search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • முட்டையாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
    • மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும்.

    மிருதுவான கப்கேக்கை அற்புதமான டீயுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

    தயாரிப்பு நேரம்: 15 நிமிடங்கள்

    பேக்கிங் நேரம்: 25 நிமிடங்கள்

    எத்தனை: 4 முதல் 6  கப்கேக் செய்ய

    தேவையானவை:

    மாவு - 150 கி.

    பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

    வெண்ணெய் - 110 கி.

    சர்க்கரை - 200 கி.

    பீநட் பட்டர் - 4 மேசைக்கரண்டி

    முட்டைகள் - 2

    வெண்ணில்லா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

    பால் - 80 மி.லி.

    செய்முறை:

    1. ஓவனை முன்னதாகவே 180 செல்சியஸுக்கு சூடாக்கவும். கப்கேக் மோல்டில் எண்ணெயை பூசவும். மாவையும் பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும்.

    2. வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து திக்காகும் வரை நன்றாக அடிக்கவும். பீநட் பட்டரை சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும்.

    3. ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்றாக கலக்கவும். வெண்ணில்லா எசன்ஸை கலக்கவும்.

    4. இல்லையென்றால் பால், மாவை சேர்க்கவும்.

    5. இந்த கலவையை கப்கேக் மோல்டில் ஊற்றவும். 20 அல்லது 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். சூடாகவோ, சில்லென்றோ பரிமாறலாம்.

    • கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
    • வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.

    * தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.

    * பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.

    * கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.

    * மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.

    * சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.

    * மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.

    * லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.

    * அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.

    * வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.

    * உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.

    * கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்.

    • இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும்.
    • கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.

    இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது கிடைக்கின்றன. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.

    கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்.

    தேவையானவை:

    வெள்ளை அவல் – ½ கப்

    பொட்டுக்கடலை – ¼ கப்

    தேங்காய்த் துருவல் – ½ கப்

    வேர்க்கடலை – ¼ கப்

    வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்

    துருவிய வெல்லம் – 1½ கப்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்

    செய்முறை:

    வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    எல்லா பொருட்களும் ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி அதனை பொடித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.

    பின்னர் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகபிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம். மிகவும் சுவையான புரோட்டின் சத்து நிறைந்த லட்டு தயார்.

     

    • சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும்.
    • நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

    உடலுக்கு நன்மை பயக்கும் சிறுதானியங்களில் சாமையும் முக்கியமானதாகும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இதை யாரும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. இந்த சாமையை வைத்து இனிப்பான பொங்கல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    சாமை - 1 கப்

    தண்ணீர் - 2 கப்

    நெய் – ½ கப்

    வெல்லம் – ½ கப்

    ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்

    முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் சாமையை சுத்தமாக கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். ஏனெனில் ஊறிய சாமையை வேக வைக்க எளிமையாக இருக்கும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்தே வெந்துவிட்டதா என்பதை அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு வாணலியில் நெய் விட்டு உருகும் வரை காத்திருந்து நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.

    அதன் பிறகு அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். சுவையான சாமை இனிப்பு பொங்கல் தயார்.

    மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க உகந்த பலகாரமாக இந்த சாமை பொங்கல் இருக்கும்.

     

    • காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
    • வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.

    செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த தேங்காய்ப்பால் குணுக்கு. இதனை பால் பனியாரம் என்று கூறுவார்கள். இந்த குணுக்கு வகைகளில் காரம், இனிப்பு என்று விதவிதமாக செய்வார்கள். இதனை காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

    இதில் உள்ள தேங்காய்ப்பால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உளுந்து உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது. எனவே அனைத்து வயதினரும் இதனை உண்ணலாம்.

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்- 1

    உளுந்து- 100

    நாட்டு சர்க்கரை- 100

    அரிசி- 2 ஸ்பூன்

    எண்ணெய்- பொறிப்பதற்கு

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்க வேண்டும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகைஉப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.

    அதற்குள் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய் தூள், ருசிகேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் குணுக்கு தயார்.

     

    • வைட்டமின் பி மற்றும் போலேட் சத்துக்கள் நிறையவே இருக்குது.
    • ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல்l தடுக்க உதவுகிறது.

    கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தில் அதிகமான புரதம், தாமிரம், இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் இதில் இருக்கறதால் உடலுக்கு வேண்டிய உயிரோட்டம் கிடைக்குது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் இதில் நிறையவே இருக்குது.

    இதில் இருக்கிற ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கறதோட, சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாம தடுக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    சிவப்பு சோளம்-2 கப்

    அரிசி-அரை கப்

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    கடுகு- கால் டீஸ்பூன்

    உளுந்து- கால்கப்

    பச்சைமிளகாய்- 2

    கறிவேப்பிலை- தாளிக்க

    தேங்காய்- துருவல் ஒரு கப்

    பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    முதலில் அரிசியையும், சிவப்பு சோளத்தையும் கழுவி ஊற வைக்க வேண்டும். அதேபோல உளுந்தையும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு இவைமூன்றயும் வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு சேர்த்து 5 மணிநேரம் புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி இந்த கலவையினை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இபோது குழிப்பனியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக ஊற்றி எடுத்தால் சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார். கார சட்னியுடன் தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும். இதே மாவினை இட்லி, தோசையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையாக இருக்கும்.

    • கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும்.
    • ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

    இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

    அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு கொள்ளினை முளைகட்டி குழம்பு வைத்து உண்ணலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் உடலில் உள்ள வேண்டாத கொழுப்பு கரைந்து உடல் எடை எளிதில் குறையும்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 2

    தக்காளி - 3

    வரமிளகாய் - 5

    மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - சிறிதளவு

    தேங்காய் துருவல் - சிறிதளவு

    செய்முறை:

    கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த கொள்ளினை எடுத்து கழுவி வடிகட்டிவிட்டு அதனை ஒரு துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் விட வேண்டும். காலையில் எடுத்து பார்த்தால் கொள்ளு சிறிது முளைகட்டி இருக்கும்.

    முளைகட்டிய கொள்ளினை பாத்திரத்தில் கொட்டி வேக வைக்க வேண்டும்.

    ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மசாலா கலவையினை வேகவைத்த கொள்ளுவில் சேர்க்க வேண்டும். மசாலா கொதித்து வரும்போது தாளிப்பு சேர்க்கலாம்.

    அதற்காக மீண்டும் வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தாளித்து கொள்ளு குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்.

     

    • கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம்.
    • கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி.

    ஒரிசாவில் மிகவும் பிரபலமான தஹி வாலே பைங்கன் ரெசிப்பி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது தயிர், கத்தரிக்காயை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ரெசிப்பி தான் இது. பொதுவாக கத்தரிக்காயில் பல ரெசிப்பிகளை செய்திருப்போம். ஆனால் இந்த மாதிரி செய்திருக்க மாட்டீர்கள். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்தரிக்காய்- 2

    வெங்காயம்- 1

    தயிர்- ஒரு கப்

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    சீரகத்தூள்- ஒரு ஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 4

    கடுகு- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் இந்த ரெசிப்பி செய்வதற்கு பெரிய கத்தரிக்காய்களை பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய்களை வட்டமாகவும், சிறுது தடிமனாகவும் இருக்குமாறு பார்த்து வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காயில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூள், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை முன்னும், பின்னுமாக உடையாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு கப் தயிரை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த தயிரினை வறுத்து வைத்துள்ள கத்தரிக்காய்களின் மேல் ஊற்றி பிரட்டிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சிறிதளவு மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து இந்த தாளிப்பு கலவையை நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள தயிர் கத்தரிக்காய் கலவையில் ஊற்றி பிரட்டி எடுத்தால் தஹி வாலே பைங்கன் தயார்.

    இந்த ரெசிப்பி சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்.

    • கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி.
    • ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும்.

    இந்த கிமாமி சேமியா ரெசிப்பி ஒரு முகலாய ரெசிப்பி. முகலாயர்கள் காலத்தில் ஈத் பெருநாள் அன்று செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த ரெசிபியை அவர்கள் ஈத் பெருநாளான ரம்ஜான் அன்று செய்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    அத்தகைய இனிப்பு ரெசிப்பியை நாம் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வீடுகளில் முக்கியமான விழாக்காலங்களில் செய்து சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா- 200 கிராம்

    சர்க்கரை- 200 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, ஏலக்காய், பிஸ்தா

    தேங்காய்- ஒரு ஸ்பூன்

    திராட்சை- ஒரு ஸ்பூன்

    பால்கோவா- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணொலியில் நெய் விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காயையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய்விட்டு சேமியாவையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு தண்ணீர் கொத்ததும் அதில் வறுத்த பொருட்கள் மற்றும் ஏலக்காய்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு சேமியாவையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கலவை சிறிது கெட்டியானதும் அதில் பால்கோவா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிமாமி சேமியா தயார்.

     

    • பார்ட்டிகளில் செய்து அசத்துவதற்கு ஏற்ற டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 250 கிராம்

    பெரிய வெங்காயம்- 3

    பெரிய தக்காளி- 2

    பச்சை மிளகாய்- 1

    பூண்டு- 10பல்

    மல்லி தூள்- 2ஸ்பூன்

    சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்

    கரமசாலா- 1 1/4 ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1 1/4 ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1/2ஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

    முந்திரி பருப்பு- 20

    பாதாம் பருப்பு- 10

    ஃப்ரஷ் கீரிம்- 1/4 கப்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையானஅளவு

    தயிர்- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த சிக்கனுடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், வெங்காயம், பிரெட் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய், பட்டை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து அதில் பொறித்து வைத்துள்ள சிக்கன் கோப்தாக்களை போட்டு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கிரீமியான சிக்கன் மலாய் கோப்தா தயார். அதற்கு மேல் கிரீம் சேர்த்தும் பரிமாறலாம்.

     

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
    • இறுதியாக கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    வஞ்சிரம் மீன் - முள் எடுத்தது 2 (சிறிய க்யூப்ஸாக வெட்டுங்கள்)

    வெங்காயம் - 1 (நறுக்கியது)

    தக்காளி - 1 (நறுக்கியது)

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - தேவையான அளவு

    இஞ்சி மற்றும் பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - தேவையான அளவு

    சுவைக்க உப்பு

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    * ஒரு கடாயில் எண்ணெயை வைத்துத் சூடாகும்போது வெங்காயம் சேர்த்துத் வெங்காயம் இளஞ்சிவப்பு நிறமாக வரும் வரை வதக்கவும்.

    * இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்துத் வறுக்கவும் .

    * தக்காளி சேர்த்துத் நன்கு வறுக்கவும். மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.

    * பின்னர் அதில் வெட்டி வைத்த மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமாக வைத்து கிளறவும். பின்னர் மிளகு சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    * இறுதியாக கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்

    ×