search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது.
    • கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது.

    ஊட்டி,

    ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ெரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

    சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக குளிா்ந்த காலநிலை காணப்பட்டது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.

    தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.

    வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா். தொடா் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுவாா்கள் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

    இதற்கிடையே ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூா் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

    • அடிப்படை தேவைகள் இல்லை என சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
    • இ- கழிப்பறை வசதி அமைத்து தர வலியுறுத்தியுள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

    அவர்களுக்கான அடிப்படை தேவைகள் உள்ளதா என்றால் கண்டிப்பாக இல்லை என சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக உடல் உபாதைகளை கழிக்க கழிவறைகள் இல்லாமல் தவிக்கின்றனர். வாகன நிறுத்தங்களில் இ- கழிப்பறைகள் அவசியம் தேவை.

    பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள வாகன நிறுத்ததில் வாகன நிறுத்து பவர்கள் கழிப்பிடங்கள் இல்லாமல் திண்டாடி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று கழிவறையை உபயோகிக்க அனுமதி கேட்டு கெஞ்சிய காட்சிகள் மனதை உறைய செய்கிறது.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ- கழிப்பறைகள் உடனடியாக அமைக்க வேண்டும், ஜி.பி.எஸ் மூலம் கழிப்பறைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பொது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி, பொது இடங்களில் நிறுவப்படும் கழிப்பறைகளே இ- கழிப்பறைகள் எனப்படுகின்றன. தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் அமைத்து இந்த இ- கழிப்பறைகளை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் தனியாக வா்ணம் பூசப்படவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
    • டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    ஊட்டி,

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது.

    இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் 8 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

    இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள்.

    இதனால் ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு காமிரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கி ராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது.

    ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.

    இந்தநிலையில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

    இதேபோல் டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-

    இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன காமிராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும்.

    மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம்.

    தற்போது பொருத்தப்படும் காமிராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கபட்டது.
    • 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது.

    ஊட்டி,

    கேத்தி பேருராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். கேத்தி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்(மஞ்சள், குங்குமம், வளையல், மங்கல பொருட்கள் தட்டு, ரவிக்கை) வழங்கபட்டது.

    கர்ப்பிணி பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்பட்டு 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது. இதில் பேருராட்சி உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்தனர்.

    ஊட்டி,

    குன்னூர் கிரேஸ்டிரஸ்ட் காருண்யா டிரஸ்ட்டுடன் இணைந்து தி.மு.க பிரமுகரும், சமூக சேவகருமான கோவர்த்தனன் தலைமையில் தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் சண்முக மூர்த்தி, குன்னூர் நகர தி.மு.க பொருளாளர் ஜெகநாத் ராவ் மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி தஸ்தகீர், பால் பரமானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில் சீயோன் ரத்தப் பரிசோதனை நிலையம் சார்பில் அதன் நிறுவனர் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ரூபேஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொடுத்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மு.க பிரமுகர்கள் கிப்சன் மற்றும் சேவியர் ஆகியோர் ெசய்திருந்தனர்.

    • பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
    • கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
    • இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    ஊட்டி,

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவ்வாறு வருகை தரும் அவர்கள் ஊட்டி, குன்னூரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து தங்குகின்றனர்.

    பின்னர் பூங்காக்கள், காட்சி முனைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அறை கிடைக்காதவர்கள் காட்டேஜ்களில் தங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் குன்னூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்கு என அனுமதி பெற்று விட்டு விதிமீறி தங்கும் விடுதியாக மாற்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, குன்னூர் தாசில்தார் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் தீபக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் குன்னூர் நகரம், கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அனுமதியின்றி 2 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் 2 விடுதிகளை பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வீட்டிற்கு என அனுமதி பெற்று விட்டு அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாற்றக்கூடாது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானம் குறைகிறது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • மே 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் கோடை விழாவை முன்னிட்டு தேயிலை சுற்றுலா திருவிழா 2023 தொடர்பான ஆலோசனை கூட்டம், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ள காரணத்தினால் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

    இவ்வாண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச தேயிலை தினத்தின் ஒரு பகுதியாக அடுத்த மாதம் 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், தேயிலை கலப்படத்தை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேநீர் காய்ச்சும் போட்டி நடத்தவும், உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பிற இடங்களில் நீலகிரி மாவட்ட சிறுதேயிலை விவசாயிகள் தயாரிக்கும் சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    மேலும், சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கும் வகையில் அடுத்த மாதம் 22-ந் தேதி குன்னூர் சிம்ஸ்பூங்காவில் தேநீர் கண்காட்சி நடத்தவும், சுற்றுலா பயணிகளிடையே தேயிலை உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளை அவர்கள் நேரில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தேயிலை சுற்றுலா திருவிழா 2023 மிகச் சிறப்பான முறையில் நடத்திட, மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர்.மோனிக்காரானா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தேயிலை வாரிய உதவி இயக்குநர் செல்வம், குன்னூர் தேயிலை வாரியத்தின் வளர்ச்சி டாக்டர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிபித்தா, அலுவலர் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.
    • குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அரவேணு,

    காடுகளும் மலைகளும் சூழ்ந்து வனவிலங்கு கூடாரமாக விளங்குவது தான் நீலகிரி மாவட்டம். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கரடி, காட்டு யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது விடுமுறை காலம் என்பதால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. அவ்வாறு வரும் வாகனங்களை சில நேரங்களில் காட்டு யானைகள் வழிமறித்து வருகின்றன. அப்போது வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் சாலையோரம் மேயந்து கொண்டிருக்கின்றன.

    சில நேரங்களில் சாலைகளிலும் ஒய்வெடுக்கின்றன.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

    எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • மாா்லிமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது.
    • ஊட்டியில் நீா்த்தேக்கங்கள் தூா்வாரப்படவில்லை.

    ஊட்டி,

    ஊட்டி நகரசபை சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:-

    தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குடிநீா் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணிகளுக்கு கூடுதலாக தற்காலிகப் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும். பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்ய தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரியவில்லை. மாா்லிமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது. இதனை சீரமைக்க வேண்டும்.

    காந்தலில் நகராட்சி குடியிருப்புகளில் வேறு நபா்கள் இருப்பதைக் கண்டறிந்து காலி செய்ய நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த குடியிருப்புகளை தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக ஒதுக்க வேண்டும்.

    நகரில் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்த வேண்டும். ஓல்டு ஊட்டி பகுதியில் தண்ணீா் இருப்பு உள்ளது. ஆனால், தொட்டியிலிருந்து வரும் இணைப்புக் குழாயின் அளவு சிறியதாக உள்ளதால், முறையாக தண்ணீா் விநியோகிக்க முடிவதில்லை. எனவே, அந்த குழாய்களை மாற்றியமைக்க வேண்டும்.

    ஊட்டியில் நீா்த்தேக்கங்கள் தூா்வாரப்படவில்லை. கழிவுநீா்ப் பிரச்சினையை சரி செய்ய ஊழியா்கள், உபகரணங்கள் இல்லை. கோடப்பமந்து கால்வாய் பணியில் பல கோடி ரூபாய் விரயமாகி வருகிறது என உறுப்பினா்கள் பேசினா்.

    முன்னதாக கூட்டம் தொடங்கியதும் அதிகாரிகள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை எனக்கூறி பெண் கவுன்சிலா்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னா்.

    விவாதத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் ஜெ.ரவிகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாா்ஜ், அபுதாஹுா், தம்பி இஸ்மாயில், அன்புச்செல்வன், குமாா், முஸ்தபா ஆகியோா் பேசினா்.

    ஊட்டி,

    ஊட்டி நகரசபை சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:-

    தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குடிநீா் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணிகளுக்கு கூடுதலாக தற்காலிகப் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும். பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்ய தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரியவில்லை. மாா்லிமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது. இதனை சீரமைக்க வேண்டும்.

    காந்தலில் நகராட்சி குடியிருப்புகளில் வேறு நபா்கள் இருப்பதைக் கண்டறிந்து காலி செய்ய நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த குடியிருப்புகளை தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக ஒதுக்க வேண்டும்.

    நகரில் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்த வேண்டும். ஓல்டு ஊட்டி பகுதியில் தண்ணீா் இருப்பு உள்ளது. ஆனால், தொட்டியிலிருந்து வரும் இணைப்புக் குழாயின் அளவு சிறியதாக உள்ளதால், முறையாக தண்ணீா் விநியோகிக்க முடிவதில்லை. எனவே, அந்த குழாய்களை மாற்றியமைக்க வேண்டும்.

    ஊட்டியில் நீா்த்தேக்கங்கள் தூா்வாரப்படவில்லை. கழிவுநீா்ப் பிரச்சினையை சரி செய்ய ஊழியா்கள், உபகரணங்கள் இல்லை. கோடப்பமந்து கால்வாய் பணியில் பல கோடி ரூபாய் விரயமாகி வருகிறது என உறுப்பினா்கள் பேசினா்.

    முன்னதாக கூட்டம் தொடங்கியதும் அதிகாரிகள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை எனக்கூறி பெண் கவுன்சிலா்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னா்.

    விவாதத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் ஜெ.ரவிகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாா்ஜ், அபுதாஹுா், தம்பி இஸ்மாயில், அன்புச்செல்வன், குமாா், முஸ்தபா ஆகியோா் பேசினா்.

    • விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விவசாய பயிர் செய்வதற்கு ஒரு வருட காலத்திற்குள் வட்டியில்லாமல் கடன்வசதி
    • கடந்த நிதியாண்டை விட அதிக கடனுதவி நடப்பு நிதியாண்டில் தரப்படுவதாக கூறினார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 3 பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விவசாய பயிர் செய்வதற்கு ஒரு வருட காலத்திற்குள் வட்டியில்லாமல் திருப்பி செலுத்தும் வகையில் விவசாய பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கீழ்க்கண்ட கடன்கள் விவசாயிகள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய பயிர்க்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23-ம் நிதியாண்டில் கூடுதலாக 8,673 உறுப்பினர்களுக்கு ரூ.51.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய கூட்டு பொறுப்பு குழு கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 410 குழுக்களுக்கு ரூ.12.98 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கால்நடை பராமரிப்புக் கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 946 உறுப்பினர்களுக்கு ரூ.4.43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர் சுய உதவிக்குழு கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 1,373 குழுக்களுக்கு ரூ.101 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 26,136 உறுப்பினர்களுக்கு ரூ.135.14 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 60 உறுப்பினர்களுக்கு ரூ.0.24 கோடி கடன் வழங்கப்ப ட்டுள்ளது.ஆலட்டி, ஜெடையலிங்கா, கடநாடு, கெந்தொரை, வீரபத்திரா மற்றும் தெங்குமரஹாடா ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.2.11 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டு ள்ளது.கோத்தகிரி மற்றும் பந்தலூர் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.0.43 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.4.04 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மற்றொரு இடத்தில் மோட்டார் சைக்கிளையும் தாக்க முயன்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    • டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார்

    அரவேணு,

    கோத்தகிரி மலைப்பாதை யில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் மலைப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வப்போது மலைப்பா ைதயில் வந்து நின்று கொண்டு, அந்த வழியாக வரும் வாகனங்களையும் மறித்து வருவது வாடிக்கை யாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோத்தகிரி சாலையில் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை மலைப்பாதைக்கு வந்தது.அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று வந்தது. யானை வருவதை பார்த்த ஜீப் டிரைவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்த முயன்றார்.அப்போது ஒற்றை யானை ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வந்த வேகத்தில் யானை ஜீப்பை தாக்கியது. இதனால் வாகனத்தில் இருந்தவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    பின்னர் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இதன் பின்னரே ஜீப்பில் இருந்தவர்களும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர்.இதையடுத்து ஜீப்பை டிரைவர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து சென்றார்.கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சி முனை பகுதியில் நீண்ட நேரமாக ஒற்றைக் காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டது.

    இதனால் அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, யானை ஆக்ரோஷம் அடைந்து அவர்களை நோக்கி வந்தது. இதனால் பயந்து போன மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் இறங்கி ஓடி விட்டார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாதுர்யமாக வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பியோடி விட்டார். தற்போது இந்த வீடியோக காட்சிகள் சமூக வலைத ளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் யானை களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×