண்டு வரவும்.

    * ஒரு பாத்திரத்தில், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, அரை எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

    * இதில் தயார் செய்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அவற்றின் அனைத்து பகுதிகளிலும் மசாலா படுமாறு நன்றாக தடவி 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

    * இன்னொரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, முட்டை, சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் கிளறி கொள்ள வேண்டும்.

    * ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் முக்கி, எண்ணெயில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

    * தற்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் லாலிபாப் தயார்.

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சிக்கனில் செய்யும் ரெசிபியில் ஒன்று தான் சிக்கன் சால்னா.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தக்காளி - 2

    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    வறுத்து அரைப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    பட்டை - 2 இன்ச்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - 5

    கிராம்பு - 5

    தேங்காய் - 1 கப் (துருவியது)

    கசகசா - 3 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

    பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, சிக்கனையும் சேர்த்து, மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயை குறைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.

    பின் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் சால்னா ரெடி!!!

    • மாலைநேர சிற்றுண்டியாக இந்த ரெசிபியை சாப்பிடலாம்.
    • தோசை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கரண்டி

    முட்டை - ஒன்று

    வெங்காயம் - ஒன்று

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    மிளகு - அரை டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.

    முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). அடித்து வைத்த முட்டையை தோசை மீது (வேகாத தோசை) ஊற்றவும்.

    பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

    வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும்.

    கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்.

    கடைசியாக மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான கொத்து தோசை ரெடி.

    • வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
    • கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கப்

    முட்டை -3

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பில்லை - 1 கொத்து

    பச்சைமிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - தாளிக்க

    செய்முறை :

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .

    வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .

    சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!

    • மாலைநேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 100 கிராம்

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    முட்டை - 2

    சீரகம் - 1/4 தேக்கரண்டி

    கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகுத்தூள் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.

    * கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * சிறிதளவு கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும், மிளகுப்பொடி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறிய பின்னர் முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும். மசாலா பச்சை வாசனை போய் முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * பிசைந்த சப்பாத்தி மாவினை, மிகவும் மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் முட்டை மசாலாவை வைத்து கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.

    * இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான முட்டை சமோசா ரெடி.

    • கேரளாவில் இறால் மொய்லி மிகவும் பிரபலமான உணவு.
    • இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    இறால் - அரை கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி -1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    பூண்டு - 4 பல்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்)

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - கால் கப்

    செய்முறை

    இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

    இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்.

    பின்பு தேங்காய் பாலைச் சேர்க்கவும்.

    நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

    சுவையான இறால் மொய்லி தயார்.

    இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    • தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன், நூடுல்ஸ் சேர்த்து சூப் செய்முறை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - அரை பாக்கெட்

    சிக்கன் - அரை கிலோ

    கேரட் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகு பொடி - தேவையான அளவு

    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    ஸ்பிரிங் ஆனியன் - 3

    பூண்டு - 5 பற்கள்

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - கையளவு

    செய்முறை

    சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    நூடுல்ஸை தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அதோடு காய்கறிகளையும், உப்பு சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து வேக வைத்த நூடுல்ஸ், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி.

    • சிக்கன் வைத்து பலவித உணவுகளை சமைக்கலாம்.
    • இன்று சிக்கன் வைத்து மோமோஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 2 கப்

    உப்பு - தேவையான அளவு

    சிக்கன் கொத்துகறி - 1/4 கிலோ

    வெங்காயம் - 2

    முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்

    கேரட் (பொடியாக நறுக்கியது) - 1 கப்

    இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

    பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை

    சிக்கன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கன் கொத்துக்கறி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை பந்து போன்று சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதை சிறிய அளவிலான மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும்.

    அதன் பின்னர் கிளறி வைத்து உள்ள சிக்கன் கலவையை அந்த சப்பாத்தியில் வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் வைத்து வேக விட வேண்டும்.

    15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

    தற்போது சுவையான ரெஸ்ட்ரன்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெடி.

    • சிலருக்கு பரோட்டா விருப்ப உணவாக இருக்க சால்னா முக்கிய காரணமாக இருக்கும்.
    • இன்று ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் எலும்பு கறி - கால் கிலோ

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1/2 டிஸ்பூன்டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - 1 கப்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/4 டீஸ்பூன்

    கல்பாசி பூ - 2

    ஏலக்காய் - 2

    பட்டை, லவங்கம் - சிறிது

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    மட்டன் எலும்பு கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி பூ, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மட்டன் எலும்பு கறியை போட்டு அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 8 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.

    ×