search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
    • குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    அசைவ உணவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இறால். அந்த இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 1/2 கிலோ

    பிரியாணி அரிசி - 1/2 கிலோ

    வெங்காயம் - 2

    தக்காளி - 4

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்

    கொத்தமல்லி - 1கை

    புதினா - 1 கை

    தேங்காய் பால் - 1 கப்

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் இறாலையும், அரிசியும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.

    பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி அதில் இறால் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்பு இறால் தண்ணீர் விட ஆரம்பித்ததும் அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா தூவி கிளறி அதில் ஒரு கப் திக்கான தேங்காய் பால், 2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் இவை அனைத்து நன்கு கொதித்தவுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

    சுவையான இறால் தேங்காய் பால் புலாவ் ரெடி. குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    • எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.
    • இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.

    எள்ளுல இருபது சதவீதம் புரதமும் 50% எண்ணையும் 16 சதவீதம் மாப்பொருளும் இருக்கு.

    இத உடம்புக்கு சேர்த்துட்டு வந்தோம்னா அது உடலுக்கு நல்ல பலத்த கொடுக்கும். அது மட்டும் இல்லாம எள்ளுல இரும்புச்சத்து, துத்தநாகம் இதெல்லாம் அதிகமா இருக்கு.

    எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.

    அதே மாதிரி தோல்ல ஏற்படுற நோய்களான சொரி, சிரங்கு, படை மாதிரியான எல்லா நோய்களையும் எளிதா, விரைவா குணப்படுத்திடும்.

    மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் எல்லாமே இதுல உள்ளடங்கி இருக்கு.

    இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.



    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 2 மேஜைக்கரண்டி

    வர மிளகாய் - 9

    தனியா - 1 மேஜைக்கரண்டி

    பச்சரிசி - 1மேசைக்கரண்டி

    துவரம் பருப்பு - 1மேசைக்கரண்டி

    சீரகம் - 1/2 மேஜைக்கரண்டி

    வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி

    சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு

    தக்காளி - 1

    கத்திரிக்காய் - 6

    முருங்கைக்காய் - 1

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுந்து - 1/2 தேக்கரண்டி

    கருவேப்பிலை - 2 கொத்து

    நல்லெண்ணெய் - 3 குழி கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

    பூண்டு - 5 பல்

    ஒரு சிறிய லெமன் அளவு புளி கரைத்து கொள்ளவும்

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின் எள்ளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்

    நன்கு கத்தரிக் காய் முருங்கைக் காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும், கொதித்தபின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்

    சுவையான எள்ளு குழம்பு தயார்.

    • கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
    • தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.

    தற்போது பருவநிலை மாறுபாடு காரணமாக பலரும் சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற காரணங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த தூதுவளை மிளகு ரசம் கைகொடுக்கும். அதை எப்படி வைப்பது என்று பார்க்கலாமா....

    தேவையான பொருட்கள்:

    தூதுவளை - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    பூண்டு - 8 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    சிரகம் - 1 டீஸ்பூன்

    புளி - ஒரு நெல்லிகாய் அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    வரமிளகாய் - 3

    கடுகு - 1/2 ஸ்ஸ்பூன்

    தக்காளி - 4

    க.எண்ணெய் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    கொத்தமல்லி - ஒரு கைபிடி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள். அதோடு மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

    பின்னர் தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும். இறுதியாக, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

    பின் தாளிக்க கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியம் தரும், சளி, இருமலை, காய்ச்சல், உடல் சோர்வை துரத்தும் தூதுவளை மிளகு ரசம் தயார்.

    • பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கெட்- ஒரு பாக்கெட்

    கோ கோ பவுடர்- அரைகப்

    பொடித்த நட்ஸ்- ஒரு கப்

    வெண்ணெய்- 50 கிராம்

    சர்க்கரை- அரைகப்

    செய்முறை:

    இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.

    அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

    வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

    இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

     

    • சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

    சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள். இந்த சாக்லேட்டை வைத்து பல விதமான ஸ்வீட் வகைகளும், ஐஸ்கிரீம் வகைகளையும், கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு இந்த ராகி சாக்லேட் கேக்கை செய்து கொடுத்து அசத்துங்கள். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு- ஒரு கப்

    கோ கோ பவுடர்- அரை கப்

    முட்டை- 2

    நாட்டுசர்க்கரை- ஒரு கப்

    பேக்கிங் சோடா- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- கால் டீஸ்பூன்

    ஆயில்- ஒரு குழு கரண்டி

    வெனிலா எசன்ஸ்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு மிக்சி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டு. பின்னர் அதில் ஆயில், கோ கோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அதே மிக்சி ஜாரில் ஜலித்து வைத்துள்ள ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை வெண்ணெய் தடவிய ஒரு கேக் மோல்டில் ஊற்றி ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த ராகி சாக்லேட் கேக் தயார். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

     

    • அனைவருக்கும் பனீர் பக்கோரா மிகவும் பிடிக்கும்.
    • பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது.

    நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் பனீர் சேர்த்து என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது. பனீரையும், நூடுஸ்சையும் வைத்து பன்னீர் பக்கோரா செய்தால் அவ்வளவுதான் செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த டிஷ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    பனீர்- ஒரு கப் துருவியது

    நூடுல்ஸ் - 2 பாக்கெட்டுகள்

    கான்பிளார் - 2 தேக்கரண்டி

    வெங்காயம் - கால் கப்

    குடைமிளகாய் - 1

    முட்டைக்கோஸ் - 1 கப்

    பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி

    சீஸ் - அரை கப்

    உப்பு - தேயான அளவு

    செய்முறை

    முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் நூடுல்ஸ் வெந்ததும் எடுத்து தனியே வைக்க வேண்டும்.

    நூடுல்ஸ் ஆறிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை கொத்தமல்லி, மிளகாய் தூள், ரவை, பூண்டு விழுது, சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உருண்டைகளுக்கு நடுவே விருப்பப்பட்டால் சீஸ் துண்டுகளையும் வைத்து மூடி வைக்கலாம்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை விட்டு பொறித்து எடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, கொத்தமல்லி சாஸுடன் பரிமாறவும்.

    மிச்சம் வைக்காமல் அனைத்தும் உடனேயே காலியாகிவிடும்.

     

    • உடல் சோர்வடையாமல் வைத்திருக்க உதவி செய்யும்.
    • மாம்பழ சீசனுக்கு ஏற்ற மாம்பழ லஸ்ஸி சுவைத்து பாருங்கள்.

    வெயில் காலம் வந்தாலே உடல் சூட்டைக் குறைக்கவும், உடலை சோர்வடையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இளநீர், மோர், பதநீர், நீர் ஆகாரம் போன்றவற்றைத் தான் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இத்தகைய உணவுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

    அதுவும் இந்த மாம்பழ சீசனில் மாம்பழ லஸ்ஸி டிரை பண்ணலனா எப்படி. வாங்க மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மாம்பழம் - 1 கப் (நறுக்கியது)

    சர்க்கரை - 1/2 கப்

    தயிர் - 1/2 கப்

    ஏலக்காய் - 2

    ஐஸ் கியூப் - 8-9

    புதினா இலைகள் - 4-5 (அழகுபடுத்த)

    பாதாம் - அழகுபடுத்துவதற்கு

    முந்திரி - அழகுபடுத்துவதற்கு

    பிஸ்தா - அழகுபடுத்த

    செய்முறை:

    மாம்பழத்தை தயாரிக்க, 1 முதல் 2 பழுத்த மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு 1/2 கப் தயிர், மாம்பழ துண்டுகள், 1/2 கப் சர்க்கரை மற்றும் 8 அல்லது 9 ஐஸ் கியூப்ஸ், 2 ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இதனை ஒரு பவுளில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து புதினா இலைகள், பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். 

     

    • மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
    • ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி.

    அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். மட்டன் சாப்பிடுவதன் மூலம், நம்முடைய இதயம் நன்கு வலுப்பெறுகின்றது. மேலும் மட்டனில் உள்ள கொழுப்பு வெப்பத்தை குறைக்க உதவுகிறது. ஆட்டுக்கறி சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் பி, செலினியம் மற்றும் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

    ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாக மட்டன் கிரேவி செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன்- 1/2 கிலோ

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- தேவையானஅளவு

    இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

    எண்ணெய்- 4 டீஸ்பூன்

    வெங்காயம்- 2 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பச்சை- 2

    தக்காளி- 2

    தனி மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    மிளகு தூள்- 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- தேவையான அளவு

    அரைப்பதற்கு:

    ஏலக்காய்- 1

    கிராம்பு- 2

    பெருஞ்சீரகம்- 1/2 டீஸ்பூன்

    பட்டை- 2

    கொத்தமல்லி விதை- 1/2 டீஸ்பூன்

    மிளகு- 1/2 டீஸ்பூன்

    சோம்பு- 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீருடன், மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டனை வேக வைக்க வேண்டும்.

    மட்டன் வேகவைத்த தண்ணீரை எடுத்து வைத்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்க வேண்டும்.

    உப்பு மற்றும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கிரேவி பதம் வந்தவும் மீதம் உள்ள மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான காரசாரமான, மணமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி.

     

    • காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.
    • ஊட்டச்சத்துக்கள் காளான்களில் நிரம்பியுள்ளன.

    அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன. அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B கொண்டுள்ளன. D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கிராம்பு- 2

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    பேப்ரிக்கா சில்லி- 20

    வெங்காயம்- 2

    பூண்டு- 10 பல்

    தனியா- ஒரு ஸ்பூன்

    மிளகு- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    வெந்தயம்- சிறிதளவு

    காளான்- கால் கிலோ

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- சிறிதளவு

    வெல்லம்- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் காளானை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சில்லி, வெங்காயம், தனியா, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு, வெந்தயம் போன்றவற்றை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்துவிட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் சிறிதளவு புளியை கரைத்து சேர்க்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை கொத்தவுடன் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அதன்பிறகு காலானை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் காளனிலேயே தண்ணீர் இருக்கும். இந்த கலவை வெந்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான காளான் கீ ரோஸ்ட் தயார். 

     

    • கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.
    • சாச்சுரேட் கொழுப்பு மீன் உணவுகளில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.

    மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

    நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.

    இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்று நோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

    தேவையான பொருட்கள்:

    இறால் - 250 கிராம்

    மைதா - 1 டேபிள் ஸ்பூன்

    முட்டை - 1

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

    நசுக்கிய பூண்டு - 5 பல்

    நசுக்கிய இஞ்சி - 1 துண்டு

    பச்சை மிளகாய்- 1

    வெங்காயத்தாள் - 1 கப்

    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

    சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு, எண்ணெய், - தேவைக்கு ஏற்ப

    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

    டொமேட்டோ சாஸ்

    தாய் சில்லி பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    துளசி இலைகள்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை சேர்க்க வேண்டும். இதில் உப்பு, கார்ன்பிளார் மாவு, முட்டை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது. அதில் கலந்து வைத்துள்ள இறாலை பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் குடைமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

    இந்த கலவையில் சில்லி சாஸ், தக்காளி சாஸ், தாய் சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இதில் துளசி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் சுவையான தாய் பேசில் சில்லி பிரான் தயார். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

     

    • ஊறுகாய், கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது.
    • வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழியும் இதுதான்.

    * குலோப்ஜாமூனை ஆறவைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.

    * முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

    * பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து செயற்கை கலருக்கு பதிலாக பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களில் இருக்கும். உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    * தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்தால் வண்டு வராது.

    * சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.

    * குலோப்ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் ரெடி.

    * ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    வட்டலப்பம் என்பது இஸ்லாமிய வீடுகளில் திருமண விசேஷங்கள் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றின் போது பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் பால், வெல்லம், முந்திரி பருப்பு, முட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களாலும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.

    இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை வேண்டாம் என்று கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த இனிப்பை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்ப்பால்- 1 டம்ளர்

    முட்டை- 10

    ஏலக்காய்ப்பொடி- சிறிது

    முந்திரிப்பருப்பு- 15

    பாதாம் பருப்பு- 10

    உலர் திராட்சை- 15

    சர்க்கரை- 400 கிராம்

    நெய்- 1 தேக்கரண்டி

    செய்முறை

    முதலில் 10 முட்டைகளை மிக்சியில் அடித்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பால் ஒரு டம்ளர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி, பொடித்துவைத்துள்ள சர்க்கரை மற்றும் தேங்காய்ப் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அடித்து கலக்க வேண்டும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவிவிட்டு அதில், இந்த கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் குக்கரில் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தி, அதினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து நெய் தடவி வைத்த பாத்திரத்தை குக்கருக்குள் மூடி போடாமல் வைக்க வேண்டும். குக்கரை மூடி 30 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

    30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும். ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை மேலே தூவி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.

    ×