search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக் மிகவும் பிடிக்கும்.
    • சோராஃபளியின் மீது மசாலா பொடி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு - 1 கப்

    உளுந்தமாவு- அரை கப்

    பேக்கிங் பவுடர் - கால் டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்

    புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1 அங்குலத் துண்டு

    பச்சை மிளகாய்- 5

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    சிட்ரிக் அமிலம் - அரை சிட்டிகை

    உப்பு - தேவைக்கு

    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

    பிளாக் சால்ட் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அகலமான பாத்திரத்தில் கடலைமாவு ஒரு கப் மற்றும் உளுந்தமாவை கொட்டி சலித்து எடுக்கவும். பின்பு அந்த மாவில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

    அதன்பிறகு தயாரித்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கெட்டியான பதத்துக்கு பிசையவும். பின்னர் அதை மூடி அப்படியே வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அந்த மாவை எடுத்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மென்மையாகும் வரை நன்றாகப் பிசையவும். பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உருண்டைகளை எண்ணெய்யில் தோய்த்து எடுத்து வைக்கவும். பின்பு ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அந்த சப்பாத்திகளை மெல்லிய ரிப்பன்களாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு ரிப்பன்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

     மசாலா பொடி:

    ஒரு சிறிய கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூளுடன் கால் டேபிள் ஸ்பூன் பிளாக் சால்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    சட்னி:

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், பிளாக் சால்ட், உப்பு, ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைப்பதால் சட்னி நீண்டநேரம் நிறம் மாறாமல் இருக்கும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கடலை மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். இந்த கலவை கெட்டியாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதில் ஐஸ்கட்டிகள் மற்றும் தயாரித்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து கலக்கவும்.

     பரிமாறும் முறை:

    மொறுமொறுப்பான சோராஃபளியின் மீது மசாலா பொடியை பரவலாகத் தூவி, சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

    • வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
    • எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    வெங்காயம்- 1

    தக்காளி-1

    சிக்கன் - கால் கிலோ

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    மல்லி தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    மொசரல்லா சீஸ்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.

    இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.

    • எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்தது நார்த்தங்காய்.
    • நார்த்தங்காய் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.

    ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும்.

    `நார்த்தங்காய்' என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.

    பயன்கள்:

    * உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

    * செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

    * வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.

    * குடல் பிரச்னைகள் சரியாகும்.

    * இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.

    * நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.

    * மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

    * அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

    * ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    நரம்பு நீக்கிய, சுத்தமான இளம் நார்த்தை இலை- 20

    காய்ந்த மிளகாய்- 4

    தேங்காய்- ஒரு கப்

    புளி- எலுமிச்சை அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    இளம் நார்த்தை இலைகளாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை கிள்ளி எடுத்துவிட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

     அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. குறிப்பு: இதனை தாளித்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்கு இந்த நார்த்தை இலை துவையல் மிகவும் நல்லது.

    • குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
    • வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * குழம்பு வடகம் செய்யும்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புடன் காராமணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து விடுங்கள். அதை வடகமாக பொரித்தால் கர கரவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையை நன்கு சுத்தம் செய்து அதில் கொத்தமல்லி தழைகளை பரப்பி, அகன்ற கிண்ணத்தால் மூடி வைத்து விடுங்கள். இரண்டு, மூன்று நாள்கள் பசுமையாக இருக்கும்.

    * ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.

    * கிராம்பை தண்ணீரில் உரசி, முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு மறைந்து விடும். மீண்டும் பரு வராது.

    * குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.

    * வீட்டில் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் சிறிது உப்பு கலந்தால் அதன் சுவை மேலும் கூடும்.

    * சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசைந்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், மேல் பரப்பு காய்ந்து போயிருக்கும். இப்படி நேராமல் இருக்க, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கலாம். அல்லது ஈரத்துணியால் மூடி வைக்கலாம்.

    * நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.

    * வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.

    * அடுப்பில் வைத்திருக்கும் பால் பொங்கி வழியாமல் இருக்க, கடைகளில் விற்கும் எவர் சில்வர் கோலி உருண்டை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்)களை வாங்கி பாலில் போட்டால் போதும். பால் பொங்கவே பொங்காது.

    * பத்து அல்லது பதினைந்து நெல்லை சுத்தமாக கழுவி விட்டு, காலையில் கறந்த பசும் பாலில் போட்டு வையுங்கள். இரவு வரைக்கும் பால் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

    * கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்களை நறுக்கியவுடன் நீரில் போட்டு விடுங்கள். இல்லையெனில் அவற்றின் நிறம் மாறி விடும். நிறம் மாறினால் சுவை கெட்டு விடும்.

    • ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ஊரின் பேமஸ் ஆக இருக்கும்.
    • வெறும் அரிசி மாவு இருந்தாலே போதும்.

    ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ஊரின் பேமஸ் ஆக இருக்கும். அந்த வகையில் இப்பொழுது நாம் கேரள ஸ்பெஷல் உணவான அரி பத்திரி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். அரி பத்திரி என்று பெயரை கேட்டவுடன் இது என்ன புதுவகையான உணவாக இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். இதை அரிசி அடை என்றும் சொல்லலாம். இதற்கு அதிகமாக எந்த பொருளும் சேர்க்க வேண்டாம். வெறும் அரிசி மாவு இருந்தாலே போதும். மிகவும் சுலபமாக சூப்பராக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

    செய்முறை

    இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் இது மட்டும் தான் இந்த ரெசிபி செய்ய நமக்கு தேவையான பொருள். ஒரு வேளை உங்களுக்கு இந்த அடை அதிகமாக தேவைப்பட்டால் இதன் அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

    இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணையும் ஊற்றி கொதித்த பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் கொட்டி கை விடாமல் கிண்டுங்கள். அரிசி மாவு நன்றாக வெந்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வர வேண்டும். அதுவரை கிண்டிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த மாவை தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள்.

    பத்து நிமிடம் வரை இருந்தால் கூட போதும் இந்த மாவு ஓரளவுக்கு மிதமான சூட்டிற்கு வந்து விடும். அதன்பிறகு இதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கைகளாலே மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை பிசையும் போது எந்த காரணத்திற்காகவும் மேல் மாவிற்கு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. ஒரு வேளை உங்களுக்கு சூட்டின் காரணமாக தோய்க்க முடியவில்லை எனில் நீங்கள் கைகளை தண்ணீரில் தொட்டுக் கொண்டு பிசையலாம்.

    இப்படி பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து அரிசி மாவை தொட்டு மெதுவாக திரட்டி கொள்ளுங்கள். இது வெறும் அரிசி மாவு என்பதால் நீங்கள் கோதுமை மாவை திரட்டுவது போல அதிக அழுத்தம் கொடுத்து திரட்டக் கூடாது லேசாக திரட்டினாலே போதும். ஓரங்களில் நிச்சயம் வெடிப்பு போல இருக்கும் அதற்கு நீங்கள் ஒரு சின்ன மூடி வைத்து அழகாக வட்ட வடிவில் செய்து கொள்ளுங்கள்.

    இப்போது அடுப்பில் தவா வைத்து சூடான பிறகு நீங்கள் திரட்டி வைத்திருக்கும் அடையை போட்டு ஒரு காட்டன் துணியை வைத்து மேலே லேசாக ஒட்டி எடுங்கள். அப்போது இது பூரி போல உப்பி வரும். ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு இதேபோல் ஒட்டி எடுத்து விடுங்கள்.

    அடுத்த அடை போடுவதற்கு முன்பாக தவாவை ஒரு முறை டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விட்டு மறுபடியும் அடையை போட்டு எடுங்கள். அருமையான அரிசி பத்திரி தயார்.

     இந்த ரைஸ் பத்திரியுடன் வெஜிடபிள் குருமா அல்லது பன்னீர் பட்டர் மசாலா இப்படி வைத்து சாப்பிடலாம். அசைவ வகையில் சிக்கன் குருமா கிரேவி போன்ற வகைகளும் வைத்து சாப்பிடலாம் சுவை பிரமாதமாக இருக்கும். இதில் எண்ணெய் சேர்த்து செய்வதில்லை என்பதால் அனைவருமே கூட இதை தாராளமாக சாப்பிடலாம்.

    • காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை.
    • நீர்க்காய்கள் மிக முக்கியமானவை.

    பொதுவாகவே காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை. அதிலும் நீர்க்காய்கள் மிக முக்கியமானவை. இதில் அனைவரும் விரும்பி சாப்பிடுவதில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயில் கிட்டத்தட்ட 85 சதவீதம் நீர்தான் இருக்கிறது.

    மேலும் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கும். சரி வாங்க, இவ்வளவு நன்மை செய்யும் சுரைக்காயை பயன்படுத்தி சூப் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய்- 1

    தக்காளி- 1

    சீரகம்- கால் டீஸ்பூன்

    மிளகுதூள்- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரில் 1 தக்காளி மற்றும் சுரைக்காயை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, சீரகம் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

    இறுதியில் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால், சூப்பர் சுவையில் எடையை குறைக்கும் சுரைக்காய் சூப் தயார்.

     சுரக்காய் சூப் தினசரி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். எனவே நாள் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் சுரைக்காய் சூப் குடிப்பதால் உங்கள் சருமம் பொலிவு பெறும்.

    சுரைக்காய் சூப் குடிப்பதால் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் நீங்கள் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் தினசரி சுரைக்காய் சூப் குடித்தால் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்லப்படுகிறது.

    இப்படி சுரைக்காய் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே கட்டாயம் இந்த உணவை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • மணத்தக்காளி தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது.
    • எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது.

    தஞ்சாவூர் பக்கத்தில் மிகவும் விரும்பி செய்யப்படும் இந்த தண்ணிச்சாறு அருமையான சுவை கொண்டது. மிகவும் எளிமையாக 10 நிமிடங்களில் செய்யக் கூடியது. வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை நீக்க வல்லது.

    தேவையான பொருட்கள்:

    மணத்தக்காளி கீரை - 1 கட்டு.

    சின்ன வெங்காயம் - 15

    வரமிளகாய் - 3

    சீரகம் - 1 ஸ்பூன்

    வெந்தயம் - 1/2 ஸ்பூன்

    தேங்காய்ப் பால் - 1 கப்

    மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மணித்தக்காளி கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பாதியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அரை மூடிதேங்காயை நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், வெட்டி வைத்துள்ள கீரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு கலந்து விட்டபிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு ரெடி.

     வயிற்றில் புண் இருப்பவர்கள், அல்சர் பிரச்சினை இருப்பவர்களுக்கு, கர்பப்பை பிரச்சினை, குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு அல்லது அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

    • இளம் காயாக இருக்கும் அத்தியை பறித்து ருசியாக சமைக்க முடியும்.
    • கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும்.

    தேவையான பொருள்கள்:

    பாசிப்பருப்பு - தேவையான அளவு

    அத்திக்காய் - கால் கிலோ

    பெரிய வெங்காயம் நறுக்கியது - 2

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    தக்காளி - 2

    பூண்டு - 2 பல்

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - தாளிக்க

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    அத்திக்காயை மஞ்சள் தூள் போட்டு நீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பாதி வெந்திருக்கும் பாசிப் பருப்புடன் அத்திக்காய் மற்றும் உங்களுக்கு விருப்பமான சாம்பார் காய்கள் போட்டு ஒரு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, தக்காளி, போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

    நன்றாக வதங்கிய பின் வேகவைத்து எடுத்து வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கூடவே தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு உளுந்து தாளித்து, கூடவே கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்த பின் பெருங்காயம் ஒரு பின்ச் சேர்த்து இறக்கி சாம்பாரில் சேர்க்கவும். அவ்வளவுதான்... அத்திக்காய் சாம்பார் தயார்.

    • உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.
    • மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது.

    அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம், உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது. கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும் அத்திப்பழத்தை பெரும்பாலானோர் தேனில் ஊற வைத்தும், காய வைத்து பொடியாக்கியும் சாப்பிட்டிருப்போம்.

    ஆனால், இளம் காயாக இருக்கும் அத்தியை பறித்து ருசியாக சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல். வாய் ருசிக்க அத்திக்காய் பொரியல். எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்...

    தேவையான பொருள்கள்:

    அத்திக்காய் - கால் கிலோ (நல்ல இளம் காயாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். காயின் காம்பை உடைத்தால் பால் வரக்கூடிய அளவுக்கு இருப்பது போன்ற காய் என்றால் மிகவும் நல்லது)

    பெரிய வெங்காயம்- 2 (நறுக்கியது)

    வரமிளகாய் - காரத்துக்கு ஏற்ப

    தக்காளி - 1

    பூண்டு - 6-8 பல்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    கடுகு - தாளிக்க

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    அத்திக்காயை சிறிது சிறிதாக வெட்டி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் நீரில் இருந்து எடுத்து தனியாக வடிகட்டி வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும், கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும். கூடவே நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு பல் மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பூண்டும், சோம்பும்தான் இந்த டிஷ்சுக்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கக் கூடியது.

     பின்னர் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வேகவைத்து வடிகட்டிய அத்தியைப் போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெயில் வதக்க வதக்க உருளைக்கிழங்கு பொரியல் போலவே மொறுமொறுவென வர ஆரம்பிக்கும். அந்த பதத்தில் இறக்கி ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு எனத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    • உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும்.
    • பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும்.

    பயணங்கள் மேற்கொள்பவர்கள் வீட்டை விட்டு புறப்படும்போதே அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்துச் செல்வது போல பயணத்திற்கு ஏற்ற பலகாரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். அவை உற்சாகமான மன நிலையில் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில் அமையும்.

    அந்த வகையில் பாதாம் பருப்பு பயண பலகார பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டும். அதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உண்டு. அது அன்றாட வைட்டமின் ஈ தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடும்.

    பயணத்திற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக 5, 6 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அதனை சாப்பிடுவது நொறுக்குத்தீனிக்கு மாற்றாக அமையும். உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தயிரில் பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு வலு சேர்க்கும்.

    பிஸ்கெட் சாப்பிட விரும்புபவர்கள் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டை உடன் எடுத்துச் செல்லலாம். அது பயணங்களின்போது செரிமான செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு உதவி புரியும். நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுபவர்கள் புரதம் கலந்த குக்கீஸ், சாக்லெட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். கோதுமை பிரெட், உலர் பழங்கள், உலர் தானியங்களில் தயாரான பலகாரங்களையும் பயணத்தின்போது உட்கொள்ளலாம்.

    • அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
    • பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது.

    * முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.

    * அதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * மெதுவடைக்கு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.

    * பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவை கலக்கும்போது சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும் கலக்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய்யில் சுத்தமான உப்புக்கல்லை சிறிது போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.

    * எந்த வகை சட்னி செய்தாலும் சிறிது புதினா சேர்த்து அரைக்க வாசனையாக இருக்கும்.

    * பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் அவை விரைவில் பழுக்காது.

    * வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை சேர்த்து பொரியல் செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.

    * வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ கூட்டு செய்யும்போது தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் ருசியாக இருக்கும்.

    * முருங்கை இலையை உருவிய பிறகு காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம். அது உடல், கை, கால் அசதிக்கு நல்லது.

    * கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால் அல்வா மணம், ருசியுடன் இருக்கும்.

    * நெய் ஊற்றி ரவா லட்டு செய்த பின்பு தூய வெண்மை நிறம் கிடைக்க, சர்க்கரையை பொடித்து அதில் லட்டை புரட்டி எடுக்க வேண்டும்.

    * கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.

    * தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்த பின்பு மோர் மிளகாயை எண்ணெய்யில் பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்.

    * பஞ்சாமிர்தத்துடன் ஒரு கப் பால் சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கொட்டி கிளறி தட்டில் கொட்டி துண்டுகளாக்கினால் பஞ்சாமிர்த பர்பி ரெடி.

    * உளுந்து வடை செய்யும்போது 2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

    • மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை.
    • இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக தங்கி விடும்.

    மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை. தேங்காய்ப்பால் கலவையில் உரிய மசாலாக்கள் சேரும்போது இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக தங்கி விடுகிறது. சமைத்து சுவைத்துப் பார்ப்போமா?

    தேவையான பொருட்கள்:

    மீன் -1/2 கிலோ

    வெங்காயம் -1 (நீளமாக நறுக்கியது)

    இஞ்சி விழுது -1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் -10 (நறுக்கியது)

    தக்காளி -1 நீளமாக நறுக்கியது

    தேங்காய் -1/2 மூடி(துருவியது)

    கார்ன் மாவு -1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு -1/2 பழம்

    உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

    செய்முறை:

    மீனை உப்பு போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பிழிந்து பால் எடுத்து வைக்க வேண்டும். நீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும். இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பாலை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளை போட வேண்டும்.

    இதை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும். பின்னர் முதலில் எடுத்த பாலை ஊற்றி எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து இறக்க வெண்டும். இப்போது மண மணக்கும் மீன் மொய்லி சுவையுடன் ரெடி.

    ×